தருமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தருமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தானம் விரும்பி செய்யத்தக்கது

தமிழர் சமயம் 

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4

பொருள் விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகை. அன்றி, விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது. பிறருடைய கட்டாயத்திற்காக, மனம் வருந்திச் செய்யும் ஈகை சிறப்பில்லாதது ஆகும்.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் -- திருமந்திரம் 85

இஸ்லாம் 

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். - (அல்குர்ஆன் : 3:92)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (13)

கிறிஸ்தவம் 

இதை நினைவில் வையுங்கள்: சிக்கனமாக விதைக்கிறவன் சிக்கனமாக அறுப்பான், தாராளமாக விதைக்கிறவன் தாராளமாக அறுப்பான். நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் இதயத்தில் தீர்மானித்ததைக் கொடுக்க வேண்டும், தயக்கத்துடன் அல்லது நிர்பந்தத்தின் பேரில் அல்ல, ஏனென்றால் கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுப்பவரை நேசிக்கிறார். -  (2 கொரிந்தியர் 9:6-7)

 மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். - (மத்தேயு 7:12)

 அது சேவை என்றால், பின்னர் சேவை; கற்பிப்பது என்றால், கற்றுக்கொடுங்கள்; ஊக்குவிப்பதாக இருந்தால், ஊக்கம் கொடுங்கள்; கொடுப்பதாக இருந்தால், தாராளமாக கொடுங்கள் ; அது வழிநடத்துவதாக இருந்தால், அதை விடாமுயற்சியுடன் செய்யுங்கள்; கருணை காட்ட வேண்டுமானால் அதை மகிழ்ச்சியுடன் செய். - ரோமர் 12:7-8