அமரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மரணமில்லாத ஒரே ஒருவன்

தமிழர் சமயம்


அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர் புகு மாறறி யேனே. (திருமந்திரம் 5


இஸ்லாம்


(உலகிலுள்ளவை) யாவும் அழிந்து போகக்கூடியதே, மிக்க வல்லமையும், கண்ணியமுமிக்க உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:26,27)  
 

கிறிஸ்தவம் & யூதம்


அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென். (1 தீமோத்தேயு 6:16)

முடிவுரை

மரணமில்லாத அமரன் ஒரே ஒருவன் தான் அவனே நம் இறைவன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளும் ஒரு நாள் நிச்சயமாக மரணித்தோ அழிந்தோ போகும்.