என் ஆய்வு கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் ஆய்வு கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வருடபிறப்பு கொண்டாட்டம் தேவையா?


தமிழிலிருந்து பிரிந்த தெலுகு-இன் வருட பிறப்பான ஊகாதி-யையோ, மலயாளத்தின் வருட பிறப்பான விஷ்ணு-வையோ, அவ்வளவு ஏன் ஹிந்து வருட பிறப்பாக கருத்தபடும் சமஸ்கிருதத்தில் "சித்திர சுக்லா பிரதிப்பதா" என்று அறிய படுகிற மராத்திய வருட பிறப்பான "Gudhi Padva" வருடங்களின் பிறப்பையோ தமிழ்நாட்டில் யாரும் வெகு விமர்சாயாக கொண்டாடுவதில்லை. இவ்வளவு அருகில் இருக்கும் வருட பிறப்புகளை விட்டு, அதனை தூரம் இருக்கும் ஆங்கிலேய வருட பிறப்பை ஏன் கொண்டாடுகின்றனர் என்று தெரிய வில்லை! 

இயேசு அவர்கள் பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25-லிருந்து 8வது-நாள் அவருக்கு விருத்தசேதனம்/கத்னா (circumcise) செய்ய பட்டு பெயர் சூட்ட பட்ட தினம்தான் ஜனவரி 1-ஆக புது வருடமாக கொண்டாட படுகிறது என்று எத்தனை கிருச்தவர்களுக்கோ கிறிஸ்தவர் அல்லதவருக்கோ தெரியும் என்று தெரியவில்லை. 

பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்." - லூக்கா2:21

And when eight days were accomplished for the circumcising of the child, his name was called JESUS, which was so named of the angel before he was conceived in the womb. - Luke 2:21

ஆங்கில வருட பிறப்பை இரவு முழுதும் விழித்து குடித்து கேக் வெட்டி கொண்டாடுபவர்களும் உண்டு, எழுந்த உடன் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்களும் உண்டு. ஆங்கில வருட பிறப்பிற்கும் பெருமாள் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.. தமிழனுக்கும் ஆங்கில வருட பிறப்புக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.. கால அளவு காட்டியான வருடபிறப்பிருக்கும், ஜோசியத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.
காலையில் எழுந்தால் அனைத்து சேனல்களிலும் இந்தவருடம் உஙகளுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று கதை அளந்து காசு சம்பாதிக்க ஒரு கூட்டம்.. ஒரு வருசத்துக்கு எத்தன வருச பிறப்பு? எல்லா விதமான வருச பிறப்பன்னைக்கும் வந்து ஆத்து ஆத்துனு காலைல வந்து இவர்கள் ஆத்திக்கிட்டுதான் இருக்கிறார்கள் சொற்பொழிவு.. தமிழ் வருச பிறப்பன்னைக்கு சொல்லப்படுகின்ற சோசியம், ஆங்கில வருட பிறப்பு அன்று மாற்றி சொல்ல படுகிறது, ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.. எப்படி ஒரே காலத்திற்கு வெவ்வேறு சோசியம் சொல்ல படுகிறது, இயல்பில் எதாவது ஒன்று நிச்சயமாக நடகத்தான் போகிறது, கடசியில், பார்த்தாயா அவர் சொன்னது போல் நடந்து விட்டது என்று ஆரம்பித்து விடுவார்கள்.


வருட பிறப்பென்பது கால அளவுகோல் மட்டுமே, அதில் கொண்டாடாவோ, அந்த தினத்தை கொண்டு ஜாதகம் பாரப்பததிலோ எந்தவித தேவையும் புத்திசாலிதனமும் இல்லை என்பது என் கருத்து.. உடனே சகோதரத்துவத்திற்கு எதிராக பேசுவதாக என்மேல் கருத்து நிலவ வாய்ப்பு உள்ளது. அதில் துளியும் உண்மை இல்லை. நாம் செய்வதை ஏன் எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்யும் எண்ணத்திற்கும் சகோதர தன்மை இல்லாமைக்கும் எந்தவித சம்பந்தாமும் இல்லை. ஆங்கில வருட பிறப்பை கொண்டாடினால்தான் அவர்கள் மீது சகோதர உணர்வு உள்ளதாக அர்த்தம் இல்லை. சகோதரத்துவம் என்பது உண்மையில் மிகப்பெரும் வரையறை கொண்டது.

பிராமணர்கள் இந்திய நாட்டிற்கு நன்மையா, தீமையா? Quora

இந்த கேள்வியில் பல தெளிவு தேவை படுகிறது…

பிராமணர்களும் அந்தணர்களும் வேறு வேறு..

பிராமணர்கள் வடமொழி சமயத்தை பின்பற்றுவோர், அந்தணர்கள் தமிழ் சமயத்தினர். பிராமணர் என்றால் பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்று பொருள். இவர்கள் வர்ண அடுக்குமுறையை பின்பற்றுபவர்கள். இது பிறப்பு, அதிகாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது.

அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் உரிய சொல் இல்லை. அந்தணர்கள் தமிழ் சமயத்தை அது கூறும் அறத்தை பின்பற்றுவோர் ஆவர். இவர்கள் அனைவரும் சமணவர்கள் என்று நம்புவார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை உணர்ந்தவர்கள்.. இவர்களின் இந்த அடிப்படை கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளை எதிர்க்கும் இயல்புடையவர்கள்.

