Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏன் இசுலாமியர்கள் மற்ற மதத்தின் சாராம்சத்தினை பொருந்தி கொள்வதில்லை?

இறைவனின் திருப் பெயரால்

இந்த கேள்விக்கு மிக முக்கியமான ஆழமான காரணம் உண்டு. அடிப்படையிலிருந்து வருவோம்.!
  • நமக்கு தெரிந்த வைத்திய முறைகள், 
  • பழங்கால அறிவியல் சார்ந்த அறிவு, 
  • மொழி
  •  ஏனைய அடிப்படையான அறிவு மற்றும் 
  • சட்டங்கள் 
அனைத்தும் நன்றாக ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் மதம் சார்ந்த புத்தங்கள் வாயிலாகவே கிடைத்து இருக்கும்.

இத்தனை இரண்டு வகையில் பார்க்கலாம், 
  1. சாமி பெயரை சொல்லி மிரட்டினால்தான் மக்களுக்கு புரியும், மேலும் அவர்கள் அதனை முறையாக பின்பற்றுவார்கள் 
  2. இது நம்மை படைத்த இறைவன் நமக்கு வாழ வகுத்து இருக்கும் வழிமுறை.
முதலாவது வாசகம் வேதங்களை முற்றிலுமாக பொய் என்று மறுக்கும் அளவுக்கு வன்மையான வாசகம், ஆனால் இதற்கான வாய்ப்பு மிக குறைவு ஏனெனில் ஒவ்வொரு வேதமும் அதற்கே உரிய சிறப்புகளுடன் அது இறைவேதம்தான் என்று உறுதி படுத்தும் ஆச்சரியங்களை கொண்டு இருக்கும். அறிவியல் தத்துவம், வாழ்கை தத்துவம், பொருளாதாரம், காதல் மற்றும் அந்த அந்த கால, சமுதாய மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற சட்ட திட்டங்காளை கொண்டு இருக்கும். அவற்றில் சில இன்றளவும் அறிவியலாலோ மற்ற சில கோணத்தில் நோக்கும் போது விடை புரியா வினோதங்களாக இருக்கும். இந்த இறை வேதங்கள் மக்களுக்கு தூதர் / ரிஷி / அவதாரம் மூலமாக அளிக்கப் பட்டு வந்து இருக்கிறது.

வேத புத்தகங்களை வெறுமனே பிதற்றலாக எண்ணிவிடாமல், அதை அறியும் ஆவல் கொண்டு அதை படிப்பவர்களுக்கு தெரியும் அது கொண்டுள்ள அறிய மற்றும் ஆச்சரிய தகவல்கள்.

இதில் விஷயம் என்னவென்றால், மனிதனுக்கே உள்ள பெருமை குணம், (அனைத்து வேதங்களும் தத்துவங்களும் கண்டிக்கின்ற குணம்) என் வேதம் தான் பெரிது அதில் இல்லாதாவைகளே இல்லை என்று அது உண்மையில் போதிப்பது என்ன என்று அறியாத நிலையில் பெருமை கொண்டு மற்றவைகளை கீழ்தரமாகவோ அல்லது மருத்து பேச வைக்கிறது.

உண்மையை அறிந்தவர்களாக இருப்போமானால் வேதம் அதற்கு உரிய அனைத்து அத்தாட்சிகளையும் கொண்டுஇருக்குமானால் அது கண்டிப்பாக இறைவனிடத்தில் இருந்து வந்ததுதான் என்று விளங்கும்.

இறைவன் கொடுத்த ஓரு வேதத்தை கொண்டாடுவதும் மற்றொன்றை இழிவு படுத்துவதும் / மறுப்பதும் எந்தவகையில் அறிவுபூர்வமான செயல் என்று எனக்கு தெரிய வில்லை.

சரி ஒன்றுக்கொன்று முரண்பாடுகளை கொண்ட வேதங்களில் எதனை பின்பற்றுவது? அதற்கான பதிலும் இறைவன் வேதங்களில் கொடுத்துள்ளான்.

எப்படி மௌரியர் கால சட்டம் முகலாயர் காலத்திற்கு பொருந்தாதோ, எப்படி முகலாயர்கள் கால சட்டம் ஆங்கிலேய இந்தியாவுக்கு பொருந்தாதோ, எப்படி ஆங்கிலேய இந்திய சட்டம் சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தாதோ அதேபோல் வேத சட்டங்கள் அந்தந்த கால கட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் வழங்கப்பட்டது ஆகும்.

இன்னும் சுதந்திர இந்தியாவில் திருத்தப்பட்ட சட்டங்கள் பல உள்ளன, திருத்தப்பட்ட சட்டத்தை விட முந்தய சட்டம் தான் எனக்கு பிடித்து இருக்கிறது அதனயே நான் பின்பற்றுவேன் என்று நாம் சொல்லலாம், ஆனால் சட்டத்தை வகுத்து பாதுகாப்பவர்கள் பார்வையில் பழய சட்டம், செல்லாக் காசு மேலும் நீதி, திருத்தப் பட்ட சட்டத்தினைக் கொண்டே வழங்கப்படும். அதே போல் காலத்திற்கு ஏற்ப வேத சட்டங்களை கொடுக்கும் இறைவன் பார்வையில் எது திருத்தப் பட்ட அல்லது தற்போதய நடைமுறயில் உள்ள வேதம் என்று சிந்தித்து படித்து இல்லயேல் கேட்டாவது தெரிந்து கொள்வது நாம் கடமை ஆகும்.

எடுத்து காட்டாக முன்பெல்லாம் தங்கம் 5 கிலோ வரை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர சட்டம் அணுமதித்தது, இப்பொழுதோ நிலைமை அப்படி இல்லை. ஒருவேளை 5 கிலோ தங்கத்தை எடுத்து வருவீர்கள் ஆனால் பிடிபடுவீர்கள், அப்பொழுது நான் போன முறை எடுத்து வந்தேன் சட்டத்தில் வழி இருக்கிறது என்று சொல்வோமானால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்? சட்டம் மாட்ட்றப்பட்டுவிட்டது அது செய்தி தாள்களிலும் வெளியிடப் பட்டுவிட்டது, தெரிந்து கொள்வது உமது கடமை என்று சொல்வார்களா இல்லை, ஹோ உங்களுக்கு தெரியாதா, சரி நீங்கள் எடுத்து செல்லுங்கள் உங்கள் தங்கத்தை என்று சொல்வார்களா?

