தமிழர் பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆங்கிலமும் இந்தியும்


மொழியை வெறுப்பவர்கள் அல்ல தமிழர்கள்.

இந்தியும் ஆங்கிலமும் ஏறக்குறைய சில நூற்றாண்டு வயதுடைய மொழிகளே

ஆங்கிலத்தை ஏற்பதன் காரணம்,

  1. தமிழர் வரலாற்றில், கடல் கடந்து சென்று வாணிபம் செய்ததை காணமுடிந்த நம், எப்படி நாம் அந்நியர்களோடு உரையாடி இருப்போம் என்று சிந்திக்க கடமைப் பட்டு உள்ளோம். நாம் அவர்களிடம் பொருளீட்ட முயற்சித்ததால் அவர்களது மொழியை நாம் தான் கற்று இருக்க முடியும். இந்தவகையில் ஆங்கிலத்தையும் நாம் ஏற்றுள்ளோம். 
  2. இரண்டாவது தமிழர்களின் சங்க நூல்களை மற்றும் வரலாற்றை மீட்ருவாக்கம் செய்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானது.
  3. மூன்றாவது ஆங்கிலம் என்பது உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு பொது மொழி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு மொழியை பொது மொழியாக ஏற்பதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், ஏற்கப்பட்ட பொதுமொழி மற்ற மொழிகளை காலப்போக்கில் அழித்தொழித்து ஓங்கி நிற்கும். ஹிந்தியே அதற்கொரு உதாரணம், வடக்கில் உள்ள பெங்காலி, காஷ்மீரி, பீஹாரி, அஸ்ஸாமி, மராட்டி போன்றவைகள் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மொழி அழிந்தால் வரலாறும் அழியும், வரலாறு அழிந்தால் அதன் தரும் நடுக்கம் கோரமானது.

ஆனால் இந்தியை வெறுப்பதற்கான காரணம்: திணிப்பு

  1. இந்தி தமிழை அழிக்க முயல்கிறது
  2. கீழடியை மூட முயன்றது
  3. தமிழரின் தொன்மைக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது
  4. தமிழர் நாட்டை பறிக்க 2 கோடி வடக்கர்களை இங்கே களமிறக்கி வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது
  5. இங்கே வந்து பிழைக்கும் கொத்தனார் சித்தாள் கூட, முடி திருத்துபவன் கூட, பாணிபூரி விற்பவன் கூட தமிழை கற்று பேச மாட்டான், நாம் இந்தி கற்றுக்கொண்டு பேசணும்! இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

தமிழர் தெய்வம் - சிவன் யார்?

தமிழர் பண்பாட்டில் தொல்காப்பியம் முதல் அனைத்து மறைநூல்களும் கடவுள் என்னும் கருப்பொருளை பேசாமல் இருந்ததில்லை. தமிழுலகில் இறுதியில் வந்த சைவ சமயம், "சிவன்" என்கிற பெயரில் இறைவனை குறிப்பிட்டது. சைவ சமய மறைநூல்கள் கூறும் சிவன் யார்? இன்று நாம் கருதும் சிவன் யார்? என்று இந்த கட்டுரையில் பார்ப்போம். 

சிவன் என்று கருதும் பொழுது, அவன் 
  • பார்வதியின் கணவன் 
  • முருகன் & கணேசனின் அப்பன் 
  • பிரம்மா, விஷ்ணுவின் உறவினன் 
  • சுடுகாட்டில் நடனமாடுபவன் - ஆதி பறையன் 
  • கறுப்பானவன், நீலமானவன் 
  • ஆதி யோகி
  • சித்தர் அல்லது தீர்க்கதரிசி 
  • ஆஜானுபாகுவான உருவம் கொண்டவன் 
  • லிங்கம் அவனது  குறியீடு 
  • அவன் அழிக்கும் வேலையை மட்டும் செய்பவன் 

