போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

போரில் கிடைக்கும் பொருள்

தமிழர் சமயம் 

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள் - 756)

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். — மு. வரதராசன்

இஸ்லாம் 

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். - (குர்ஆன்  8:1)

59:6. மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

59:8. எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.

59:9. இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (குர்ஆன் 59)

"போரில் கிடைத்த பொருள்களைத் திருடியவரைக் காட்டி கொடுக்காது காப்பாற்றுபவரும் திருடியவரைப் போன்றவரே'' என்று பூமான் நபி (ஸல்) புகன்றதைக் கூறுகிறார் ஸமுரதுப்னு ஜீன்துப் (ரலி) நூல் -அபூதாவூத்.

திருடியவர்களின் பொருளை எரித்துவிட்டு தண்டனை வழங்கி திருடியவருக்குப் போரில் கிடைத்த பொருள்களில் பங்கு தராமல் தடுத்து விட்டனர் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) நூல்- அபூதாவூத்.

போரில் கிடைத்த பொருள்களைத் திருடுவதையும் பிடிபட்ட கைதிகளை உயிர் பிராணிகளைச் சித்திரவதைச் செய்வதையும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்துரைக்கிறார் அப்துல்லாஹ் இப்னு யஜீதுல் அஸ்ஸனி (ரலி) - (நூல் -புகாரி)

கிறிஸ்தவம் / யூதம் 

35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம், 36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். (உபாகமம் 2)

 7 ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம். (உபாகமம் 3)

முடிவுரை 

தனது குடிகளின் பாதுகாப்பு காரணாமாக போர் செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் ஆட்சியாளருடையது அதை பங்கிட்டு கொடுக்கும் உரிமையும் அவர்களுடையது. ஆனால் இது பொது மக்களிடம் போர் தொடுப்பதை குறிப்பிடவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை. அதை அறிய போர் நெறிமுறை பற்றி வாசிக்கவும்.

முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக

 குர்ஆன் வசனம் 8:65 "நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக…" (முஃமின் என்றால் நம்பிக்கையுள்ள முஸ்லிம் என்று பொருள்). இவ்வாறு வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் எப்படி அமைதி மார்க்கமாக முடியும்?

போருக்கு ஆர்வமூட்டுவது இஸ்லாம் மட்டும்தானா?

தமிழர் சமயம்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. (குறள்: படைமாட்சி - 761)

உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. (குறள்: 767)

தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

சனாதனம்

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||கீதை 2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

கிறிஸ்தவம் / யூதம்

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

எனவே சமயங்கள் அனைத்தும் அரசியலையும் போதிப்பதால், அதில் போருக்கு வரும் எதிரிகளை கையாளும் விதிகளையும் கூறுகிறது. இக்கேள்வி யின் மூலமான குர்ஆன் 8:65 என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

சரி இந்த வசனத்தின் சூழலை அறிவோம் வாருங்கள்!

8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

8:60 அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

8:61 அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

8:62 அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

நபிகளார் காலத்தில் எதிரிகள் போட்ட உடன்படிக்கையை மீறுவார்கள் என்று அறியும் பொழுதும், அவர்கள் சமாதானத்துக்கு வர மாட்டார்கள் என்ற நிலையில் போருக்கு ஊக்குவிக்கும்படி இந்த வசனம் சொல்கிறது.

எவன் வேடுமானாலும் அடிக்கட்டும், உங்களுடன் போடும் ஒப்பந்தத்தை மீறட்டும் ஆனால் நீங்க அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினால் அதற்க்கு பெயர் தான் அமைதி மார்கமோ? அப்படி பார்த்தால் உலகில் எக்காலத்திலும் அமைதியான சமயம் மட்டுமல்ல, அமைதியான அரசாங்கமும் கிடையாது.

முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் - குர்ஆன்

 குர்ஆன் 9:5 "...முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்..." - இப்படி பிற மதத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் அமைதி மார்க்கமா?


