கடவுள் உலகைப் படைத்தாரா? அல்லது கடவுள்கள் உலகத்தை படைத்தார்களா?

இந்த கேள்விக்கும் பதில் எந்த கோணத்தில் தரமுடியும் என்றால், கடவுள் என்கிற கருத்து வேதத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகிறது என்பதால் உலகில் உள்ள பல்வேறு வேதங்கள் என்ன சொல்கிறது என்று அறிவது அவசியம்.

தமிழர் சமயம் 

சைவ சித்தாந்த நூலான திருமூலரின் திருமந்திரம் இவ்வாறு இறைவன் உலகை படைத்ததை விளக்குகிறது.

445. உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. 5

446. படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே. 6

447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. - திருமந்திரம் 445–447

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே. - சிவவாக்கியம் 241

இஸ்லாம்  


‘வானங்களும், பூமியும் இணைங்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா ?… (திருக்குர்ஆன் 21:30)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 7:54)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:22:73.

கிறிஸ்தவம்  


துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:1-2
 

முடிவுரை


இதுபோல எத்தனை வேத ஆகம மறை நூல்களை எடுத்து பார்த்தாலும் இறைவனுக்கு அந்த நூலில் பயன்படுத்தப்படும் சொல் பன்மையில் இல்லை. ஒருமையில் தான் உள்ளது. இதுவே ஒரே கடவுள் தான் இவ்வுலகை படைத்தார் என்பதற்கு போதுமான சான்று. 

மேலும் தர்க்க ரீதியாக யோசித்தால், பல்வேறு கடவுள்கள் உலகத்தை படைத்து இருந்தால் மனித உடல் கூறுகளையும் பண்புகளையும் உட்பட ஒவ்வொரு பொருளும் ஒரே அமைப்பில் ஒரே விதிக்கு கட்டுப்பட்டு உலகம் முழுதும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

இங்கே மனிதனுக்கு எப்படி இரண்டு கண், ஒரு மூக்கு, ஒரு இதயம் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக இருக்கிறதோ, அப்படிதான் உலகம் முழுதும் உள்ளது.  இங்கு நெருப்புக்கு  சுடும் பண்பும், ஆப்பிரிக்காவில் குளிரும் பண்பும் உள்ளதா என்ன? ஒரே இறைவன்தான் அனைத்தையும் படைத்தான் என்பதற்கு வேறு எந்த தர்க்கமும் தேவை இல்லை. படைப்பு பற்றிய தரவுகள் ஒவ்வொரு வேதத்திலும் முரண்படுகிறதென்றால் அதற்கான சரியான காரண காரியத்தை ஆய்ந்து அறிவது அறிவுடைமை.  

9 கருத்துகள்:

  1. மேல் & கீழ் உலகில் உள்ள அனைத்தும் இறைவனிடமிருந்துதான் வந்தது

    பைபிள்

    யோவான் 1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

    I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

    கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
    http://tamilbibleqanda.blogspot.com/2009/11/21-son-of-god-god.html
    _____________________________________

    திருக்குறள்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

    மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
    http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0001.aspx

    பரிபாடல்

    ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
    இரண்டி னுணரும் வளியும் நீயே!
    மூன்றி னுணரும் தீயும் நீயே!
    நான்கி னுணரும் நீரும் நீயே!
    ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)

    https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2183:2014-07-03-03-22-21&catid=56:2013-09-02-02-58-06
    _______________________________________

    குர்ஆன்

    15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

    http://www.tamililquran.com/qurantopic.php?topic=14

    பதிலளிநீக்கு
  2. நெகேமியா 9:6
    நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!

    பதிலளிநீக்கு
  3. பாடல் எண் : 28
    தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
    மேவு பிரான்விரி நீருல கேழையும்
    தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
    பாவு பிரான்அருள் பாடலு மாமே.

    பொழிப்புரை : சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

    பதிலளிநீக்கு
  4. இந்த உலகை படைத்தவர் ஒருவராக தான் இருக்க முடியும். பல கடவுள் இருக்க முடியாது. இப்படி இருக்கயில் பல விதமான மதங்கள் இருப்பது குழப்பமாக இருக்கலாம் ஆனால் இவை அனைத்து ஒரு கடவுளையை மட்டுமே கூறுகிறது.