அதே போல் வேதத்தில் இறைவன் தெளிவான சட்டங்களையும் இது அவனது வேதம் தான் என்பதற்கான அறிகுறிகளயும் வைத்து இருக்கின்றான். தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. அனைத்து வேதங்களையும் படித்து எது உண்மை என்று அறிந்து கொள்ள முற்படுவது கொஞ்சம் கடினம்தான், எனவே இறைவன் அதர்கான அறிவையும் வாய்ப்பையும் சிலருக்கு கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக அதற்கென அற்பனித்து தங்கள் ஆராய்ச்சியினை உலகுக்கு தெரிய படுத்துகிறார்கள். அவர்கள் குறைந்தது 2 வேதமாவது முழுவதும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த அறிஞர்களின் ஆராச்சி படி புனித குர்ஆன் கடைசி வேதம் மேலும் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டி. மரியாதைக்கு உரிய திரு முகம்மது ஸல் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் / ரிஷி / அவதாரம்.

இறைவன் என்பவன் யார் என்பதை நாம் சரியாக விளங்கி இருப்போமானால், அவன் இந்த உலகத்தின் ஆதி மூலம், பர பிரம்மம், கர்த்தர், அல்லாஹ் அனைத்தயும் படைத்தவன் அவனே என்பது புரியும். என்றால் இதில் எங்கிருந்து பிராமினுக்கு ஒரு கடவுளும் தாழ்த்த பட்டவனுக்கு ஒரு கடவுளும் இஸ்ரேலுக்கு ஒரு கடவுளும் சீனர்களுக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும். இறைவன் ஒருவனே அவன் எங்கிருந்து வேண்டுமானாலும் அவனது கட்டளைகளை அனுப்புவான் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்வோம்.

ஒரு இஸ்லாமியனாக இருக்க சில அடிப்பதை தகுதிகள் இருக்கிறது.
  • அவன் இறைவன் ஒருவனே என்ற உண்மையை நம்ப வேண்டும், முகம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதை நம்ப வேண்டும். மட்டுமல்ல,
  • அனைத்து தூதர் / ரிஷி / அவதாரங்களையும் நம்புவானாக இருக்க வேண்டும்
  • அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும்
நாம் அறிந்த மொழி, அறிவியல், தத்துவம், சட்டம் மற்றும் அனைத்தும் உள்பட இறைவன் நமக்கு கற்று கொடுத்ததே அன்றி வேறில்லை என்பவைகள்.

சரி அனைத்து வேதங்களையும் ரிஷிகளையும் நம்புகிறோம் என்று சொல்கிற நீங்கள் ஏன் மற்ற மதத்தவரின் பண்பாடுகளை, நம்பிக்கைகளை, கடவுள்களை, ரிஷிகள் சொல்பவைகளை, வேதங்கள் சொல்பவைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவது இல்லை? என்று கேட்கலாம்.

இவை எல்லாம் ஒரே வார்த்தையில் அடிபட்டு போகின்றன. "நம்பகத்தன்மை"

முகம்மது நபிகள் இதனை சொல்லி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் அதனை அப்படியே பின்பற்றுதல் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அழகல்ல. ஏனெனில் அவர் போய் கூறவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான நம்பகத்தன்மையை அறிந்த பின்னரே அதனை ஏற்று நடப்பவர்கள் முஸ்லிம்கள். சொல்பவரின் நம்பகத்தன்மை, முகமது நபிகளிலிருந்து அது புத்தகமாக்க பட்ட வருடம் வரை உள்ள சங்கிலி தொடரில் உள்ள அனைவரின் நம்பகத்தன்மையும் ஆராயப்பட்டே நபிமொழிகள் பின்பற்ற படுகின்றன. புனித குரான் முகமது நபி காலத்தில் இருந்து இன்றுவரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை எனில் அது இறைவனால் அருளப்பட்ட விதம் அப்படியே இன்று வரை உள்ளது.

இது இப்படி இருக்க பழய வேதங்களில் உபநிஷான்களில் உள்ள நம்பகத்தன்மை யாராலாவது நிரூபிக்க முடியுமா? அதில் பலமாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து இருக்கும் என்றால் அந்த இறைவனின் வார்த்தை அதன் தூய வடிவில் இல்லை. அது போதிக்க பட்ட சங்கிலி தொடரில் இடையில் ஒருவரின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியதாக இருந்தாலும் அதன் நம்பக தன்மை போய்விடுகிறது. குறைந்தது இந்த வேதங்கள் உபனிசங்கள் இதுவரை கொண்டு வரப்பட்ட சங்கிலி தொடர் யாருக்கேனும் தெரியுமா? இதுவரை வேண்டாம், அது புத்தகமாக்கப்பட்ட வரை?

கிருஸ்தவர்களின் பைபிளும் யூதர்களின் தொரவும் பலமுறை அல்லது சிலமுறை மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்து மதத்தின் வேதங்கள் தோன்றிய கலகட்டமே யூகத்தின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. பண்பாடு கலாச்சாரங்கள் பற்றி சொல்லவே வேண்டியதிலை, வேத காலத்தின் உடுப்புக்கும் நடைமுறைக்கும் இப்பொழுதுக்கும் சம்பந்தமே இல்லை.

இன்னும் நாம் விளங்கியவர்களாக இருந்தால், இந்துமதம் என்பது சைவம், வைணவம் மற்றும் வட்டார சிறு மதங்கள் மற்றும் கலாச்சாரத்தின் கலவை. அதாவது வெவ்வேறு ரிஷிகளால் அருளப்பட்ட வெவ்வேறு மக்களுக்கான வெவ்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்ட போதனைகளின் சங்கமம். எனவேதான் அதில் இத்தனை முரண்பாடுகள்.

ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் இறைவனின் வேதம் மற்றும் சட்டங்கள் மனிதனால் கரை படுத்தப்பட்டு இருக்கும் பொழுது நாம் அதனை பின்பற்றுவது எந்த பலனையும் தராது. மேலும் திருத்தப்பட்ட சட்டம் இருக்க பழய சட்டத்தை பின் தொடர்வது நம்மை மீளா பிரச்சனையில் தள்ளிவிடும்.

நம்மையும் இந்த உலகையும் மிக நுணுக்கமாக முரண்பாடுகள் இன்றி படைத்த இறைவனை அவனை வணங்கும் முறைப் படி வாங்குவதும் அவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை ஆகும் இல்லயேல் அனைத்து மதங்கள்/வேதங்கள் சொல்லுவது போல் இறைவனின் கட்டளைக்கு அடிபணிபவர் சொர்ககத்திற்கும், இல்லயேல் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்...

அல்லாஹு ஆஹ்பர்.

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..!


அனைத்து சமயங்களும் நல்லதைத்தான் போதிக்கின்றன , ஆனால் அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் , மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர் , இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள் ,மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள் ,அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர் பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். ' ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான். என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் என்க்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும்இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.. என்று தனது உரையை முடித்து கூடியிருந்த அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தார். உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு ,வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டும்
என்பது தான் ஒரு நல்ல மனித பிறவியின் எண்ணமாக இருக்க வேண்டும் ,மக்களை பிரிக்கும் எந்த சூழ்ச்சியிலும் மாய்ந்து விடாமல் சிந்தித்து நியாயத்தின் பக்கமே இருக்க வேண்டும் மனிதனுக்காகவே மதம் ,மதத்திற்காக மனிதன் இல்லை என்பது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த சுவாமிஜி போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இப்படிமக்களை நல்வழி படுத்தி பண்படுதுவோமானால் நம் இந்தியாவை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.


இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம் என்று..?

தமிழ் ஹிந்து வலையில் ஒரு கட்டுரையினை படிக்க நேர்ந்தது தலைப்பு : "இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்" என்று... கட்டுரையினை தொடந்து வாசிக்க ஆரம்பித்தேன், அதில் கருத்துககளை பதிவிடும் வசதி எனக்கு இருக்கவில்லை மேலும் அதில் பின்னூட்டம் அளித்து இருந்தவர்களில் எந்த ஒரு இஸ்லாமியாரின் பெயரும் இருக்கவில்லை எனவே பதில் அளித்தாலும் நீக்கிவிட வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி இங்கே எழுதுகிறேன்..

அவரது பதிவு ஜாகிர் நாயக் அவர்களின் ஒவ்வொரு கருத்திற்கும் எதிராக பதில் அளிக்கும் விதமாக இருந்தது..

இதுவே அவரது பதிவு :http://www.tamilhindu.net/ 

"
ஏமாற்று வேலை" என்ற வார்த்தை இருந்ததால் பதிவிடும் அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றியது..

எழுதியவரே குறிப்பிட்டு உள்ளார் இதனை உலகுக்கு ஆராய்ந்து சொன்னவர் ஒரு வாங்கள பிராமணர் என்று, குறைந்த பட்சம் அவர் வாங்கள பிராமணரின் "கல்கியா? முகம்மததுவா?" என்ற நூலை படித்த பிறகு பதிவு இட்டு இருந்தால், நேரடியாக இஸ்லாமியர்களை குற்றம் சொல்லும் முன், அவர் உண்மையை அறிய ஆவல் உள்ளவர் என ஏற்று கொள்ளலாம்.. ஆனால் அவரது பதில் அனைத்தும் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டுமே இருந்தது... இதிலிருந்து அவர் ஒரு விஷயத்தைன் உண்மை தன்மையை அறிய ஆவல் உள்ளவர் போல் தெரியவில்லை..

ஏனெனில் உரை நிகழ்த்துபவர் பல-100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அப்படியே மேடையில் பேசுவது என்பது இயலாத காரியம் எனவே ஒருசில அவசியமானவைகளை மட்டுமே மேடையில் பேசுவார்.. எனவே அவர் சொல்லும் மூல நூலை வாசிக்காமல் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டும் பதில் அளிப்பது என்பது, வீண் விவாதமாகவே முடியும் எந்த பயனும் இருக்காது.எனவே அந்த புத்தகத்தை படிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம், அதன் link-ஐ பின்னே இணைத்துள்ளேன், ஆங்கிலம் படிக்க தெரிந்தால் படிக்கட்டும்.

ஆம் அவர் ஒரு வங்காள பிராமணர் மேலும் அவர் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றவர் மேலும் அவர் மதங்களை ஒப்பு நோக்கி வேதங்களை ஆய்வு செய்யும் அறிஞர்... அவர் ஆராய்ந்து ஒப்பிட்டு உலகுக்கு சொல்லுகிறார் முகம்மது நபி அவர்கள்தான் கல்கி என்று, இதை எந்த இஸ்லாமிய அறிஞனும் கண்டுபிடித்து சொல்லவில்லை.... இதனை வெகுவான மக்களிடம் கொண்டு சேர்த்தது மட்டும்தான் ஜாகீர் நாயக் அவர்களின் வேலை.

பண்டிட் வேதிக் பிரகாஷ் உப்பாதேயா இதுதான் அவர் பெயர்.. அவர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இங்கே கீழே..

