குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீர்க்கதரிசிகள்

தீர்க்கதரிசிகள் என்போர் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகிறார்கள். அவர்களை அடையாளம் காண அவர்களின் வரையறை என்ன என்று அறிவது அவசியம். தூதர்கள் என்ற வார்த்தை நமக்கு ஆபிரகாமிய மதங்களிலிருந்து பரிட்ச்சயமானது. எனவே அதற்கான வரையறையை தேடும் பணியை அங்கிருந்து துவங்குவோம்.

ஆப்ரகாமிய மதங்கள் 

கிறிஸ்தவம் & யூத மதம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger  

தேவதூதர்கள் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தரின் வேதத்தை போதிப்பார்கள்   

இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார்...(வெளி 1:1) பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். (வெளி 14:6) (இது இறுதி வேதம் குர்ஆனை குறிக்கிறது) 

சகரியாவிடம் தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். (லூக்கா 1:19)

காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது. (தானியேல் 8:19)

தீர்க்கதரிசிகள் கர்த்தரின் வேதத்தை மக்களுக்கு போதிக்கும் வேலைக்காரர்கள்
 
மேலும் அவர் கூறினார்: இப்போது என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களில் ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நான் அவருக்கு ஒரு மாராவில் (தரிசனத்தில்) என்னை வெளிப்படுத்துவேன், மேலும் அவருடன் ஒரு சத்தத்தில் பேசுவேன். (எண்ணாகமம் 12:6) 
 
தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன்... (சகரியா 1:6)  

இயேசு கூறினார் "நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. (யோவான் 7:16)

தீர்க்கதரிசிகள் பின்வருவனவற்றை முன்னறிவிப்பு செய்வர்  

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். - (ஆமோஸ் 3:7-8) 

உங்களுக்கும் எனக்கும் முந்திய தீர்க்கதரிசிகள் பண்டைய காலங்களிலிருந்து பல நாடுகளுக்கும் பெரிய ராஜ்யங்களுக்கும் எதிராக போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றை முன்னறிவித்தனர். சமாதானத்தை தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறும்போது, ​​கர்த்தர் உண்மையிலேயே தீர்க்கதரிசியை அனுப்பினார் என்பது தெரியவரும் (எரேமியா 28:8-9)

கர்த்தரின் அனுமதியோடு தீர்க்கதரிசிகள் அதிசயங்கள் செய்து காட்டுவர்  

தீர்க்கதரிசிகள், “ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள். நீங்கள் வியப்புறக்கூடும், ஆனால் மரித்து அழிவீர்கள். ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன். சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றனர். (அப்போஸ்தலர் 13:41

தீர்க்கதரிசிகளின் மரபு

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். (மத்தேயு 1:1)

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இஸ்லாம்: நபி, ரசூல், இறைதூதர், முத்திரை நபி, 

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். (குர்ஆன் 7:35) 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளிக்கும்ஏக இறைவனை தவிர மற்ற வாங்கப் படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (குர்ஆன் 16:36) 

அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) (நூல் : அஹ்மத், தப்ரானி)

முதல் நபி  யார்? ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள்.

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. சாலீஹ் (அலை)
  6. இப்ராகிம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூபு (அலை)
  11. யூசுப் (அலை)
  12. சுஹைபு (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூசா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கிப்ல் (அலை)
  17. தாவூது (அலை)
  18. சுலைமான் (அலை)
  19. இலியாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஜக்கரியா (அலை)
  23. அல் யசஉ (அலை)
  24. ஈசா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)

இதில், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­) (நூல் : புகாரீ 3340)

இறுதித்தூதர்  யார் ? அதற்குரிய ஆதாரம் என்ன?

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது. 

