இறைவனின் வரையறைகள் ? : திருமந்திரம் & திருக்குர்ஆன்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே
– திருமந்திரம் கடவுள் வாழ்த்து

விளக்கம் :

ஒன்றவன் தானே – தானே ஒரே ஒருவனாய் உருவானவன் : ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதான். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் சிலையும் படமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல.

இரண்டவன் இன்னருள் – நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

நின்றனன் மூன்றினுள் – நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாட,ு இறைவன் ஏற்பாடு அல்ல.

நான்கு உணர்ந்தான் – அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் எது சரி எது பிழை என உணர்ந்தவன் மனிதனுக்கு உணர்த்துபவன்.

ஐந்து வென்றனன் – பிறப்பு, பசி, காமம், தூக்கம், இறப்பு என ஐந்தின் பிடியில் இல்லாதவன்.

ஆறு விரிந்தனன் – மந்திரம்:மறை, பதம்:உணவு, வன்னம்:எழுத்து, புவனம்:உலகம், தத்துவம்:உண்மை, கலை:மொழி என்னும் ஆறாக விரிந்தனன்.

எழு உம்பர் சென்றனன் – பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

இருந்தான் உணர்ந்து எட்டே – தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

1. ஆதிபகவன் - ஆதியானவன்.
2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன்
3. இறைவன் அந்தரங்கமானவன் - மலர்(அகம்)மிசை ஏகினான்
4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன்
6. இறைவன் ஐம்பொறிகளால் கட்டுபடாதவன் - பொறிவாயில் ஐந்தவித்தான்
7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான்
8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன்

இறைவனது எட்டு குணங்களை குறளிலிருந்து விளக்கியதன் காரணம்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர்
- ஓளவையார், நல்வழி பா.40

இஸ்லாம் :

ஒன்றவன் தானே : அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (அல்குர்ஆன் 112:1&3)

இரண்டவன் இன்னருள் : அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)

நின்றனன் மூன்றினுள் : நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (அல்குர்ஆன் 5:73)

நான்கு உணர்ந்தான் : அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றில் நேர்வழி செலுத்துபவன் - திருக்குர்ஆன் 28:56

ஐந்து வென்றனன் : தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)

ஆறு விரிந்தனன் : ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)

எழு உம்பர் சென்றனன் : ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

இருந்தான் உணர்ந்து எட்டே : தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).

முடிவுரை :
ஒன்றே குலம் ஒருவனே தேவன், அவன் இறுதி தூதரையும் வேதமாகிய திருக்குர்ஆனையும் பின்பற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடைமை.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html
http://araneriislam.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm

சிவவாக்கியருடன் சில நிமிடங்கள்..!

 

ஐயா சித்தரே, சாமி, சிலை, வழிபாட்டு தளங்கள் பெயரால் சண்டை சச்சரவு நாளுக்கு நாள் அதிகமாக பெருகி கொண்டே போகிறதே.. பூ போன்ற காணிக்கைகளை செய்து மந்திரங்கள் சொல்லி தெய்வத்தை குளிர செய்தால் நிலைமை சீரடையுமா?

சிவவாக்கியர் :
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - 494

ஐயா, லிங்கம், சிவன் சிலை போன்றவைகள் ஈசன் இல்லையா? வெறும் கல்லா? அப்போ ஈசன் யாருங்க? எத்தன இறைவன் தான் இருக்குங்க ஐயா?

சிவவாக்கியர் : 
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே? - 22

உம்பர்(சொர்க்கம்) வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. - 308

ஐயா சித்தரே தெய்வம் ஒன்றுதான், அவன் ஏழாம் சொர்க்கத்தில் உள்ளான் என்கிற உண்மை ஆச்சரியமாக உள்ளது. எனவே இங்கு உள்ள சிலைகள், மிருகங்கள், படங்கள் எல்லாம் வழிபட தகுதி அற்றவைகள் என தங்கள் வாயிலாக அறிகிறேன்..

சாதி சண்டை தீர வழி சொல்லுங்க..!

சிவவாக்கியர் : 
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே. - 39

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?  - 46

சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. -  44

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. - 45

சாதியே இல்லையா? அப்போ தாழ்ந்த சாதியில் பிறந்வர்கள் மீண்டும் பிறப்பெடுத்து பிராமணர்களானால் தான் பிறப்பு முடியும் என்கிறார்களே..! 

சிவவாக்கியர் : 
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

செத்தவன் பிறப்பதே இல்லையா? அப்போ முன்பிறவி, அடுத்தபிறவி, ஏழுபிறவி--னுல்லாம் சொல்லி குறி, சோதிடம் சொல்லுவதெல்லாம் பொய்யா? பேய் பிசாசு பற்றி ? 

சிவவாக்கியர் :
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. - 252

ஐயா சித்தரே உங்கள் கொள்கை விளக்கப்படி ஒருவன் இந்துவாக இருத்தல் இயலாது. உங்கள் கொள்கைகளை ஆப்படியே அச்சு பிசகாமல் சொல்வதோடு அதை அப்படியே பின்பற்றச் செய்யும் இஸ்லாம் தான் ஒரே வழி..! 