குர்ஆன் 9:5 செய்தியின் முழு வரிகளை வாசிப்போம்.

9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

ஒப்பந்தம் போட்டு அதன் படி நடக்காத அதை மீறும் மக்களை பற்றி பேசுகிறது இந்த வசனம். அவர்களையும் புனிதமான மாதங்களில் ஒன்றும் செய்யக்கூடாது அவைகள் முடிந்த பின்பு போர் புரிய சொல்கிறது. அவர்கள் மனம் திருந்தினாலும் ஒன்றும் செய்யக்கூடாது என்கிறது. அவர்களில் கூட யாராவது அடைக்கலம் என்று வந்துவிட்டால் அவர்களை பாதுகாக்க சொல்கிறது இஸ்லாம்.

சமகாலத்தில் ஒரு அரசு எதிரிகளின் யாரேனும் அடைக்கலம் தேடி வந்தால் சிறையில் அடைத்து கொடுமை செய்யுமா? அல்லது பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைக்குமா? எதிரிகளில் யாரேனும் மணம் திருந்தினால் அவர்களை மண்ணிக்குமா அல்லது தண்டனையை நிறைவேற்றுமா?

முஸ்லீம் அலலத்தவர் எல்லோருடனும் போரா?

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

மேலும் இது ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட உரிமைகளோ சட்டங்களோ அல்ல. இது ஒரு நாடு, அதன் அரசாங்கம், அதன் அதிகாரிகள், அதன் படைகளுக்கு வழங்கப்பட்ட சட்டங்கள்.

எந்த நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் இல்லை? இந்திய அரசாங்கம் சீனாவோ பாக்கிஸ்தானோ போருக்கு வரும்பொழுது நாங்கள் அமைதியான நாட்டை சேர்ந்தவர்கள் எனவே நீங்கள்

  • எங்களை அடித்தாலும்,
  • கொலை செய்தாலும்,
  • எங்களது சொத்துக்களை பிடுங்கினாலும்,
  • எங்களது பெண்களை கற்பழித்தலும்,
  • எங்களை நாட்டை விட்டு வெளியேற்றினாலும்

நாங்கள் அமைதியாக இருப்போம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அந்த எதிர்பார்ப்பு சரியா?

இவ்வாறு அத்து மீரும் எதிரிகளிடம் செய்யும் போரிலும் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது இஸ்லாம்.

  • கொல்லப்பட்ட எதிரிகளின் உடலை சிதைக்க கூடாது
  • பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை, அவர்களின் மதகுருமார்களை கொல்லாக்கூடாது
  • மரங்களை, சொத்துகளை நாசம் செய்ய கூடாது
  • போருக்கு வராத பெண்களை சிறைபிடிக்கப்பட்ட கூடாது, வருவோர்களை கர்ப்பழிக்க கூடாது, விரும்பினால் அவரின் அனுமதியோடு மணமுடிக்கலாம்.

இவ்வாறு இந்திய இராணுவம் கற்பனை கூட செய்யாத பல ஆச்சரியமிக்க கட்டுப்பாடுகளை விதித்ததுடன் அதை நடைமுறை படுத்தியும் காட்டியது.

மேலும் இது இஸ்லாத்தில் மட்டுமில்லை. இஸ்லாம் உலக வேதங்கள் அனைத்தும் ஏக இறைவனிடத்தில் இருந்து வந்தது என்று சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் எல்லா சமயங்களிலும் இந்த கருத்து உள்ளது.

கிறிஸ்தவம் & யூதம்:

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

தமிழர் சமயங்கள்

இன்னும் தமிழர் சமயங்களில் புறநானூறு, குறள் உள்ளிட்ட நூல்கள் அரசு மற்றும் போர் பற்றி என்ன சொல்கிறது என்று வாசித்து அறியவும். அந்த அரசர்கள் அறத்தின்கண் நின்று அறத்துக்காக மற்றவர்களை பகைத்தவர்கள் ஆவார்கள் . ஆறாம் என்பது அக்கலாத்தில் சமயமே .

