லஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலஞ்சம்

தமிழர் சமயம் 


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

 பொருள்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை (இலஞ்சத்தை) அப்போதே கைவிட வேண்டும்

கிறிஸ்தவம் 


“ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும். - (யாத்திராகமம் 23:8

உங்கள் இளவரசர்கள் கலகக்காரர்கள் மற்றும் திருடர்களின் தோழர்கள். இவர்கள் அனைவரும் லஞ்சத்தை விரும்புபவர்கள் மற்றும் பரிசுகளுக்குப் பின்னால் ஓடுபவர்கள். அவர்கள் அனாதைகளுக்கு நீதி வழங்குவதில்லை, விதவை வழக்கு அவர்களின் நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு வராது. இதனாலேயே, சேனைகளின் கர்த்தரும், இஸ்ரவேலின் பலத்தவருமான கர்த்தர்: நான் என்னைப் பகைக்கிறவர்களை அழித்து, எனக்கு விரோதமானவர்களைத் தண்டிப்பேன்; - (ஏசாயா 1:23) 

இஸ்லாம்

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் (லஞ்சமாக) கொண்டு செல்லாதீர்கள் (திருக்குர்ஆன்:2:188)

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் பெரும் பாவமாகும். அப்துல்லாஹ் பின் அம்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், லஞ்சம் வாங்குபவனின் மீதும் கொடுப்பவானின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். - (திர்மிதி 1337, அபூதாவூது 3580, இப்னு மாஜா 2313)

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29) 

அபூ ஹீரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் அல்லாஹ் சபிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - (இப்னு ஹிப்பான் 5077, முஸ்னது அப்துர்ரஸாக் 14669)

ஸவ்பான்(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் இருவருக்கும் மத்தியில் லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக பேசுவோரையும் அல்லாஹ் சபிக்கிறான்.  - (தப்ராணீ 1415, பஸ்ஸார் 1353)