கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடவுள் ஏன் ஒரு ஏலியனாக இருக்கக் கூடாது?

 அதற்கு

முதலில் ஏலியன் என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்று நாம் அறிந்து இருக்க வேண்டும்.

இரண்டாவது கடவுள் என்பதன் வரையறை என்னவென்று அறிந்து இருக்க வேண்டும்.

மூன்றாவது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடவுள் என்பது வேறு கோளிலிருந்து வந்த உயிரினமோ அல்லது அயல் நாட்டை சார்ந்த மனிதரோ அல்ல. ஏன்?

  • கடவுள் பூமிக்கு வருவது இல்லை, அவன் உயர்ந்த வானத்தில் இருக்கிறான் - இறைவன் எங்கே இருக்கிறான்?
  • கடவுளை கண்டவர் எவரும் இல்லை - கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
  • ஏலியன்களுக்கும் ஏதோ ஒரு வகையான உணவும் சுவாசிக்க காற்றும் தேவை, தெய்வத்துக்கு அதுவெல்லாம் தேவை அல்ல.
  • ஏலியன்கள் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது, பிரபஞ்ச விதிகளை ஏற்படுத்திய இறைவன் அவர்களுக்கு அப்பாற்பட்டவன்.

கடவுள் உலகைப் படைத்தாரா? அல்லது கடவுள்கள் உலகத்தை படைத்தார்களா?

இந்த கேள்விக்கும் பதில் எந்த கோணத்தில் தரமுடியும் என்றால், கடவுள் என்கிற கருத்து வேதத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகிறது என்பதால் உலகில் உள்ள பல்வேறு வேதங்கள் என்ன சொல்கிறது என்று அறிவது அவசியம்.

தமிழர் சமயம் 

சைவ சித்தாந்த நூலான திருமூலரின் திருமந்திரம் இவ்வாறு இறைவன் உலகை படைத்ததை விளக்குகிறது.

445. உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. 5

446. படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே. 6

447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. - திருமந்திரம் 445–447

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே. - சிவவாக்கியம் 241

இஸ்லாம்  


‘வானங்களும், பூமியும் இணைங்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா ?… (திருக்குர்ஆன் 21:30)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 7:54)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:22:73.

கிறிஸ்தவம்  


துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:1-2
 

முடிவுரை


இதுபோல எத்தனை வேத ஆகம மறை நூல்களை எடுத்து பார்த்தாலும் இறைவனுக்கு அந்த நூலில் பயன்படுத்தப்படும் சொல் பன்மையில் இல்லை. ஒருமையில் தான் உள்ளது. இதுவே ஒரே கடவுள் தான் இவ்வுலகை படைத்தார் என்பதற்கு போதுமான சான்று. 

மேலும் தர்க்க ரீதியாக யோசித்தால், பல்வேறு கடவுள்கள் உலகத்தை படைத்து இருந்தால் மனித உடல் கூறுகளையும் பண்புகளையும் உட்பட ஒவ்வொரு பொருளும் ஒரே அமைப்பில் ஒரே விதிக்கு கட்டுப்பட்டு உலகம் முழுதும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

இங்கே மனிதனுக்கு எப்படி இரண்டு கண், ஒரு மூக்கு, ஒரு இதயம் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக இருக்கிறதோ, அப்படிதான் உலகம் முழுதும் உள்ளது.  இங்கு நெருப்புக்கு  சுடும் பண்பும், ஆப்பிரிக்காவில் குளிரும் பண்பும் உள்ளதா என்ன? ஒரே இறைவன்தான் அனைத்தையும் படைத்தான் என்பதற்கு வேறு எந்த தர்க்கமும் தேவை இல்லை. படைப்பு பற்றிய தரவுகள் ஒவ்வொரு வேதத்திலும் முரண்படுகிறதென்றால் அதற்கான சரியான காரண காரியத்தை ஆய்ந்து அறிவது அறிவுடைமை.