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி - 
புறநானூறு

வடநாட்டார் தூங்கார்!

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல

இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்

கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;

போர்எனில் புகலும் புனைகழல் மறவர்

10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்

குணகடல் பின்ன தாகக் குடகடல்

வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப

15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து

நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே. - புறநானூறு

உரை: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

உன் கொள்ளையால் வளநாடும் வற்றிவிடும்!

களிறு கடைஇயதாள்

கழல்உரீஇய திருந்துஅடிக்

கணைபொருது கவிவண்கையால்

கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து

5 மாமறுத்த மலர்மார்பின்

தோல்பெயரிய எறுழ்முன்பின்

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை ஆகலின், நல்ல

10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!

தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து

மீனின் செறுக்கும் யாணர்ப்

பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே. - புறநானூறு

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

தண்டனை யாருக்கு ?

வழிபடு வோரை வல்லறி தீயே;

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;

அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்

10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;

செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்

நெய்தலங் கானல் நெடியோய்!

எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே. - புறநானூறு

உரை: உன்னை வழிபடுவோரை (கட்டுப்படுவோரை) நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

எதிரி நாட்டினருக்கு எச்சரிக்கை

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ வாழிய குடுமி; தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த

10 முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. - புறநானூறு

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம் என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

சனாதன மதம்

சனாதன நூல்களான கீதையும் ரிக் வேதங்கள் எல்லாம் போரை பிரதானமாக பேசும் நூல்கள் ஆகும்.

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்: - கீதை

ஸஞ்ஜய உவாச
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||

பொருள்: அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

பொருள்: சஞ்ஜயன் சொல்லுகிறான்: “பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன்’ என்று வாய்புதைத்திருந்தான்.”

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

முடிவுரை:

எனவே போரை நியாயப்படுத்தாத, எதிரிகளை கொல்ல சொல்லாத எந்த வேதமும் இல்லை எனலாம். அதற்க்கெல்லாம் தக்க காரணமும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் போருக்கென்று நெறியையும் வகுத்து தந்துள்ளது. ஆனால் இதுவெல்லாம் சும்மா வீட்டில் இருக்கும் அலல்து தவறு செய்யாத மக்கள் மீது பிரயோக படுத்த சொல்லவில்லை. மேலும் சமகாலத்த்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல வேத அறிவில்லாத அப்பாவிகளை தூண்டிவிட்டு கும்பலாய் சேர்ந்து இன்னொரு அபபவியை அடித்து கொலை செய்யும் நிலைக்கு வெறுப்புகளை விதைக்க தவறாக பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இவைகள். இது அரசாங்கங்களுக்கு படைகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஆகும்.

அனைத்து வேதமும் ஒரே இறைவனிடத்தில் இருந்து வந்தது, அனைத்து வேதமும் ஒரே இறைவனைப்பற்றி தான் பேசுகிறது. எனவே வெறுப்பை விடுத்து உண்மை ஆன்மீகத்தை பற்றிய சில அடிப்படைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்க்கு வாசிக்க வாய்மை

புறமுதுகிட்டு ஓடுதல்

தமிழர் சமயம் 

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். - (இன்னா நாற்பது 4)

புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (உலக நீதி 36)

பொருள்: கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே 
 
இஸ்லாம்  

''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' (அல்குர்ஆன் 5:21)

கிறிஸ்தவம் & யூதம் 

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். (சங்கீதம் 78:9-11)

 10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன். 13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம். (யோசுவா 7:12)

நம்பிக்கையற்றவர்களை கொல்லலாமா? *

கிறிஸ்தவம் & யூதம்  

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

இஸ்லாம் 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190) 

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)  

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 2:192) 

 'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள் மக்காவை வெற்றி கொள்ளுங்கள் அங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 28)

எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

 '(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)

முடிவுரை 

இறைவனை அவன் தந்த கட்டளையை இவர்கள் மறுக்க செய்வார்கள் என்கிற  அடிப்படையில் ஒரு நாட்டின் படைக்கு, அதன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சட்டம் ஆகும். இது தனி மனிதன் இன்னொரு தனிமனிதனை கொலை செய்வதை ஆதரிக்கும் சட்டமல்ல.