போன்ற ஆதாரமற்ற பல கருத்துருவாக்கங்கள் திருமந்திர உரைகள், புராணங்கள், சிலைகள், நாவல்கள், நாடகங்கள் திரைப்படங்கள், இசைப் பாடல்கள் போன்ற ஊடகங்கள் மூலம் நமது அறிவில் திணிக்கப்பட்டுள்ளது 

ஆனால் கடவுளை பற்றி கடவுளே சொன்ன நூல்கள் மறைநூல்கள் ஆகும், அதில் ஒன்றான திருமந்திரம், சிவனின் வரைவிலக்கணமாக கூறுவது,
  • சிவன் தனித்தவன் - ஈடு இணையற்றவன் 
  • மனிதனல்ல, ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல 
  • யாரும் படைக்காமல், உருவாக்காமல், பெற்றெடுக்காமல், தானாய் உள்ளவன்  
  • அநாதி - மனைவி மக்கள் உறவினர் கிடையாது 
  • தனக்கே உரிய உருவுடன் வானத்தில் உள்ளான் 
  • உலகில் யாரும் கண்டதில்லை, அவனை கற்பனை செய்யவும் வரையறுக்கவும் முடியாது 
  • லிங்கத்திலும் கோயிலிலும் இல்லை 
  • அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளான்  
  • ஆதியும் அந்தமும் அற்றவன், படைப்புகளின் ஆதியும் அந்தமுமாய் இருப்பவன் 
  • பிறப்புமில்லை இறப்புமில்லை 
  • அவனே படைத்தவன், காப்பவன், அழிப்பவன் (முத்தொழில் செய்வோன்)

சிவன் ஒருவனே கடவுள்  


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்


சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

அவன் தானாக தோன்றியவன்


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பொருள்: அவன் தானாக உருவான ஒருவன்

ஆதியும் அந்தமும் 

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

 பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை  

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான்


ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
 
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான். 

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது 

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ 
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915) 
 
பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். 

பதவுரைபுரை - ஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த; 

குறிப்பு: உரையே செய்ய முடியாத பொழுது வரைந்தும் செதுக்கியும் சிவனுக்கு உருவம் கொடுத்தவரின் நிலையை சிந்தித்தால் பரிதாபமாக உள்ளது. அதைவிட பரிதாபத்துக்கு உரியவர்கள் சிவனை புராணக் கதைகளில் திணித்து அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத கதாபாத்திரத்தையும் குணங்களையும் கற்பனை செய்ததுடன் அதுதான் உண்மை சிவன் என்று மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்தவர்கள். 

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல


பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்பு: ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே அவன் தாய் தந்தை, மனைவி, மக்களை பெறாதவன் என்பதற்கு போதுமானதல்லவா?

சிவனே முத்தொழிலையும் செய்பவன்


நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

பொருள்: நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
 - சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற 
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் - ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்   
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று - நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று 
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே 

பதவுரை: சோதித்த பேரொளி - படைத்து காத்து அழித்து சோதிக்கும் பேரொளியான தெய்வம்; கண் - அருள், பெருமை, ஆதர்கள் - அறிவில்லாதவர்கள்; பேதி - பிரி;  

பொழிப்புரை: சோதித்த பேரொளி மூன்று ஐந்து என கூறும் அறிவில்லாதவர்கள் ஆதி நாதன் அருளை அறிவதில்லை, நீதி செய்பவன் சிவன், பெருமாள், பிரம்மன் என்று பிரித்து உளறிக் கொண்டு உள்ளனர்.  

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14) 

குறிப்பு: சிவன் அழிக்கும் தெய்வம், பிரம்மன் படைக்கும் தெய்வம், விஷ்ணு காக்கும் தெய்வம் என்ற முக்கடவுள் கொள்கையை இப்பாடல்கள் மறுக்கிறது. முத்தொழிலையும் செய்யும் அறிவும் ஆற்றலும் ஒரே தெய்வத்துக்கு உள்ளது. 


