பூமியில் மனிதனை இறைவன் படைப்பதற்கு என்ன காரணம்?


தமிழர் சமயம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - (குறள் - 01:09)

விளக்கம்குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும். 

எனவே இந்த மனிதன் (தலை) படைக்கப் பட்டதன் நோக்கமாக சிரம் தாழ்ந்து எட்டு குணங்களை உடைய ஒரு இறைவனை வணங்கவே. (எட்டு குணங்கள் உடைய பலர் இல்லை, ஒருவன்)

பெறுதற்கறிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே - திருமூலர் திருமந்திரம் பாடல் 2109

விளக்கம்பெறுதற்கு அறிய பிறவி பெற்றதே இறைவனடி பேணவே.

இஸ்லாம்:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - (குர்ஆன் 22:77)

மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்கும் படைக்கவில்லை. (குர்ஆன் 51:56)

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - (குர்ஆன் - 2:171)

விளக்கம்இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல உள்ளவர்கள். இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள் ஆவர். மனிதனையும் ஜின்களையும் படைத்த பிரதான நோக்கமே இறைவனை  வணங்குவதற்காகும், மற்ற காரணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 

குறிப்பு:
  • கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
  • "எண்குணத்தோன்" ஒவ்வொரு பொழிப்புரையாளர்களும் ஒவ்வொரு பொருள் தருகின்றனர்.. ஆனால் வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டுக்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.
1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்). 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).

கிறிஸ்தவம்:

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள். (ஏசாயா 43:21)

 விளக்கம் : நாம் கடவுளை வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ளோம்; அதுவே நமது வாழ்வின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு தயாரிப்பும் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது. 

எனக்கென்று ஏற்படுத்தினேன் என்று கூறுகிறானே தவிர (பிதா, சுதன் & பரிசுத்த ஆவிகளாகிய) எங்களுக்கென்று கூறவில்லை, ஏனென்றால் கர்த்தர் ஒரே ஒருவர்.

முடிவுரை

அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை வணங்குவதே பிறப்பின் காரணமாக உலக சமயங்கள் சொல்கிறது.

References

உள்ளத்தை அறிந்தவன் *

கிறிஸ்தவம் 


மரணத்திற்கு அழைத்துச் செல்லப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்; படுகொலைக்கு தடுமாறுபவர்களை தடுத்து நிறுத்துங்கள். "இதோ, இதை நாங்கள் அறியவில்லை" என்று நீங்கள் சொன்னால், இதயத்தை எடைபோடுபவர் அதை உணரவில்லையா? உன் ஆத்துமாவைக் காக்கிறவன் அதை அறியவில்லையா? (நீதிமொழிகள் 24:11-12)

இஸ்லாம்  


‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (குர்ஆன் 2:284)

சோதிடமும் குறிசொல்லுதலும் ஆன்மிகம் அல்ல


நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே இது அவர்களுக்கான பதில்அல்ல, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம் அடைகின்றனர்.

எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய அல்லது கணிக்க முடியுமா என்று அவரது சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது மிக எளிது, ஏனென்றால் எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. காரணம் ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், அதற்கான வரையறையை அறியாத நிலை..

இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர்கள் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்

தமிழர் மதம்

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்.  - (நாலடியார் 52)

(பதவுரை)
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= முதுமையும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமக்கு ஏவப்பட்ட,
கருமம்= நற்செயலை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அதிக அளவில்லாத,
சத்தமும்= குறி கேட்டல்,
சோதிடமும்= சோதிடமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= உளரும்,
பித்தரின்= பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.

(கருத்துரைபெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - (அறநெறிச்சாரம் பாடல் - 144)

(பதவுரை)
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;
தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,
எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடத்தை கற்பதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது,
இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,
அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

நாளையும் கோளையும் நம்பாதே நமச்சிவாயனை நம்பு. - (திருஞானசம்பந்தர்)

இஸ்லாம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இறைவனின்  சட்டத்தை அவன் நிராகரித்து விட்டான். (அஹ்மத் 9171)

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

கிறிஸ்தவம்


மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6)
 
உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது குறிசொல்லவோ மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ சூனியம் வைக்கவோ,வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம  அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். - (உபாகமம் 18:10-13)

மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார். (லேவியராகமம் 20:27)

முடிவுரை 

ஜோதிடம் உண்மை, நல்ல தொழில், அது ஒரு கடல், அதை கற்க பொறுமை வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் கூறி இருப்பதை காண முடிகிறது. ஆனால் சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

சோதிடம் ஒரு கடல் அல்ல - "தொலைவில்லா சத்தமும் சோதிடமும்" என்கிறது நாலடியார் அதாவது "ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத" என்று பொருள்.

சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் பல பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர், ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. 
 
இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தண்மை ஆராயப்பட வேண்டும்.  உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

உணமையோ பொய்யோ இதை மனிதன் செய்வதை இறைவன் விரும்புவதில்லை. மேலே உள்ள பாடல்களையும் வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நன்றி. 

இறைவனை எப்படி, எத்தனைமுறை வணங்குவது?

தமிழர் சமயம் 


வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.

இஸ்லாம் 


இறைவனை வணங்கும் முறை

நீர் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! - (அல்குர்ஆன் 15:98)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631  

(குளிப்பு கடமை இல்லாதவர்கள்) ‘உளூ (உடலை சுத்தம் செய்தல்) நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330)

‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) (நூல்: புகாரீ 160)


எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (குர்ஆன் 4:103

ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம் 394)

1) ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1075)

2) ‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: (முஸ்லிம் 1075)

3) ‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076)

4) ‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076) 

5) ‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1074

 
கிறிஸ்தவம் & யூத மதம் 

    • நின்று 
      • இயேசு இவற்றைப் பேசினார்; (நின்று கொண்டு) வானத்தை நோக்கித் தன் கண்களை உயர்த்தி, "அப்பா, நேரம் வந்துவிட்டது" என்றார். - (யோவான் 17:1)    
      • அன்னாள் நின்றுகொண்டு தன் விண்ணப்பத்தை கர்த்தரிடம் கொடுத்தாள், கர்த்தர் அவளுக்குப் பதிலளித்தார். (1 சாமு 1:26) 
      • பயந்து நில்லுங்கள், பாவம் செய்யாதீர்கள்; சேலா. (சங்கீதம் 4:4) 

    • அமர்ந்தது 
      • தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான் : அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான். தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? (2 சாமுவேல் 7:18)  
    • கைகளை உயர்த்தி 
      • புனித ஸ்தலத்திற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள்
        மற்றும் கர்த்தரை ஆசீர்வதிப்பாராக (சங்கீதம் 134:2)
      • என் ஜெபம் உமக்கு முன்பாக தூபமாகவும் , என் கைகளை உயர்த்துவது மாலை பலியாகவும் எண்ணப்படும்! (சங்கீதம் 141:2
    • மண்டியிட்டு
      • சாலொமோன் இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் கர்த்தருக்குச் செலுத்தி முடித்தபின், அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்தான் , அங்கே வானத்தை நோக்கி கைகளை நீட்டி மண்டியிட்டான். (1 இராஜாக்கள் 8:54) 
      • தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். (டேனியல் 6:10)  
      • [இயேசு] அவர்களுக்கு அப்பால் ஒரு கல்லெறி தூரம் விலகி, முழங்கால்படியிட்டு , “அப்பா, உமக்குச் சித்தமானால், இந்தக் கோப்பையை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் என் சித்தம் அல்ல, உமது சித்தம் நிறைவேறும்." ( லூக்கா 22:41-42
    • தரையில் தலை வைத்து 
      • "யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினார்..." (யோசுவா 5:14)
         
      • "மோசேயும் ஆரோனும் சபையின் முன்னிலையிலிருந்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்றார்கள், அவர்கள் முகங்குப்புற விழுந்தனர்..." (எண்கள் 20:6)
         
      • "ஆபிரகாம் முகங்குப்புற விழுந்தான்..." (ஆதியாகமம் 17:3)
         
      • "...அவர்கள் சிம்மாசனத்தின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்." (வெளிப்படுத்துதல் 7:11)
         
      • "...பின்னர் அவர்கள் தலை குனிந்து, தங்கள் முகத்தை தரையில் ஊன்றி இறைவனை வணங்கினர்." (நெகேமியா 8:6)
         