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (குர்ஆன் 33:40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ர­) (நூல்:புகாரி 438) 

தேவதூதர்களின் தலைவர் ஜிபிரியேல் முகமது நபிக்கு அல்லாஹ்வின் வேதத்தை போதித்தார்

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. (16:102)

 மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) தெளிவான அரபி மொழியில். நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. (26:192-96)

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (2:285)

(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (6:130)

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? (12:109) 

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். (அல்குர்ஆன் 16:43) 

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). (16:43)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188) 

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது (அல்குர்ஆன் 13:38) 

”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; ( என முஃமின்கள் கூறுவார்கள்.) (குர்ஆன் 2:285) 

“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை” (அல்குர்ஆன்: 40:78)

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (7:6) 

முகமது நபி எந்த பாரம்பரியத்தை சார்ந்தவர்? 

வாத்திலா இப்னு அல்-அஸ்கா அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டேன், "நிச்சயமாக, அல்லாஹ் இஸ்மாயீலின் மகன்களிடமிருந்து கினானாவைத் தேர்ந்தெடுத்தான், மேலும் அவர் கினானாவிலிருந்து குரைஷிகளைத் தேர்ந்தெடுத்தார், அவர் தேர்ந்தெடுத்தார். குரைஷிகளில் இருந்து ஹாஷிம் கோத்திரம், அவர் ஹாஷிம் கோத்திரத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார்." (முஸ்லிம் 2276)

                 

தமிழர் சமயம்: சித்தர், குரு, ஆசிரியர், நாதன், முனைவன், முனிவன், தலைவன்

ஆபிரகாமிய மதங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இறைவன் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிகளிடம் தேவர்களை தூதர்களாகவும் ஆசிரியர்களாகவும்  அனுப்புகிறான். தூதர்கள் என்ற பதத்தை தமிழ் வேதங்கள் பயன்படுத்தியது குறைவே. ஆனால் தூதர்கள் என்று ஆபிரகாமிய மதங்கள் யாரை குறிப்பிட்டதோ, தூதர்கள் என்பவர்களுக்கு ஆபிரகாமிய  மதங்கள் என்ன வரையறையை தருகிறதோ அந்த அமைப்பில் உள்ளதா என்று ஆய்வு செய்வோம்.

நந்தி தேவர் மூலம் சிவனின் வேதம் நாதர்களுக்கு வழங்கப் பட்டது.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (திருமந்திரம் பாயிரம் பாடல் 6)

பதவுரை: நாதர் - ஆசிரியர்; 

பொழிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசிரியர் யார் என்று அறிய விரும்பினால், நந்திகள் நான்கு பேர் : 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியாக்கிரமர்என்றும் என்னொடுகூட இருப்பவர் 4) எண்மர் என்பவர்களாம். (இதில் சிவயோக மாமுனி என்பவர் ஜிப்ரயிலாக இருக்கலாம்)

குறிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசியரைத்தான் நாம் தேடவேண்டும், நந்தியின் உதவி இல்லாமல் ஒருவர் ஓர் வேதத்தையோ, சமயத்தையோ கொண்டுவந்தால் அது இறைவனிடம் வந்ததல்ல என்று குறிப்புணர்த்துவதோடு, அந்த நதிகள் யார் என்ற என்ற விளக்கத்தையும் இந்த பாடல்கள் தருகிறது. 

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே. (பாடல் எண் : 7)

பதவுரை: என் - எட்டு;  
 
பொழிப்புரை: நந்தியால் அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். நந்தியின் உதவியால் மூலோனாகிய சிவபெருமானை நாடினேன். எட்டு சமயங்கள் செய்யும் நாட்டினில் நந்தி காட்டும் வழியில் நான் இருந்தேன். 

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே. (பாடல் 9)

பதவுரை: நானாபலவகைப்பட்ட; 

பொழிப்புரை: நான்கு நந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் (நான்கு மரபுகளுக்கு) ஒரு ஆசிரியராக உள்ளனர். நந்திகள் எனப்பட்ட நால்வரும் பலவகை பொருள்களை (Subject) கைக்கொண்டு  எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுக என்று நான்கு நந்தி தேவர்களும் ஆசிரியர்கள் ஆனார்கள்.