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களே முதலில் நினைவிற்கு வருவது ஏன்?

 பல்வேறு காரணங்கள் உண்டு.

  1. முதல் காரணம், நாம் பெரும் செய்திகளின் உண்மை நிலையை அறிய நாம் சிரத்தை மேற்கொள்வதில்லை. அதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறை.
    • ஒரு காலத்தில் வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கு செலவிடும் நேரம் போக மீதம் உள்ள பொழுதை போக்க பொழுது போக்கு விடயங்களை கையிலெடுத்தோம். உதாரணமாக விளையாட்டு, tour போன்றவைகள் அதில் அடங்கும். இன்று பொழுது போக்கு அம்சங்கள் போக மீதமுல்ல நேரத்தை வேலைக்கும் குடும்பத்துக்கும் கொடுக்கிறோம். இதில் பெறப்படும் செய்தியின் உண்மை நிலையை அறிய நேரத்தை எங்கே செலவிடுவது? அப்படியே அதற்கு தயாராக இருந்தாலும், அவரவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு செய்திகளே கொட்டி கிடைக்கும் பொழுது, தனக்கு தொடர்பில்லாத ஒரு சமயத்தினரின் செய்தியை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து அவர்கள் மீது வீண் பழி சுமத்த படுகிறது என்று உணரவேண்டிய அவசியம் யாருக்கு இருக்கும்?
    • இன்று வாழ்க்கை ஒரு பந்தயம் போல ஆகிவிட்டது, இன்னொருவரை வெல்வதை மட்டுமே முதற்பொருளாக கொண்டு எப்பொழுதும் அதற்காகவே உழைப்பது. பொருளாதாரம் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறியாமல் பிறரின் முன்பு தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள மேலும் மேலும் மேலும் பொருளை சேர்க்க முயற்சித்து கொண்டே இருப்பது. இதில் இது போன்ற செய்திகளின் உண்மை நிலையை நாம் சிந்திப்பது தேவையற்றதாக கருதுகிறோம்.
    • இஸ்லாம் அல்லாத சமயத்தை அல்லது தத்துவத்தை நம்பும் சிலர் முஸ்லிம்கள் மீது பொறாமையுடனும் வெறுப்புடனும் இருப்பதால், எடுத்த எடுப்பில் அதை நம்பிவிடுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இவர்களுக்கும் இந்த செய்திகளின் உண்மை நிலையை அறியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர்கள் தான் உலகெங்கும் ஆட்சி பீடத்தில் இருப்பதால் மேலும் இந்த நிலை முடுக்கிவிடப் படுகிறது.

எனவே இதில் எளிதான வழி, மீடியாக்கள் கூறும் "இஸ்லாமியர்கள் தீவிரவாதி" எனும் செய்தியை அப்படியே நம்பிவிட்டு கடந்து போவது.

இதே போல ஒடுக்குமுறைக்கும் வீண்பழிக்கும் உள்ளான, தனது உண்மை வரலாற்றை அறிந்த சமூகம் வேண்டுமென்றால் இச்செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இருக்கும். உதாரணமாக, தமிழர் சமூகம் மற்றும் சீக்கிய சமூகம்.

ஏன் செய்தி நிறுவனங்கள் இப்படி பொய்யான செய்தியை பரப்ப வேண்டும்? அதில் அவர்களுக்கு என்ன லாபம்? இது திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

2. இரண்டாவது காரணம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டுக்கும் வேற்றுமையை அறியாதது.

