அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு அறிவுரை என் வாழ்க்கையையே மாற்றி விட வேண்டும். அப்படி இருந்தால் ஏதேனும் ஒன்று கூறுங்கள்?

சிறந்த கேள்வி

அறிவுரை எளிமையாக கிடைப்பதால், மலிவாக பார்க்கப் படுகிறது.

"ஒருவர் அறிவுரை வழங்கும் பொழுது பொறுமையாக முழுமையாக கேட்கவும்" என்பதுதான் எனது அறிவுரை. இதற்குத்தான் இன்று பெரும் பஞ்சம் நிலவுகிறது.

யார் அறிவுரை கூறினாலும் செவி கொடுத்து பொறுமையாக கேட்க வெண்டும். கூறப்படும் அறிவுரை அர்த்தமற்றதாக தோன்றினாலும், கூறும் நபர் உங்கள் பார்வையில் சரியானவராக இல்லை என்றாலும்.

எந்த அறிவுரை உங்களுக்கு தேவை உள்ளதாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் அறிவுரை கூறப்படுவதை வெருப்பவர் என்று மக்களுக்கு தெரிய வரும் பொழுது உங்களுக்கு அறிவுரை கூற முன் வர மாட்டார்கள். அது பல நல்ல விடயங்கள் உங்களுக்கு கிடைப்பதிலிருந்து தடுத்து விடும். இலவசமான மலிவான அறிவுரைகள் உங்களுக்கு விலைமதிப்புள்ள பொருளாக மாறிவிடும்.

ஒருவர் அறிவுரை தரும்பொழுது பொறுமையாக கேட்டு அவருக்கு நன்றி கூறி புன்னகையோடு கடந்து செல்ல வேண்டும். ஒருவேளை அவர் உங்களுக்கு வேண்டுமென்றே தவறான அறிவுரை கூறினாலும், அல்லது அவர் அறியாமல் தவறாக உபதேசம் செய்பவராக இருந்தாலும் அவர் அறிவுரை கூறுவதை நாம் தடுக்க கூடாது. அறிவுரை பெற்ற பின்பு அதை ஆய்வு செய்து ஏற்ப்பதும் தவிர்ப்பதும் நமது கைகளில் உண்டு. ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்பது உங்களுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.

அறிவுரை பெறுவது தொடர்பான கருத்துக்களை உலக சமய நெறி நூல்கள் என்ன கூறுகிறது என்று காண்போம் வாருங்கள்.

தமிழர் சமயம்

அறவுரையின் இன்றியமையாமை

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம் பாடல் - 2)

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறம் கேட்டற்குத் தகாதவர்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை

ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு

ஆன்றவர்கள் கூறார் அறம்.(அறநெறிச்சாரம்பாடல் பாடல் - 7)

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொரியோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள். 

கிறிஸ்தவம்

ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. - (நீதிமொழிகள் 25:12)

முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான். - (நீதிமொழிகள் 12:15)

அறிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள். - (நீதிமொழிகள் 19:20)

ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. - (நீதிமொழிகள் 29:1)

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)

ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான் - (நீதிமொழிகள் 16:20) 

இஸ்லாம்

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (குர்ஆன் 87:9-12)

(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:269.)

திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? - (திருக்குர்ஆன் 54:17) 

சியோனிச பயங்கரவாதிகளின் சிந்தனையும் திட்டமும்

முடிவுரை

இன்றைய இளைஞர்கள் உபதேசம் செய்வோரை "பூமர்அங்கிள்" என்று இளித்து கூறுவதை கண்டால் பரிதாப மட்டுமே படமுடியும். அறநூல்கள் உபதேசம் கேட்பதின் அவசியத்தை கூறுவதையும், இவ்வுலகை கெடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ள சியோனிச பயங்கரவாதிகள் மக்களிடம் இதில் உள்ள சிறிய சுனக்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவலும் உபதேசத்தின் அவசியத்தை உணர்த்துகிறது