ஆங்கிலமும் இந்தியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலமும் இந்தியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆங்கிலமும் இந்தியும்


மொழியை வெறுப்பவர்கள் அல்ல தமிழர்கள்.

இந்தியும் ஆங்கிலமும் ஏறக்குறைய சில நூற்றாண்டு வயதுடைய மொழிகளே

ஆங்கிலத்தை ஏற்பதன் காரணம்,

  1. தமிழர் வரலாற்றில், கடல் கடந்து சென்று வாணிபம் செய்ததை காணமுடிந்த நம், எப்படி நாம் அந்நியர்களோடு உரையாடி இருப்போம் என்று சிந்திக்க கடமைப் பட்டு உள்ளோம். நாம் அவர்களிடம் பொருளீட்ட முயற்சித்ததால் அவர்களது மொழியை நாம் தான் கற்று இருக்க முடியும். இந்தவகையில் ஆங்கிலத்தையும் நாம் ஏற்றுள்ளோம். 
  2. இரண்டாவது தமிழர்களின் சங்க நூல்களை மற்றும் வரலாற்றை மீட்ருவாக்கம் செய்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானது.
  3. மூன்றாவது ஆங்கிலம் என்பது உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு பொது மொழி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு மொழியை பொது மொழியாக ஏற்பதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், ஏற்கப்பட்ட பொதுமொழி மற்ற மொழிகளை காலப்போக்கில் அழித்தொழித்து ஓங்கி நிற்கும். ஹிந்தியே அதற்கொரு உதாரணம், வடக்கில் உள்ள பெங்காலி, காஷ்மீரி, பீஹாரி, அஸ்ஸாமி, மராட்டி போன்றவைகள் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மொழி அழிந்தால் வரலாறும் அழியும், வரலாறு அழிந்தால் அதன் தரும் நடுக்கம் கோரமானது.

ஆனால் இந்தியை வெறுப்பதற்கான காரணம்: திணிப்பு

  1. இந்தி தமிழை அழிக்க முயல்கிறது
  2. கீழடியை மூட முயன்றது
  3. தமிழரின் தொன்மைக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது
  4. தமிழர் நாட்டை பறிக்க 2 கோடி வடக்கர்களை இங்கே களமிறக்கி வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது
  5. இங்கே வந்து பிழைக்கும் கொத்தனார் சித்தாள் கூட, முடி திருத்துபவன் கூட, பாணிபூரி விற்பவன் கூட தமிழை கற்று பேச மாட்டான், நாம் இந்தி கற்றுக்கொண்டு பேசணும்! இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.!