சித்தர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா?

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா? ஆம் என்றால் தமிழர்களாகிய நாம் ஏன் அவர்களின் குரான் மற்றும் சுன்னாவைப் பின்பற்றுவதில்லை?

இயேசு வருவதை முன்கூட்டியே எந்த சித்தரும் சொன்னதில்லை.. அது தேவையும் இல்லை. ஏனென்றால் இயேசு யூதர்களுக்கு மட்டும் வந்ததவர்.

அதற்கு இயேசு, "நான் இஸ்ரேலின் காணாமல் போன ஆடுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார். (மத்தேயு 15:24)

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)

ஆனால் முகமது தான் உலகம் முழுமைக்கும் வந்த தூதராக கூறினார்.

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28)

மேலும் அவர் வருவதை முன்னமே உலக வேதங்கள் கூறுவதாக குர்ஆன் கூறுகிறது.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)

உலகில் உள்ள வேதங்களை போல, தமிழர் வேதமும் அவரின் வருகையை பேசுகிறது.

பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்

புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி

அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)

பதவுரை

பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு

ஏதாகிலும் - எது ஆகினாலும்

பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி

புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்

நின்று - நின்று

பூசனை- அன்றாட இறை வணக்கம்

செய்யும் - செய்யக்கூடிய

முகமத் - ஓடு - முகமத் உடன்

ஒத்து - சேர்ந்து, இணங்கி

நின்று - நின்று

ஊழி தோறூழி-ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்

அகமத் - தராகி - அகமத் தராகி

நின்று - நின்று

ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்

ஒழிந்தாரே - நீக்கினார்

விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.

குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.

ஆனால் தமிழர்கள் ஏன் அவரை வாசிப்பதோ பின்பற்றுவதோ இல்லை?

  • ஒரு சமயத்துக்கு வேதம் தான் அடிப்படை என்று அறியாதார் பலர் அதாவது வேதமல்லாமல் ஒரு சமயம் தோன்றவோ நிலைக்கவோ முடியாது என்ற அடிப்படையை அறியாதார் பலர்.
  • தமிழில் வேதம் இருப்பதை அறியாதார் பலர்
  • சமஸ்கிருத வேதத்தை ஏற்றோர் பலர்
  • அறிந்தவர்கள் கூட அதற்கு பார்ப்பனர்களின் பொழிப்புறையை வாசிகின்றனர் அதாவது தமிழ் வேதத்துக்கு சமஸ்கிருத வேதத்தை மட்டுமே வேதம் என்று நம்புவோரின் பொழிப்புரையை அல்லது புராணங்களை நம்புவோரின் பொழிப்புரையை வசிக்கின்றனர். அவர் எப்படி சரியான பொழிப்புரை கொடுப்பார் அல்லது கொடுக்க முடியும்?
  • நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற அறிவு இல்லாமல் சமஸ்கிருத வேதங்களை நால் வேதம் என்று கருதுவோர்.
  • வேற்று மொழியில் உள்ள வேதத்தை அதாவது அரபியில் உள்ள வேதத்தை தனதாக ஏற்க மறுப்பது. அடிப்படையில் அவ்வாறு ஏற்க்க தேவை இல்லை ஆனால் அவரவர் மொழியில் உள்ள வேதத்தில் தான் அடுத்த குருவை அறியும் வழிகாட்டுதல் உண்டு. அதை கற்காததும் ஏற்க்காததும் இந்த நிலையில் தான் மனிதனை விடும். குறிப்பு: இது சமஸ்கிருதத்தில் உள்ள வேதத்துக்கு பொருந்தாது என்பதை நான்மறை தத்துவத்தை திருமந்திரத்தில் வாசித்தால் புரியலாம்.
  • எவ்வித ஆன்மீக அக்கறையும் இல்லாமல் அதாவது சரி பிழை எதையும் பற்றி கவலைப்படாமல் தற்காலிக நன்மை, பொருளாதாரம், பெருமை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செயல்கள் செய்யப்படுகிறது.
  • உதாரணமாக, வேதம் என்பது வாழ்வில் சோதனை ஏற்படும், நன்மை தீமை இரண்டும் மனிதனுக்கு ஏற்படும், எந்த துன்பத்திலும் நன்மையே செய்ய வேண்டும், நிலையாமை வாழ்க்கையின் அடிப்படை, அன்றாட வாழ்வில் இது இது சரி, இதெல்லாம் பிழை என்று வரையறுத்தி கூறுவதுடன் பல எதார்த்தங்களை சத்தியத்தை பேசும் ஆனால் ஜோதிடம் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமா இதை இதை செய்யுங்கள் என்று கூறும். எனவே இறைவன் மனிதனுக்கு கொடுத்த வலிகட்டுதல்களான வேதத்தை விட்டு ஜோதிடத்தை நம்புவது எளிமையாக உள்ளது. இவர்கள் நம்பும் ஜோதிடம் 100இல் ஒரு முறை நடந்தால் கூட, அதைத்தான் நம்புகிறார்கள். அதே போல தமது மொழியில் உள்ள வேதத்தை விட்டு இதிகாச புராணங்களை நம்புகிறார்கள்.
  • தற்காலத்தில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் ஆன்மீகத்தை மக்கள் ஏற்று நடக்கின்றனர். இரண்டும் அடிப்படையிலே முரனானது. எனவே அவர்களது ஆன்மீகம் ஏற்க்கதகுந்தது அல்ல என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கின்றனர்.