நந்திகள் நால்வருக்கும் வேதத்தை மொழிந்தவன் சிவன் ஆவான்  

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)

பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் மொழிந்தவன் ஈசன் ஆவான். 

நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
புத்தியினுள்ளே புகப் பெய்து போற்றி செய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தை செய்து  ஆகமம் செப்பலுற்றேனே. (பாடல் எண் : 12)

பொழிப்புரை: ஆசிரியராகிய நந்தி தேவதூதருக்கு அடிபணிந்து இணைந்து என் தலையில் ஏற்றி, சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்தவற்றால், நந்தியினால் சிவாகமம் போதிக்கப்பட்டேன்.   
 
தூதர்களின் மரபு 
 
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபு நிலை திரிதல் என்றால், உரைக்கும் ஆசிரியர் அவர் மரபில் உரைக்கப்பட்ட நூலில் முன் அறிவிக்கப்பட்டவராகவும், அவர் உரைக்கும் நூலில் தனது மரபை கூறக்கூடியவராகவும் இருப்பர். அவ்வாறு உரைக்கும் நூலில் அவருக்கு முந்தியது முதல் நூல் என்றும், அவரு கூறுவது வழிநூல் என்றும் ஆகும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - (குறள் 681)
 
பதவுரை: அன்புடைமை - பிறர் மீது அன்பு கொள்ளுதல்; ஆன்றகுடி - மாட்சிமை, மேன்மை, உயர்வு, மகிமை பெற்ற குடியில் ; பிறத்தல்-பிறத்தல்; வேந்த - இறைவனால்; அவாம் - விரும்பப்படும்; பண்புடைமை - குணம் உடைமை; தூது - தூது; உரைப்பான் - சொல்லுபவன்; பண்பு - இலக்கணம். 

பொருளுரை: பிறர்மீது அன்புடையவனாக இருத்தல், மேன்மை பொருந்திய குடியில் பிறத்தல், இறைவனால் விரும்பப்படும் குணம் உடைமை தூது சொல்லுபவன் இலக்கணம் ஆகும்.  

குறிப்புரை: இது அரசனிடமிருந்து இன்னொரு அரசனுக்கு செல்லும் தூதனைக் குறிக்காது. ஏனென்றால் முதலில், எல்லா அரசனும் ஆன்ற குடியில் பிறப்பதில்லை, ஆட்சி பொறுப்பில் இல்லாத இனமே இல்லை எனலாம். ஆட்சி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்திடமும் மாறி மாறி வரும். ஆனால் தூதர்கள் உயர் குளத்திலும், பாரம்பரியம் / மரபு உள்ள குலத்திலும் பிறப்பர். இரண்டாவது, அரசனே தூதுவனாக செல்வதில்லை. மூன்றாவது, தூதனுக்கு பண்பு இருக்க வேண்டும் எனலாம், அன்பு இருக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே இது அரசனின் தூதுவனைக் குறிக்கவில்லை, மாறாக இறைதூதனை குறிக்கிறது. நான்காவது, இது இறை தூதுவை குறிப்பிடவில்லை என்றால், 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

எனும் முதுமொழி காஞ்சியின் வாக்கு மறைநூல்களை புரிய குறள் உதவும் என்கிறது. மறைநூல்கள் தூதர்களின் மூலமாக வருகிறது என்று தொல்காப்பிய முதல்நூல் சூத்திரம் கூறுகிறது. 

திருமூலருக்கு பின் அவரின் மரபு தொடர்ச்சி   

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே. - (திருமந்திரம், 04 குருபாரம்பரியம், பாடல்  2)

பொழிப்புரை : இத்திருமந்திரத்தைப் என்னிடமிருந்து பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர் 1) மாலாங்கன், 2) இந்திரன், 3) சோமன், 4) பிரமன், 5) உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் 6) காலாக்கினி, 7) கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.