    கடவுள் ஒளி வடிவில் தான் என்று (சநாதன தர்மம், பைபிள், குரான், யூதர்கள் போன்ற ஆன்மீக நூல்களில் பல இடங்களில் கடவுளுக்கு ஒளி வடிவத்தையே கூறுகிறது இதை பலரும் வணங்குகின்றனர்.) ஆனால் கடவுள் பரிபூரணமானவர் (எந்த விதமான குறையும் அற்றவர்) என்றால் உருவம் இல்லாத நிலை கடவுளுக்கு குறையாக ஆகிவிடும். ப்ரம்மன் , பரமாத்மா, பகவான் என்ற மூன்று நிலையில் கடவுள் உள்ளார் என பாகவத புராணம் கூறியுள்ளது.
    கிருஷ்ணரின் உடலில் இருந்து வெளி வரும் ஒளி ப்ரம்மன்,இதை பல மதங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிலும் உடன் இருப்பவர் பரமாத்மா (உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவர்) விஷ்ணு , முழுமையாக உள்ள முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கடவுளை ஒலி வடிவத்தில் உச்சரிப்பது ஓம் என்ற பிரணவம். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே. இதை பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல வேத இலக்கியங்களில் உள்ளது. கடவுள் ஒருவரே அவர் நான் தான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இதே போல் கடவுள் ஒருவரே என பைபிளிலும் குரானிலும் கூறுகிறார்.
    கிருஷ்ணர், ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரையே குறிக்கும். சூரியன் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறு கடவுள் என ஆகாது. அது போல் கிருஷ்ணரைப் பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறுகின்றன.
    யகோவா & விஷ்ணு / கிருஷ்ணா - இருவரும் ஒன்றே !
    கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டின் படி அவர்களது இறைவன் 'யஹோவா' என்பதே. இவர்களது இறைவனுக்கும், பகவான் விஷ்ணுவிற்கும் உள்ள தொடர்புகளை இங்கே தந்துளேன்....
    பைபிளில் உள்ள 'யகோவா" (Yahwah) என்கிற கடவுளுக்கும், வேத இலக்கியத்தில் உள்ள விஷ்ணு என்கிற கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பின்வருமாறு..
    "கடவுள் அழித்து கொண்டிருக்கும் நெருப்பாக வர்ணிக்கபடுகிறார்" - உபாகமம் 4.24
    "பகவான் கொழுந்துவிட்டெரியும் நெருப்போடு ஒப்பிடபடுகிறார்" - வேத இலக்கியம், சைதன்ய சரிதமிர்தம் - ஆதி -7.116
    "யஹோவா என்கிற கடவுள் விமோசனம் என்கிற கிரீடம் அணிந்து கொண்டுள்ளார்" - ஏசையா 59.16.18
    "பகவன் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான ஒரு கிரீடம் அணிந்துள்ளார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.4.39
    "அவர் குரல் இடி போன்று இருந்தது" - யோபு 40-9
    "மகாவிஷ்ணு இடியை போல் குரலை உடையவர்" ஸ்ரீமத் பாகவதம் 4.30.7
    "யகோவா கடவுள் கையில் ஒரு தடியையும், ஒரு குச்சியையும் வைத்திருப்பார்" சங்கீதம் 23.4, 89.32
    "மகாவிஷ்ணு தன கையில் ஒரு கோலையும், கதையையும் வைத்திருக்கிறார்" ஸ்ரீமத் பாகவதம் 6.4.39, 4.30.7
    "யகோவா கடவுள் தன் எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பை அனுப்புவார்" - சங்கீதம் 97.3,50.3, உபாகமம் 9.3
    "விஷ்ணு தன எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பு சக்கரத்தை அனுப்புவார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.8.23
    "யகோவா ஒரு கேடயத்தை எடுத்து செல்வார்" - உபாகம் 33.29, சங்கீதம் 6.4.39
    அதே போல் மகாவிஷ்ணு -ஸ்ரீமத் பாகவதம் 6.4.39

