துறவறம் சரியா? பிழையா?

தமிழர் மதம்


திருமந்திரம்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறியாரே256

அனைத்தயும்யும் துறந்த வழியை தேர்ந்தெடுத்தது முதல் அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவு இல்லை. இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும். அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன். இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்

 வள்ளுவரின் துறவு விளக்கம்

‘துறவு’ அல்லது ‘துறத்தல்’ என்பது பற்றிப் பல கருத்துகள், பல விளக்கங்கள், கூறப்படுகின்றன. குறளுக்கு உரை எழுதிய சமயவாதிகள் ஒரு வகையாகவும், பகுத்தறிவுவாதிகள் இன்னொரு வகையாகவும் விளக்கம் தருகிறார்கள். சமயவாதிகள், இல்வாழ்க்கையை விட்டு, விலகி, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத காடுகளுக்குச் சென்று, தனித்து இருந்து, தன்னை ஒறுத்துத் உடல் அசௌகரியங்களை வலிந்து தானே மேற்கொண்டு தவம் செய்வது என்பர்.

பதவியின் மீது பற்றுக் கொள்ளாத ஒருவர், அதைத்தானாக விட்டு விடுவதையும், துறவு, அல்லது துறத்தல் என்று குறிப்பிடுவர். தனக்கு இருக்கும் மிகுதியான பொருள்கள் மீதும், சௌகரியங்கள் (Comforts) மீதும் பற்று இல்லாதவர்கள், அவற்றை விட்டு விட்டு, தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, குறைந்த அளவுப் பொருட்களுடன் வாழ்பவர்களையும், வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து வாழ்கிறார் என்பர்.

 மனத்து அளவில் துறந்து, பற்று இல்லாமல் வாழ்வது, துறவு என வள்ளுவர் கூறுகிறார். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. புறத்தோற்றத்தில் இருப்பதை விட, அகத்துள், மனத்துள் இருக்க வேண்டியதையே எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறார். துறவு என்ற தலைப்பிலும் அதையே கூறுகிறார்.

பற்றும் துறவும்

பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்று உண்டு. அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு.

வாழ்க்கைக்குப் பொருள் முக்கியம். ‘பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை’ என்றே இன்னொரு இடத்தில் வள்ளுவர் குறிப்பிடுவார். எனவே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குப் பணம் தேவை. பணத்தை விரும்பிச் சேகரிக்க வேண்டும். ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது என்பதே வள்ளுவர் கருத்து.

குடும்பத்தை நடத்திச் செல்வதற்காகப் பொருளை ஈட்டவேண்டும். ஈட்டிய பொருள், பிறருக்கு உதவுவதற்கே. பொருளைப் பிறருக்கும் உதவுமாறு பயன்படுத்தாவிட்டால், ஒருவன் ஈட்டிய பொருளால் எந்த விதப் பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

பொதுவாகத் ‘துறத்தல்’ என்றால் ‘விட்டு விடுதல்’ என்று பொருள்படும். பிறர் மீது அல்லது இன்னொரு பொருள் மீது கொண்டிருக்கும் பற்றை விட்டுவிடுதல் அல்லது பற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பதாகும்.

துன்பத்தை விலக்குவது துறவு

ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்தின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான், பொருள் ஈட்டிக் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது. எனவே, பொருள் ஈட்டுவது அவனது கடமை. பொருள் ஈட்டுவது தன் கடமையை நிறைவேற்றுவதற்குத்தான் என்று எண்ண வேண்டும்.

கடமைக்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணாமல், தனது சுகபோகங்களுக்கு என்று எண்ணுபவனே, பொருள் மீது பற்றுக் கொண்டு, அதை எவ்வழியினாலும் ஈட்டவேண்டும், மிகுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். அவ்வாறு எண்ணிப் பொருளைச் சேகரிப்பவனுக்கு அதனால் தீமை வரும் என்கிறார் வள்ளுவர். பணத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவன் தீய வழியில், பணத்தை ஈட்ட முயலுவான்; குற்றவாளி ஆவான்; அதன் பயனாக வரும் பிற விளைவுகளை எதிர்கொள்வான்.

உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுக்குக் கூறும் இலக்கணம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (குறள் எண்: 341)

(யாதனின், யாதனின் = எவ் எவற்றிலிருந்து; நோதல் = துன்புறுதல்; அதனின், அதனின் = அவ் அவற்றிலிருந்து)

நீங்கிய பொருட்கள் ஒன்று ஒன்றாகச் சுட்டி, அவை ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய துன்பத்தினின்றும் விடுதல் பெற்றமையைக் குறிக்கத்தான் - ‘யாதனின், யாதனின்’, ‘அதனின் அதனின்’ என்று இரட்டித்துச் சொல்லப் பெற்றுள்ளது.

பதவியாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், சுகங்கள் (Comforts/ pleasure) ஆக இருந்தாலும், அவற்றின் மீது பற்றுக் கொள்ளாதீர். பதவியின் மீது பற்றுக் கொண்டால், அந்தப் பதவியே உங்களுக்குத் தீமையாக வரும்; பணத்தின் மீது பற்றுக்கொண்டு அதைத் தனக்கு எனப் பெருக்கிக் கொள்ள விழைந்தால் அப்பணமே உங்களுக்குப் பகையாக மாறும்; சுகங்களை விரும்பி நாடிச் சென்றால், அச்சுகங்களே உங்களுக்கு நோயாக வரும் என்று எச்சரிக்கிறார். எனவே தான் யாதனின் யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன் என்றார். அது சரி. ‘நீங்குதல்’ என்பதன் பொருள் என்ன? பணம் வேண்டாம்; பதவி வேண்டாம்; இவ்வளவு சுகங்கள் வேண்டாம் - என்று எல்லாவற்றையும் மறுப்பதா? அவற்றை எல்லாம் மறுப்பது தான் அறநெறி என்றால் அவ் அறவழியால் இவ்வுலக வாழ்க்கைக்கு என்ன பயன்?

துறவும் உலகியல் இன்பமும்

ஒருவன இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய நன்மைகளும் இன்பங்களும் பலவாகும்.

வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டு இயற்பால பல. (குறள் எண் 342)

(வேண்டின் = (துறவை) விரும்பினால்;

உண்டாகத்துறக்க = செல்வம், வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இருக்கும்போதே அவற்றின் மீது பற்றின்றித் துய்க்க;

துறந்த பின் = அவ்வாறு பற்றுதல் கொள்ளாமல் அனுபவிக்கத் தெரிந்து கொண்ட பின்னர்; ஈண்டு = இவ்வுலக வாழ்க்கையில்;

இயற்பால = உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய, உங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய)

இதுவே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு ஆகும்.

புலன்களின் மேல் ஆளுமை செலுத்துங்கள்; புலன்களின் வலையில் சிக்க வேண்டாம். இவ்வுலக வாழ்க்கையை முழுமையாகத் துய்க்க விரும்பினால் துறவினை மேற்கொள்ளுங்கள்; துயரங்களுக்கு ஆட்படாமல் வாழ்க்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (குறள் எண் : 343)

புலன்களை வெல்லுங்கள் (அடல் = வெல்லுதல்); வெல்லுதல் என்பதன் பொருள் கொல்லுதல் அன்று. புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், அவற்றின் தேவைகளை உங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். இன்ப நிகழ்வின் உந்துதலை நாடாதவருக்கு, துன்ப நிகழ்வுகள் உறுத்துதல் இல்லை.

ஆணவம் - துறவுக்குப் பகை ஆகும்

பற்றுகள் என்றால், பதவிப் பற்று, பணப்பற்று முதலியவைகள்தானா? இல்லை, இதற்கு மேலும் ஒரு பற்று இருக்கிறது. அது ஒருவன், தன்மீது கொண்டுள்ள பற்று. இந்தப் பற்றுத் தானே, பிற பற்றுகளையும் உருவாக்குகிறது. எனவே, ஒருவன் தன் மீது கொண்ட பற்றாகிய ‘யான்’ ‘எனது’ என்பதை அழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

யான், எனது என்ற இயல்பு உடையவர்களை ‘ஆணவம்’ உடையவன் என்பார்கள். இந்து சமயத்தில், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுன்றன.

