தமிழர் சமயம்
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் பாடல் 174.)
உறக்கம் உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்
பரம் - உயர்ந்த
உறக்கம், உணர்வு, உயிர் கொடுக்கப்படாமை இவை இல்லாமல் போனால் பிறப்பு இன்றி உயர்ந்த வீட்டைப் பெறலாம்.
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டுதிடம்படு மீசன் றிறம். (ஞானக்குறள் , 11 பிறப்பறுத்தல் 176.)
உடம்பு இரண்டும் கெட்டாலும் உறுபயன் ஒன்று உண்டுதிடம் படும் ஈசன் திறம்.
உறுபயன் - உண்டான பயன்
திடம் - உறுதி
திறம் - ஆற்றல்
உயிருள்ள உடம்பும், இறப்புக்கு பிறகுள்ள உயிரற்ற உடல் இரண்டும் கெட்டு அழிந்தாலும், செய்த வினையின் பயன் உண்டு, அவ்வினைப்பயன் நிலைபெறும் இறைவனின் ஆற்றலினால்.
தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்பின்னைப் பிறப்பில்லை வீடு. (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 177)
தன்னை அறிந்து செறிந்து அடங்கித் தான் அற்றால்பின்னைப் பிறப்பு இல்லை வீடு.
தனது நிலையை அறிந்து நிறைவாக அறநூல்களுக்கு கட்டுப்பட்டால் இறந்த பின் மண்ணறை வாழ்க்கை இல்லை, சுவர்க்கம் மட்டுமே.
செறிந்து - நிறைந்து
அற்றால் - மரணித்தால்
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்இருளின்றி நிற்கு மிடம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 178)
மருள் அன்றி மாசு அறுக்கின் மா தூ வெளியாய்இருள் இன்றி நிற்கும் இடம்.
மருள் = மயக்கம்
மாசு = குற்றம்
மா = பெருமை பொருந்திய
தூ = தூய, பரிசுத்தமான
வெளி = மைதானம்
மயக்கமன்றி குற்றங்களை அறுத்தால் பெரிய பரிசுத்தமான மைதானம் போல இருள் இல்லாத இடமாக மண்ணறை மாறும்.
(பிறப்பறுத்தல் எனபது மண்ணறை வாழ்க்கையில் துன்பப்படாமையை குறிக்கிறது)
கிறிஸ்தவம்
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். - (தானியேல் 12:2)
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். (முஸ்லிம் 5503)