இந்து மதம்: ரிஷி, குரு, ஆச்சாரியார்


ஆபிரகாமிய மதங்கள் (யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) கடவுளின் தூதர்களால் தோன்றியவை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்து மதத்தில் "கடவுளின் தூதர்" என்று எதுவும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். பதிலாக, கடவுள் மனிதனாக உலகில் அவதரிக்கிறார் என்று கருதுகிறோம். கடவுள் பிறப்பும் இறப்பும் அற்றவன் என்பதற்கான பல சான்றுகள் சனாதன தர்ம வேதங்களில் பல உள்ளன. அவதரிப்பவர்கள் தூதர்கள் அன்றி கடவுள் அல்ல. இந்த கட்டுரையில் அவ்வாறு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை பற்றி உலக வேதங்கள் என்ன சொல்கிறது? விரும்புகிறவர் களெல்லாம் தனது முயற்சியால் அவ்வாறு ஆகிவிட முடியுமா? என்று பார்ப்போம். 

அக்னி - கடவுளின் தூதர்

1) தெய்வீகப் பூசாரியும் என்னுடைய தூதருமான அக்னியை மகிமைப்படுத்துங்கள் செழிப்பை அருளும் கடவுளுக்கு காணிக்கைகள். - (RIG 1.1.1 மந்திரம் 1:1)

2) ஆணைப்படி பிறந்த அக்னி வைஸ்வாணர், பூமியின் தூதர், சொர்க்கத்தின் தலைவர், முனிவர், சோவ்ரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை கடவுள் உருவாக்கினார். - (SAMA 3.2.4.2.3 கந்தா (பிரிவு) 3:1)

3) அக்னி பூமி மற்றும் வானத்தின் தூதரானார் - (RIG 1.1.59 மந்திரம் 59:2)

4) 
அக்னி கடவுளின் தூதராக இருந்தார்.. ..அக்னியை தூதராக நாம் தேர்வு செய்கிறோம், தன்னை வளப்படுத்துகிறான், அவனது எதிரி தோற்கடிக்கப்படுகிறான்... - (யஜூர் 2.2.5.8 மந்திரம் 8:5)

5) அக்னி கடவுளின் தூதுவர் - (யஜூர் 2.2.5.12 மந்திரம் 12:8)

6) இந்த என்னுடைய மரியாதையுடன், வலிமையின் மகனே, உனக்காக நான் அக்னியை அழைக்கிறேன். அன்பே, புத்திசாலித்தனமான தூதுவர், உன்னத தியாகத்தில் கைதேர்ந்தவர், அனைவருக்கும் அழியாத தூதர். - (சாமா 3.1.1.1.5 தசதி (தசாப்தம்) 5:1)

7) அக்னி வைஸ்வாணரா, ஆணைப்படி பிறந்தவர், பூமியின் தூதர், வானத்தின் தலைவர், முனிவர், சோவரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை, தேவர்கள் உருவாக்கியுள்ளனர். - (சாமா 3.1.1.2.2 தசதி (தசாப்தம்) 2:4)

மேலும், RIG VEDA 
1.1.12 மந்திரம் 12:8, 1.1.36 மந்திரம் 36:3,4 & 5, 1.1.44 மந்திரம் 44:2,3,9 &11, 1.2.2 மந்திரம் 2:2, 1.2.4 மந்திரம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். 4:2, 1.3.11 மந்திரம் 11:2, 1.3.17 மந்திரம் 17:4, 1.4.1 மந்திரம் 1:1, 1.4.9 மந்திரம் மற்றும் பல வசனங்கள் அக்னியின் தூதுத்துவம் பற்றி பேசுகிறது.