சிவன் லிங்கத்தில் இல்லை 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் 
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் 
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. 
- (திருமந்திரம் - 7ம் தந்திரம் - 11 சிவபூசை 1)

பதவுரை 
உள்ளம் - மனம், எண்ணம், இதயம் 
பெரும் கோவில் - பெரிய + கோ + இல்லம் = மிகப் பெரிய "இறைவனின் இல்லம்"
ஊனுடம்பு - சதை நிறைந்த உடல் 
ஆலயம் -  தங்குமிடம்,  நகரம் (பிங்.) 
வள்ளல் -  வண்-மை, திறம்  
பிரானார்க்கு - தலைவர்க்கு 
வாய் கோபுரவாசல் - ஆலயத்துக்குள் செல்ல வகை செய்யும் கோபுர வாசல், அது போல உள்ளத்தில் உள்ளன வாய் வாசல் சொல்லும்  
தெள்ளத் தெளிந்தார்க்கு - ஞானம் பெற்றோர்க்கு - தெள்ளிய அறிவுடையவர்க்கு 
சீவன் - உயிர் (பிங்.), ஆத்மா 
சிவஇலிங்கம் -  மக்கள் கூறும் சிவலிங்கம் (அது உயிரில் உள்ளது, கல்லில் இல்லை) - லிங்கம் என்பதன் பொருள் "அடையாளக் குறி" (பிங்.) 
கள்ளப் புலனைந்தும் கள்ளத்தனம் செய்ய பயன்படும் அதே ஐந்து புலன்கள்
காளா - காளம் என்றால் இருட்டு, காளா என்றால் இருட்டு இல்லாத
மணிவிளக்கே -  மணி+விளக்கு - மணி (முத்து,பவளம் உள்ளிட்ட ஒளிதரும் மணிகள்) ஒளியுடையதாயினும் சூரியன் முதலிய பிறிதொரு ஒளிப்பொருளின் முன்பே ஒளிதரும் மேலும் இந்த மணிகள் அழியாமல் நீடித்து நிற்க கூடியவை. விளக்கோ இருளைப் போக்க கூடியது.  

பொருள்: ஆலயம் என்பது இதுவரை நீங்கள் வெறும் சதை என்று எண்ணியிருந்த உடம்பு ஆகும். உள்ளமே கருவறை எனப்படும் கோயில். ஆலயத்தில் உள்ளன அறிய கோபுர வாசல் வழி செல்லுதல் வேண்டும் அது வாய் எனும் வாசல் ஆகும். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் ஆத்மா தான், லிங்கம் இல்லை. தீமை செய்ய தூண்டும் அதே ஐந்து புலன்கள்தான் (வாய், கண், மெய், செவி, மூக்கு) இருள் போக்கும் அழியா ஒளிதரும் விளக்கு.  

குறிப்பு: கற்சிலையோ லிங்கமோ சிவன் அல்ல என்று ஆணித்தரமாக கூறிய இந்த பாடலை ஆலையம் கட்டும் முறையாக திரித்து எழுதி இருப்பது அறிவீனம் அல்லது நயவஞ்சகம்.  

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமோ? - (சிவவாக்கியம் 35)


சிவனின் மறுபெயர் அரி


அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - (சிவவாக்கியம் 224)

பொழிப்புரை தானாக அறியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே! 
 

அரியும் சிவனும் ஒன்னுதான், ஆனால் படத்தில் உள்ள இந்த சிவனும் அரியும் நமது கடவுள் இல்லை. இவைகள் மேற்சொன்ன வரையறைகளுக்கு முரணான மனிதனின் கற்பனை கதாப்பாத்திரங்கள்.
சிவன் என்பவன் சக்தி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற வார்த்தை பிரயோகத்தை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)

பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். 