English version :

1) http://www.scribd.com/doc/8620683/Kalki-Avtar-Book

2) http://www.scribd.com/doc/38885420/KALKI-AVTAR-in-English

Hindi version :

1) http://www.scribd.com/doc/46775221/Kalki-Avtar-Aur-Muhammad

Urdu version :

1) http://www.scribd.com/doc/17190132/Kalki-Avtar-Aor-Muhammad-S-URDU

Tamil version:

1) http://www.islamicbook.ws/tamil/tamil-35.pdf


  இந்த புத்தகம் வெளி வந்த ஆண்டு 1970-இல், உண்மையில் இதனை பிரபல படுத்தி இருக்க வேண்டியது இந்துக்கள்தான் ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு அவதாரம் ஏற்கனவே அவதரித்து அவரது போதனைகள் உலகில் பரவ ஆரம்பித்த நிலையில் அதனை ஏற்பதுதான் உங்களது வேதங்களை நீங்கள் முறையாக பின்பற்றுவதாக பொருள். இல்லயேல் பிழை உங்களிடமே.. வேதம் என்றால் என்ன? உபநிஷம் என்றால் என்ன? புராணம் என்றால் என்ன? என்று இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் பெரும்பாலான சகோதரர்களுக்கு தெரியவில்லை.. குரான் வசனம் தெரிந்த அளவுக்கு கூட அவர்களின் வேத வரிகள் அவர்களுக்கு தெரிவதில்லை.. பாவம் அது அவர்கள் குற்றமும் இல்லை.. 110 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் 1.3 சதவீதமே இருந்துகொண்டு 60-70% அரசு மற்றும் அரசியலில் உயர் பதவிகளில் இருந்து மறைமுகமாக இந்தியாவை ஆளும் வர்கத்தினர் செய்த தந்திரம், புத்தியாலும், கீழுள்ளவனை மூளைச்சலவை செய்து கத்தியை தூக்கவைத்து அதன் மூலமாகவும் பிரிவினைகளை தூண்டிவிடும் பாப்பனனின் கை பொம்மைகள் இவர்கள். வேதங்கள் கடவுளின் வார்த்தை அது அனைத்து மக்களுக்கும் பொதுவானது, ஆனால் நீ சூத்திரன், என்னையோ வேதத்தையோ தொட்டால் தீட்டு என்று கூறும் அவர்கள் இவர்களின் பார்வாயில் "சாமி". கொடுமை..

சரி அவரது வாதங்களையும் அவருக்கான பதிலயும் இங்கே எழுதுவோம்..

அவரது கேள்விகள்.

1) 
தமிழ் ஹிந்து :
விஷ்ணு என்றால் அல்லாஹ் என குரானில் எந்த வசனத்தில் இருக்கிறது?

பதில் : 
நீங்கள் கேட்பது, மில்க் என்றால் பால் என்று எந்த ஆங்கில இலக்கான நூலில் உள்ளது என்பது போல் உள்ளது?

விஷ்ணு என்ற வார்த்தைக்கு வேதங்கள் என்ன வரையறை வைத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒன்றுக்கோ அல்லது ஒருவனுக்கோ பெயரிடும்பொழுது அதன் பண்புகளுக்கு ஏற்ப்பபெயர் இடுவது இயல்பு, மரபு.. எனவே விஷ்ணு மற்றும் அல்லாஹ் இரண்டின் வரையறைகளை நோக்குவதுதான் அறிவாளியின் செயல். விஷ்ணு என்பதற்கு வேதம் என்ன வரைவிலக்கணம் கொண்டுள்ளது என்பதை பாருங்கள், நீங்கள் கொண்ட இலக்கணதோடு அல்ல.. ஒப்பிட்டால் இரண்டிர்குமான வேற்றுமை பாலுக்கும் மில்க்-கிற்கும் என்ன வேற்றுமையோ அதுமட்டும்தான் அதாவது மொழிதான் வேற்றுமை, பொருள் அல்ல.

2)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டு இருப்பது போல் நபியின் பிறப்பிடம் நீரினாள் சூழப்பட்ட அரபு பிரதேசம்.

தமிழ் ஹிந்து :
கல்கி நீரினாள் சூழப்பட்ட பகுதியில்தான் பிறப்பார்.. சரி அரேபியா மட்டும்தான் நீரினாள் சூழப்பட்ட பகுதியா? ஏன் மற்ற இடங்களிலோ இந்தியாவிலோ இல்லயா?

பதில் :
கல்கி அவதாரம் எங்கு பிறக்கவேண்டும் என்ற அதிகாரம் யார் கையில் உள்ளது? இறைவனுடய நாட்டம் அதுவாக இருந்தால் அதை தடுக்க உங்களால் முடியுமா?

3)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டது போலவே முகமது அவர்களும் உயர் குலத்தில் பிறந்தார்..

தமிழ் ஹிந்து :
மதிப்பு மிகுந்த குலத்தில் பிறந்தவரெல்லாம் கல்கி ஆகிவிட முடியுமா?

பதில் :
முடியாது தான், ஆனால் இதேபோல குறிப்பிடப்பட்டுள்ள மற்ற முன்னறிவிப்புகளும் பொருந்தும் ஒருவர் கல்கி அவதாரமாக தானே இருக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே ஒற்றுமை என்றால் உங்கள் கேள்வி சரி ஆனால் மற்ற ஒற்றுமைகளை அறிய நீங்கள் படிக்க வேண்டியது பண்டிதர் வெடிக் பிரகாஷ் எழுதிய புத்தகத்தை அதுவும் முழுமயாக. ஜாகிர் நாயக்-இன் உரை ஒரு முன்னுரை மட்டுமே.

மேலும் அவர் கேட்கும் அடுத்தடுத்த குதிரை மற்றும் வாள் போன்ற கேள்விகளுக்கு பிரகாஷ் அவர்களின் புத்தகமே அவருக்கு பதில் கூறும்.

4)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரம் வாள் ஏந்தி எதிரிகளுடன் சண்டை இடுவார் என்பது கல்கி புராணத்தில் சொல்லப்பட்ட தீர்க தரிசனம், மேலும் வாள் ஏந்தி சண்டையிடும் முறை வழக்கொழிந்து போய்விட்டது, எனவே அவர் ஏற்கனவே வந்து இருக்கவேண்டும், இனி வரப்போவது இல்லை.

தமிழ் ஹிந்து :
ஆகா என்ன கண்டுபிடிப்பு, பல காரணங்களுக்காக 3ம் உலகப்போர் வெகு விரைவில் ஏழபோகிறது எனவே அதன் காரணமாக பீரங்கி துப்பாக்கிகள் எல்லாம் அழிந்து போகும் பின்பு வில்லும் அம்பும்தான்

பதில் :
உங்களின் அதிசிறந்த கற்பனை திறன் நம்மை திகைக்க செய்கிறது ஹாலீவுட்ல் உங்களை போன்ற ஆட்களுக்கு வரவேற்ப்பு அதிகம்..