ரிக் பண்டைய தூதுவர்களைப் பற்றியும் பேசுகிறது 

1) கடவுள் தன் பண்டைய தூதுவர்கள் - வருணன், மித்ரா, ஆரியமன் ஆகியோரை.. (RIG 1.1.36 மந்திரம் 36:4)

வைச்வாணர் - யஜுர் வேதத்தில் கடவுளின் தூதர்

1) வானத்தின் தலைவன், பூமியின் தூதர், வைச்சுவாணர், புனித ஆணைக்காகப் பிறந்தவர், அக்னி, முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தினர், தேவர்கள் தங்கள் வாய்க்குக் கோப்பையாகத் தயாரித்துள்ளனர். - (யஜூர் 2.1.4.13 மந்திரம் 13)

2) "..பூமியின் தூதர்'... ..'வைச்சனாரா, புனித ஆணைக்குப் பிறந்தவர்'..." - (2.6.5.2 V 2:1) 
 
கடவுளின் தூதர் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ளது, RIG இன் குறிப்புடன், இந்து மதத்தின் தோற்றம் கடவுளின் தூதரிடம் இருந்து வந்தது என்பதை நிறுவுகிறது.

ஆனால் அவர்கள் தானாக உருவாக முடியாது. அவர்கள் HOLY ORDER-ல் தான் வருவார்கள். ஒரு தூதரை பற்றிய முன்னறிவிப்புகள் முந்தய வேதங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். 

ஆபிரகாமிய மதத்தின் தீர்க்கதரிசிகள்/கடவுளின் தூதர்கள் புனித வரிசையில் பிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் வரிசை இங்கே ஒரு படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தூதர்களின் புனித மரபு 
 
இந்து மதத்தில் தூதுவர்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் இந்து மதத்தில் விரும்பியவர்கள் எல்லாம் அலல்து கடுமையாக தவம் புரிவோர் எல்லாம் தூதர்களாக மாற முடியுமாஅல்லது புனித ஒழுங்கில் (Holy Order) பிறந்தவர்களுக்கு தான் வாய்ப்பு உண்டா?, வேதம் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்?

1) ஹோலியார்டரின் அனைத்து வழிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர், அவர் முழு அறிவுடன், இந்த செயல்களை வழிபாட்டின் மூலம் பகிர்ந்து கொண்டார். - (ரிக் 1.3.31 மந்திரம் 31)

2) அக்னி தன்னைப் புகழ்பவர்களின் கீர்த்தனைகளால் போற்றப்படுவதற்காக, புகழ்ச்சிகளால் வலிமைமிக்கவராக வளர்த்தார். விடியலின் முதல் ஃப்ளஷில் ஹோலி ஆர்டரின் பல்வேறு நிகழ்ச்சிகளை விரும்பி அவர் தூதுவராக ஜொலிக்கிறார்.- (ரிக் 1.3.5 மந்திரம் 5"2)

3) அவர், பூமியின் தூதுவரும், சொர்க்கத்தின் தலைவருமான, அக்னி வைஸ்வாணரா, புனித ஒழுங்கில் பிறந்தவர், முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற பாத்திரம், கடவுள் உருவாக்கியிருக்கிறார் - (ரிக் 1.6.7 மந்திரம் 7: 1)

4) வருணன் மற்றும் மித்ராவின் அந்த வலிமைமிக்க கண், தவறாத மற்றும் அன்பே, மேல்நோக்கி நகர்கிறது. புனித ஒழுங்கின் தூய்மையான மற்றும் அழகான முகம் அதன் எழுச்சியில் சொர்க்கத்தின் தங்கம் போல் பிரகாசித்தது. - (1.6.51 மந்திரம் 51:1)

5) ஓ மித்ரா மற்றும் வருணா, யார் புனித ஒழுங்கை செழிக்கச் செய்கிறார்கள்; - (2.1.4.5 மந்திரம் 5:a)

6) வானத்தின் தலைவர், பூமியின் தூதர், வைச்வாணரா, ஹோலியார்டரில் பிறந்தவர், அக்னி - (2.1.4.13 மந்திரம் 13:a)