தமிழர் சமயம்
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (அதிகாரம்:மடிஇன்மை குறள் எண்:605)
பொழிப்பு (மு வரதராசன்): காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
கிறிஸ்தவம் : சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து
சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 1அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போனது போல இருக்கும். (நீதிமொழிகள் 6 : 6-11)
இஸ்லாம்
அல்-ஃபுதைல் இப்னு இயாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இதயத்தை கடினமாக்கும் இரண்டு குணங்கள் உள்ளன: அதிகமாக தூங்குவது மற்றும் அதிகமாக சாப்பிடுவது.
இப்னுல்-கயீம் (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) கூறினார்:
மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது, அதிக ஆசை, அதிகமாக அல்லாஹ்வைத் தவிர வேறு எதனுடனும் இணைந்திருத்தல், அதிகமாகி சாப்பிடுதல், அதிகமாக தூங்குதல். இந்த ஐந்தும் இதயத்தைக் கெடுக்க கூடியவைகள். (மதாரிஜ் அல்-சாலிக்கீன்)