தீர்க்கதரிசிகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - திருமந்திரம் 2104

ஒரே ஒரு தெய்வம்தான் அவனை விட்டால் புகும் கத்தி வேறு இல்லை என்று பாடிய திருமூலருக்கு கோவில் அமைத்து தெய்வமாக வணங்கப் படுகிறது. திருமூலர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் நிலை இதுதான்.  
 
 

கிறிஸ்தவம்

 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8) என்றும் 

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.”— (மத்தேயு 23:9) என்றும் 

 சொன்ன தீர்க்கதரிசி இயேசுவிற்கு உருவம் கொடுக்கப்பட்டு உலகம் முழுதும் வணங்கப்பட்டு வருகிறது. 
 

 இஸ்லாம் 

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80) 
 
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்:9:31

அளவுக்கு அதிகமாக தூதர்களை புகழும் சமீபத்திய உதாரணம்.



படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17) தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25) ‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.— (யோபு 1:6)


"அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது" - (மெயில் ஆப் இஸ்லாம்)

முடிவுரை 


உருவவழிபாடு கூடாது அது மாபாதக செயல் என்று இந்து, இஸ்லாம் கிறிஸ்தவம், தமிழர் சமயங்கள் உள்ளிட்ட அனைத்து உலக வேதங்களை வாசித்தால் ஒரு லட்சம் தடவைக்கு குறையாமல் எழுதப்பட்டு இருந்தும், ஆனால் அதை போதித்தவர்களையே வணங்குவதென்பது பரிதாபத்துக்கு உரியது. 

3 கருத்துகள்:

  1. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

    (அல்குர்ஆன்:9:31)

    பதிலளிநீக்கு
  2. அதேபோல் அப்போஸ்தலன்
    யோவான் ஒரு தேவதூதனை
    வணங்க முற்பட்டபோது
    “வேண்டாம், வேண்டாம்; . . . கடவுளையே தொழுதல் வேண்டும்” என்று கூறி அந்தத் தூதன் அவரை கடிந்துகொண்டார்
    (⁠திருவெளிப்பாடு 22:⁠9)

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக! ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 21, 22)

    பதிலளிநீக்கு