வாய்மை

  1. முன்னுரை
  2. கடவுள் வாழ்த்து
  3. நூலின் வடிவமைப்பு
  4. உள்ளடக்கம்
  5. தெய்வம்
  6. புனிதநூல்கள்
  7. புனிதர்கள் 
  8. வானவர்கள் 
  9. ஊழ் 
  10. மறுமை
  11. இரகசியங்கள் 
  12. அறமும் மறமும் 
  13. சமயம் 
 
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள், மதம், வேதம், சோதிடம், பேய் பிசாசு, சாமியார்கள், சொர்க நரம், போன்ற சொற்களை கேட்காமல் ஒரு நாளை நாம் கடந்துவிட முடியாது. இக்கருப்பொருட்கள் மீதான நம்பிக்கை நாம் ஒவ்வொருவருக்கும் மாறுபாட்டாலும் ஏதோ ஒருவகையில் இவைகளை நாம் நம்பியோ பயன்படுத்தியோ இருந்து வருகிறோம். 

இவைகளுக்கான வரையறை அனைத்து மதத்திலும் ஒன்று போல் இருந்த பொழுதும், 
  • நமது வேதங்களை வாசிக்கும் வாய்ப்பும் சூழ்நிலையும் இல்லாமல் போனதாலும், 
  • வாசகங்களின் விளக்கங்கள் மாற்றி கொடுக்கப் பட்டதாலும், 
  • பொருளீட்டுவதில் முழுவதுமாக நமது கவனம் திருப்பப் பட்டதாலும் 
நமது நம்பிக்கைகள் மறை நூல்களோடு முற்றிலும் முரண்படுகிறது. இது போன்ற சமகால நம்பிக்கை சார்ந்த குறைகளை களைந்து உண்மையை அறியும் வழிமுறையை ஒவ்வொரு மறைநூலும் மறைத்து வைக்காமல் நமக்கு நேரடியாகவே மொழிகிறது. சிதறிக் கிடைக்கும் அவ்வழிமுறையை நூலாக நூற்றுத் தருவதே இந்த தொடரின் நோக்கம்.  

நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை நம்புவதல்ல, மாறாக இருப்பதை நம் கண்கள் காணமுடியாது என்றாலும் நம்புவதாகும். நாம் மருத்துவரை நம்புவது போல. வெகுசிலர் அறிந்த மருத்துவக் கல்வியை கற்றவர் இவர் என மருத்துவருக்கு ஒரு  பல்கலைக்கழகம் சான்றிதல் வழங்குகிறது. யாருமே அறியாத செய்திகளை வழங்கும் இறைவன் தனக்குத்தானே தரும் சான்றிதழ் மறைநூல்களாகும். அச்சான்றிதழை சரிகாணும் வாய்ப்பு என்பது அதை வாசிக்கும் பொழுது நமக்கு கிடைக்கிறது. மறைநூலை வாசிப்பதால் ஞானம் கிடைக்கும், உலகிலும் பல நன்மைகள் ஏற்படும் என்று சொல்லப் படுகிறது, எனவே வாசிப்போமே!

தமிழர், கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதவசங்களை ஆதாரங்களை குறிப்பிட்டு அதன் அடிப்படையிலேயே அனைத்து கருத்தும் இதில் விவரிக்கப் பட்டுள்ளது.

குறிப்பு
  • சில தலைப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆதார தகவல்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டும், மெருகேற்றி எழுதப்பட்டுக் கொண்டும் உள்ளது. 
  • உங்கள் மேலான கருத்துக்களும் தகவல்களும் உதவிகளும் வரவேற்கப் படுகிறது.

13 கருத்துகள்:

  1. தஜ்ஜால்,மண்ணறை, மறுமை விசாரணை, ஆகியவைகள் எழுதப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நூல் எப்பொது வெளி வரும் , எங்கே வாங்குவது

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா14 மே, 2023 அன்று AM 1:44

    u can publish this book with Kovai Ameer Althab , pelase contact him, he is interested in these kind of thing

    பதிலளிநீக்கு
  4. முந்தய வேந்தன்களும் குரானும் சில இடங்களில் ஏன் முரண்படுகிறது

    3:50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சாத்தான் அவன் உருவாகிய நிகழ்வு பற்றி தமிழர் மறைநூலில்?

    பதிலளிநீக்கு
  6. வேதம் எல்லோருக்கும் ஆனதா? அல்லது சிலர் மட்டும் ஓதவா

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

      ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுகித்தேயாக வேண்டும், மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையை சந்தித்தாக வேண்டும்! இதன் பின்னரே இறுதித் தீர்ப்பு நாள் என்னும் கடுமையான சோதனை நாளை சந்திக்கும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

      இம்மை வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் இடையில், ஒவ்வொரு ஆன்மாவும் சந்திக்கவிருக்கும் மண்ணறை வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால் இம்மை வாழ்க்கையை அல்லாஹ் வழிகாட்டிய வாழ்க்கை நெறிப்படி மிகச் சரியான நேர்வழியில் வாழ்ந்து ஒரே முயற்சியில் இலக்கையடைய வேண்டும். இல்லையேல் மறுமையில் கைச்சேதம் அடைந்தவர்களாவோம்.

      மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம், இறை வழிகாட்டல்படி நல்லமல்களைச் செய்து மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டி, வெற்றியாளர்களின் கூட்டத்தில் நம்மை இணைத்திட இறைவனை வேண்டுவோம்!

      மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கீழ்காணும் நீண்ட நபிமொழி உந்துகோலாக அமையட்டும்!

      (அட்மின் தொடர்புக்காக இப்பதிவு)

      நீக்கு
    2. இந்த தலைப்பில் வெவ்வேறு சமயங்களில் உள்ள செய்திகளை தொகுக்க வேண்டும் என்பதை நினைவூட்ட எழுதப்பட்டுளள்து.

      நீக்கு
  8. பிராத்தனை : பாவ மன்னிப்பு, இறைவனை புகழ்தல், வேண்டியதை கேட்டல்

    பதிலளிநீக்கு