  • தீவிரவாதம் என்பது தான் ஏற்கும் தத்துவத்தை எவ்வுயிர்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவமாக பின்பற்றுவது. அதை கிழ்கண்ட வசனங்கள் விளக்குகிறது.

'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக! (குர்ஆன் 109:1,2,3,4,5,6)

“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 28:8)

  • பயங்கரவாதம் என்பது உயிர் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது. ஆன்மீகமோ, நாத்தீகமோ எதுவாக இருந்தாலும் இவைகளை பிழை என்றுதான் போதிக்கிறது. எந்த சமய நூல்களானாலும் இன்னொரு சமயம் சார்ந்த மக்களை துன்புறுத்துவதை தடை செய்கிறது. முக்கியமாக இஸ்லாம் எந்த வழிபாட்டு தளமும் சேதப்படுத்த படக்கூடாது என்பதை இவ்வாறு கூறுகிறது.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.' (குர்ஆன் 22:40)

இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். (குர்ஆன் 5:32)

3. மூன்றாவது, உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றின் வரலாற்றையும் புள்ளி விபரத்தையும் அறியாதது. இஸ்லாம் 1447 ஆண்டுகளாக உள்ளது, ஆனால் தீவிரவாதம் என்னும் சொல் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தப் படுகிறது. இஸ்லாமும் முஸ்லிமும் தான் தீவிரவாதத்துக்கு காரணம் என்றால் 1300 ஆண்டுகளாக தீவிரவாதம் எங்கே போனது?. ஏன் என்று அறிய மேலே உள்ள screen shot ஐ வாசிக்கவும். மேலும் கீழுள்ள புள்ளி விபரங்களையும் உதாரணத்தையும் காண்க.

உதாரணமாக, ISIS என்பது இஸ்லாமிய ஆட்சியை நிறுவ ஏற்படுத்தப்பட்ட பயங்கவாத குழு என்றும் அது மற்ற சமயங்களை சார்ந்த மக்களை கொலை செய்வதை நோக்கமாக கோடனுள்ளது என்றும், அனைத்து நாடுகளிலும் அதன் நீட்சி இருக்கிறது என்றும் செய்திகளில் கூறி வந்தார்கள். இந்தியாவில், தமிழகத்தில் கூட இன்றுவரை அதன் பெயரை குறிப்பிட்டு கைதுகள் நடைபெறுகிறது.

இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்ததில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? ஹமாஸ் அரசுடன் இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட ஷியா பிரிவு ஆயுத குழுவான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹௌதி ஆயுத குழுக்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளும் பொழுது அருகாமையில் உள்ள சிரியாவில் இருக்கும் ISIS ஏன் கலந்து கொள்ளவில்லை.

ISIS தலைவர் கொல்லப்பட்டதால் அவர்கள் நகர்வு முடங்கிவிட்டது என்று யாரேனும் கூறினால், ஒரு இயக்கம் ஒரு தலைவரை அடிப்படையாக கொண்டு இயங்காது என்று புரிந்து கொள்ளவேண்டும். மேலும் மேற்கத்திய மீடியாக்களும் அரசுகளும் கூட ISIS நிலை பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் CIA வால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான் நிதர்சனம். தலைவரை கொன்றது போல நாடகம் ஆடி அதன் திரைக்கதையை முடித்தது வைத்த அமெரிக்கா அதைப்பற்றி ஏன் பேசப் போகிறது? 150 ஆண்டுகளாகத்தான் அமேரிக்கா உலகத்தை ஆதிக்கம் செய்கிறது. எனவே எங்கெல்லாம் அமெரிக்காவின் தலையீடு இருந்ததோ (ஈராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், ஆப்ரிக்கா) அங்கெல்லாம் தான் தீவிரவாதம் என்று வெகுவாக கூறப்படுகிறது. சொந்த நிலத்து மக்களை அடிமைப் படுத்த வரும் ஒருவனுக்கு எதிராக தலை வாழை விருந்து சமைப்பார்களா என்ன?