முத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முத்தமிழ்

தொல்காப்பியர் தாமியற்றிய தொல்காப்பியத்துள் பொருளதிகாரச் செய்யுளியலிலும் மரபியலிலும் முறையே தமிழ்மொழியை 
  • வாய்மொழி (நூற்பா.71), 
  • தொல்மொழி (நூ.230), 
  • உயர்மொழி (நூ.163), 
  • தோன்றுமொழி (நூ.165), 
  • புலன்மொழி (நூ.233), 
  • நுணங்குமொழி (நூ.100) 
என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் "முத்தமிழ்" என்கிற பதத்தை எங்குமே பயன்படுத்தியது இல்லை. முத்தமிழ் என்றால் இயல், இசை மற்றும் நாடகம் என்று கூறப்படுகிறது. இந்த விளக்கங்களும் வர்ணனைகளும் பிற்கால அறிஞர்களால், குறிப்பாக சொன்னால் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. பொதுவாக நூல்களை வகைப்படுத்த இப்பிரிவுகள் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் தொல்காப்பியர் முதல் மற்றும் வழி என்று நூல்களை வகைப் படுத்துகிறாரரே ஒழிய இவ்வாறு அல்ல.

எனவே இது எங்கிருந்து தோன்றி இருக்க கூடும் என்று நூல்களை ஆய்வு செய்யும் பொழுது பின்வரும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகிறது.

மூலம் 1: 

 முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் - தேவாரம்

குறிப்பு: தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன.. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன

மூலம் 2: 

 மூவர் தமிழும் (தேவாரம்) - நல்வழி பாடல் 40 

மூலம் 3: 

சங்கத் தமிழ் மூன்றுந் தா - ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்

குறிப்பு: இவர் நாம் அறிந்த சங்ககால புலவர் அல்ல, 14ம் நூற்றாண்டை சார்ந்த பிற்கல சமய புலவர்.  

மூலம் 4: 

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (பரிபாடல் : திர : 4)

எனவே சங்ககாலத்தில் இப்பதம் பயன்படுத்தப் பட்ட  இடம் எதுவும், இயல் இசை நாடகத்தை குறிக்கவில்லை. பிற்கலத்தில் சங்ககால புலவர்களின் பெயரில் தோன்றிய புலவர்களின் பாடல்களிலேயே இது காணப்படுகிறது. எனவே இது உள்நோக்கம் உடையதாக இருக்கலாம். சமீப காலத்தில் அடிப்படை ஆதாரம் இல்லா இவ்விளக்கம் பரவலாக நம்பப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. முத்தமிழ் என்பது ஒருவேளை தேவாரத்தை குறிப்பிடலாம் அல்லது முதுமையான தமிழ் [தொல்மொழி (நூ.230)] என்பதை முத்தமிழ் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

மேலும் முத்தமிழ் என்பது நான்மறையோடு சமமாக பயன்படுத்தப் படுவதால் நான்மறையின் வரையறைக்கும் அது கூறும் அறத்துக்கும் முரண் பட்ட விளக்கத்தை யாரும் தர முடியாது. அவ்வகையில் நான்மறைகள் இசையையும் கூத்தையும் பிழை என்கிறது. எனவே முத்தமிழ் என்பது நிச்சயமாக இயல் இசை நாடகத்தை குறிப்பிடவில்லை. தமிழர் என்று பெருமை கொள்வதாக இருந்தால் அதன் அறத்தை பின்பற்றுவதில் தான் அதன் உண்மை தன்மை இருக்கிறது. அறமற்றதாக கூறப்படும் இசையும் கூத்தும் தமிழர் பண்பாட்டில் நுழைத்ததும் அதை வளர்த்தெடுத்ததும் யார்? எப்படி? ஏன்? எனபனவெல்லாம் ஆய்வாளர்களின் சிந்தனைக்கு விடப்படுகிறது. 

குறிப்பு: மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் கீழே பதிவு செய்யுங்கள் நன்றி.