தீர்க்கதரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்க்கதரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விரும்புவோர் தீர்க்கதரிசியாக மாறமுடியுமா?

இல்லை, இறைவன் மட்டுமே அவர்களை தேர்ந்தெடுக்கிறான்

இந்து மதம்


அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான தூதர், அக்னியை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். இந்த எங்கள் தியாகத்தில் திறமையானவர். (RIG 1.1.12 மந்திரம் 12:1)

தமிழர் சமயம்


நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம் - திருமந்திரம் 130

பொருள்: திருமூலர் ஆசிரியராக நந்தியின் மூலம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்

இஸ்லாம்

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். 4:79

 முகமது நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிகழ்வு: நபி(ஸல்)அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தனர், தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கி இருந்து) வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவை தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதேப் போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.

(ஒருநாள்) ஒரு வானவர் ஓதுவீராக என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை பின்வருமாறு விளக்கினார்கள்: ‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும், ஓதுவீராக என்றார். (அப்போது) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுக கட்டியணைத்து என்னை விட்டு விட்டு மீண்டும் ஓதுவீராக, என்றார் (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு, படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை அலக்கில் (கருவளர்ச்சியின் ஆரம்ப நிலை) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார்; மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது, பிறகு இதயம் படபடத்தவர்களாக- அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)விடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்றார்கள். கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)விடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் வராகாவிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல் அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். வராகா அறியாமைக் காலத்திலேயே கிருஸ்தவ சமயத்தை தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும். இன்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி), என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வராகா நபி (ஸல்) அவர்களிடம் , என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள்; தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். (அதைக் கேட்டதும்) வராகா (நபி (ஸல்) அவர்களிடம்) இவர் தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள், மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமாக உதவி செய்வேன் என்று கூறினார். அதன் பிறகு வராகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதற்செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. - புகாரி-3: ஆயிஷா (ரலி)

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் நம்முடன் வாழும் சிலர் தன்னை சித்தராக, நபியாக, ரிஷியாக பிரகடனப்படுத்துகின்றனர். ஆனால் அவரை ஏற்கும் முன் அவரைப் பற்றிய வேத முன்னறிவுப்புகளை ஆய்ந்து அறிவது அவசியம். ஏனென்றால் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் அவரைப்பற்றிய பல செய்திகள் முன்னரே அறிவிக்கப் பட்டு இருக்கும். அவ்வாறு நாம் அதை ஆய்ந்து அறிரும் பொழுது பொய்குருக்களிடம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குர்ஆனின் வாக்குறுதி படி முகமது நபி-தான் கடைசி தீர்க்கதரிசி குர்ஆன்-தான் கடைசி மறை நூல். எனவே இதன் அடிப்படையில் கிபி 650-க்கு பிறகு எழுதப்பட்ட வேத நூல்களையும் தீர்க்கதரிசிகளையும் எளிதாக நிராகரிக்கலாம். ஆனால் நூல்களின் காலம் சரியாக கண்டறியப் பட்டுள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.