5)
தமிழ் ஹிந்து :
ஏன் முகலாயர்கள் இந்த உண்மையை வெளிகொண்டு வரவில்லை? அப்பொழுது இருந்த இஸ்லாமிய அறிங்கர்கள் ஏன் இதை செய்யவில்லை?

பதில் :
அருமயான கேள்வி.. கல்கி புராணம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது, எனவே அதனை ஆராய்ந்து சொல்லும் கடைமையும் பொறுப்பும் சமஸ்கிருத மொழியில் வேத புராணங்களை கொண்ட உங்களுக்குத்தான் உள்ளது.. இப்பொழுது நாங்கள் கேட்கிறோம் இதை கண்டு பிடித்து சொல்ல உங்களுக்கு 1200 வருசமா? சரி தாமதம்தான் செய்துவிட்டேர்கள் பரவாயில்லை, உங்கள் பண்டிதர் ஆராய்ந்து விளக்கியபிறகாவது ஒத்துக்கொண்டீர்களா? ஏறக்குறைய 30 வருசத்திற்கு மேல்தான் எங்கள் அறிவிற்க்கு வந்தது, இதனை உலகறிய செய்தால் இஸ்லாமியர்கள் ஏமாற்று வேலை செய்கிறோம் என்கிறீர்கள்..

6)
தமிழ் ஹிந்து :
முகம்மது நபி அவர்களை முன்பே சொன்ன ஹிந்து மதத்தை ஏன் பின்பற்ற கூடாது?

பதில் :
மிக மிக அருமயான கேள்வி.. அதற்கு முன் ஒரு சின்ன கேள்வி? நீங்கள் 4 வேதத்தில் எந்த வேதத்தை பின்பற்றுகின்றீர் அல்லது எந்த புராணத்தை பின்பற்றுகின்றீர், எதாவது ஒன்றை சொன்னால் மற்றவைகளை புறக்கணிக்கின்றீர் ஏனெனில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துககளை கொண்டது .. நீங்களே உங்கள் மதத்தை புறக்கணிக்கும்போது நாம் ஏன் செய்யக்கூடாது.. அனைத்தயுமே பின்பற்றுகின்றேன் என்று சொல்வீர்கலான ரிக் வேதத்தில் அக்னி தான் பெரிய கடவுள் யாஜுர்-இல் ஈஷ்வரன் தான் பெரியகாடவுள், அடுத்த இரண்டில் விஷ்ணு தான் பெரிய கடவுள்.. இதில் எது உண்மை..? ஒவ்வொரு புரணமும் அந்தந்த கடவுளைதான் பெரிய கடவுள் என்கிறது.. ஐதாரேய உபநிஷத்தை எடுத்து படியுங்கள், அது படைப்பு பற்றி பேசுகிறது.. கடவுள் முதன் முதலில் பிரம்மனை படைத்தார் என்கிறது, யார் அந்த கடவுள்? பதில் எங்களிடம் உள்ளது.. அவன் ஒரே இறைவன், வணங்க தகுதி உடையவன்.. மற்ற அனைத்தும் படைக்க பட்டவைகள்.. ஆனால் பிரம்மனையே கடவுள் எங்குறீர்கள்.

யார் அசம்பூதியை (இயற்கை/படைக்க பட்டவைகள் ) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - அதர்வவேதம் 40 : 09

அவனது வேத உபதேசங்கள் அதன் சாரத்தை விட்டு மக்களால் மருவும்போதும் மாறும்போதும் அவன் அடுத்த தவறுகள் திருத்தப்பட்ட வேதத்தை மக்களுக்கு ரிஷிகள் மூலம் அனுப்புகிறார்.
புதுமயான கருத்தாக இருக்கிறதா? ரிக் வேதம் 10 பகுதிகளை கொண்டது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரிஷிகளால் பெரும் கால இடைவெளிகளில் எழுதப்பட்டது என்பது பதிவு செய்யப்பட்ட உண்மை. இதேதான் மற்ற அனைத்து வேதங்களுக்கும் பொருந்தும் . மேலே குறிக்கப்பட்ட இஸ்லாத்தின் கருத்து சரியென்றால் தான் இந்த உண்மை சாத்தியம்

முகம்மது நபி அவர்கள் ஒரு குரு/ஆசிரியர் என்று கல்கி புராணம் சொல்லுகிறது, என்றால் அவர் போதனைகளை பின்பற்றவா இல்லை நீர் சொல்லுவதாயா? அல்லது ஒன்றுக்கொன்று முரணான ஹிந்து மாத்தையா?

எந்த மதத்தையும் இழிவு படுத்த விரும்பவில்லை என்ற வார்த்தையை பயன் படுத்தியதற்கு நன்றி.. ஆனால் பொய்யான பரப்புரை மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவத விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. இது பொய் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்? வேத புராணங்களையும், குர்ஆன் ஹதீசையும் அதன் மூல மொழியில் படித்து இவைகளை பற்றிய தீர்காமான அறிவு கொணாடவரா நீங்கள்? இல்லை இந்திய மற்றும் இஸ்லாமிய மதங்களின் வரலாற்றை முழுவதும் அறிந்தவரா? நீங்கள் வலைத்தளங்களில் இது சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் விரைவில் அளிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. நல்லது, அதற்குமுன் இஸ்லாமை பற்றி தீர்காமாக படித்து கொள்ளுங்கள், ஏனென்றால் ஹிந்து மதத்தினரை போல் நாம் ஏன் எதற்காக இந்த மதத்தில் இருக்கிறோம் என்று உள்ளவர்கள் இங்கு குறைவு...

