உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேலுலகம் ஏழு

தமிழர் சமயம் 


ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.  - (திருமந்திரம் பாடல் எண் : 24)

பொழிப்புரை : முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.   (திருமந்திரம் பாடல் எண் : 5) 
 
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  (திருமந்திரம் பாடல் எண் : 6) 
 
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே. (திருமந்திரம் பாடல் எண் 5)
 
குறிப்புரை : நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு 


கிறிஸ்தவம் & யூத மதம் 


தாளமுத் பிரபஞ்சத்தின் மேல் பகுதி ஏழு வானங்களால் ஆனது என்று பரிந்துரைக்கப்படுகிறது ( ஹீப்ரு: ஷமாயிம் ) :

    1. விலோன் (திரை), - ( ஏசா 40:22 )
    2. ராக்கியா (வானம்), - ( ஆதி 1:17 )
    3. ஷெஹாகிம் (ஆகாயம்), - ( சங். 78:23 , மிடர். தெஹ். முதல் பிஎஸ். xix. 7)
    4. செபுல் , - ( ஏசா 63:15 , 1 கிங்ஸ் 8:13 )
    5. மாயோன் , - ( உபா 26:15 , சங் 42:9 )
    6. மச்சோன் (இன்ஸ்டிட்யூட்), - ( 1 கிங்ஸ் 8:39 , டியூட் 28:12 )
    7. அரபோத் (ערבות), ஓபனிம் , செராஃபிம் மற்றும் ஹையோத் மற்றும் கடவுளின் சிம்மாசனம் அமைந்துள்ள ஏழாவது ஹெவன் . 

இஸ்லாம் 


குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஏழு சமவாத் (سماوات) இருப்பதை அடிக்கடி குறிப்பிடுகின்றன , இது 'சொர்க்கம், வானம், வானக் கோளம்' என்று பொருள்படும் சம' (سماء) என்பதன் பன்மை, மற்றும் ஹீப்ரு ஷமாயிம் (שמים ) உடன் இணைகிறது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா ? 71: 15

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். 2:29

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 17 :44

அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு அடுக்குகளை கொண்ட வானத்தை திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை 23:17

ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. 23:86

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். 41 :12

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. 65:12

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம் 78:12 

அவ்வேழு வானத்தில் இரண்டின் பெயர் குறிப்பிடப் பட்டுளள்து  

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு பிர்தௌஸ் எனும் சுவனச் சோலைகள் விருந்தாக (பேருபகாரமாக) உண்டு. அவர்கள் அதைவிட்டும் நகர்த்தப்படமாட்டார்கள். அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்கஹ்ப்: 107,108).

(முஹம்மதாகிய) அவர், அவரை (ஜிப்ரீலை மிஃராஜின்போது) ஸித்ரத்துல் முன்தஹாவில் நிச்சயமாகக் கண்டார். அந்த இடத்தில்தான் ஜன்னத்துல் மஃவா இருக்கின்றது. (அந்நஜ்ம். 13-15).



உலகம் எத்தனை நாளில் படைக்கப் பட்டது?

தமிழர் சமயம்


ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம், கடவுள் வாழ்த்து)
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து ஏழாவது சுவர்க்கம் சென்றான் 

இஸ்லாம் 


நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வனத்திற்கு மேலுள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - (திருக்குர்ஆன் 7:54)

கிறிஸ்தவம் 


(ஆறுநாட்களில்) பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். - (ஆதியாகமம் 2:1-2)

உலகம் கொண்டாடப்பட வேண்டிய இடமல்ல!

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள் :10)

பிறவி - பிறப்பு. இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது;

பெரும் கடல் - இந்த வாழ்க்கையின் அளவையும் அதில் உள்ள துன்பங்களையும், உவமை படுத்த பெரிய கடல் என்கிற பதம் பயன்படுத்த படுகிறது;

நீந்துவர் - நீந்துவார்கள்; வாழ்க்கை கடலில் நீந்தும் பொழுது கேளிக்கைகளுக்கும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பில்லை. 

நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; அதாவது கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு நோக்கத்தை மறைந்தவர்.

இறைவன் - தனக்கு உவமை இல்லாத ஒருவன்

அடி-தாள்; சேராதார்-சென்றடையாதார். இங்கு இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

இஸ்லாம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். (முஸ்லிம்: 5663)

கிறிஸ்தவம்:

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். - ரோமர் 12:2

முடிவுரை:

 இவ்வுலகில் வாழக்கூடிய குறுகிய காலம் என்பது மறுமை என்னும் முடிவில்லா வாழ்க்கையில் வீடுபேறு அலல்து நரகத்தை அடைவதற்கான பரீட்சை ஆகும். எனவே இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் கடலில் நீந்துவதை போலவோ, சிறையில் இருப்பதை போலவோ தேவைகளையும் இன்பங்களையும் தவிர்த்து பயணியை போல வாழ வேண்டும்.