பாவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா? *

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - ஞானக்குறள் 124. 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

குறிப்பு: இஸ்லாத்தின் அப்படியே ஏக இறை கொள்கை ஆகும். 

பாவம் என்றால் என்ன?

பாவம் என்றால் என்ன என்று அறிய முயலும் பொழுது அதனுடன் சேர்த்து பாவ புண்ணியங்களை வரையறுககும் உரிமை யாருக்கு உண்டு என்பதையும் அறிய வேண்டும். சரி பிழை-களை வரையறுப்பது யார்? என்பதை அறியாத பட்சத்தில் இன்று influencers என்ற பெயரில் எவர் எவரோ தனக்கு தோன்றியதை வாத திறமையின் மூலம் நியாய படுத்துவதை பார்க்கிறோம். மேலும் அவர்களின் வலையில் பெரும்பாலானோர் விழுவதையும் பார்க்கிறோம். இவ்வாறு தீய வழியில் செல்வதை தடுக்கும் வண்ணமாக நாமிந்த அடிப்படை அறிவை வளர்ப்பது மிக மிக அத்தியாவசியம்.

தமிழர் சமயம்  

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே. - திருமந்திரம் 1047 
  
கருத்து: புண்ணியம்‌, பாவம்‌ என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின்‌ பயனாக நன்மையும்‌, பாவத்தின்‌ பலனாகத்‌ தீமை, துயரம்‌ ஆகியவையும்‌ வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள்‌ சிலரே. அவர்கள்‌ ஞானிகள்‌ எனப்படுவார்கள்‌. புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இவை இரண்டும்‌, ஜீவன்களைப்‌ பற்றிட வரும்‌ பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின்‌ ஆணி வேரையே அறுத்து, மனதைத்‌ தீய வழிகளில்‌ செல்லாதபடித்‌ தடுக்கும்‌ மன உறுதி பெற்றால்‌, பரம்பொருள்‌ இருக்குமிடம்‌ அறியலாம்‌. ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்‌!

விளக்கம்: புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இரண்டைச்‌ சொல்லி, அவற்றால்‌ விளையும்‌ விளைவுகளையும்‌ சொல்கிறது இப்பாடல்‌! புண்ணியத்தால்‌ நன்மையும்‌, பாவத்தால்‌ தீமையும்‌ விளையும்‌ என்னும்போது, பாவத்தை வெறுக்கலாம்‌, விலக்கலாம்‌. ஆனால்‌, நன்மை தரும்‌ புண்ணியத்தை ஏன்‌ விலக்க வேண்டும்‌ எனும்‌ சந்தேகம்‌ எழும்‌. இதற்கு முன்னோர்கள்‌ ஓர்‌ அற்புதமான உதாரணம்‌ சொல்வார்கள்‌. இரண்டு பறவைகள்‌. ஒன்று தங்கக்‌ கூண்டில்‌ அடைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று தகரக்‌ கூண்டில்‌ அடைபட்டிருக்கிறது. இந்த இரண்டில்‌ எது உயர்ந்தது என்றால்‌, இரண்டுமே அல்ல!

இஸ்லாம்  

பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

கிறிஸ்தவம்  

பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். (1 யோவான் 3:4)

சனாதன மதம்  

பாவம் என்பது தெய்வீக சட்டத்தை வேண்டுமென்றே மீறுவதாகும். உள்ளார்ந்த அல்லது "அசல்" பாவம் இல்லை. ஆன்மா என்றென்றும் இழக்கப்படும் மரண பாவமும் இல்லை. சாதனா, வழிபாடு மற்றும் துறவறம் மூலம் , பாவங்களை நிவர்த்தி செய்யலாம்.  (ஸ்லோகா 52)

நல்லறங்களாக நால்வேதங்கள் எதை எல்லாம் சொல்லுகிறதோ அதற்கு முரணாக நடப்பது தான் பாவம் ஆகும். மேலும் மனிதனின் உள்ளுணர்வும் பாவத்தை அறிந்தே வைத்து உள்ளது.

பாவம் செய்வதன் மூலம் தற்காலிகமாக சில இன்பங்கள் பெறலாம் ஆனால் அதே சமயத்தில் அதை செய்வதை மனம் முழுமையாக ஏற்காது.

பாவத்தை செய்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், தமிழர் சமயம் என எல்லா சமயங்களும் ஒரே குரலில் கூறுவது என்னவென்றால் அது இறைவனின் நெருக்கத்தை அகற்றும், நரகத்துக்கு கொண்டு செல்லும், துன்பத்துக்கு வழிவகுக்கும், இளிவடைய செய்யும்.

மாறாக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல பௌதீக வாழ்விலும் பல நன்மைகள் உண்டு.

உதாரணமாக, மனதில் எழும் தற்காலிக இன்பங்களை கட்டுப்படுத்தும் ஒரு நபருக்கு அறிவுக்கூர்மை அதிகமாகிறதாக நவீன அறிவியல் கூறுகிறது.

இஸ்லாமிய உலகின் மிக முக்கிய அறிஞர் ஒருவரான இப்னு தைமியா, தனக்கு அறிவு குறைபாடு அல்லது நியபக மறதி ஏற்படும் சமயத்தில் உடனடியாக பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடுவார் என்பது வரலாறு.