      • "...அப்பொழுது தாவீதும் இஸ்ரவேலின் மூப்பர்களும் சாக்கு உடை உடுத்தி முகங்குப்புற விழுந்தனர்." (1 நாளாகமம் 21:16)
          
      • சிறிது தூரம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து, "என் பிதாவே, கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னிடமிருந்து எடுக்கப்படும். ஆனாலும் என் சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படியே" என்று ஜெபித்தார். - (மத்தேயு 26:39) 
 

எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  


ஆரம்பகால திருச்சபையின் காலத்திலிருந்தே , இறைவணக்கமானது ஒரு நாளில் ஏழு நேரங்களில் செய்யும்படி கற்பிக்கப்பட்டது.; அப்போஸ்தலிக்க மரபில், ஹிப்போலிடஸ் கிறிஸ்தவர்களுக்கு 
1) சூரியன் உதிக்கும் பொழுது, ​​ 
2) மாலை விளக்கு எரியும் போது, ​​ 
3) படுக்கை நேரத்தில், 
4) நள்ளிரவில் : இயேசு கடவுளிடம் ஜெபிப்பதில் இரவைக் கழித்தார் (லூக்கா 6:12) 
5) பகலின் மூன்றாவது, 
6) ஆறாவது மற்றும் 
7) ஒன்பதாம் மணிநேரம், ஆகிய ஏழு முறைகள் கிறிஸ்துவின் பேரார்வத்துடன் தொடர்புடைய மணிநேரங்கள் என கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார் .

மறுமை என்ற ஒன்று உண்டா?

தமிழர் சமயம்


மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுஉலகம் என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.
 
மனநலத்தின் ஆகும் மறுமை (459)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்ற குறள்களில் மறு உலக வாழ்கையை சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்து கையாள்கிறார்:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் (98)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இன்மையும் இன்றி வரும் (1042)

இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அதாவது மறுமை வாழ்க்கையில் சுவர்க்கம் என்பதையும் கச்சிதமாகச் சொல்கிறார்.

அதை,
வானென்னும் வைப்பு (24)
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)
புக்கில் (340)
வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)
வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும்,
பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும்,
அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை)
அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும்,
அதற்குக் காரணம் பற்று (347) என்றும்,
பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346)
ஆசை, வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் துன்பம் என்பது தொடரும் என்றும்,

இம்மையில் செய்த வினையின் விளைவு மறுமையில் மீண்டும் எழும் பொழுது அதன் வினைப்பயன் தொடரும் என்றும், (107, 126, 398, 538),

பற்றற்ற கண்ணே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் (349) என்றும்
படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - குறள் 23.

இருமை வகை தெரிந்து - இவ்வுலக மறுஉலக வாழ்கை என்னும் இரண்டு உள்ளதென ஆராய்ந்து அறிந்து; ஈண்டு - இம்மையில், அறம் பூண்டார் பெருமை - அறக் காரியங்களை செய்வர் பெருமை; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374

இருவேறு உலகத்து - இம்மை மறுமையில்
இயற்கை திருவேறு - உள்ள பொருள்களின் தன்மைகள் வெவேறு
தெள்ளிய ராதலும் வேறு. - அவர்கள் அதில் அறிவதும் வேறு வேறு

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே. திருமந்திரம்

பொழிப்புரைஅகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

குறிப்புரை : `உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது 

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார். - நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (01)

கருத்துரைமேமையான தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.

விசேடவுரைதவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.