மேலும் வேறொரு பதிவில் முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் - http://www.tamilhindu.net/ 

முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிட பட்டு உள்ளது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒத்துக்கொண்டு உள்ளார், அவரை போன்ற ஹிந்து மத அறிஞர் சொல்லுவதை கேட்கவா? இல்லை நீர் சொல்லுவதை உண்மை என்று நம்பவா? https://www.youtube.com/ 

“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் இறைவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். - 3:64

மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)

உங்களுக்கு நான் உபதேசம் செய்ய நாடினாலும்! அல்லாஹ்! உங்களை வழிகெடுக்க நாடியிருந்தால் என் உபதேசம் உங்களுக்கு பலனளிக்காது! அல்லாஹ் பக்கமே! நீங்கள் மீட்டப்படுவீர்கள்! -ஹூது 11:34

அஸ்லலாமு அழைக்கும்.

குறிப்பு : தமிழ்ஹிந்து இணயததளம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவாவை பரப்பும் ஒரு இணயதளம் என்பதை இந்த கட்டுரை எழுதிய சில மதங்களுக்கு பிறகே தெரிந்து கொண்டேன்.. இந்த இணயததாளத்தின் குறிப்பிடத்தக்க வேண்டிய சில செயல்பாடுகளாவது,

1) இஸ்லாமியர்களையும், அவர்களது வரலாறு, வேதம், மற்றும் கலாச்சாரத்தை கடுமையாக சாடிஇருக்கின்ற நிலையில், அவர்களுக்கு பதில் கூறும் வகையில் இஸ்லாமியர்கள் கருத்து எழுத அனுமதிக்க படுவதில்லை. ஒரு இஸ்லாமியாரின் பின்னோட்டத்தையும் காண முடியவில்லை. இவர்களின் சிந்தனை போக்கு இதன் மூலம் அறியப்படுகிறது.

2) ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவா-க்களின் செயல்பாடுகளை வரலாறு அறியாதவர் நம்பிவிடும் அளவுக்கு ஞாயபடுத்தி எழுதப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். & ஹிந்துதுவா என்பது என்ன? அதன் வரலாற்று பின்னணி என்ன? என்பதெல்லாம் நான் பேசிய எனது பெரும்பாலான நண்பர்களுக்குத் தெரியவில்லை, எனவே அவர்கள் யேமாறுவது சுலபமே..

3) குருஜி கோல்வால்கேர்-ஐ ஏகத்துக்கும் புகழ்கிறது, அவ்வளவு தகுதி உடையவர் என்றால் ஏன் தேர்தலின் பொழுது அவரது பெயரையோ கொள்காயையோ முன்னிறுத்தவில்லை?

4) அவர்களின் இணயத்தளத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் "தமிழரின் தாய்மதம் ஹிந்து மதம்"! தமிழ் தோன்றிய காலமே ஒரு குத்துமதிப்பகத்தான் கணிக்கப்பட்டு உள்ளது, ஆனால் சைவம் தமிழ்நாட்டில் வந்தது 1200 ஆண்டுகள் முன்புதான், சைவ வரலாறு சொல்லும் உண்மை இது, 1250 ஆண்டுகளுக்கு முந்தய சிவன் கோவில் ஒன்றை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் எவராலும் காட்ட முடியாது. அப்படி இருக்க ஹிந்து எப்படி தமிழரின் தாய் மதமானது?

5) அனைத்து மதமும் சொல்லும் ஒரே கொள்கையை "படைத்தவனை மட்டும் வணங்குவது, அந்த இறைவன் மட்டுமே வணங்க தகுதி படைத்தவன்" அதில் திரிபு ஏற்படும் பொழுது மறுமலரிச்சியாய் வரும் போதனைகளை புதிய மதமாக பார்க்கும் கண்களில் தான் பழுது. என்மதம் பழமையானது அதுவே சிறந்தது என்று பெருமை அடிப்பது எனபது, இந்த வாள்தான் பரங்கியரின் தலயை கொய்த வாள் இதை வைத்தே நான் இன்று சீனர்களை யுத்தத்தில் வெல்லுவேன் என்பது போல் ஆகும்... வாளின் காரணம் யுத்தம், மதத்தின் காரணம் வாழ்க்கை நெறி, வாள் துருப்பிடிக்க, வேறுவரால் வேறொரு இடத்தில் அது மெருகேற்ற பட்டால் அது வேறு வாள் ஆகாது.. அதே போல் மதங்கள் மனிதனுக்கான போதனைகளுடன் ஒரே இறைவனிடமிருந்து வந்தது, அதை வேறொரு மொழி பேசுபவர் வேறொரு நாட்டிலிருந்து வருபவர் சீர்செய்தால் அது எப்படி வேறொரு மதமாகும்? துருப்பிடித்த வாளும் திரிந்துபோன மதமும் யாருக்கு என்ன பலன் தர முடியும்?

இஸ்லாம் இந்தியாவில்..!

