நான்மறை

"நான்மறை" நாம் அறியாத சொல் அல்ல. அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆத்திகம் பற்றிய உரையாடல்களில் நாம் செவியுறும் வார்த்தை தான். உதாரணமாக,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 
தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், 
திரு நான்மறை முடிவும் -மேலான நான்கு மறை நூல்களின் கருத்தும்
மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழும், 
முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, 
கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், 
திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், 
ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. (இது இவைகளெல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்கிற பொருளையும் தரும்)

ஆனால் பொதுவாக "நான்மறை" என்பது என்னவாகவெல்லாம் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்.

1) தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர்.

2) நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

3) நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! : ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது.

4) தமிழர்களின் நான்மறை வேதம் திருக்குறள்: திருக்குறளை திருவள்ளுவர் பத்து பத்து பாடல்களை அதிகாரமாக பிரித்தாரே தவிர அதனை மூன்று பாலாக திருவள்ளுவர் பிரிக்கவில்லை. 133 அதிகாரங்களை மூன்று பாலாக பிரிக்காமல், நான்கு பாலாக மாற்றி அம்மைத்தல் வேண்டும். அதாவது அறம், பொருள், இன்பம், என்ற தலைப்பின் கீழ் வரையறுத்து இருப்பதை. மீள்வரையறை செய்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு பாலில் வடிவமைக்க வேண்டும். அதுவே தமிழர்களின் நான்மறை வேத வடிவின் ஒத்ததாக இருக்கும்.


5) நான்மறை படைத்தது தமிழரே! : உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.

இன்னும் வேறு சில கருத்துக்கள் கூட இருக்கலாம். மேலே குறிப்பிட குறிப்புகளில்  சில உண்மை இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவில் உண்மை இல்லை எனபது திண்ணம். ஏனென்றால் அவர்களின் முடிவானது ஒரு பகுதி தகவல்களையும், யூகங்களையும் கொண்டு அமைந்துள்ளது. அவைகள் உண்மை அல்ல என்பதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.

நான்மறை என்பது ஆரிய வேதங்கள் அல்ல. ஏன்?

  • அதர்வணம் பிற்கலத்தில் வேதங்களில் இணைக்கப் பட்டது.
  • ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்றுகுறிப்பிட்டது ஆரிய வேதங்களை அல்ல என்கிற தகவலும், 
  • மற்ற மூன்று வேதங்களின் மதத்திற்கு மாறாக, அதர்வவேதம் வேறு ஒரு 'பிரபலமான மதத்தை' பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படுகிற தகவலும்,  
  • அதர்வ வேதா என்ற பெயர், "அதர்வாணர்களின் வேதம்" என்பதற்காகவே என்று லாரி பாட்டன் கூறுகிற தகவலும்,
  •  அதன் சொந்த வசனம் 10.7.20-ன் படி, நூலின் மிகப் பழமையான பெயர், வேத அறிஞர்களான "அதர்வன்" மற்றும் "ஆங்கிரஸ்" ஆகியவற்றின் கலவையான அதர்வங்கிரசாகும் என்கிற தகவலும், 
  • ஆரம்பகால பௌத்த நிகாயா நூல்கள், அதர்வவேதத்தை நான்காவது வேதமாக அங்கீகரிக்கவில்லை, மேலும் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • பண்டைய சம்ஸ்கிருத பாரம்பரியம் ஆரம்பத்தில் மூன்று வேதங்களை மட்டுமே அங்கீகரித்தது என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், தைத்திரிய பிராமணத்தின் 3.12.9.1 வசனம், ஐதரேய பிராமணத்தின் 5.32-33 வசனம் மற்றும் பிற வேத கால நூல்கள் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், சாமவேதம் அல்லது யஜுர்வேதத்தை கடைபிடிக்கும் ஆசாரியர்களுடன் ஒப்பிடுகையில், அதர்வவேதத்தை கடைப்பிடிக்கும் புரோகிதர்கள் பிராமணர்களின் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்பட்டனர். ஒடிசாவில் அதர்வவேத குருமார்களுக்கு எதிரான களங்கம் நவீன காலம் வரை தொடர்கிறது என்கிற தகவலும் 

நான்மறை என்பதை நிச்சயம் சம்ஸ்கிருத வேதங்களை குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நான்மறை என்பது தமிழர் மறைகள் மட்டுமோ, அல்லது திருக்குறள் மட்டுமோ அல்ல. ஏனென்றால் மற்றவர்களை போலல்லாமல் மறைநூல்கள் என்றால் என்ன? என்கிற வரையறையும், நான்மறை என்றால் என்ன? என்கிற வரையறையும் நமது மறைநூல்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பகுதி தகவல்களையும், யூகங்களையும் விட சில ஆதாரப்பூர்வமான தரவுகள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும். 