பதவுரை
மேலை= மென்மையான ;
தவத்தால்= தவங்காரணமாக;
தவம்= நற்றவம்;
செய்யாதார்= செய்யாதவர்கள்;
அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
நோக்கி= பார்த்து;
தாம்புக= தாம் உள்ளே நுழைய;
பெறார்= பெறாதவர்களாய்;
புறங்கடை= தலைவாயிலை;
பற்றி= பிடித்துநின்று;
மிக= மிகவும்;
தாம்= தாங்கள்;
வருந்தி= வருத்தப்பட்டு;
இருப்பர்= இருப்பார்கள்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். பாடல்: 95 (மறுமை)

பதவுரை
மறுமையும்= மறு பிறப்பையும்,
இம்மையும்= இப்பிறப்பையும்,
நோக்கி= ஆராய்ந்து,
ஒருவர்க்கு= ஒருவருக்கு,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்தல்= வழங்கல்,
உறும் ஆறு= பொருந்தும் வழி
வறுமையால்= தரித்திரத்தினால்,
ஈதல்= கொடுத்தல்,
இசையாது எனினும்= கூடாதாயினும்,
இரவாமை= யாசியாதிருத்தல்,
ஈதல்= கொடுத்தலினும்,
இரட்டி= இருமடங்காக,
உறும்= அடையும்.

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர். 243

எந்த மண்ணில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக முளைக்காது.
எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிந்தவர் சுவர்க்கம் புகுவர்.
நல்லறம் செய்யும் தன் முயற்சியால்தான் சுவர்க்கம் புகமுடியும்.
வடதிசை மண்ணிலும் நல்லறம் புரியாமல் வீணானவர்கள் உண்டு.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

அலை வீசி எறியும் பெரிய கடலில் இருந்தாலும் நீர் சிறிதளவே இருக்கும் சிறிய கிணற்று நீரையே மக்கள் உண்பர். அதுபோல, வழங்கி, மறுமை இன்பம் பெறாமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனின் செல்வத்தை விட, சான்றோரை வாட்டி வதைக்கும் வறுமை நிலையே தலைமையானதாகும்.

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார். 329

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் 

பேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
 ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
 அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
 இவைஇவை என்றுஉணரற் பாற்று. - அறநெறிச்சாரம் 149

 விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது.


ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
 தானே தனக்கு மறுமையும் இம்மையும்
 தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
 தானே தனக்குக் கரி.

விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.

சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
 பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
 தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
 நீயார் நினைவாழி நெஞ்சு.

விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.

எண்ணருந்துன்பம் உடலுக்கு! பாடல் - 152

உயிர்திகிரியாக உடம்புமண் ணாகச்
 செயிர்கொள் வினைகுயவ னாகச் - செயிர்தீர்
 எண்அரு நல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
 எண்அருநோய் துன்பம் அவர்க்கு.

விளக்கவுரை குற்றம் தரும் வினை, பாண்டம் செய்யும் குயவனாக நின்று, உயிர்க் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைப்பட்ட, தாதுவையே களிமண்ணாகவும் கொண்டு குற்றத்தினின்று நீங்காத நினைத்தற்கு அரிய பாத்திரத்தைச் செய்யும் அந்த உடலுக்குள் அதனை அனுபவிக்கும் சீவர்க்கு அளவிட இயலாத கொடிய நோய்கள் பல உள்ளன.

மறுமையைப் பற்றி எண்ண வேண்டும் பாடல் - 153

முன்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதுஓர்
 இல்பிறந்து இன்புஉறா நின்றவர் - இப்பிறப்பே
 இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
 முன்னி முயன்றுஒழுகற் பாற்று.

விளக்கவுரை முன்னைய பிறவியில் தாம் இயற்றிய அறச் செயல் காரணமாக, நல்ல ஒரு குடியில் தோன்றி இன்பத்தை அனுபவிப்பவர்கள், இம்மை இன்பத்தையே இன்னமும் எண்ணி, அதற்காக முயல்வாராயின், மறுமையில் அடைவது துன்பமே ஆகும். ஆதலால் இம்மை இன்பத்தில் செலுத்தும் கருத்தை ஒழித்து, மறுமை இன்பத்துக்குக் காரணமான அறத்தை நினைத்து முயன்று அதனைச் செய்வதே சிறந்தது.

மறுமைக்கு அறம் செய்யாதவர் அறியாதவர் பாடல் - 154

அம்மைத் தாம் செய்த அறத்தின் வரும்பயனை
 இம்மைத் துய்த்து இன்புஉறா நின்றவர் - உம்மைக்கு
 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
 கறந்து உண்டுஅஃது ஓம்பாமை யாம்.

விளக்கவுரை முன் பிறவியில் தாம் செய்த அறம் காரணமாக இப்பிறவியில் இன்பம் அனுபவிப்பவர்கள் அறத்தைச் செய்யாமல் ஐந்து பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பங்களை நுகர்ந்து கொண்டு வாளா இருத்தல், நல்ல பசுவின் பாலைக் கறந்து அருந்தி, அப்பசுவை உணவிட்டுக் காவாமல் இருத்தல் போலாம்.

நல்ல பிறவி தீய பிறவிகளுக்குக் காரணம் பாடல் - 155

இறந்த பிறப்பில்தாம் செய்த வினையைப்
 பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருப்பது
 செய்யும் வினையால் அறிக - இனிப்பிறந்து
 எய்தும் வினையின் பயன்.

விளக்கவுரை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முன் பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை, எடுத்துள்ள இப் பிறவியில் அடையும் இன்பதுன்பங்களால் அறிந்து கொள்க. இனிமேல் பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை, இம்மையில் பிறந்து செய்யும் நல்வினை தீவினைச் செயல்களால் அறிவார்களாக!

வீடுபேற்றை அடையாத பிறவி பயன் அற்றது பாடல் - 156

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தார்
 ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
 மேலைப் பிறப்பும் இதுவானால் மற்று என்னை?
 கூலிக்கு அழுத குறை.

விளக்கவுரை மக்கள் வேறொரு தொடர்பும் இல்லாமல் தம்தம் வினை காரணமாகத் தாயும் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் என உறவினராய் வந்து பிறந்து வீடு பேற்றை அடைய முயலாமல் தம்முள் சிலர் வருந்த இறந்துபோதல், வரும் பிறவியிலும் அவர் மீண்டும் தோன்றி அவர்களுள் சிலர் வருந்த இறந்து விட்டால், அவர்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் கூலியின் பொருட்டு அழுத செயலாகும்.
 

இஸ்லாம்


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 2:4

குர்ஆன் இரு உலக பொருள்களின் தன்மைகளை  இப்படி கூறுகிறது "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - திருக்குர்ஆன் 2|25

இவ்வுலக மனிதன் அறிய முடியாதது பற்றி திருக்குர்ஆன் "32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது." என்று கூறு கிறது மேலும் மறுமையில் அவன் நிலை பற்றி "99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்." இவ்வாறு கூறுகிறது.

திருக்குறள் என்பது ஓரிறை கொள்கையை மட்டுமன்றி மேலே குறிப்பிட்ட அனைத்து இஸ்லாமிய கொள்கைகளையும் வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது.. ஆனால் அதற்க்கு பொழிப்புரை எழுதிய காலகட்டத்தில் வாட மொழியிலிருந்து வந்த சித்தாந்தங்களின் ஆதிக்கத்தால் எழு பிறவி என்று குறிப்பிடபட்ட இடங்களை ஏழு பிறவி என்று கருத்து திணிப்பு பொழிபபுறையில் இருப்பது  உண்மை. அனால் அது மீண்டும் எழும் பிறவியை அதாவது மறுமையை அவ்வாறு விளக்குகிறது. 

முடிவில் திருக்குறள் இம்மை வாழ்க்கை மறுமை வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வரையறைகள் வரம்புகள் இஸ்லாத்துடன் நிரப்பமாக ஒத்துபோகிறது.. 

இது இறைவன் திருக்குரானில் சொன்ன விஷயங்களையும் அதாவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்கள் அனுப்ப பட்டார்கள் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்தேஅவன் தேர்வு செய்து அனுப்பினான் அவர்கள் விளங்கும் பொருட்டு என்றதும் அவர்கள் உலகம் மற்றும் உலக மக்கள் அனநிவரையும் படைத்த இறைவனாகிய அவனையே வணங்க வலியுறுத்தினார்கள் என்று  கூறியதும் நிரூபணம் ஆகிறது. 

மேலும் வேதத்தை உடையவர்களை உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒருபொதுவான விஷயத்தின் பக்கம்வாருங்கள் என்ற இறை வசனத்தை கொண்டு் அழைப்பு விடுப்பதன் மூலம்  ஏறக்குறைய 95% போதனைகள் ஒன்றாகவே இருக்கும் வேத வசனங்களை பின்பற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 
 

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. - (முஸ்லிம் 5436.)