செல்வத்தைப் பெருக்கும் ஆசை!


"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

தமிழர் சமயம்


பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். - (முதுமொழிக் காஞ்சி 7. பொய்ப் பத்து 9)

பதவுரை முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்; பொய் - இல்லை

விளக்கவுரை பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.
 

இஸ்லாம்


அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7
 

பைபிள் 


செல்வத்தைப் பெறுவதற்கு உழைக்காதே; விலகியிருப்பதற்குப் போதுமான விவேகமுள்ளவனாக இரு. - (
நீதிமொழிகள் 23:4-5
 
அப்போது இயேசு சுற்றிலும் பார்த்து, “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவது எவ்வளவு கடினம்!” என்று சீடர்களிடம் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைவது எவ்வளவு கடினம்! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் ஒரு செல்வந்தன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஓர் ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார். (பைபிள் - மாற்கு 10:23-25)
 

இந்து மதம்


நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்களை சேர்க்க விரும்புகிறார்கள். என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இன்ன திறமை இனி எய்துவேன், என்னிடம் இந்த செல்வம் உள்ளது, இனி இன்ன பொருளை பெறுவேன். “இது போன்ற பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.” - (கீதை 16 :12-14)

முடிவுரை 


தேவைக்கு பொருள் தேடுவது கூடாது என்பது இதன் பொருளல்ல. கிடைக்கும் செல்வதை கொண்டு விரைவில் நன்மை செய்து விடவேண்டும், நன்மைகளுக்கு செலவிடாமல் சேர்த்து வைத்து கொள்ளுதல், தீமை செய்து அதன் மூலம் சம்பாதித்தல், பொருளை முறையற்ற அல்லது சுக போகங்களுக்கு செலவு செய்வத்தோ வீண் விரையம் செய்வத்தோ கூடாது என்பதுதான் இதன் சாரம்.

இந்துமதம் இறைவனை பற்றி என்ன சொல்கிறது??


 பகவத் கீதை 7:207வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
1. இறைவன் ஒருவனே
 சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது. "ஏகம் எவதித்யம்" (இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே)'. reference :உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
குர்ஆன் கூறுகிறது : நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. இறைவன் பிறப்பற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" (அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை). நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே" (அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.) ref: (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. இறைவன் இணையற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)நதஸ்ய பரதிமா அஸ்தி (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை)னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது)
குர்ஆன் கூறுகிறது:"அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை". (குர்ஆன் 112:4)"..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.(குர்ஆன் 42:11)
4. இறைவனை பார்க்க இயலாது :
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் (அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை ) ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி (அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.)
குர்ஆன் கூறுகிறதுபார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
  நாம் பழய வேதங்களை ஒப்பீட்டிற்க்காகவும், அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகளை கொண்டு புதிதாக வேதம் என்று வந்தது உண்மையா என்பதை அறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. பழய வேதமே போதுமானதாக இருந்தால் புதிதாக ஒருவேதத்தை இறைவன் இறக்க வேண்டிய அவசியம் இல்லை.. அவன் முற்றும் அறிந்தவன்.
  இறைவனால் கொண்டுவரபட்ட அனைத்து மதங்களிலும் அனைத்து வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறைவனின் தூதர் முகமது நபி அவர்களையும் புனித நூல் குரானையும் அறிய தொடங்கினால் அவருக்கு இறைவன் நாடினால் புரியும் இறைவன் ஒருவனே என்று..
  அப்படியானால் இஸ்லாமின் கடவுள் ஏன் இதற்கு முன் இங்கு தமிழில் மக்களை வழி நடத்தவில்லை?
"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக"(14 :4 ) 
"..தன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத சமூகம் ஏதுமில்லை."(35 :24 )
  இறைவன் அவரது தூதர்களை அனுப்பாத சமுதாயமே இல்லை என்கிறான், நான் கற்பிதத்தை தவிர உனக்கு எதுவும் தெரியாது என்கிறான். அந்த அடிப்படையில்திருக்குறள்ஆத்திசூடி மற்றும் நாலடியார் இவைகளை புனித குர்ஆனோடு ஒப்பீடு செய்ய தொடங்கியுள்ளோம். அனைத்து வேதங்களும் அவனது தூதர்கள் மூலமே அவரவர் மொழியில் கொடுக்கப்பட்டது. இதில் என் மொழி பெரிது என் வேதங்கள் பெரிது என் கலாச்சாரம் பெரிது என் கடவுள் பெரிது என்பது வீண் பெருமையே அன்றி வேறில்லை. ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் இந்துக்களின் கடவுள் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? இல்லை மற்ற நாட்டு மனிதர்களை அவர் படைக்கவில்லயா? இல்லை வேறு மொழி அவருக்கு தெரியாதா?

  இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனே அனைத்தையும் படைத்தான், அவன் அருள் எந்த நாட்டு மூலமாகவும் மொழிமூலமாகவும் வரும், கண்மூடி தனமாக நம்பாமல் உண்மையை அறியும் நோக்கில் படித்து அறிய முனைவோருக்கு இறைவன் காரியத்தை எளிதாக்கி வைப்பான். 

  இத்தனை வேதங்கள், மதங்கள் அவரவர் மொழியில் இருக்க ஏன் அந்நிய மொழியிலிருந்து வந்த இஸ்லாமை கற்கவேண்டும், பின் தொடரவேண்டும்..? ஒவ்வொரு சமுதாயத்திற்கு ரிஷிகளை அனுப்பினாலும், இறுதி ரிஷியாக இருப்பவர் முகமது அவர்கள், மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்ப பட்டவர் அல்ல, ஒரே கடவுளை வணங்க உலகம் முழுவதற்கும் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார். இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் பல வேதங்களிலும் குரானிலும் கொடுக்கபட்டு உள்ளது.. அறிவோர் அவருக்கே நன்மை செய்கிறார்,இல்லையேல் அவருக்கே கேடு..

  உலகமயமாதல் மனிதனின் திறமை என்று நினைத்தால் பரிதாபம் மட்டுமே படமுடியும், உலகம் முழுவதும் உலகதிற்கான தூதர் அவர்களின் இறை போதனை சென்றடைய இறைவன் ஏற்படுத்திய வழிவகை. இதற்குமுன் உலகமயமாதல் தேவையில்லை ஏனெனில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதர் இருந்தார் ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, ஒரே கடைசி தூதர், அவரும் இல்லை, குரான் மட்டுமே தூது வேலையை செய்து கொண்டு இருக்கிறது, ஒவ்வொரு இஸ்லாமியர்களின் மூலமாக.. எனவே உலகமயமாதலை, தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை இறைவன் சாத்தியப்படுத்தினான்.. இறைவனின் நுணுக்கமான செயல் சிந்திப்பவர்களுக்கு இறைவன் தெளிவுபடுத்துவான்.. இன் ஷா அல்லாஹ்... இறைவன் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.. துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே.. 

அல்லாஹ்வே அறிந்தவன்.. 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்...