முடிவுரை   


மறைநூல்கள் மாறலாம், கடவுளின் பெயர் மாறலாம், ஆனால் கடவுளின் இலக்கணம் மாறாது. கடவுள், சொர்க நரகம் போன்ற மனித புலன்களுக்கு எட்டாத தகவல்களை நம் கடவுளிடமிருந்தே பெறவேண்டும். நாமாக கற்பனை செய்ய முடியாது.  சிவனின் இலக்கணமாக தமிழர் சமய மறைநூல் திருமந்திரம் கூறுவது இதுதான். இந்த வரையறையை தாண்டி நாம் கற்பனை செய்யும் உருவம் சிவனாக இருக்க முடியாது என்று திருமந்திரம் கூறுகிறது. மேலும் 
 
அரியும் சிவனும் ஒன்னு என்பதை மக்கள் எப்படி புரிகிறார்கள் என்று தெரிய வில்லை. ஒருவேளை ஒன்னுக்குள்ள ஒன்னு, உறவினர்கள் என்கிற அமைப்பில் புரிகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதன் பொருள் சிவனும் அரியும் ஒருவனையே குறிக்கிறது என்பதாகும். இதை புரிந்தால் நான் உங்களுக்கு தைரியமாக அதைவிட கனமான உண்மையைச் சொல்லுகிறேன். அரியும், சிவனும், அல்லாஹ்வும், கர்த்தரும் ஒருவரே குறிக்கிறது. அப்பெயர்களும், அதன் மறைநூல்களும், அதன் சமயங்களும், அவற்றின் அடியார்களும் பிரிந்து பிளந்து இருக்கும் காரணத்தை கற்று தெளிவதுதான் கல்வி என்று நம்புகிறேன். 

வேத வியாசர் என்ற தனி நபரால் எழுதப்பட்ட சிவ புராணம், விஷ்ணு புராணம் உட்பட 18 புராணங்கள் எழுதப் பட்டுள்ளது. இந்த புராணங்கள் முழுவதும் கற்பனையாக எழுத முடியாது, அப்படி எழுதினால் அது சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.எனவே இவைகளின் மூலத்தை ஆய்வு செய்தால், திருமந்திரம் உட்பட பல நூல்களுக்கான பொருள்களை திரித்து எழுதியதாக உள்ளது. 

திருமந்திரத்தை வாசித்து புரிந்துகொள்வதாக இருந்தால், புராணங்களை கொண்டுபுரிந்து கொள்ள முயல்வதை விடுத்து, உலகில் உள்ள நான்மறைகளில் உள்ள பொருளோடு இணைத்து இதை வாசித்தால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். இது எனது வழிமுறை அல்ல, மாறாக தொல்காப்பியம் கூறும் முதல்நூல் வழிநூல் வழிமுறை, திருமந்திரம் கூறும் குரு பாரம்பரியம் கூறும் வழிமுறை.

உதாரணமாக, திருமந்திரத்தின் அனைத்து பாடல்களையும் திருமூலரின் கோணத்திலேயே வாசித்தல் கூடாது. சிலபாடல்களை சிவனின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும், சில நேரங்களில் நந்தியின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும். ஏனென்றால் திருமந்திரம் என்பது சிவன் நந்திக்கு உபதேசித்து, நந்தி திருமூலருக்கு உபதேசித்து, திருமூலர் மக்களுக்கு உபதேசித்தது. இந்த அமைப்பில் தான் உலக வேதங்கள் அனைத்தும் அமைந்து உள்ளது. 

தெய்வம்: அரி, சிவன், கர்த்தர், அல்லாஹ்
வானவர்: நந்தி, கேபிரியேல், ஜிபிரியேல்
நாதர்: திருமூலர், இயேசு, மோசஸ், முகமது

சிவனும் அல்லாஹ்வும் ஒருவனா? முரனென்று கருத வேண்டியதில்லை.

காரணங்கள்:

1)  தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170) : "என் நாட்டவர்க்கும் இறைவன்" என்பதில் அரபு தேசம் விடுபடுவதில்லை.