நான்மறை என்பது உண்மையில் எதை குறிக்கிறது?

நான் மறை என்பதை அறியும் முன்னர், மறைநூலின் வரையறையினை அறிதல் அடுத்த அடி எடுத்து வைப்பதில் நமக்கு தெளிவை தரும். அதை அறியாதவர்கள் இக்கட்டுரையை வாசித்தல் நலம். 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், 
    1. நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல 
    2. அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் 
    3. அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நதிகள் உள்ளனர்.
    4. (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
    5. மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர் 
    6. நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு)
    1. மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
    2. வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள் 
    3. தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
    4. கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)

மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் ரூட் சாட்-இல் ஏகபோக பிழைகள் உள்ளது. ஏனென்றால்  
  • எந்தெந்த மொழி எவைகளிலிருந்து பிறந்தது, 
  • எவை எவையோடு புணர்ந்தது, 
  • எது எதன் இலக்கணத்தை எது கடன் வாங்கியது, 
  • எது எதன் எழுத்தை கடன் வாங்கியது 
என்கிற அடிப்படையில் இந்த சாட் வடிவமைக்கப் படவில்லை. மேலும் இந்த தகவல்கள் இன்னும் முழுமையாக கண்டறியப் படவில்லை, கண்டறியப்பட்ட சில செய்திகள் காழ்ப்புணர்வின் காரணாமாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான ரஷ்ய, அமெரிக்க மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுப் படி தமிழ் மூத்த மொழி என்று கருதப் படுகிறது. ஆனால் இந்த சாட் அதை பறைசாற்றவில்லை என்பதை நம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிகளை, மதங்களை வகைப்படுத்தும் முறைமை உலக நடைமுறையில் வேறொன்றாக இருந்தாலும் இறைவனின் முறைமை இதுவாக உள்ளது. நான்மறை என்பது உலகம் முழுமைக்கானது என்றால் உலகம் முழுதும் உள்ள மறைநூல்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது அறமல்ல. உலகில் உள்ள அனைத்து சமய, மொழி, நில, இன மக்களின் வேதங்களும் சேர்ந்ததுதான் நான்மறையே தவிர, சம்ஸ்கிருத மறைகள் மட்டுமோ அல்லது தமிழர் நூல்கள் மட்டுமோ நான்மறை அல்ல.

நான்மறைக்கும் ஒரே இறைவன்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. - (தேவாரம் 3320)

பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி மறைநூல்களை ஓதுபவர்களை நன்னெறிக்கு ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும், அனைவருக்கும் ஆசிரியனானவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும். 
 
குறிப்பு: நான்மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறை நூல்களையும் இது குறிக்கும்.

நாலுவேத ஞானமும் ஒன்றே  

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவுஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்: நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய இறைவன் படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)
 
"யாது ஊரே யாவரும் கேளீர்" என்கிற வரிகள் மொழிப் பெருமைக்கானது அல்ல. அதை நிதர்சனமாக ஏற்று நம்மை மொழியுடன் சுருக்கிக் கொள்ளாமல் இருப்பது அறிவுடைமை. 

எனவே நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும். 
அவைகள் அனைத்தும் ஒரே இறைவனால் வழங்கபப்ட்டது. 
அவைகள் பேசும் அறம் ஒன்றே. 
அவைகளுக்குள் ஒரு தொடர்பு உண்டு, அதை ஆய்ந்து, அறிந்து, கற்று, ஏற்று, வழிப்படுவது நம் கடமை. 


 

15 கருத்துகள்:

  1. 3320. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே. 1
    1. பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
    பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
    கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
    விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
    திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

    கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் -
    சொல்லுதல். இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது

    https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=412

    பதிலளிநீக்கு
  2. மாயோன் மேய காடு உறை உலகமும்
    சேயோன் மேய மை வரை உலகமும்
    வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
    வருணன் மேய பெரு மணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - தொல்காப்பியம் 5

    தொல்காப்பியம் கூறும் இந்த முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் ஆகிய நான் வகை நிலமும், மாயோன், சேயோன், வருணன் மற்றும் வேந்தன் ஆகிய நான்கு பெயர்களும்

    திருமந்திரம் கூறும்
    "நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
    நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு"
    என்பதோடு ஒரு தொடர்ப்பு இருப்பது போல தெரிகிறது.

    தொல்காப்பியம் கூறும் ஆழ்வாரும், திருமந்திரம் கூறும் நால்வரும் வழிநடத்த வந்தவர்கள்.