இவற்றை அழித்தால் தான், ஒருவன் இறைவனை அடைய முடியும். வள்ளுவர் ஆணவத்தைச் ‘செருக்கு’ என்று குறிப்பிடுகிறார்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள் எண் 346)

ஆணவம் ஒருவனை அழித்துவிடும்; அதனால், யான், எனது எனும் செருக்கை விட்டுவிடுங்கள். (துறந்துவிடுங்கள்). அவ்வாறு செய்வீர்கள் ஆனால் வானவர்களாகிய தேவர்களுக்கும் மேலோன வீடுபேறு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

இல்லறத்துறவு

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், அற வழிகளில் இல்வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற ஒருவன், வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். வீட்டை விட்டுக் காடு செல்லும் துறவறத்தால் கூடுதல் பயன் ஒன்றும் இல்லை என்பதே வள்ளுவர் கருத்து.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன். (குறள் எண்: 46)

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? வள்ளுவரின் சிந்தனைச் செல்வம் எத்தகைய கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பது தெரியும் அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பலவேறு வகையான விளக்கங்களுக்கும் (Inerpretations), பலவகைப்பட்ட மக்களுக்கும் பொருந்தும். எனவே துறவறத்தில் சொல்லப்படும் கருத்துகள், இல்வாழ்வானுக்கும் பொருந்தும் மாண்பே அமைந்துள்ளது.

இஸ்லாம் 


ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புஹாரி பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5073)

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர். - (குர்ஆன் 57:27)

கிறிஸ்தவம் 


துறவறத்தை சரியாக வரையறுப்பது கடினம். சிலர் அதை சாதாரணமாக, சுயகட்டுப்பாடு அல்லது தன்னலம் துறத்தல் என்று பொருள்கொள்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இத்தகைய ஒழுக்கங்களை உயர்வாக கருதினர் (கொலோசெயர் 3:5)

22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள். (கலாத்தியர் 5:22-24)

சடப்பொருளின் சிக்கலிலிருந்து மனிதனின் ஆத்துமாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை கடும் துறவறத்தை ஊக்குவித்தது; அது மாம்சம் சாப்பிடுவது, உடலுறவு கொள்ளுவது இன்னும் இதுபோன்றவற்றை தடைசெய்தது; விசேஷ சடங்குகளை மேற்கொண்ட உயர்ந்தோரான, ‘பரிபூரணவாதிகள்’ அல்லது பெர்ஃபெக்டி போன்றவர்களால் மட்டுமே இவை கடைப்பிடிக்க முடிந்தவை.” இப்படிப்பட்ட சிந்தனைக்கு பைபிள் ஆதாரம் இல்லை; எனவே ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இது இருக்கவில்லை. - (நீதிமொழிகள் 5:15-19; 1; கொரிந்தியர் 7:4, 5; எபிரெயர் 13:4)

கிறிஸ்தவத்தில் துறவறம் பிறந்த கதை (The History of Consecrated Life)

ஆனால், 4-ஆம் நூற்றாண்டில் உரோமை அரசன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அங்கீகரித்தப்பின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை புரட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்தவம் ஆட்சியாளர்களின் மதமானது. போராளிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் பொதுமக்களாக மாறினார்கள். பணிவிடை புரிபவர்களாக இருந்த ஆயர்களும், குருக்களும், பணிவிடை பெறுபவர்களாக மாறினர். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயர்களும், குருக்களும் அரசனின் அரன்மனைகளில் மிகுந்த ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டனர். இதனால் மந்தையின் நலன் மறந்து, சொந்த நலன்களையும், சொந்தங்களின் நலன்களையும் மட்டுமே முன்னிறுத்த ஆரம்பித்தனர். பகட்டும், படோபமும், ஆடம்பரமுமே இவர்களது வாழ்க்கைத் தேவையாயிற்று. இன்னும் சிலரோ தான்தோன்றித்தனமான கருத்துக்களை சீர்திருத்தக் கருத்துக்கள் என சிறுபிள்ளைத் தனமாக அறிவித்துவிட்டு, தங்கள் தலைமையில் சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். கட்டளை செபங்களைக் கூட செபிக்காமல், இறைவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மொத்தத்தில் கடவுளை மறந்த மதமாக, மக்களை மறந்த மதமாக கிறிஸ்தவ மதம் மாற ஆரம்பித்தது.

இந்தச் சூழலில் தான் தங்களது ஆன்மாவை இழந்துவிடாமல், பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒரு சிலர் அடர்ந்த காடுகளில் செபம், தவம், ஒறுத்தல் ஆகியவற்றுடன் கூடிய புனித வாழ்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதுவே துறவற வாழ்வுக்கு முதன் முதலில் போடப்பட்ட அடித்தளம். இத்தகையோருள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் தூய வனத்து அந்தோணியார்.

முதன் முதலில் திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் தூய பத்திநாதர் துறவறத்தாருக்கான கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தார். இவரைப் பின்பற்றி முதலில் உருவான தூய பத்திநாதர் சபையே கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் துறவற சபையாகும்.