குறிப்பு  : மற்ற வேதங்களை போலவே  சிவவாகியர் பாடல்களிலும் இதற்கு முரணான கருத்துக்கள்  திணிக்க பட்டும் இருக்கிறது.. ஒரே நபர் இருவேறு முரண்பட்ட கருத்துகளை ஒரே நூலில் சொல்ல இயலாது என்பது எதார்த்தம். எனவே கருத்து  முரண்  இல்லாத  வேதமான திருக்குர்ஆனே  பின்பற்ற தகுதியானது. சகோதரர்கள் இறைவனை மத ரீதியாக அணுகுவதை விடுத்தது கொள்கை ரீதியாக அதாவது இறைவனுக்கான வரையறை மற்றும் இலக்கண அடிப்படையிலும் வேதாந்த அடிப்படையில் அணுகுவதே உண்மை அறிய உதவும்.

உடலினை உறுதி செய்

இஸ்லாம்



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)

ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)

பலகீனமாக இருப்பதை பற்றி நபி ஸல் அவர்கள் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.” அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?”
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.” அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?” அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.”வெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்து விதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.

 

தமிழர் சமயம் 


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (திருமந்திர பாடல் 724)
 
பொழிப்புரை : உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன். 

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (திமந்திர பாடல் 725)

பொழிப்புரை : முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர்.

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்...

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உணவு குறைய உயிர் குன்றும் 

இறைஇறை யின்சந்தித்து என்பொடு ஊன்சார்த்தி
 முறையின் நரம்புஎங்கும் யாத்து - நிறைய
 அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
 புகாச்சுருக்கில் பூட்டா விடும். - (அறநெறிச்சாரம் பாடல் - 112)

பொழிப்புரை: உறுப்புகளில் மூட்டு வாயை ஒன்றுடன் ஒன்று பொருத்தி எலும்புடனே தசையைச் சேர்த்து முறையே உடம்பில் நரம்பால் எல்லா இடங்களையும் உறுதியாய்க் கட்டி மிகுதியாக ஆசையை நிரப்பிய உடல் என்ற வண்டியை ஏறிச் செலுத்தும் உயிர் என்னும் பாகன் உணவைக் குறைத்தால் செலுத்துவதை விட்டுவிடுவான்.

தமிழர் சமுதாயம் சாதி இல்லா சமுதாயம்

சாதிக்கு எதிராக தமிழர் மறைகள் 


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி.  (நல்வழி)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே – (திருமந்திரம் 2104)

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.(குறள். 972) 

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது. சாதி இல்லை எண்டு கூறும் குறளை சாதிக்கு ஆதரவாக மாற்றுவது அறியாமை அல்லது நயவஞ்சகம்.

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை” – (புறநானூறு 335)

குறிப்பு: ஒரு சிலர் இத்தனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒருக்குறியீடு.. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் தீண்டாமைக்கு இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை..

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்" (கபிலர் அகவல்)

 

தொல்பொருள் ஆய்வு  


தென்இந்தியாவிற்கு தோல்பொருள் ஆய்வு பிரிவு 2001-இல் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.. அதிலும் தென்இந்தியாவிற்கு என பொதுவான பிரிவு, தமிழரின் தொன்மையை ஆய்வு செய்ய பிரிவு ஏதும் தனியே இதுவரை அமைக்கப்படவில்லை.
வரலாறு என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு நெறி நூல்கள் மற்றும் இலக்கிய நூல்களில் உள்ள தகவல்களை கொண்டே ஒரு முழு ஆய்வு முடிவை தரமுடியும். இல்லையெனில் கொடுக்கப்படும் ஆய்வு முடிவு பொருளற்றதாக நிறைவுபெறாததாக மட்டுமே கருத முடியும்.

கிமு 600 காலத்தவை என அறியப்பட்ட கீழடி ஆய்வு முடிவுகள் 
    1. சாதிக்கு ஒரு இடுகாடு இருந்து இருக்கவில்லை எனவே சாதி என்ற ஒன்று  நயவஞ்சகர்கள் ஏற்படுத்திய கொடுஞ்செயல்.
    2. மண்ணறையை குறிக்க கற்களை பயன் படுத்தி உள்ளனர். அதனை பூசவோ உயர்த்தி கட்டவோ கல்லறையாக கட்டவோ சுடுகாடோ அமைக்க வில்லை.
தமிழினம் இந்து இல்லை என்பதற்கு சான்றுகள் இன்னும் பல.. சாதி நம்மை பிரித்தாள செய்யப்பட்ட சதி. அறிவுள்ள தமிழன் சாதிச் சதியில் விழமாட்டான். அனைத்து மொழி வேதங்களிலும் இறைவன் பெருமையை வெறுப்பதாக சொல்கிறான். பெருமையின் மாற்று சொல்லான சாதி-யை நம்புபவன் எப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவனாவான்.  