2) மட்டுமல்லாமல், மேலே பட்டியலிட்ட பண்புகளோடு உள்ள ஒருவனைத்தான் அரேபியர்கள் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். (இன்று அறியப்படும் உருவமும் லிங்க குறியிடும் சிவனை குறிப்பவைகள் அல்ல என்று மேலே நிறுவப்பட்டுள்ளது)

உருவ வணக்கம்

உருவ வணக்கம் என்பது

  • கையால் செய்யப் பட்ட கற்சிலைகள்
  • பொன்னால், வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்கள்,
  • வரையப்பட்ட உருவங்கள்
ஆகியவைகளை வணங்குவது ஆகும். இவைகள் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, இரண்டும் கலந்தோ இருக்கலாம்.
 

இந்து மதம்


‘ஜீவனுள்ள தேவனை மறுத்து, கைகளினால் செய்யப்பட்ட, கண்களினால் காணத்தக்கதான உருவங்களை வணங்குபவர்கள் பயங்கரமான நரகத்திற்கு செல்வார்கள்’ (யஜூர்வேதம் 40:8,9)

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. - (கீதை 7:25)     

தமிழர் சமயம் 


சிவ வாக்கியர் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

(சிவவாக்கியர் யார், எவ்விடத்தை சார்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் விட்டு சென்ற பாடல்கள் பெயரால் சிவவாக்கியர் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது. தென்னாகத்தை சேர்ந்த சைவத் துறவிகளாகக் கருதப்படும் சித்தர்களுள் ஒருவராக கொள்ளப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம் தெரியவில்லை.)  
 

குதம்பைச் சித்தர் 


கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும் 

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார். 

அகஸ்தியர் ஞானம் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

 என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.

(அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று ஆய்வுகள் சொல்லுகிறது, இதில் சில ஆரியர்களும் அடங்குவர்)

குறள் 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (குறள் 7.)

பொழிப்பு: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

ஔவையாரின் ஞானக்குறள்

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. - (154)

உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். - (153) 
 
 
திருமந்திரம் 
 
"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே  (திருமந்திரம் 2614)

மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

கிறிஸ்தவம் & யூத மதம் 


 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். (அப்போஸ்தலர் 15:20)

எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. (அப்போஸ்தலர் 15:28)

 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். (அப்போஸ்தலர் 21:25)

 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (I கொரிந்தியர் 8:4)

 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7)

 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். (I கொரிந்தியர் 10:7)

 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (I கொரிந்தியர் 10:14)

 இப்படியிருக்க, விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? (I கொரிந்தியர் 10:19)

 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. (I கொரிந்தியர் 10:28)

நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. (I கொரிந்தியர் 12:2)

 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (II கொரிந்தியர் 6:16)

19. பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, 20  சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21  மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும் - (கலாத்தியர் 5 அதிகாரம் 19-21)

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். (I பேதுரு 4:3)

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். (I யோவான் 5:21)

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. (வெளி 2:14

 வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். (வெளி 2:20

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டா தவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; (வெளி 9:20)

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். (வெளி 22:15)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கை வேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது. அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். - (சங்கீதம்115:4-8; 135:15-18)

விக்கிரங்களை உருவாக்குகிற யாவரும் வீணர். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது: அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குதாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள் - (ஏசாயா44:9-19)

விக்கிரகங்கள் நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்றவைகள்.அவைகளுக்குப்பயப்பட வேண்டாம். - (எரேமியா 10:3-5)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் - (1கொரிந்தியர். 6:9,10)

யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14]

 தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுது கொள்கிறவர்கள் அறிவில்லாதவர்கள். - (ஏசாயா 45:20)

இஸ்லாம் 


அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று (அல்குர்ஆன் 7:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்(அல்குர்ஆன் 5-90)

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17)

முடிவுரை 

விக்கிரகங்களை வணங்குவதை வெறுக்காத ஒரே ஒரு மறை நூல் கிடையாது. பின்னூட்டத்தில் மேலும் பல நூறு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.