காலப்போக்கில் தூய பத்திநாதரைப் பின்பற்றி பலரும் பல்வேறு துறவற சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். தூய பிரான்சிஸ் அசிசியாரால் தொடங்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை, தூய தொன்போஸ்கோவால் தொடங்கப்பட்ட சலேசியன் சபை போன்ற துறவற சபைகளும் பல்வேறு கொள்கைகளை (ஏழைகளுக்குக் கல்வி, இயலாதோருக்கு மருத்துவம், கைவிடப்பட்டோருக்கு ஆறுதல்) முன்னிறுத்தித் தொடங்கப்பட்டன.

இந்து மதம் 


இந்துக்கள் திருமணத்தை பெரிய அளவில் இலட்சியப்படுத்தியுள்ளனர். ரிக்வேத இந்துக்களின் ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் ஒரு புனிதமான தொழிற்சங்கமாக கருதப்பட்டது, மேலும் இது முழு காலத்திலும் தொடர்ந்தது. சாஸ்திர இந்து சட்டத்தில், திருமணம் என்பது இன்றியமையாத சங்காரங்களில் ஒன்றாக (ஒவ்வொரு இந்துவிற்கும் புனிதம்) கருதப்படுகிறது . ஒவ்வொரு இந்துவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  (Modern Hindu law: codified and uncodified by: Diwan, Paras 1924-1997 Published: (1976))

தூதர்கள்

திருக்குறள் - அதிகாரம் : தூது

குறள்:681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அன்பான குணமும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பவரே தூது சொல்பவனின் தகுதிகளாகும்.

குறள்:682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

குறள் விளக்கம்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

குறள்:683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக இருத்தல் வேண்டும்.

குறள்:684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

குறள் விளக்கம்:
இயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.

குறள்:685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
செய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படியும் சொல்லி நன்மையைச் செய்பவனே தூதனாவான்.

குறள்:686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

குறள் விளக்கம்:
நீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.

குறள்:687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

குறள் விளக்கம்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.

குறள்:688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
பொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், அச்சமற்ற துணிவு இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

குறள்:689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.

குறள் விளக்கம்:
தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்று அரசரிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

குறள்:690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
தான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.
_______________________________________

திருமூலர் திருமந்திரம்

வேதத்தைச் செப்ப வந்தேனே' - 77
'ஆகமம் செப்ப லுற்றேனே' - 73


https://www.ytamizh.com/thirukural/kural-690/
source : https://shaivam.org/scripture/Tamil/1927/thirumandira-araichiyum-oppumai-pakuthiyum

விபச்சாரம் : மனைவி அல்லாத பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்த வகைதான்

கிறிஸ்தவம்


"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28

இஸ்லாம்


ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

”அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

தமிழர் மதம்


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (பிறனில் விழையாமை குறள் 141)

பொருள்[தன்னுடைய மனைவியல்லாமல்] பிறனுடைய [மகளாக & மனைவியாக] பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. - நாலடியார் 86

பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

பாவமன்னிப்பு

தமிழர் மதம்


அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறையுடையை ஆகு. - (அறநெறிச்சாரம் பாடல் - 78)

விளக்கவுரை தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகளால் அடையவேண்டியதை அடையாமல் போகாய். அந்த வினைப்பயனை அஞ்சி அழுதாய் என வந்த காலனும் போகான். (ஆதலால்) வினைப்பயனை ஆற்ற உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்


இந்துமதம்


ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள்

“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்குவாயாக. விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு- (RV V, 85, 7&8)

 “எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி. நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – (7-86)

எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக (2-27-14)

எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் (1-157-4)

இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி (4-12-4)

..நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக - (7-58-5)

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள்! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக (10-63-8)

கிறிஸ்தவம்


1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். 2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். 3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். 4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். (சங்கீதம் 130)

இஸ்லாம்


அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப் படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,

முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.

இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.

மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.

நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.

நிபந்தனை

இஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.

எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.


வெட்கம் (அ) நாணம்

தமிழர் சமையம்


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. - குறள் 1012

உரை: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; மாந்தருக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று. - முதுமொழிக் காஞ்சி 1:6

நலன் உடமையின் - அழகுடைமையை விட
நாணு - நாணமுடைமை

பொருள்: அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4:3

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

பொருள்: வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்

இஸ்லாம் 


அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 2 புகாரி பாடம் : 16 24.

“மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பது” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)