    நான்கு நந்திகள் : நான்கு தேவ தூதர்கள்
    சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் : மாயோன், சேயோன், வருணன், வேந்தன்
    நாதன் (ஆசிரியன்) : மேய (மேய்க்கிற, வழிநடத்துகிற )
    நால் திசை : முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (அன்று திசைகளின் நிலை இதுவாக இருந்து இருக்கலாம்)

    பெயர்கள் மாறுவதில் ஆச்சரியம் இல்லை, முன்னுள்ள பெயர்களின் கருத்து மருவும் பொழுது அப்பொருள் குறிக்காது வேறு பெயரோடு குறிப்பிடப்படுவது இறைவனுக்கும் பொருந்தும்.

    முதலில் தெய்வம் என்று தொல்காப்பியத்தில் அறியப்பட்டது பிற்கலத்தில் சிவம் என்று அறியப்பட்டது.

    elloh என்று ஆரம்பத்தில் அறியப்பட்டது இறுதியில் அல்லாஹ் என்று அறிய படுகிறது.

    பதிலளிநீக்கு
  3. இது நான்கு தெய்வங்களை குறிக்க வாய்ப்பில்லை - அது தமிழரின் உலகின் அனைத்து மறைநூலும் எதிரானது. https://araneriislam.blogspot.com/2017/06/11-14.html

    பதிலளிநீக்கு
  4. மறைகள் நான்கு என்று அங்காணே பார்த்தோம் ஆனால் கலித்தொகையில் முதல் வர,

    "ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து"
    என்று வருகிறது.

    இது நால்வகையை குறிக்கவில்லை மாறாக ஒரு வகையில் உள்ள பல வழிநூல்களையும் அதன் முதல் நூலையும் குறிக்கிறது.
    http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kalithokai/kalithokai_1.html

    பதிலளிநீக்கு
  5. ஆதியில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள் என்று பைபிள் கூறுகிறது, தமிழ்தான் மூத்தமொழி என்று சான்றுகள் பல வெளிவந்து கொண்டிருக்கிறது. அத அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரே மொழி பேசிய பொழுது திணையின் அடிப்படையிலும், மொழிகள் கிளைக்க துவங்கிய பிறகு மொழியின் அடிப்படையிலும் தேவதூதர்கள் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய கருத்து இது

    பதிலளிநீக்கு
  6. அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
    பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
    மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
    இறை புரிந்து வாழ்தல் இயல்பு. - ஏலாதி கடவுள் வாழ்த்து

    பொருள்: ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள் ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின், பாதம் சேவகம் செய்யும் நான்கு நந்திகளும், முறையாக வழங்கி பெறப்படும் நான்மறைகளை விரும்பி வழிபடுவானேயானால் மண்ணுலகினின்றும் நீங்கி தேவர்களுக்கு தலைமைபூண்டு இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்

    (இ-ள்.) அறுநால்வர் - ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள்
    ஆய்புகழ் - ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,
    சேவடி - பாதம் சேவகம் செய்யும்
    ஆற்றப்பெறு நால்வர் - நான்கு நந்திகளும்,
    பேணிவழங்கி - முறையாக வழங்கி,
    பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை,
    புரிந்து - விரும்பி,
    வாழுமேல் - வழிபடுவானேயானால்,
    மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி,
    விண்ணோர்க்கு -தேவர்களுக்கு,
    இறை புரிந்து - தலைமைபூண்டு,
    வாழ்தல்இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.
    குறிப்பு: நால்நந்திகள் தரும் நான்மறைகளை வழிபடும் (பின்பற்றும்) ஒருவன் வானுலகத்துக்கு தலைவனான இயல்பு. எனவே ஏலாதியும் இயற்க்கை வழிபாட்டை கூறவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஏலாதி

    நூல்

    சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
    நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
    அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
    வழிவந்தார்கண்ணே வனப்பு. 1

    நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,

    பதிலளிநீக்கு
  8. ஏலாதி 75 Elati 75
    அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே ஆசாரியனது அமைவு. 75

    அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
    மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
    மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
    ஆசா ரியன தமைவு. 75

    ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
    அவற்றின் உணர்வுகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
    அவற்றில் வரும் குற்றங்களை நீக்க வேண்டும்.
    தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்க வேண்டும்.
    குற்றங்களை நீக்கும்போது ஒழுக்க நெறியில் மேம்பட்ட பெரியவனாக விளங்க வேண்டும்.
    தம் கருத்துக்கு மறுதலைச் சொல் இருக்குமானால் மாற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

    இது ஆசாரியன் நடந்துகொள்ள வேண்டிய அமைதி இலக்கணம் ஆகும்.
    அறு சமயம் : - உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம்.

