கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. - (குறள் - 01:09)விளக்கம்: குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.எனவே இந்த மனிதன் (தலை) படைக்கப் பட்டதன் நோக்கமாக சிரம் தாழ்ந்து எட்டு குணங்களை உடைய ஒரு இறைவனை வணங்கவே. (எட்டு குணங்கள் உடைய பலர் இல்லை, ஒருவன்)பெறுதற்கறிய பிறவியை பெற்றும்பெறுதற்கரிய பிரானடி பேணார்பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே - திருமூலர் திருமந்திரம் பாடல் 2109விளக்கம்: பெறுதற்கு அறிய பிறவி பெற்றதே இறைவனடி பேணவே.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - (குர்ஆன் 22:77)மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்கும் படைக்கவில்லை. (குர்ஆன் 51:56)(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - (குர்ஆன் - 2:171)விளக்கம்: இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல உள்ளவர்கள். இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள் ஆவர். மனிதனையும் ஜின்களையும் படைத்த பிரதான நோக்கமே இறைவனை வணங்குவதற்காகும், மற்ற காரணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
- கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள.
- "எண்குணத்தோன்" ஒவ்வொரு பொழிப்புரையாளர்களும் ஒவ்வொரு பொருள் தருகின்றனர்.. ஆனால் வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டுக்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.
1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்). 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள். (ஏசாயா 43:21)விளக்கம் : நாம் கடவுளை வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ளோம்; அதுவே நமது வாழ்வின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு தயாரிப்பும் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது.
எனக்கென்று ஏற்படுத்தினேன் என்று கூறுகிறானே தவிர (பிதா, சுதன் & பரிசுத்த ஆவிகளாகிய) எங்களுக்கென்று கூறவில்லை, ஏனென்றால் கர்த்தர் ஒரே ஒருவர்.
முடிவுரை
அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை வணங்குவதே பிறப்பின் காரணமாக உலக சமயங்கள் சொல்கிறது.
References