   1000 ஆண்டுகள் இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும் ..
    800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.
   வேறு நாட்டு அல்லது மொழியில் வந்த மதத்தை பின்பற்ற கூடாது என்றால் வட நாட்டில் இருந்து வந்த சமஸ்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்களை பின்பற்றுபவர்கள்தான் முதலில் அதை நிறுத்த வேண்டும்.
    தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரிய வில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..
    வாருங்கள் இஸ்லாமிற்கு நாட்டின் அரசானையும் மார்க பண்டிதார்களையும் சகோதரனாய் கட்டி தழுவலாம்.. எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் அவன் உன்னை விட தகுதியில் உயர்ந்தவனும் இல்லை, ஏழை உன்னை விட தாழ்ந்தவனும் இல்லை.இஸ்லாமிய வேதத்தை படிக்க முஸ்லிம் அல்லாத, அவர் மதத்தில் வேதங்களை கற்றுக்கொள்ள அருகதை அற்ற தாழ்ந்தவராக கருத படுபவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு...
    ஹிந்து என்ற சொல் ஏதேனும் வேத புராண இதுகாசங்களில் இருக்கிறதா என்று தேடி பார்க்கவும்.. நமக்கு வெள்ளயன் வைத்த பெயர் ஹிந்து.. குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு குறிப்பிடும் சொல் அது, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள்.. அது மதம் இல்லை. மதமா இருந்தால் வேத புத்தகங்களில் காட்டுங்கள் பார்கலாம். சைவம் வைணவம் வைதீக மதங்கள் இன்னும் பற்பல வட்டார மதங்கள் மற்றும் கடவுள்களின் கலவைதான் ஹிந்து மதம்.. இதை நான் சொல்லவில்லை இந்து மதத்தின் வேத இதிகாசங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ரஷ்யாவை சேர்ந்த ஆன்டோநோவா எழுதிய இந்திய வரலாறு என்ற புத்தகம் பதிவு செய்த கருத்து இவைகள்.இது வெறும் உதாரணம்தான், இன்னும் பற்பல ஆதாரபூர்வமான புத்தகங்களையும் ஆராய்ச்சிகளையும் தர முடியும்
   இப்படி கலவையாக இருந்தால் எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்கு முரணான கருத்தும் அதிலேயே இருக்கும்.
    உதாரணத்திற்கு கடவுள் ஒன்றே, அவருக்கு உருவம் இல்லை என்று என்று ரிக் வேத ஆரம்ப சுலோகங்கள் சொல்கிறது, 9 மண்டலம் வரை இதையே தான் சொல்கிறது, 10 வது மண்டலத்தில் தான் மற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள், உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டீர்கள் ஆனால், 10 மண்டலங்களும் வெவ்வேறு ரிஷிகள் மூலம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டது.. அதிலும் இந்த 10வது மண்டலம் எழுதியவர் யார் என்பது விடை இல்லா கேள்வி... மண்டலம் 10 தான் உருவ வழிபாடு கொள்கையின் முதல் அடியிட்ட வரிகள்.. அதனை அடிப்படையாககொண்டுதான் உருவ வழிபாடு சித்தாந்தங்கள் வளர்ந்து இருக்க வேண்டும். யார் எழுதினார், அவர் சுபாவம் என்ன, நல்லவரா? கெட்டவரா? என்றே தெரியாத கொள்கையைத்தான் நாம் முன்னோர்கள் தொன்றுதொட்டு நம்பி வந்துஉள்ளனர்.
    இதை நான் சொல்லவில்லை ஹிந்து பண்டிதர் ஒருவர் எழுதிய கட்டுரையில் படித்தது. என்றால் முதல் 9 மண்டலம் சொல்வது சரியா இல்லை 10 வது மண்டலம் சொல்வது சரியா?
    நான் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று இறைவன் கீதையில் சொல்கிறான், ஆனால் க்ரிஷ்ணர் கடவுள் என்கிறீர்கள்? க்ரிஷ்ணர் பிறந்தார் மேலும் இறக்கவும் செய்தார்.. ராமரும் அதே வகைதான்.. இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், நல்ல மனிதர்களாக, புனிதர்களாக, ரிஷிகளாக, இறைத்தூதர்களாக ஆனால் கடவுள்களாக இல்லை.. இது என் கருத்து இல்லை. மேலே சொல்லிஇருக்கும் கீதையின் கருத்து இதுதான், மேலும்
    படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில்
அழுத்தப்படுவர்! - என்று யஜூர் வேதம் 40:9 இல் சொல்லப்பட்டு உள்ளது
      யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - என்று அதர்வவேதம் 40 : 09 இல் சொல்லப்பட்டு உள்ளது
       வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். என்று பகவத்கீதை 7.20 இல் சொல்லப்பட்டு உள்ளது
   இவைகளெல்லாம் சொல்வது என்ன? இயற்கையயும் படைப்பிணங்களாகிய மனிதனையும் விலங்குகளையும் வணங்காதீர்கள் என்றுதானே.. மனிதனை படைத்தது ஆதிபகவான் என்னும் தொடக்கமும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த ஒரு இறைவன் தானே? இவ்வாறு வேதங்கள் சொல்ல மற்ற முரணான கருத்துக்கள் எங்கிருந்து வந்தன?
    நீங்கள் கடவுள்களாக குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்களாகவே சொல்லுகிறது புராணங்கள்.. ஆனால் கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தவர் தானே, இங்கே பிறந்ததாய் சொல்ல படும் கடவுள்கள் ஏன் மற்ற நாடுகளில் மற்ற மொழி பேசும் இடங்களில் பிறக்கவில்லை...? என்றால் அவர் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? ஆம் என்றால் அவர் கடவுளாய் இருக்க வாய்ப்பு இல்லை.. இல்லை என்றால் உங்களின் புரிதலும் செயலும் தவறு.. அடிப்படை அல்லவா இது..?
    மற்ற வேதங்கள் இறைவன் ஒருவனே என்கிறது, அனேகர் அதயே பின் தொடர்கிறார்கள்.. அதை போதித்தவர்களை ரிஷிகள், சித்தர் , தூதுவர் என்று குறிக்கப்படுகிறது, கடவுள் என்று இல்லை.. ஹிந்து மதத்திலும் அதே சொல்ல பட்டு இருக்கிரது, துரதிஷ்டம் என்னவென்றால் இறைவன் ஒருவனே அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன், என இஸ்லாம் சொல்லும் அனைத்தையும் ஹிந்துமதமும் சொன்னாலும் இந்த கருத்துக்கு முரணான கருத்தையும் சேர்த்து சொல்கிறது.. இதனை ஆராய வாய்ப்போ ஆர்வமோ எவருக்கும் இல்லை.