சுருக்கமாக மக்கள் உண்மையை புரிந்துகொள்வதை தடுக்க என்னவெல்லாம் வழிகள் உள்ளதோ அத்தனையும் மக்கள்மீது ஒரு யுத்தம் போல தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த உண்மைகளை ஆய்ந்து தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் எழுதும் நம்க்கு வரும் விமர்சனங்களும் வசைச்சொல்லும் ஒன்று இரண்டு அல்ல. ஆனால் இதை ஏற்ப்பதில் யாருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் வாசித்து பெறட்டும்.

எத்தனை இறைவன்?

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - ஞானம் 1:1

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - ஞானம் - 1:4

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

இடைக்காட்டுச் சித்தர்

ஆதியந்தம் இல்லாத அனாதியைத்
தீது அறும்ப வந்த தீப்படு பஞ்சுபோல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துற
ஆதலாகக் கருத்திற் கருதுவாம். - பாடல் 1

கருத்து: தொடக்கம் முடிவு இல்லாமல் இணை துணை இல்லாமல் அனாதையாக இருப்பவனை (இறைவனை) பற்றியே நினைக்க வேண்டும்.

திருமூலர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - திருமந்திரம்

பதவுரை:  ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமந்திரம் 5

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. - திருமந்திரம் 109

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

கருத்து: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவம் உள்ள தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது(தவம் என்பது சிவத்துக்காக செய்யப் பட வேண்டும்); அவ்வாறு செய்ய தலைப்படுபவர்களுக்கு அவம் (கேடு) அல்லாமல் வேறு இல்லை. ஆறு சமயங்களை பின்பற்றுவதும் தவமல்ல(பல சமயங்களை பின்பற்ற கூடாது), எனவே நந்தி தேவர் கூறும் வேதத்தை பின்பற்றி சிவனை வணங்கி வீடு பெருவீராக.

கடுவெளிச் சித்தர்

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (பாடல் 27)

காகபுசுண்டர்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே - (பாடல் 1)

கருத்து: தானாய் உருவாகி அனைத்தையும் படைத்த இறைவனை பணிவோம்.

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (பாடல் 224)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - (சிவவாக்கியம் 225)

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே - (சிவவாக்கியம் 133)

கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. 


முகமது நபி

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை;  பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)  

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

இயேசு

இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கர்த்தர் ஒருவரே - (மாற்கு 12:29)

மோசஸ்

இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)

எசேக்கியா

கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6)

 அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25]

முடிவுரை

சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும், 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும், 
கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும் 
கூறுவதை எப்படி புரிந்து கொள்வது? 
    • வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா? அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா? 
    • வெவ்வேறு மதத்தில் கூறப்பட்ட கடவுளின் வரையறையை ஆய்ந்து அவனுக்கு ஒருவனைத்தான் குறிக்கிறது என்று முடிவு செய்வதா? அல்லது பெயரை கொண்டு அவர்கள் வெவ்வேறுதான் என்று முடிவு செய்வதா? 
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது மதவாதமாக பார்க்கும் சகோதரர்கள், அவரவர் குருமார்களால், சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர். அதை அவர்கள வாசித்தால் அவர்களுக்கு அது நலம் பயக்கும்.

உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதிவேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது. 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளித்து அழிக்கும் ஏக இறைவனைத் தவிர, வணங்கப்படும் மற்ற) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)