எனவே இது போன்ற வரலாற்று உண்மைகளை நமது பண்பாடுகளை அறிய தோல் பொருள் ஆய்வு மிக மிக அவசியமான ஒன்று. அதற்க்கு வழிவிடாத மத்திய அரசோ அல்லது தமிழிசையோ துரோகிகள் என்பதில் மாற்றுக கருத்து இல்லை.  

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

இங்கே 10000 வருடம் என்பது மிகை படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பது நம் கருத்து. தொல்லியல் துறையின் மூலம் நிரூபிக்கபட்டால் எற்கலாம். ஆனால் பழமையானது என்பதில் மாற்று கருத்து இல்லை. 


 
பத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு!! 
 
சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில்டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். ஒருமுறை கடலுக்கு அடியில் சென்ற பொழுது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு அரவிந்த் வால்என்று பெயரிட்டேன்என்றார்.

 

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார். 
 
தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். 
 
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம். 
 
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்என்றார். 
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் மதிலொடு பெயரியப் பட்டினம்என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது. 
 
மதில் என்னும் சொல்லுக்கு எயில்என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை சோபட்மாஎன்று குறிப்பிட்டுள்ளனர். சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது. 
 
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மரிக்கனாஎன்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்....

மேலும் தொடர.. 

 

முடிவுரை


எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு செய்யும் துரோகம். இங்கே தமிழையும் நாம் அழுத்தி சொல்லவில்லை மாறாக மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம்கொள்கைப் பிரிவிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.

மரபு திரிதல் முற்றும் திரிதல்..!


"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன்னூல்-சொல்-388)

என்று நன்னூலார் இலக்கணம் வகுக்கிறார்.

மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும்.

"மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்" (தொல்-சொல்-646)

என்கிறார் தொல்காப்பியர்

"மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப் பட்ட சொல்லி னான" (தொல்-பொருள்-645)

மரபு மாறாமல் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும். தொல்காப்பியர் மரபின் இன்றியமையாமையை உணர்த்துகிறார். ஆனால், இன்று மரபு மாறி செய்யுள் இயற்றப்படுகின்றன.

"வழக்கெனப் படுவ துயர்தோர் மேற்றே" (தொல்-பொருள்-647)

வழக்கு என்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே. உயர்ந்தோர் ஒழுகலாறுகள் தான் வழக்காக் கருதப்பட்டன. ஆனால், இன்று தற்போது எளியோருடைய ஒழுகலாரும் இலக்கிய வழக்காக ஆட்சி பெற்றுள்ளது.

மரபு திரிபு நோயா இல்லை ஆரோக்கியமா?

உண்மையில் நோயே.! உயர்ந்தோர் வடித்து வைத்த நெறி நூல்களின் வார்த்தை திரிபால் வாழ்க்கை திரிந்து நிற்கிறது..! பழந்தமிழ் நூல்களில் பெரும்பான்மை சைவ வைணவ சமய சித்தாந்தங்கள் இலகுவாய் பொழிப்புரை என்ற பெயரிலும் இடைசொருகல் பாடல் வடிவிலும் திணிக்க பட்டுள்ளது..! நல்லது எதுவாக இருந்தால் எற்ப்பதில் என்ன பிழை என்று சிந்தித்தால், நன்மையான ஒன்றை இப்படி கள்ளத்தனமாக திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழன் கொள்கை வீரியமற்று போனதன் காரணம் இந்த திட்டமிட்ட மரபு திரிபு..! வென்ற அவர்கள் யுத்த முறை வாளும் எழுத்தும், ஆனால் இறுதியில் வாய்மையே வெல்லும்..!

சான்று :
http://www.muthukamalam.com/essay/literature/p92.html
http://www.muthukamalam.com/essay/literature/main.html

மரபு திரிபின் விளைவு :

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு... X ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... X படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்... X இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை) ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... X சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்.... X அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம்... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

சான்று :
http://thamil.co.uk/?p=6457
http://cowboymathu.blogspot.in/
http://tamilvizhumiyangal.blogspot.in/2014/09/blog-post_5.html
http://davidmeansbeloved.blogspot.in/2013/08/blog-post_4131.html
http://noolaham.net/project/42/4153/4153.pdf
http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/pazhamozhinaanooru.html
http://www.edubilla.com/tamil/pazhamozhigal/
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/77833/8/08_chapter1.pdf
http://www.thamizhagam.net/projectmadurai/pdf/pm0219.pdf
http://www.riyadhtamilsangam.com/EK/arinthathu_1.htm
https://rajanscorner.wordpress.com/2011/06/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4/
http://www.yarl.com/forum3/topic/127414-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
https://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14404.html
http://www.tamilpriyan.com/tamil-proverbs-part-4/
http://sgnanasambandan.blogspot.in/2012/01/blog-post_10.html