பிராமணர்களும் ஓதுவார்களும் வேறு வேறு..

ஓதுவார்கள் அந்த அந்தணர்களில் இருந்து தமிழ் வேதத்தை ஒதுபவர்கள், மற்றவர்களுக்கு அதை ஓத சொல்லிக்கொடுப்பவர்கள்.

பிராமணர்களும் பார்ப்பனர்களும் வேறு வேறு..

மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது." இது தொழில் சார்ந்தது.

பிராமணர்கள் வேறு ஐயர் வேறு..

ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள்..

ஆனால் இன்று இவை அனைத்தும் பிராமணர்களை குறிக்க பயன்படுகிறது. அதேசமயத்தில் அனைத்து பிராமணர்களும் பிரமனியத்தை பின்பற்றவில்லை.

எனவே பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, வெளிப்படையாகவே மறைமுகமாகவோ பிரமாணியத்தை பின்பற்றும் ஒருவர் இந்த நாட்டுக்கு நன்மையா தீமையா என்பது தான் சரியான கேள்வி. ஏனென்றால் பிராமின் அலாதரில் சிலரும் பிராமனியத்தை பின்பற்றுகின்றனர்.

எனவே பிராமணியம் என்பது என்ன என்பதை அறிவது அவசியம்.

பிராமணியம் என்றால் அனைவரும் சமல்ல என்று கருதுவது, சரி அதை ஒன்று உண்மையில் இருந்தது நாம் எப்படி அறிந்து கொள்வது?

சில உதாரணங்கள்..

  • சிவாஜி பிராமணர் அல்லாதார் என்பதால் அவரை முடக்க நினைத்தவர் ராஜாஜி. ஏன்? எந்தவகையிலும் பிராமணரல்லாதோர் முன்னேறிவிடுவதை ஏன் அவர்கள் விரும்பவில்லை? https://youtube.com/shorts/6G_T14CDD94?si=08GMyoiV-B2x4aWz
  • இந்த தமிழ் கூறும் நல்லுலகில் சமசுகிருதம் தெரியாதோர் மருத்துவம் படிக்க முடியாத நிலை இருந்தது. இந்த விதியை ஏற்படுத்தியது யார்? ஏன்? தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது ஏன்? பிராமணரல்லாத தமிழர்கள் எத்தனைபேருக்கு சமசுகிருதம் தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்தது?

  • தொழில் அடிப்படையில் குலம் குறிப்பிடப்பட்டு அவரவர் குலத்துக்கு ஏற்ப கல்வி கொடுக்கப்பட்ட முறை இருந்தது. என்றால் உன் தந்தை என்ன தொழில் செய்தாரோ அதையேதான் நீயும் செய்ய வேண்டும்.. ஒரு விவசாயி அல்லாது முடி திருத்துபவர் அல்லது இதுபோன்ற வேலைகளை செய்பவர் மருத்துவராகவோ, கலெக்டர் ஆகவோ ஆகவே முடியாது என்கிற நிலை இருந்தது. இந்த வேலைகளெல்லாம் பிராமணருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட காலம் அது.

"மாணவர்களை கல்லூரியில் சேர்க்க GO போடும் நிலை இருந்தது.. பொய்யா?.. சவால் விட்றேன்.. நிரூபீங்க.."

இரட்டைமலை சீனிவாசன் கோவை கல்லூரியில் படிக்கும் பொழுது அங்கிருந்தவர்களில் 80% பார்ப்பனர்களே. அவர்களில் அதிக மக்கள் படிப்பது தவறல்ல ஆனால் மற்றவர்களை படிக்க விடாமல் இருப்பது தவறு.

https://youtube.com/shorts/vSG5lApkMXg?si=LioQuHeReBpHA1rZ

இன்னும் எத்தனையோ..

சரி பார்பனர்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்? கீழ்கண்ட சட்டங்களை அவர்கள் கொண்டு வந்ததால்..

20-ம்-நூற்றாண்டு-தொடக்கம்வரை-தேவதாசிகள்-இல்லாத-கோவில்களே-தென்னிந்தியாவில்-இல்லை-இராசராச-சோழன்-காலத்தில்-தஞ்சை-பெரிய-கோவ அறம் - கற்க கசடற-இல் அறம் கற்க கசடற (Learn Virtues)-இன் பதிவு

இன்று என்னமோ நல்லவர்களை போல அப்பிராணிகளை போல அவர்கள் பேசுவார்கள்…

இவைகளுக்கு எதிராக இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை என்றால் அது கட்டுக்கதை என்று நம்மை ஏமாற்றி விடுவார்கள் என நாம் உணரவேண்டும்.

மேலும் இவைகளை எல்லாம் மீண்டும் கொண்டுவர இவர்கள் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்கிறார்கள் RSS மற்றும் பிஜேபி வாயிலாக.. அதுவும் அவர்கள் யாரை ஒடுக்கி வைத்து இருந்தார்களோ, வென்றால் யாரை ஒடுக்க போகிறார்காளோ அவர்களை வைத்தே இதை செய்ய முயல்கின்றனர். இப்போ நீங்களே முடிவு செய்யுங்கள் பிராமணையத்தை பின்பற்றும் பிராமணர்கள் இந்திய நாட்டுக்கு நன்மையா தீமையா என்று..!