    பதிலளிநீக்கு

  5. இப்படி இத்தகைய ஒற்றுமைகளை கூறிகொண்டே போகலாம்.
    விஷ்ணுவும், யகோவாவும் ஒரே கடவுள் தான் என்பதற்கு மேலும் வலிமை கொடுக்கும் மற்றுமொரு பொதுவான அம்சம் உள்ளது. டில்மன், டப் மற்றும் பல கல்விமான்கள் விஷ்ணுவின் பறவைக்கும், யகோவா கருடனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்கிறார்கள். இவ்விசயம் யூதர்களின் கலை களஞ்சியம் என்கிற நூலில் 'Cherule' என்கிற வார்த்தை எப்படி வந்தது என்பதை ஆராயும் பகுதியில் உள்ளது.
    "விஷ்ணு கருடன் மீது தான் அமைந்து செல்கிறார்" என்பது எல்லோருக்கும் தெரியும், அதுபோலவே யோகவாவும் ஒரே ஒரு பறவை மீது மட்டும் அமர்ந்து செல்கிறார். பைபிளில் பல பறவைகள் பற்றிய வர்ணனை உள்ள போதும், அவர் இந்த கருடன் மீது தான் செல்கிறார்.
    எனவே, யஹோவா என்பது பகவான் விஷ்ணுவே தான் என்பதை இதன் முலம் அறிந்து கொள்ளலாம். ஆகவே, எல்லா மதங்களுமே பகவான் விஷ்ணு /கிருஷ்ணரை தான் சொல்கிறது. ஆனால், அவர்களால் இதை புரிந்து கொள்ள தான் முடியவில்லை.
    யூதர்களின் ஆன்மீக நூல்(பழைய ஏற்பாடு) ஏசு வந்து அவர் கூறிய அறிவுரைகள் சேர்ந்த்தே பைபிள், அதன் பிறகு பழைய ஏற்பாடு உடன் நபிகள் கடவுளிடம் பெற்ற விசயங்களின் தொகுப்பே குரான் ஆகும். குரானில் ஏசு பரலோகத்தின் பரம பிதா அல்லாவின் இறைத்தூதர், ஈஷாநபி என்ற பெயரில் உள்ளது.
    ஏசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்களைப் பற்றி மஹா பவிஷ்யத் புராணத்தில் கூறியுள்ளது. நபிகள் நாயகத்தை அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறியுள்ளது. ஏசு தன்னை கடவுளின் மைந்தன் என கூறுகிறார். புத்தரை பத்ம புராணம் விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவத புராணங்களில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
    பத்ம புராணத்தில் ராமானுஜர் , மத்வாச்சாரியர், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆச்சார்யர்கள் கலியுகத்தில் தோன்றி கிருஷ்ணர் (நாராயணன்) மட்டுமே முழுமுதற் கடவுள் என நிருபிப்பார்கள் என உள்ளது.
    ஆன்மீக நூல்கள் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், பைபிள் குரானில் (ஏசு கிருஷ்து, அல்லா) பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபுருஷர் என்றும் பிற மத நூல்களில் பரம பிதா என்றும் கூறுகிறது. கீதையில் கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறிப்பட வேண்டியவன், அனைத்திற்கும் ஆதி மூலம். விதை அளிக்கும் தந்தை, எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது என கூறுகிறார். இதே போல பைபிள் குரானிலும் உள்ளது.
    கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள்
    யுதர்கள், பைபிள், குரான் போன்ற நூல்களில் (பரலோகத்தில் உள்ள பரம பிதாவின் பெயர்) யகோவா பற்றி கூறியுள்ளது. யகோவாவிற்கும் மஹா விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமைகள் பல உள்ளன. அவற்றில் சில பார்ப்போம். யகோவா பறவையில் வருவார் (கருடனை குறிக்கும்) எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் (சுதர்சன சக்கரத்தை குறிக்கும்)> ஒரு கேடயத்தை எடுத்துச் செல்கிறார். குச்சி, கனமான தடி வைத்திருப்பார் (புல்லாங்குழல் , கதையை குறிக்கும்), விமோசன கிரீடம் அணிந்திருப்பார். கொழுந்து விட்டெரியும் நெருப்பாக வர்ணிக்ப்படுகிறார். கடவுளின் குரல் இடி போல இருக்கும். கடவுள் மோசஸ்ஸூக்கு தன்னுடைய பின் பிறத்தை காட்டினார் என உள்ளது. எனவே முன்புறம் காட்டப்பட வில்லை.
    கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு. அது பௌதீகமானது அல்ல ஆன்மீகமாக ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண உண்டாக்கப்பட்டது உருவ வழிபாடு ஆகும்.

    https://www.facebook.com/jaisrikrishnaparamatma/posts/2340789282859473?locale=hi_IN&_rdr

    பதிலளிநீக்கு
  6. 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.

    https://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&start=2#2:21

    பதிலளிநீக்கு
  7. எபிரேயர் 11:3

    பிரபஞ்சம் கடவுளின் வார்த்தையால் உருவாக்கப்பட்டது என்பதை விசுவாசத்தின் மூலம் நாம் புரிந்துகொள்கிறோம், அதனால் காணக்கூடியவை புலப்படும் பொருட்களால் உருவாக்கப்படவில்லை.

    https://www.openbible.info/topics/the_big_bang_theory

    பதிலளிநீக்கு
  8. ‘நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கின்றன, சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.’ (வெளிப்படுத்துதல் 4:11)

    https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  9. ஜான் 1:3 ESV / 34 பயனுள்ள வாக்குகள்
    சகலமும் அவர் மூலமாக உண்டானது, அவர் இல்லாமல் உண்டானது எதுவும் உண்டாகவில்லை.

    பதிலளிநீக்கு