பிராமணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராமணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிராமணன் Vs இஸ்லாமியன்

1) வரையறை 

யார் பிராமணன்?

மஹாபாரதத்தில் பல இடங்களில்"யார் பிராமணன்"? என்ற கேள்வி எழுகிறது.அதற்கு யுதிஷ்டிரனும்"எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல"

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது:"எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்" 
பிராமணன் என்றால் இவ்வகை குணங்களை கொண்டவர் மட்டுமே, அது சாதி அல்ல, பிறப்பால் வருவது அல்ல. ஆனால் பிராஹ்மின் என்ற கூட்டம் அதை ஒரு சாதியாகவும் மற்றவர்கள் தீண்ட தகாதவர்கள் என்றும் வேதம் அவர்களுக்கே சொந்தம் என்றும் மாற்றி விட்டது.
__________________________________________
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)

பொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.
மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

இஸ்லாமியன் என்பதன் பொருள்?
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்(தேவர்கள் ), வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்(தயாள குணத்துடன்), தொழுகையை (தவம்) நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் (உண்மை), வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே (பொறுமை) நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் (இஸ்லாமியன்). - அல் குர்ஆன் 2:177

வரையறை அடிப்படையில் இஸ்லாமியன் = பிராமணன்

இந்த வரையறை கொண்ட இஸ்லாத்தை பின் தொடர விரும்புகின்ற எவரையும் இஸ்லாமியனாக அங்கீகரிக்கலாம் ஆனால் இந்து சமயத்தில் பிராமினாக ஆக முடியுமா?

2) ஏற்ற தாழ்வு :




  நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். - கீதை 





  மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. -புனித குரான் 30:22.




  குரானிலும் கீதையிலும் வெவ்வேறு வண்ணத்தில் மனிதர்கள் படைக்க பட்டு இருப்பது தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் அவர்கள் ஏற்ற தாழ்வு கொண்டவர்கள் என்பதல்ல. அவர்களின் தேவைக்கு ஏற்ப உடல் வாகுவையும் நிறத்தையும், ஒருவரை ஒருவர் இவர் இன்ன இனத்தவர் என்பதை அடையாளம் கொள்வதற்கும் ஆகும்.
   இந்த ஏற்றதாழ்வு மனிதர்களால் அவர்களது சுய லாபத்துக்காக ஏற்படுத்த பட்டதே அன்றி வேறில்லை, இந்து மதத்தில் மனிதர்களால் மாற்ற பட்ட அல்லது தவறாகபுரிதலால் நிரந்தரம் ஆக்கப்பட்டுவிட்டது,   இந்து மதத்தில்ஏற்ற தாழ்வு நிரந்தரம் ஏனென்றால் அது அவர்களை கொள்கை அக்கபட்டுவிட்டது.

3) ஆடை: 
இஸ்லாமியர்களின் ஆடையும் இந்துக்களின் ஆடையும் ஒரே காரணத்திற்காக தான் வடிவமைக்க பட்டு இருந்தது. அதாவது முழுமையாக உடலை வெட்கத்துடன் மானம் காக்க மறைப்பது. அதன் வடிவமைப்பு வேறுபட்டாலும் அதன் காரண காரியங்கள் எல்லாம் ஒன்றுதான்.இன்று ஹிந்துக்களின் ஆடை மேற்கத்திய பாதிப்பின் காரணமாக ஏறக்குறைய முற்றிலுமாக மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது. இஸ்லாமில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கொள்கை அடிப்படையில் இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் சரியாக மறைக்க வேண்டியவைகளை மறைத்து முறையாக பின்தொடருகின்றனர், அந்த ஆடைகள் தீவிரவாதிகளில் ஆடையாக சித்தரிக்க பட்டபோதிலும்.




4) புலால்  
ரிக்வேதா 10.86.13, 10.27.17, 10.94.3 , 10.87.16 யாஜுர் வேதா 2.5.5, 2.2.9 ஆதர்வான வேதா 1.16.4... இவைகள் ஹிந்துக்கள் புலால் உண்பதை தடை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஹிந்துக்களின் வேத புத்தகங்களின் எடுத்துக்காட்டு வாசகங்கள்..
வட்டார கடவுள்களை வணங்குபவர்கள் இன்றும் பலி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஹிந்துக்கள் ஆனார்கள் என்று இதுவரை எனக்கு புரியவில்லை என்பது வேறு விஷயம்.

முடிவுரை : 

பிராமணன் என்பதற்கும் இஸ்லாமியன் என்பதற்கும் குறிக்க படும் வரையறை ஒன்றே, அனால் அந்த வரையறை படி நடந்து கொள்ளுவோர் இஸ்லாமியர் மட்டுமே.

சரி இதுபோல் நடைமுறயில் உள்ள வேற்றுமையாக கருத்தப்படும் அனேக விஷயங்கள் ஒற்றுமையாகவே இருக்க, எதுதான் உன்மயான வேற்றுமை?

இஸ்லாமிற்கு முன் இருந்த எல்லா மதத்தினரும் அது முடியும் தருவாயில் செய்த அதே தவறுதான்.. ஒன்றுக்கும் மேற்பட்ட படைத்தவனை அன்றி மற்றவைகளை வணங்குவது.. இது சரியா? இதனை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

அவர்அவருக்குரிய மரியாதையும் பரிசும் அங்கீகாரமும் அவரவருக்கே சென்றடைய வேண்டும் என்பது எதார்த்த உண்மை.. படிக்காதவனுக்கு சம்பளம் குறைச்சல், படித்த திறமையானவனுக்கு அவனுக்கு உரிய அங்கீகாரமும் சம்பளமும் கொடுக்க படவேண்டும், அம்மாவை அத்தை என்று அழைக்க முடியாது, அப்பாவைமாமா என்று அழைக்க கூடாது.. பிச்சைகாரனைஅரசே என்று அழைக்க முடியாது, அரசனை பிச்சைக்கார என்று கூறமுடியாது... அது ஏன் கடவுள் விஷயத்தில் மட்டும் இதனை அலட்சியம்... கண்ணில் பட்டவனெல்லாம் கடவுள், காசு குடுத்தாஅவன் சாமி, செத்துபோனா அவன் கடவுள், அழகானசிலை இருந்த அதுவும் கடவுள்..?

இறைவன் பேசுகிறான் நம்மோடு வேதத்தின் மூலமாக..நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிவிக்கிறான்.. செய்தால் என்ன நன்மை இல்லை என்றால் என்ன தீமை என்றும் விளக்குகிறான்.. அவன் எவ்வளவு அன்பு கொண்டவன் பாருங்கள்,அவன் தான் இறைவன் என்று பல குறிப்புகள், அத்தாட்சிகள், அதிசயங்கள், முன்னறிவிப்பு, நமக்குத்தெரியாத அறிவியல் உண்மைகள் சொல்வதன் மூலம் நிரூபிக்கிறான். அதற்கான அவசியமும் கட்டாயமும் அவனுக்கு கிடயாது,நம் மீது கொண்ட கருணை மட்டுமே கரணம் இதனை அவன் செய்வதற்கு. வேதங்கள் என்று எஞ்சி இருப்பவை வெகு சிலவே அதை படிப்பதில் அல்லது அறிஞர்கள் மூலம் அறிவதில் என்ன சிரமம்? வேதங்களின் அறிவு நமக்கு விளக்கம் கொடுக்கும் என்பது உண்மை, அணைத்து வேதங்களையும் ஒப்பீடு செய்தல் அதிக விளக்கத்தை கொடுத்து உண்மையை விளங்க செய்யும்.
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
அல்லாஹ்வே அறிந்தவன்..

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்...