பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவனை எண்ணி அழுதல் - பக்தி


தமிழர் சமயம் 


அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (ஞானக்குறள் 93)

சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.

இஸ்லாம்

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத மனிதன் நரகத்தில் நுழைய மாட்டான் கறந்த பால் மடியில் மீண்டும் செல்லும் வரை. (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1633, தரம் : ஸஹீஹ் (அல்பானி))

ஏழு மனிதர்களுக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அர்ஷின் நிழலை கொடுக்கின்றான். அதிலே ஒருவர்; தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடிக்கும் மனிதன். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.)

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; இரண்டு கண்கள், நரக நெருப்பு அவற்றை தீண்டாது. ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்கள், இரண்டாவது அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாத்துக்கொண்டிருந்த கண்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639, தரம் : ஸஹீஹ் அல்பானி)

 கிறிஸ்தவம் 


என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர். (சங்கீதம் 56:8)

அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள் (1சாமு. 1:10)