யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || கீதை 10- 3||
அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
ய: வேத்தி = எவர் அறிவாரோ
மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் அவர்< /span>
ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்
விளக்கம்: பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கமடைந்தான்.
பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)
சொற்பொருள்:
பிறப்பு இலி - பிறப்பற்ற
நாதனைப் - ஆசிரியனை
பேர் நந்தி - பெருமையுடைய நந்தியும்தன்னைச் - தன்னைப் (நந்தியைப்) போலசிறப்பொடு - சிறப்புடையவானவர் - வானவரும்சென்று கை கூப்பி - சென்று கை கூப்பிமறப்பிலர் - மறக்க மாட்டார்கள்நெஞ்சினுள் - நெஞ்சினுள்மந்திர மாலை - திருமந்திர மாலைமந்திர மாலைஉறைப்போடும் - பொருளுணர்ந்துகூடிநின்று ஓதலும் ஆமே - கூடிநின்று ஓதுவார்கள்
விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள்.
இஸ்லாம்
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
கிறிஸ்தவம் / யூதம்
God is not a man, that he should lie; Neither the son of man,.. (Numbers 23:19)
தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடனின் மகனும் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். (எண்ணாகமம் 23:19)
For I am God, and not a man.. (Hosea 11:9)
நான் தேவன். மனிதனல்ல (ஓசியா 11:9)