    ஏனென்றால் சம்ஸ்கிருதம் தெரிந்தவரும் பழந்த்தமிழ் தெரிந்தவரும் வெகு குறைவு. மேலும் பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளை பெருகி கொள்ள ஆர்வம் கொண்ட நாம் எது உண்மை என்பதை அறிய ஆர்வம் கொண்டவர்களாக இல்லை.
    பாவிஷ்ய புராணம் பகுதி 3 ,3,5 இல் முகமது நபி அவர்களின் பெயருடன் அவரது வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது (ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மை இது, முடிந்தால் வீதெோவை தேடி பாருங்கள் இல்லயேல் நான் தருகிறேன்). மேலும் 10 அவதாரங்களில் 10வது அவதாரமாக கருத்தப்படும், கல்கி புராணத்தில் குறிக்கப்பட்ட கல்கி அவதாரம் தான் முகம்மது நபி என்று நிரூபிக்கப்பட்ட உண்மை.. நிரூபித்தது இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக உப்பாத்தேயா என்ற சம்ஸ்கிருத அறிஞர்.
    9 அவதாரங்களை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் 10-வது அவதாரத்தை ஏற்க்க மறுக்கிறோம்? அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? வேறு மொழியை சேர்ந்தவர் என்பதாலா? வேறு கொள்கை உடயவர் என்பதாலா?
    நாட்டை பற்றி கவலை படுவீர்களானால் நேற்றய திருப்பதி தமிழ்நாடு உடையது, இன்று ஆந்திராவிற்கு.. நாளை? நேற்றய நாடு இன்று பற்பல நாடுகளாக பிளவுகளுடன், நேற்றய பற்பல நாடுகள் இன்று ஒருங்கிணைந்த நாடாக.. இது வரலாறும் புவியியலும் அரசியலும் கட்டித்தந்த பதிவுகள்.. மறுப்பதற்கு இல்லை..
    மொழி ஒரு தடையா? என்றால் முந்தய 9 அவதாரங்களின் மொழி என்னவென்று தெரியும்? சமஸ்கிருததமாக இருந்தாலும் அது நமக்கு அந்நிய மொழியே.. அனைத்து அவதாரங்களின் மொழி சம்ஸ்கிருதம் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் வரலாறு வெறும் ஒரு சில ஆயிரம் ஆண்டுகாள் தான் ஆனால் இந்த அவதாரங்களின் கலகட்டமோ இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.. மேலும் பல ஆய்யிரம் ஆண்டுகாள் என்று சொல்லுவோரும் உண்டு.. எனவே எந்த மொழி அவர்களின் மொழி? அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே சர்ச்சைக்கு உரிய விஷயம், இதில் எங்கிருந்து அவர்களின் போதனையை பொய் கலக்காமல் அல்லது மறுவாமல் நாம் உண்மையை அப்படியே அறிவது? மொழி தடை எனில் முதலில் ஒதுக்க வேண்டியது தமிழ் சமணர்களை கழுவேற்றி கொலைசெய்து சைவ வைணவ மதங்களை தமிழ்நாட்டில் பரப்பிய ஆரியர்களின் அந்தணார்களின் சமஸ்கிருத போதனைகளைத்தான் நாம் விட்டு தள்ளவேண்டும்.
    வேறு கொள்கையை கொண்டவரா? தமிழன் நாம் வர்ணங்களை கொண்டவர்கள் இல்லை... இங்கு அந்தணனும் இருந்ததில்லை சூத்திரனும் இருந்ததில்லை.. அனைவரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே, ஒருவனின் உயர்வு தாழ்வு அவன் செய்த கருமங்களே தீர்மானிக்கும்.. தமிழன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவன், என்றால் முகம்மது நம் குலமல்லவா? அவர் போதிப்பதும் ஒன்றே குலம் ஒரே தேவனை அல்லவா? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை போதித்த அவதாரம் கல்கி / முகம்மது நபி அவர்கள்.. வார்த்தை பிரயோகங்கள் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றே.. சைவம் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இலக்கியத்திலும் புகுவதற்கு முன்னால் தமிழனின் கொள்கை வணங்க தகுதி படைத்தவன் உருவமற்ற ஒரேகடவுள், படைத்தவன் அவனே, அதை தான் கல்கி அவதாரமாகிய முகம்மது நபி அவர்கள் போதித்து சென்று உள்ளார்கள்..
     மேலும் இவர்தான் 10 வது அவதாரம் என்று உறுதிசெய்த பின்னர் ஏற்க மறுத்தோமானால், நாம் உண்மையில் நாம் வேதங்கள் (இறைவனின் வார்த்தை) சொல்வதை மீறியவர்கள் ஆகின்றோம்.. பின் நாம் கஷ்ட கலங்களில் "நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்று சொல்ல தகுதி அற்றவர் ஆகி விடுகின்றோம்"
     யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் போதுமான ஆதாரம், ஸாங்க் ஆஃப் சாலமோன் 5:16 இல் முகம்மது அவர்களின் வருகை பெயருடன் குறிக்கப்பட்டு உள்ளது.
     சரி இருக்கிறது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் உங்கள் வேதத்தையும் இறைவனையும் நம்பியவர்களாகவும் வணங்கியவர்களாகவும் இருந்தால், உங்கள் வேதம் சொல்லியிருக்கும் முன்னறிவிப்புகள் ஏன் என்று சிந்தியுங்கள்.. முகம்மது அவர்கள் வரும் காலகட்டத்தில் அவரையும் அவரது போதனையையும் ஏற்கவேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முற்சென்ற ரிஷிகளின் போதனைகள் பாழ் படும்போழுது அதனை சரிசெய்ய அடுத்து ஒரு ரிஷி அல்லது தூதரை அனுப்புவது இயற்கை.
    ஆதாரம்?, நான்கு வேதங்களும் வெவ்வேறு ரிஷிகளால் எழுத்த பட்டது, மட்டுமல்ல ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மண்டலமும் வெவ்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டது . இதுபற்றி கிருஸ்தவர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் ஹிந்துக்களை போல் அன்றி அவர்களுக்கு அவர்களது பழய புதிய ஏற்பாட்டின் கதை தெரிந்து இருக்க அனேக வாய்ப்பு உள்ளது.. ..
     அனைத்து மதங்களின் வேதங்களின் சாரம் படைத்த ஓரிறைவனை மட்டும் வணங்குவது, இஸ்லாம் மட்டுமே அதில் உறுதியாக இருப்பதால் என் மார்கமாக இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.
    என் கருத்துடன் உங்கள் கருத்து வேறுபடுகிறதா? ஆம் இறைவன் அவனது வேதத்தில் சொல்லுகிறான்
    மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)
கடவுள் நம்பிக்கை என ஒன்று இருந்தால் சிந்தியுங்கள்.. இது விளையாட்டோ, தேவை அற்றதோ இல்லை, விஷயம் கடுமையான விளைவுகளை கொண்டது.