ஐயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நம்பிய பின் சந்தேகம்?

தமிழர் சமயம் 


“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”  (குறள் 510)

பொருள்: ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

இஸ்லாம் 

நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி (நிராகரிப்பாளர்களாகி) விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (குர்ஆன் 3:106)

அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக! சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள். [ஸூரதுத் தவ்பா 65-66] 


கிறிஸ்தவம் 

அவர்கள் கன்மலையின்மேல் இருக்கிறார்கள், அவர்கள் கேட்கும்போது, ​​மகிழ்ச்சியுடன் வார்த்தையைப் பெறுகிறார்கள்; மேலும் இவைகளுக்கு வேர்கள் இல்லை, அவை சில காலம் நம்பி, சோதனையின் போது மறைந்துவிடும். - (லூக்கா 8:13)

இயேசு தம்முடைய சீஷர்களிடம், “மக்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கச் செய்யும் சூழ்நிலைகள் நிச்சயமாக எழும். ஆனால், ஒருவரை தன் நம்பிக்கையை இழக்கச் செய்பவருக்கு அது எவ்வளவு கொடுமையாக இருக்கும்!   இந்தச் சிறியவர்களில் ஒருவன் தன் விசுவாசத்தை இழக்கச் செய்வதைவிட அவன் கழுத்தில் பெரிய கல்லைத் தொங்கவிட்டுக் கடலில் தள்ளப்படுவதே சிறந்தது. எனவே உங்களைக் கவனியுங்கள்! - (லூக்கா 17-1)