ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாதிகள் என்ற கற்களால் எழுப்பட்டுள்ளது ஹிந்து மதம், கற்களை அகற்றி விட்டால் எழும்பிய கட்டடம் சிதைந்து விடுமா அல்லது சிறப்படையுமா?

மனிதர்கள் மத்தியில் உள்ள ஏற்ற இறக்கத்தை மட்டுமே கொண்டு இந்து மதம் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. கண்ணுக்கு எதிரே மக்கள் உடனுக்குடன் விளைவை பார்ப்பதால் சாதி பூதாகரமாக தெரியலாம்.

சாதி எப்படி கொடுமையானதோ அதைவிட பல தவறான விடயங்களை அடித்தளமாக கொண்டு இந்துமதம் கட்டப்பட்டுள்ளது.

  • பல்வேறு நிலத்தில் இருந்த பல்வேறு சமயங்களை, மறை நூல்களை, தத்துவங்களை உள்வாங்கி செரித்து அவைகளின் வரலாற்றை, மொழியை அழித்து அம்மக்களை வரலாறற்ற அனாதைகளாக மாற்றியது இந்து மதம்.
  • ஒவ்வொரு சமயத்துக்கும் மொழிக்கும் வேதம் இருக்கும் பொழுது, யாரும் அறியா சம்ஸ்கிருத வேதத்தை எல்லோருக்கும் பொதுவாக்கி, கற்று ஏற்று பின்பற்ற வேண்டிய நூலை வாசிக்க கூட இயலாமல் வைத்தது இந்து மதம்.
  • தமிழர் சமயமாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், ஆப்ரஹாமிய மதமாக இருந்தாலும், பல்வேறு தீர்க்க தர்சிகளால் பல்வேறு காலங்களில் தொடராக வேதங்கள் எழுதப் பட்டது வரலாறு. ஆனால் பல்வேறு புராண நூல்களை எழுதியவர் வேதவியாசர் என்கிற தனி நபர் என்கிற முரண் மட்டுமல்ல வேதங்கள் கூறும் அறநெறிக்கு எதிராக ஒழுக்க சீர்கேட்டை போதிக்கும் இந்த புராணங்களை வேத நூல்களை விட அதி முக்கியமாக ஆக்கியது இந்து மதம்.
  • இறைவன், வேதம், சொர்கம் நரகம், இம்மை மறுமை, நன்மை தீமை, என எல்லாவற்றுக்கும் மாற்று விளக்கம் கூறியதோடு, ஆன்மிகம் என்பதையே கேலிக்கு உரியதாக்கியது இந்து மதம்.
  • இவை அனைத்தின் மூலமும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரும் திரையை ஏற்படுத்தியது இந்து மதம்.

எனவே சாதியை ஒழித்தால் மட்டும் இந்துமதம் சிறப்படையாது. 

இவை அனைத்தையும் ஒழித்தால் இந்து மதமே இருக்காது. 

https://ta.quora.com/