    பதிலளிநீக்கு
  9. அருங்கலச்செப்பு

    எட்டு மதங்கள்

    பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
    சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34

    மதத்தின் விளைவு

    இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
    இகழ்க்கில் இறக்கும் அறம். 35

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  10. இந்து புராணங்கள் 18யும் எழுதியவர் ஒரே ஒரு நபர் - வியாசர். எனவே அது உண்மையாக நடந்த வரலாறு அல்ல.
    அவர் எழுதிய சிவபுராணம் நமது திருமந்திர பாடல்களை மூலமாக வைத்து பொருள் புரியாமல் அல்லது வேண்டுமென்றே பொருள் திரித்து எழுதப்பட்டது.
    சத்தி, ஆலகால கண்டன் போன்ற வார்த்தைகள் திருமந்திரத்தில் தான் உண்டு. அதன் உண்மை பொருளும் அவர் பயன்படுத்தும் பொருளும் நேர் முரண்.
    "அறியும் சிவனும் ஒன்னு" என்பதை புரிவதில் உள்ள சிக்கல் இந்த புராணங்களால் ஏற்பட்டது. உதாரணமாக, "கருணாநிதியும் கலைஞரும் ஒன்னு" என்றால் ஒரு உடலுக்கு இரு பெயர்கள் என்று புரிகிறமாதிரி நாம் "அறியும் சிவனும் ஒன்னு" என்பதை புரிந்து கொள்வதில்லை. மாறாக "நீயும் நானும் ஒன்னு" என்று பண்பை குறிப்பிட்டு உவமையாக சொல்வதை போல புரிகிரோம். ஏனென்றால் அறி என்பதன் இலக்கணமும் சிவன் என்பதன் விளக்கமும் வெவ்வேறாக நமது சிந்தைகளில் படிய இந்த புராணங்கள் மிக முக்கிய காரணம். மேலும் சிவ மரபு தமிழுக்கு சொந்தமானது எனவேதான் சிவ ஆகமங்கள் தமிழிலும் விஷ்ணு ஆகமங்கள் வேறு மொழியிலும் உள்ளது. ஒரே இறைவனை பேசும் இருவேறு மொழிகளின் நூல்களை ஒன்றிணைக்க முயன்றதன் விளைவு இந்த புராணங்கள், இந்த புராணங்களின் விளைவு ஒரே இறைவனை மூன்று பாத்திரங்களாக ஆக்கி ஒருவருக்கொருவர் உருவினர்களாக்கி இப்படி நான்மறைகள் கூறும் ஒரே தெய்வ கோட்பாட்டை உடைத்து இந்த 18 புராணங்கள்.
    தமிழர் வேதமான தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், சித்தர்கள் பாடல்களும் புராணங்கள் உதவி இல்லாமல் புரிந்து கொள்ள முயற்சி செய்யப் படும்பொழுது, ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள உண்மை பொருளை கொண்டு பாடல்களுக்கு உரை எழுத முயலும் பொழுது, உலகிலுள்ள நான்மறைகளோடு அது ஒத்துப் போகும் என்பதில் மாற்றுக் கருத்து எதுமில்லை.

    பதிலளிநீக்கு
  11. 1 கொரிந்தியர் 12:28

    28 தேவன் சபையில் சிலரை அமைத்தார்: முதலில் அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாவது போதகர்கள், பிறகு அற்புதம் செய்பவர்கள், பிறகு குணமளிக்கும் பரிசுகள், உதவிகள், அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு வகையான மொழிகள்.
    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%205%3A12&version=ERV-TA

    பதிலளிநீக்கு

  12. மூல னுரைசெய்த மூவா யிரந்தமிழ்
    மூல னுரைசெய்த முந்நூறு மந்திரம்
    மூல னுரைசெய்த முப்ப துபதேசம்
    மூல னுரைசெய்த மூன்றும் ஒன்றாமே.
    -திருமந்திரம் 3046-

    ஆசான் திருமூலர் அருளிச்செய்த மூவாயிரந் தமிழ்பாடல்களும், முந்நூறு மந்திரப்பாடல்களும், முப்பது உபதேசப்பாடல்களும் ஆகிய மூன்று வகைப்பாடல்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாம

    பதிலளிநீக்கு
  13. நால்வர் வாக்குத் தேவர் வாக்கு. - பழமொழி

    பதிலளிநீக்கு
  14. நால்வர் கூடினால் தேவர் சபை.

    (தேவர் வாக்கு.)

    பதிலளிநீக்கு
  15. உலகில் உள்ள எல்லோருக்கும் வேதம் வழங்கப் பட்டதை கூறும் சமயம் இஸ்லாம் மற்றும் சைவம் மட்டுமே.. நான்மறை என்று திருமந்திரம் கூறுவதும், உலகில் உள்ள அனைவருக்கும் வேதம் வழங்கப் பட்டதை குர்ஆன் கூறுவதையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு