இயேசு கொல்லப்பட்டாரா?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டார் பிறகு உயிர்த்தெழுந்து கர்த்தரிடம் சென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா என்று ஆய்வு செய்யும் பொழுது அது உண்மை அல்ல என்றே தெரிய வருகிறது.

இதற்கான பதிலை அறிய நீங்க வாசிக்க வேண்டிய வரலாற்று நிகழ்வு கீழே.

யோவான் 16:“நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 

2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 

3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 

4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள். “நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 

5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 

6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 

7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.

8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 

9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 

11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.

12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 

13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 

14 நடக்கப் போகிறவற்றைப் பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 

15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”

16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.

17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 

18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 

20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 

22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 

23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 

24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகத்தின் மீது வெற்றி

25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 

26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 

27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 

28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.

29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 

30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.

31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 

32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.

33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

யோவான் 17:11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள்.

12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.

13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன்.

14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

யோவான் 19:6 பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர். ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.

7 யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.

8 பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 

9 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 

10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.

11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.

முக்கிய குறிப்பு: இதை மத்தேயு 26, 27 மற்றும் 28 இந்த செய்திகள் உள்ளடக்காமல் வேறுபோல உள்ளது.

உதாரணமாக கீழுள்ள வசனம் திரைப்பட காட்சி அமைப்பு போல உள்ளது. ரூ சீடர் ஏர்ஸு கிறிஸ்துவுடன் இருப்பவர் சொல்லும் செய்திகள் அவர் இருக்கும் இடத்தில் கோணத்தில் விதமாக சொல்லப்படுகிறது, மேலும் இடைச்சொருகளைப் தான் அமையமுடியும். அதை விட்டுவிட்டு வேதபாரகர் எங்கே எப்படி திட்டமிட்டார்கள் என்றெல்லாம் அவர் எழுதி இருக்க வாய்ப்பில்லை. எனவே இது மத்தேயுவின் நற்செய்தியில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட இடைச்சொருகல்கள் எனபதில் சந்தேகமிலை.

மத்தேயு 26:3 தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா.

4 அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள்.

5 அக்கூட்டத்தில் இருந்தவர்கள், “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள்.

அதே போல இயேசு உயிர்த்தெழுந்த செய்தி யோவான் 19, 20 மற்றும் 21 இல் வருகிறது, அவைகளும் இடைச்சொருகலே.

உதாரணமாக யோவான் 18 இல் பிலாத்து இயேசு என்று அங்கே ஒப்படைக்கப் பட்டவரை காப்பாற்ற முயற்சிக்கிறார், அது முடியவில்லை என்றதும் நீங்களே தண்டனை கொடுங்கள் என்கிறார். ஆனால் யோவான் 19 இல் இயேசு கிறிஸ்துவை சாட்டையால் அடிக்க ஆணை இடுக்கிறார். முற்றிலும் முரண்.

மேலும் இதே சம்பவம் மாற்கு மற்றும் லூக்காவின் சுவிஷேசங்களில் இடம் பெற்று உள்ளது ஆனால் அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களோ அல்லது உடன் பயணித்தவர்களோ அல்ல. எனவே அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கலாம், நிராகரிக்க வேண்டும்.


இப்பொழுது யோவானின் நற்செய்திகளை ஒவ்வொன்றாக பகுப்பாய்வு செய்வோம்.

முதலில் தான் அனுப்பினவரிடம் அவர் செல்வதைப் பற்றி அவர் பல வசனங்களில் குறிப்பிட்டு உள்ளார்.

யோவான் 16:5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை.

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.

28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.

இதில் எதிலும் தான் கொல்லப்படப்போவதாக குறிப்பிடவில்லை, மீண்டும் உயிர்த்தெழுவது பற்றியும் குறிப்பிடவில்லை. அது அப்படி குறிப்பிடப்படாமல் கடந்து செல்லும் அளவு அது சிறிய விடமில்லை. அப்படி ஒன்று நடக்கப் போகிறதென்றால் அதை முன்னறிவிப்பதும் அவ்வாறு நடக்கும் பொழுது அதை அவர்கள் காண்பதும் அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். கேக்காமல் அவர்கள் நினைப்பதற்கு பதில் கூறுவதே அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்

தான் இவ்வுலக நியதியான மரணத்தை வென்றதை இயேசு கிறிஸ்து தெளிவு படுத்தி உள்ளார்.

33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

இதை இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:157-158)

இயேசு கிறிஸ்து அவர்கள் தனியே இருப்பதைப்பற்றி அவர் குறிப்பிட்டார்.

31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 

32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.

பிறகு அந்த இடத்திற்கு யூதாஸ் வந்து கிறிஸ்துவை காட்டி கொடுக்க முற்பட்டான்.

யோவான் 18:1 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக் கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.

2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். 

3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.

4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

5 அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர். இயேசுவோ, “நானே இயேசு” என்றார். 

6 இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

7 இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.

8 இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். 

9 “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.

10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.

இந்த வசனங்களில் இருந்து தெளிவாவது என்னவென்றால், முதல் முறை யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டபொழுது அது இயேசு கிறிஸ்துவாக இருந்தார். பிறகு அவர்கள் நான் தான் இயேசு என்றதும் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள். முதலில் காட்டி கொடுக்க யூதாஸ் இருக்கும் பொழுது அவர்கள் தேட வேண்டிய அவசியம் என்ன?

இந்த சமயத்தில் தான் அவர்கள் மதிமயங்கிய நிலையில் இருக்கும் பொழுது யூதாசை கடவுள் இயேசு கிறிஸ்து போல அவர்களுக்கு காட்டினார், இயேசு கிறிஸ்து மேலே உயர்த்தப்பட்டார். மீண்டும் யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டது யூதாஸ் மற்றும் அதைத் தொடர்ந்து விசாரணை தண்டனை எல்லாம் யூதாசுக்கு நடந்தது. 

இந்த விளைவுகளை அவன் ஏற்க கடவுளால் நிர்பந்திக்க பட்டதன் விளைவாக தான் தன்னைப் பற்றிய பின்வரும் வார்த்தைகளை அவன் கூறினான்.

யோவான் 18:11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.

யோவான் 19:11 எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்

ஆனால் அந்த சம்பவங்களை நடக்கத்தனமாக எழுதி பைபிளில் சேர்த்தவர்கள் யூதர்கள் ஆவர்.

சரி இதை எப்படி நம்புவது? அது இயேசு கிறிஸ்து என்றால் அதன் பிறகு யூதாஸ் என்ன ஆனான்?

அ) யூதாஸ் தற்கொலை செய்துகொண்டானா?

மத்தேயு 27:3-5: யூதாஸின் தற்கொலை

3 இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். 4 யூதாஸ், “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.

அதற்கு யூதத் தலைவர்கள், “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.

5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.

ஆ) யூதாஸ் கீழே விழுந்து செத்துப்போனானா?

அப்போஸ்தலர் 1:18-19

18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)

ஒரு மனிதன் எப்படி இரண்டு முறையில் செத்துப்போக முடியும்? மேலும் மத்தேயு 27 இடைச்சொருகல் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அவன் எங்கே போனான் என்று தெரியாததால் யூதர்களுக்கு இப்படி கதை எழுத வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவன் தான் உண்மையில் கொல்லப்பட்டான் என்று குர்ஆன் சொல்வதன் மூலமும், அவர் கடவுளிடம் உயர்த்தப்பட்டார் என்பதை சொல்ல வரும் உதவியாளரை பற்றி இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்.

இதில் இயேசு கிறிஸ்து கொல்லபபடவில்லை என்ற உண்மையை (இதைத்தான் "அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன்" என்று கிறிஸ்து சொல்கிறார்) மக்களுக்கு கூற ஒரு உதவியாளரை அனுப்புவதாக கூறி உள்ளார். அதை இன்றைய ஆவியானவர் அதாவது ஹோலி ஸ்பிரிட் என்று கிறிஸ்தவர்கள் அறிந்து வைத்து உள்ளனர்.

யோவான் 16:7நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.

8 அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 

9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 

11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந் தீர்க்கப் பட்டிருக்கிறான்.

12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 

13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 

14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.

உதவியாளர் மற்றும் ஆவியானவர் எனபது முகமது நபி அவர்களை குறிக்கிறது. அதை புரிந்து கொள்ளும் முன் இது ஹோலி ஸ்பிரிட் ஐ குறிக்கிறது என்று இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர் கொண்ட தன்மையை வைத்து  வாதிடுவோர் உண்டு. ஆனால் அந்த அத்தியாயங்கள் எல்லாம் இடைச்சொருகல்கள் என்று இந்த கட்டுரையில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வாதத்துக்கு இயேசு உயிர்த்து எழுந்தார் என்று வைத்துக்கொண்டால் கூட ஆவியானவர் என்பது அவரை குறிக்காது. ஏன்? அந்த கதையின் படி அவர் அதே உயிர் உடலோடுதான் இருந்தது அல்லவா? பிறகு எப்படி அது ஆவி ஆகும்? அதே உயிர், அதே உடல் எனும் பொழுது அது அதே இயேசு வாகத்தான் கணக்கிட முடியும், வேறொன்றாக அல்ல.

அடுத்து "அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்."

இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார்? எப்படி கர்த்தரிடம் இருந்து தேவதூதர் மூலம் கருத்துக்களை பெற்று உங்களுக்கு நான் சொன்னேனோ அதே போல அவரும் அதே முறையில் பிதாவிடம் இருந்து செய்திகளை பெற்று உங்களிடம் சொல்லுவார் என கூறுகிறார். ஆகா இருவரும் ஒரே மூலத்திடமிருந்து ஒரே மாதரி அமைப்பில் வேதத்தை பெறுவதாக கூட்டுகிறார். எனவே இவர் ஒரு மனிதரைப் பற்றி பேசுகிறார், ஆவியைப்பற்றி அல்ல.

இது ஹோலி ஸ்பிரிட் ஐ பற்றி பேசவில்லை என்பதை எப்படி மேலும் அறிந்து கொள்வது? இயேசு கிறிஸ்துவை விட அதிகமான செய்திகளை அவர் சொல்லவேண்டும், அவரைப்போல மக்களை வழிநடத்தக வேண்டும். 

யோவான் 16:12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார்.

இயேசு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்பட்ட பிறகு இந்த மக்களுக்கு எவ்வளவு செய்திகளை சொன்னார்? மக்களை எப்பொழுது எப்படி வழி நடத்திச் சென்றார்? எனவே அது ஹோலி ஸ்பிரிட் அல்ல. அது முகமது நபி அவர்களைத்தான் குறிக்கிறது. 

எனவே இயேசு கிறிஸ்துவின் மறைவு பற்றி இஸ்லாம் சொல்லும் கருத்துதான் சாத்தியமானதும் நடந்தேறியதும் ஆகும். 

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:157-158)

எனவே சிலுவை, இயேசுவின் சிலை, புனித நீர், அரமைக் மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிப்படுத்துதல் சுவிஷேசம், அதனோடு கிரேக்கத்த்த்தில் எழுதி சேர்க்கபப்ட்ட மற்ற அனைத்து அத்தியாயங்கள், கிறிஸ்து என்கிற பெயர் என எதற்கும் இயேசுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் இவைகளுக்கு கடவுளிடத்த்தில் எந்த மதிப்பும்  இல்லை என்பதுதான் நிதர்சனம். 

அறியாமை நிறைந்த உலகம் *

தமிழர் சமயம் 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் 243

மு. வரதராசன் உரை: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

இஸ்லாம் 

“உங்கள் இறைவன் ஆதாமின் குழந்தைகளின் இடுப்புகளிலிருந்து சந்ததியினரைப் பிறப்பித்து, அவர்களைத் தங்களைப் பற்றி சாட்சியமளிக்கச் செய்தபோது (நான் உங்கள் இறைவன் இல்லையா?) அவர்கள் பதிலளித்தனர்: நீங்கள் தான் என்று நாங்கள் சாட்சியமளிக்கிறோம் …… (அவர் இதைச் செய்தார்) எனவே நியாயத்தீர்ப்பு நாளில் இதைப் பற்றி எங்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று நீங்கள் கூறக்கூடாது” (7:172)

புனித குர்ஆனின் இந்த வசனம், நாம் பிறப்பதற்கு முன்பு நமக்கும் நம் இறைவனுக்கும் இடையே செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை நினைவூட்டுகிறது.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (33:72&73)

 மனிதன் எவ்வாறு அமானாவைச் சுமந்தான்?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அல்-அவ்ஃபி அவர்கள் அறிவித்தார்கள், "அல்-அமானா என்றால் கீழ்ப்படிதல் என்று பொருள். இது ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கப்படும் முன்பு, அவற்றுக்கு (வானங்கள், பூமி, மலைகள்) வழங்கப்பட்டது, ஆனால் அவற்றால் அதைத் தாங்க முடியவில்லை. பிறகு அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களிடம் கூறினான்: 'நான் அமானாவை வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு வழங்கினேன், ஆனால் அவற்றால் அதைத் தாங்க முடியவில்லை. நீ அதை ஏற்றுக்கொள்வாயா?' அதற்கு அவர், 'இறைவா, அதில் என்ன அடங்கியுள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவன், 'நீ நன்மை செய்தால், உனக்கு வெகுமதி வழங்கப்படும், நீ தீமை செய்தால், நீ தண்டிக்கப்படுவாய்' என்று கூறினான். எனவே, ஆதம் (அலை) அவர்கள் அமானாவை ஏற்றுக்கொண்டு அதைச் சுமந்தார்கள். இதுவே இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

(ஆனால் மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக, அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாமையில் இருப்பவனாகவும் இருந்தான்.)" இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அலி பின் அபீ தல்ஹா அவர்கள் அறிவித்தார்கள், "அல்-அமானா என்பது அல்-ஃபராஇத் (கடமையான கடமைகள்) என்று பொருள். அல்லாஹ் அவற்றை வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு வழங்கினான், (இந்த அடிப்படையில்) அவற்றை நிறைவேற்றினால், அவன் அவற்றுக்கு வெகுமதி அளிப்பான்; தவறினால், அவன் அவற்றைத் தண்டிப்பான். ஆனால், அவை அதைச் செய்ய விரும்பவில்லை, அதற்கு அஞ்சின. அவற்றின் நோக்கம் பாவமானது என்பதற்காக அல்ல, மாறாக, அதில் உள்ள கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை அஞ்சின. பிறகு அல்லாஹ் அதை ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கினான், அவர் அதில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். இதுவே இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

 பிறக்கும் முன் மற்றும் இறப்புக்கு பின் உள்ளவற்றை அறியாமல் மனிதன் வாழ்வதால் இது இருள் நிறைந்த அல்லது அறியாமை நிறைந்த உலகம் என்று கருதலாம். அதிலிருந்து வெளிச்சம் கொடுப்பது இறைவனின் வார்த்தைகளே. 

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!). (4:1

அறம் செய்யப்படுவதன் விளைவு என்ன

தமிழர் சமயம் 

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. குறள் 39

மு. வரதராசன் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. 

இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

கிறிஸ்தவம் / யூதம் 

தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்நீதிமொழிகள் 14:14


முடிவும் பிறப்பும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது

தமிழர் சமயம் 

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவங்
கடிமலர்க் குன்ற மலையது தானே. - திருமந்திரம் 19

(ப. இ.) ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி - அறிவின் அடையாளம்.

இஸ்லாம் 

அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி)  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160

தமிழ் சமயத்தில் இறைத்தூதர்கள் இருந்தார்களா?

சமூகங்களுக்கு இடையே இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு சமூகத்துக்கும் மற்றொரு சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை முன்னிறுத்திச் சிந்திப்பதைவிட, அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்து, அவற்றை உரையாடலின் மூலம் பகிர்ந்து கொண்டு ஏற்றுக்கொண்டு நடப்பதே அமைதியானதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் வழியாகும். நாம் வாழும் நிலப்பரப்பின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, இந்த அமைதியான சமூகச் சூழலையும் நமது பிள்ளைகளுக்குப் பாரம்பரியமாக விட்டுச் செல்லுவது நமது கடமையாகும்.

மறைநூல் ஒப்பீடு ஏன்? அது சரியான வழிமுறையா? 

மனிதன் படைக்கப்பட்டவனா, பரிணமித்தவனா என்கிற இரு தத்துவ அடிப்படை பிரிவில் இக்கட்டுரை மனிதன் படைக்கப்பட்டவன் எனும் கோணத்தில் பயணிகிறது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுக்கு நேர் முரணானது. ஆனால் இரண்டையும் இணைத்து ஒரு குழப்பமான கருத்தை இன்றைய ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதாவது மனிதன் ஆரம்பத்தில் குடிகளாக மாறிய பிறகு, கால வோட்டத்தில் சிந்தித்து தேவைகளுக்கு ஏற்ப கடவுள் எனும் கருப்பொருளை உருவாக்கினான் என்பதாகும். ஆனால் மனிதன் படைக்கப்பட்டவன் என்றும் அதற்கான தரவுகளை உலக மறைநூல்களில் உள்ளது என்றும் பல்வேறு தரவுகளை அவைகள் சொல்லுகின்றன. அந்த தரவுகளை எடுத்து ஆராய்ந்து சீர்த்தூக்கி பார்ப்பதன் மூலம் அதன் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். 
 
தமிழ் சமயத்தில் மறைநூல்களாக அறியப்படும் நூல்களையும், இஸ்லாமிய மறைநூலான திருக்குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கமாக அமைந்த நபி மொழியும் ஒப்பிட்டு ஆராய்வதன் நோக்கம், இரு சமூகங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கம் மட்டுமல்ல; அவ்வாறு ஒற்றுமையை தேடி அறிந்துகொள்ளும் பொழுது குறைந்தது இருவருக்கும் பொதுவான அறத்தின் வழி வாழ இவ்விரு மார்க்க வேதங்களுமே வலியுறுத்துவதால் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 4)

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் வெளிப்படுவது எளிது. 

குறிப்பு: முதுமொழிக்காஞ்சி-யின் ஆசிரியர் கிபி 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மதுரை கூடலூர் கிழார் ஆவார், இதை 1919-ல் உரையுடன் பதிப்பித்தவர் கே. செல்வகேசவராய முதலியார் ஆவார். அவரின் பொழிப்புரையில் குறள் எனபதற்கு 'கோள் சொல்லுதல்' என பொழிப்புரை எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு அப்படி ஒரு பொருள் இருப்பதாக எந்த ஒரு அகராதியிலும் நிகண்டிலும் இருப்பதாக தெரியவில்லை. குறள் என்பதற்கு (குரு+அள்=குருகிய அளவுடையது) குறுமையானது, சிறியது, சுருக்கமானது என்ற பொருளைதான் காணமுடிகிறது. 
 
எனவே இவ்வாறு முதுமொழி கூறுவதன் காரணம் குறளோடு இன்னொரு மறை நூலை ஒப்பிட அவற்றில் ஒன்று மற்றொன்று ஆதாரமாக, சாட்சியாக, ஒன்றை ஒன்  று நிறுவக்கூடியதாக அமையும் என்பதால். இது தமிழ் மறைகளை மட்டும் ஒப்பிட அனுமதிக்கிறதா? அல்லது மொழி, நிலம் காலம் கடந்து இறைவனால் வழங்கப்பட்ட எந்த மறைநூலையும் ஒப்பிட அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு நல்வழி பாடல் ஒரு கருத்தை கூறுகிறது. 
 
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும்
கோவை திருவாசகமும் திருமூலர் சொ ல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - தேவர் வழங்கிய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - இது வல்லாத ஒத்தகருத்துடைய மற்ற நூல்களும், சித்தர் பாடல்களும்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று உணர்ந்துகொள்.

இஸ்லாம் குர்ஆனுடன் மற்ற வேதங்களை ஒப்பிட அனுமதிக்கிறதா?

“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (குர்ஆன் 3:64)

குறிப்பு: மேலும் இவ்வாறு வேதங்களை ஒப்பீடு செய்வது ஏன்? என்றும் நான்மறை என்பது உலக வேதங்கள் ஆகும்! எனபதும், சம்ஸ்கிருத வேதமல்ல! என்பதும், திருக்குறள் மட்டுமல்ல! எனபதும் அதற்குரிய தலைப்பில் விரிவாக ஆதாரங்களுடன் எழுதப்பட்டு உள்ளது. எனவே அவற்றை இங்கே விரிவாக எழுதவில்லை.

இந்த அடிப்படை புரிதலோடு இந்த கட்டுரையின் மையக்கருத்தான தூது-வை வாசிப்போம்.

தூது என்பது பொதுவாக இருவரிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ளப் பிறிதொருவரை (அல்லது அஃறிணைப் பொருட்களை) அனுப்புவதாகும். இது, தலைவன்-தலைவியர் இடையேயான காதல், அரசர்களின் அரசியல் உறவு எனப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிந்து வைத்து உள்ளோம்.

அதே வேளையில் ஆபிரகாமிய மாதங்களில் கூறப்படுவது போல இறைத்தூதர் எனும் கருத்து தமிழ் சமயத்தில் உண்டா? என்ற கோணத்தில் நாம் ஆய்வு செய்யவேண்டி உள்ளது. ஏன்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமந்திர தத்துவம் உண்மை என்றால் இறைவன் என்று பேசும் எந்த மொழியாக இருந்தாலும் எந்த மறைநூலாக இருந்தாலும் அந்த சமயம் உருவான முறையில், அதன் அடிப்படை தத்துவத்தில் ஒற்றுமைகள் இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. அந்தவகையில் ஆபிரகாமிய மதங்கள் கூறும் தூதுத்துவம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

தூது செய்தி எப்படி மக்களுக்கு வருகிறது என்று கூறும் பொழுது இசுலாம் இவ்வாறு விளக்குகிறது.

அல்லாஹ் --> ஜிப்ராயீல் (தேவர்) --> குரு (மனிதர்) --> மனிதர்கள் & ஜின்கள் (அசுரர்கள்)   

தூது செய்தி எங்கு தொடங்கி எப்படி பயணித்து எங்கே முடிகிறது என்பதை மேலுள்ள படம் விளக்குகிறது.

அதற்கான ஆதாரமான பின்வரும் வசனம் கூறுகிறது: 

அல்லாஹ் ஜிப்ராயீல் எனும் தேவர்தூதருக்கு தனது கட்டளைகளை கூறுகிறான். 

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது - (குர்ஆன் 2:97)

அவன் மலக்குகளிடம் (தேவதூதர்களிடம்) வஹீயைக் (தூது செய்தியை) கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். - (குர்ஆன் 16:2)

அந்த தேவதூதர்கள் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு அதை உபேதேசம் செய்கின்றனர்.

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் (தேவர்கள்) மீதும் சத்தியமாக! - (குர்ஆன் 77:5,6)

இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை. - (குர்ஆன் 19:64)

(நபியே!) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்..- (குர்ஆன் 2:99)
 
முகமது நபி அவரிகளின் பணி அந்த குர்ஆனை மக்களுக்கு போதிப்பதோடு அதை பயிற்றுவிப்பதும் ஆகும். அதை அவர் செவ்வனே செய்து முடித்தார் என்பது வரலாறு.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். - (குர்ஆன் 5:67)

(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (குர்ஆன் 16:44 )

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (குர்ஆன் 42:48)

(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? ‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’ (முகமது நபி அவர்களின் இறுதி பேருரை)

அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை.. (குர்ஆன் 53:3,4)
 
அவர் கொடுத்த தூது செய்தியில், குர்ஆனில் வேறு எந்த ஒரு செய்தியை கூட்டுவதும் குறைப்பதும் மற்ற எவருக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது . அதோடு அவரின் உபதேசத்துக்கும் மாற்று விளக்கம் கூறுவதும் தடசைசெய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரின் போதனையின் அடிப்படை பாதுகாக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் அந்த அடித்தளத்தின் மீது நமது வாழ்வை கட்டி அமைக்கலாம், ஆனால் அந்த அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் பயணிக்க முடியாது என்கிறது இஸ்லாம். எனவே இறைவனின் தூது செய்தியில் பொய் கலக்காமல் இருக்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யபபட வேண்டுமோ அதை இஸ்லாம் தெளிவாக செய்து உளள்து. 
 
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம். - (குர்ஆன் 15:9
 
நபி அவர்களின் சொல் என்பது குர்ஆனுக்கு விளக்கமானது, எனவே அவர் சொன்னானதாக அல்லது செய்ததாக பொய் கூறுவது நரகிற்கு அழைத்து செல்லும். 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!' நூல்கள் : (புகாரீ -106, முஸ்லிம் 2
 
குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்று உளளதால் அதில் மாற்றம் செய்ய முடியாதவர்கள் அடுத்து நபி அவர்களின் மீது பொய் கூற முயல்வர் அடுத்தது குர்ஆனுக்குஇ மாற்று வியாக்கம் சொல்ல முயற்சி செய்வர் என்பதால் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்க முயல்வர். எனவே அதற்கும் தடை உள்ளது. 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி
 
மேற்சொன்ன வசனத்தில் "அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும்..." என்கிற செய்தி மூலம் தூது என்பது மிக வெளிபபடையான இந்த வேதத்தின் ஆதாரம் என்பது புலப்படுகிறது.

இதே போல வேறு காலத்தில், மொழியில் இடத்தில் இப்படி தூதர்கள் இருந்து இருக்கிறார்களா? குர்ஆன் என்ன சொல்கிறது? 
 
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (குர்ஆன் 16:36) 
 
எனவே இந்த தூத்துவ கட்டமைப்பு தமிழ் சமயங்களில் இருந்ததா? இருந்திருதால் அது இப்பொழுது ஏன் அந்நியமாக தெரிகிறது? என்பதை ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் மறைநூல்கள் இந்த தூது பற்றி என்ன சொல்கிறது?  

முதலில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இதில் நாம் ஆய்வு செய்யும் நூல்கள் எல்லாம் குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையானவை, அதற்கு பொழிப்புரைகள் அதிகபட்சம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப்பட்டு உள்ளது. எனவே அந்த கால இடைவெளி, அந்த இரு காலங்களிலும் இருந்த அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பொழிப்புரைகளை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றை அடிப்படியாக கொண்டு, சொல்லுக்கு சொல் அகராதியில் உள்ள பொருளையும் பயன்படுத்தி கொண்டு இந்த ஒப்பீட்டு பணி முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஏனென்றால் பல சொற்களுக்கு கொடுக்கப்படும் பொருளுக்கும் அதன் வேர்ச்சொல்லுக்கு சிறிதும் தொடர் இல்லாமல் இருக்கின்றது.  இன்றைய AI காலத்தில்  தரவுகள் எளிதாக கிடைப்பதால் சொல்லுக்கு சொல் பொருளை ஆய்ந்து பொருத்துவதன் மூலம் சரியான விளக்கத்தை பெற முடியும் என கருத முடிகிறது. பல்வேறு தமிழ் நூல்கள் தூதுப்பற்றி பேசுகிறது. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

திருமந்திரம்  

இஸ்லாத்தில் அல்லாஹ் தேவர்கள் மனிதர்களுக்கு போதிக்கும் பொருட்டு முதலில் வேதத்தை தேவர்களுக்கு கொடுத்ததாக அறிந்துள்ள நாம், தமிழர் சமயத்தில் அந்த வழிமுறை உள்ளதா என்று ஆய்வு செய்யும் பொழுது திருமந்திரம் இப்படி சொல்வதை கண்டோம்.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10) 
 
பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் வேதத்தை சொல்பவன் ஈசன் ஆவான்.

குறிப்பு: சிவன் என்பதற்கும், நந்தி என்பதற்கும் சிவபுராணம் அல்லது மற்ற புராணங்கள் கூறிய கதைகளை மறந்துவிட்டு இப்பாடல்களின் விளக்கத்தை நேரடியாக திருமந்திரம் எனும் வேதம் வழியாக தமிழ் சொற்களின் பொருள்களை கொண்டு வாசிக்கும் பொழுதுதான் அதன் உண்மை பொருளை அறிய முடியும்.

இதில் மூவர் யார்?

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. - திருமந்திரம்

குறிப்பு: அசுரர் என்பது மனிதர்கள் அணுகமுடியாத வேறு ஒரு படைப்பு. எனவே நரகாசூரன் பத்மாசூரன் போல சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். 

நால்வர் யார்? 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

மனிதர்களில் நந்தியின் அருள்பெற்ற நாதனை / குருவை நீங்கள் தேடினால், 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியக்ராமர் 4) எண்மர் இந்த நால்வரும் தான் நதிதேவர் ஆவார்கள் என்பதை அறிக. 

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.  
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம் 

அந்த நந்தி தேவர் என்பவரை குருவாக ஏற்ற திருமூலர் அவர்கள் மக்களுக்கு குருவாக ஆக்கபட்டதாவகவும், அவர் வழிகாட்ட அந்த வழியை பின்பற்றியதாக அவர் கூறுகிறார். இது முகமது நபி அவர்கள் தேவதூதர் ஜிப்ரியேலின் மூலம் எப்படி தூதுத்துவத்தை பெற்றாரோ அவ்வாறே உள்ளது. மொழி மாற்றம் காரணமாக இறைவன், தேவர்கள், இறைத்தூதர்களின் பொதுப்பெயர் வேறுபடுகிறது ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே வரையறையுடனும், ஒரே பண்புடனும் இருக்கின்றனர். இதன் பொருள் அவர்கள் வேறு வேறு என்பதல்ல, 

திருக்குறள் 

திருக்குறளில் கூறப்படும் மன்னன் மற்றும் தூது ஆகிய கருத்துகளை நாம் பெரும்பாலும் அரசியல் அல்லது நிர்வாகக் கோணத்தில் மட்டும் அணுகும் பழக்கம் கொண்டுள்ளோம். ஆனால் வடமொழி அல்லது வடமொழி சார்ந்த சமயச் சிந்தனைகள் இந்நிலத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு, இங்கு நிலவிய தமிழ்சமய மரபில் இந்த நிலத்தை ஆண்ட மன்னன் வெறும் அரசாராக மட்டுமல்ல; அவன் தூதனாகவும் இருந்தான். அதாவது, அவன் அறநெறி மற்றும் மறைநூல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பொறுப்பையும் ஏற்றிருந்தான்.

மன்னன் மறைநூல் போதிப்பவனாக இருந்தானா?” என்ற கேள்விக்கு திருக்குறளே ஆதாரமாக நிற்கிறது.

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. - மன்னரோடு சேர்ந்தொழுகல் 695

இக்குறளுக்கான மு. வரதராசன் அவர்களின் விளக்கம்: (அரசர் மறைபொருள் பேசும் போது வேறு) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும் என்பதாகும்.

இதன் மூலம், மன்னனின் கடமை ஆட்சி செய்வதோடு மட்டுமல்ல; ஆன்மீகத்திற்கும் அறநெறிக்கும் அடிப்படையாக விளங்கிய மறைநூலை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும் அவனுக்கிருந்தது என்பது தெளிவாகிறது. 

இதை தொல்காப்பிய மரபியல் இப்படி கூறுகிறது.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. - தொல்காப்பியம் மரபியல் 71
பதவுரை: 
 
நூலே: நூல் (மறை நூல் - பெயர்ச் சொல்) + ஏ (உறுதிப்படுத்தும் உருபு). அதாவது "அது நூல்தான்" என்று அதை தொடர்ந்து வரும்  கரகம் மற்றும் முக்கோல் சுட்டுகிறது.

கரகம்: கரகம் என்பதை கரம் (கை) + அகம் (உள்ளே, உள்ளம்)  என பிரிக்கலாம். இதில் கரம் என்றால் பற்றி பிடித்தல் என்றும் பொருள் படும். எனவே உள்ளத்தில் தோன்றும் நூலை பற்றிப்பிடித்தல் என்று பொருள் கொள்ளலாம். அதாவது இஸ்லாம் கூறும் வகீயை இது ஒத்துள்ளது. வகீயின் மூலம் மறைநூல் வழங்கப்படுவதாக இஸ்லாம் சொல்கிறது. பின்னாளில் கரகம் என்பதன் குறியீடாக நீர் அடங்கிய சிறு குடம் மாறி, பிறகு கரகம் என்றாலே குடம் என்று ஆகி இருக்க வேண்டும். 

முக்கோல்: பழந்தமிழ் மரபில், முக்கோல் என்பது அரசன் அல்லது தலைவன் கையில் இருப்பது: 1) அறம் (நீதி), 2) பொருள் (ஆட்சி – ஒழுங்கு), 3) இன்பம் (பாதுகாப்பு – நலன்) என்ற மூன்று தளங்களையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும்

மணையே: மணை (உயர்வு, மரியாதை) + ஏ (உறுதிப்படுத்தும் உருபு). இதுதான் உயர்வு 
ஆயும் காலை: ஆராயும் போது

அந்தணர்க்கு உரிய: இதை செய்பவர்தான் அந்தணர் 

பொருள்: கரகம் மற்றும் முக்கோல் தான் நூல் ஆகும், அதை ஆராயும் பொழுது தான் உயர்வு கிடைக்கும், இதை செய்பவர் அந்தணர் ஆவார்.

குறிப்பு: இதில் முரண் இருப்பதாக கருதுவோர் தொல்காப்பியம் கூறும் முதல் நூல் வழி நூல் சூத்திரத்தை வாசிக்கவும்.

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. - தொல்காப்பியம் மரபியல் 73

பொருள்: இந்த உரிமைகளை அரசனும் பெறலாம்.

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. - தொல்காப்பியம் மரபியல் 83

பொருள்: அரசாளும் உரிமையும் அந்தணர்க்கு உண்டு.

எனவே வடமொழி பாரம்பரியம் போலல்லாமல் தமிழ் மரபில் அந்தணரும் அரசரும் ஒரே ஆளாக இருக்கமுடியும். இது சனாதனத்தை விட ஆபிரகாமிய மதங்களோடு இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இசுலாமிய மரபோடு ஒத்துப்போகிறது. இங்கே நாம் நோக்கத்தகுந்தது என்னவென்றால் வர்ண அடுக்குமுறையை இது மறுதலிப்பதால் தமிழ் கூறும் அந்தணரும் இன்று உள்ள பிராமணரும் ஒரே குணமுடையவர்கள் அல்ல. எனவே ஒன்றுக்கு மற்றொன்றை மாற்று சொல்லாக பயன்படுத்த முடியாது. 

ஆடுர்த்ததாக, அந்தணனும் அரசனும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு என்று ஏற்று கொண்டாலும், தூதன் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது?

பொதுவாக தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அந்தப் பொறுப்பை ஏற்றுச் செல்பவன் தூதன் ஆவான் என்று நாம் புரிந்து வைத்து உள்ளோம். அந்த வரையறை சரியா அல்லது முழுமையானதா என்று நாம் சிந்திக்கே வேண்டிய தருணம் இது. இது இஸ்லாம் கூறும் இறை தூதை குறிப்பிடவில்லையா என்று ஆய்வு செய்வோம். அதற்க்கு நாம் திருக்குறளில் கூறப்பட்ட 69 ஆவது அத்தியாயமாக தூதுவை வாசிப்போம்.
 
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. - தூது 687

இக்குறளின் விளக்கம் என்னவென்றால் "தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தலைவன் ஆவன்". இங்கே தூதன் என்று இக்குறள் சொல்லவில்லை. ஒரு அரசின் தூதுவன் எப்போதும் தலைவனாக அறியப்பட்டது இல்லை என்பதை நம் அறிவோம்.  

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. - குறள் 683:

மறைநூல்களை கற்றோரைவிட நூலை தெளிவு பெற அறிந்து அதில் வல்லவனாகியவன் வேலுடையாரை வென்று (நல்வினை எது தீவினை எது என) இரு வினையைச் சொல்லுவது இயல்பாம். 

தொல்காப்பிய கூற்றுப்படி நூல் என்றாலே மறைநூல் தான் என்பதும், அந்த நூல் அந்தணருக்கு உரியது, அதேபோல அரசனும் அந்தணராகலாம், அந்தணரும் அரசனாகலாம் என்றும் மேற்சொன்ன மரபியல் 73 & 83 இல் தெளிவு படுத்துகிறது.  
 
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. - தூது 688

இக்குறள் தூதனை வழியுரைப்பான் என்று குறிப்பிடுகிறது. வழி என்பதற்கு மார்க்கம் என்ற ஒரு பொருள் உண்டு. மார்க்கம் என்றால் சமயம் என்றும் பொருள். சன்மார்க்கம் என்ற சொற்பிரயோகத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எட்டு சமயங்கள் தான் சன்மார்க்கம் என்று அழைக்கப்படுகிறத்து. வழியுரைப்பவன் என்றால் ஆன்மீக தூதன் அல்லது இறைதூதன் அல்லது சமயத்தை போதிப்பவன் என்று பொருள். 

மேலும் இது அரசியல் தூதனை குறித்தால் அவன் தூய்மையாகவும் துணை உடையவனாகவும் அதாவது மணமுடித்தவனாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?  என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதே போல பின்வரும் குறள்களிலும் இதே போன்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - தூது 681

இங்கு தூதனுக்குத் தேவையானவை அன்பு, சிறந்த பண்பு, ஆன்ற குடிப்பிறப்பு எனக் கூறப்படுகின்றன. பண்பு அவசியமான தகுதி, அன்பு இருப்பது கூடுதல் சிறப்பு; ஆனால் ஆன்ற குடிப்பிறப்பு ஏன் அவசியமாக்கப் படுகிறது?

இதற்கான விடை, தூதன் வெறும் செய்தியாளன் அல்ல என்பதிலேயே உள்ளது. அவன் மறை கூறும் அறத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறான்; ஆகவே, அவனது சொல், செயல், நின்று பேசும் துணிவு ஒரு மரபின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த உண்மையை மேலும் தெளிவாக்குவது குறள் 685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. - தூது 685

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும்  நன்மை உண்டாக்குவதுதான் தூது ஆகும். 

ஒரு அரசன் தன் தூதனை இன்னொரு அரசனிடம் அனுப்பும்போது, அவனிடம் கொடுக்கப்பட்ட செய்தியில் இருந்து “பயனற்றவை” என்று எண்ணி சிலவற்றை நீக்க செய்தியாளனுக்கு அனுமதி உண்டா? இல்லை என்றுதான் நாம் உணர்கிறோம். அதுபோல, அந்த செய்தி கொண்டு செல்வதால் எதிர் தரப்பை மகிழ்விப்பதா, சினமூட்டுவதா என்பது செய்தியின் தன்மையைப் பொறுத்ததே தவிர, தூதனின் சொல்வித்தையால் அல்ல. எனவே, இந்தக் குறள் அரசர்களுக்கிடையேயான அரசியல் தூதை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தூவாத நீக்கி என்றால் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு நபரின் தன்மைக்கு ஏற்ப தேவையற்ற முறைகளை அல்லது விடயங்களை நீக்கி கேட்பவர் நன்மை பெறும் விதமாக, ஆனால் தூதின் அடிப்படை மாறாமல் செய்தியை சுவையாக சொல்லுவது ஆகும். அது இறைதூதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குறள் 686 இதை மேலும் வலுப்படுத்துகிறது:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. - தூது 686  
 
இங்கு வரும் “காலத்தால் தக்கது அறிவதாம் தூது” என்பது, ஓரிரு நாளில் செய்தி சொல்லி திரும்பும் ஒருவனைச் சுட்டவில்லை. மாறாக, அந்த மக்களிடையே தங்கி, அவர்களைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு தொடர்ந்து உபதேசிக்கும் ஒருவனைச் சுட்டுகிறது. 
 
குறள் 688 இல் வரும் தூய்மை, துணைமை, துணிவு என்ற மூன்றும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தூய்மை ஒழுக்கத்தைக் குறிக்கிறது. ஆனால் துணைமை ஏன்?.

இந்த முழுச் சிந்தனையின் உச்சமாக விளங்குவது குறள் 690:

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. - தூது 690 
 
இதை அரசியல் தூதுவாக எடுத்தால் பொருள் பிழை படும். ஆனால் இறைவனின் மறை உண்மையை எடுத்துச் சொல்லும் தூதனாக எடுத்தால், இதன் பொருள் மிகத் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், அதற்காக அஞ்சாமல் இறைவனின் சத்தியத்தைப் பேச வேண்டும் என்பதே இக்குறளின் உள்ளடக்கம்.

ஆகவே, தூது அதிகாரம் முழுவதையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது, இது

    • மறை நூல்களை தேவர்களிடம் பெற்று மக்களுக்கு தூது கூறும் தூதரைப் பற்றியதாகவும்
    • அரசியல் தூதர் மறைத் தூதர் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அடிப்படை குணங்களை வரையறுக்கும் அத்தியாயமாகவும் விளங்குகிறது.