சிலைவணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலைவணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழர் நெறி சிலைவணக்கம் அல்ல


தமிழர் நெறி சிலைவணக்கம் அல்ல : உருவ வழிபாட்டை எதிர்த்து சித்தர்கள் பாடிய பாடல்கள் ஏராளம்

சிவ வாக்கியர் பாடல் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

பத்திரகிரியார் புலம்பல் 

உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்

பட்டினத்துப் பிள்ளையார் பாடல் 

சொல்­னுஞ் சொல்­ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்­னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்
இல்­லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்
கல்­னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே

குதம்பைச் சித்தர் 

கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும்

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.

அகஸ்தியர் பாடல் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.