தமிழர் சமயம்
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் (நல்வழி வெண்பா : 20)
விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.
இஸ்லாம்
'விபசாரத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்'
(ஆதாரம் : அத்தபராணி)
கிறிஸ்தவம்
ஒரு விபச்சாரி உன்னை வறுமையில் தள்ளுவாள், ஆனால் வேறொருவரின் மனைவியுடன் உறங்குவது உங்கள் உயிரை இழக்க செய்யும்- (
நீதிமொழிகள் 6:26)