தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே. - திருமந்திரம் முதல் தந்திரம் பாடல் எண் : 4
விளக்கம் : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?
இஸ்லாம்
தொழுகையை (தவம்) நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் (தானம்) கொடுங்கள்; (
2.43)
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். [திருக்குர்ஆன் 41:39 ]
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் (அல்குர்ஆன் : 2:268)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம் 5047)
குறிப்பு : ரம்ஜான் பண்டிகை என்று அழைக்கப்படும் ஈகை பெருநாள் மற்றும் பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாக திருநாள் என இரண்டு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இப்பண்டிகைகள் கொண்டாட்டங்களாக சொல்வது தொழுகை மற்றும் தர்மம் மட்டுமே.
கிறிஸ்தவம்
நன்மை செய்வதையும், உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதையும் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் இத்தகைய தியாகங்கள் கடவுளுக்குப் பிரியமானவை. – எபிரெயர் 13:16
யாருக்காவது பொருள் இருந்தால், ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேவைப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் கடவுளின் அன்பு எப்படி இருக்கும்? – 1 யோவான் 3:17
இலவசமாகக் கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறார்கள்; மற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைத் தடுத்து நிறுத்தி, இன்னும் ஏழையாகி விடுகிறார்கள். – (நீதிமொழிகள் 11:24)