ஆத்மா (அ) உயிர்

தமிழர் சமயம்


உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?
உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?
உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது? 

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பது போலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர். 
 
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...' (பாடல் 724)

உடல் அழிந்து விட்டால், உயிரும் உடலை விட்டு நீங்கி விடும்.பின், உயிருக்கு உற்ற துணையான, மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருளை சேர முடியாது. அதனால் உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது பொருள்.

எல்லோரும் உடம்பை சதைப் பிண்டம், உடல் தேவையற்ற பாரம் என்றே பாடியிருக்கிறார்கள்.

அழுகணிச் சித்தர்,

"ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ...'

என, உடம்பை துர்நாற்றம் வீசுகிற "ஊற்றைச் சடலம்' எனக் குறிப்பிட்டார். ஆனால், திருமூலரோ "உடலைப் பாதுகாக்க வேண்டும்' என்கிறார். அடுத்த பாடலில்,

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (பாடல் 725)

எனப் பாடுகிறார்.

இந்த உடம்பை பாவச்சுமை, இழுக்கானது என நினைத்திருந்தேன். இந்த உடம்பில் பரம்பொருள் இருப்பதை அறிந்தேன். உடம்புக்குள் உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருப்பதால், உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.

நம் உடம்பை நல்லபடியாக வளர்த்து, பேணிப் பாதுகாத்தல் அவசியம். ஏனெனில் அது இறைவன் வசிக்கும் இடம்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர். 

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உடம்பை வளர்ப்பது என்றால் நன்றாகத் தீனி போட்டு வளர்ப்பது, விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வது என்று பொருள் அல்ல... இறைவனின் வசிப்பிடம் என்பதை உணர்ந்து, அதைத் தவறாக பயன் படுத்தாமல், நல்ல நெறிகளின் படி வாழ்வது, ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றே பொருள். 

 

இந்துமதம்


அவ்யக்தோ யமசிந்த்யோ யமவிகார்யோ யமுச்யதே ।
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோ சிதுமர்ஹஸி ।। கீதை 25

இந்த ஆத்மாவானது புலன்களால் அறிய முடியாதது, சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என சொல்லப்படுகிறது. ஆத்மாவை இவ்விதம் அறிந்து துயரத்தை அகற்று.

 

இஸ்லாம்


(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. - (குர்ஆன் 85)

 செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன். - (குர்ஆன் 2:173)

 

கிறிஸ்தவம்


உயிரின் ஊற்று நீங்கள்தான்(சங்கீதம் 36:9)

ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. -  (உபாகமம் 12:23)

ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. - (லேவியராகமம் 17:11)

 

26 கருத்துகள்:

  1. உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று
    அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
    என்று பார்ப்போமா?
    “உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
    வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
    - திருமந்திரம் – 309
    “உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
    - திருமந்திரம் 197
    இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே
    உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு. (௩௱௪௰ - 340)
    உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்! (௩௱௪௰)
    —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) https://www.thirukkural.net/ta/kural/adhigaram-034.html

    பதிலளிநீக்கு
  3. ஏலாதி 69 Elati 69
    எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே,படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர் ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் வேறு தொழிலாய் விரித்து. 69

    எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
    படுத்தலோடு ஆடல் பகரின் - அடுத்துயிர்
    ஆறு தொழிலென் றறைந்தார் உயர்ந்தவர்
    வேறு தொழிலாய் விரித்து. 69

    உயிரானது
    உடலில் பிறவி எடுக்கும்
    உடலில் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முடங்கிக் கிடக்கும்
    உடலில் நிமிர்ந்து நிற்கும்
    உடலில் நிலைகொள்ளும்
    உடலில் படுத்துறங்கும்
    உடலில் படமெடுத்து ஆடும்.

    சொல்லப்போனால், உயிரை அடுத்திருக்கும் தொழில்கள் இந்த ஆறும் என்று உயர்ந்தோர் விரித்துச் சொல்லிவைத்துள்ளனர்.

    https://vaiyan.blogspot.com/2017/03/69-elati-69.html

    பதிலளிநீக்கு
  4. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
    உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
    உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
    உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே. சிவவாக்கியம் 91

    உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா? உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. உயிருநன்மையா லுடலெடுத்துவந் திருந்திடும்
    உயிருடம்பொழிந்தபோது ரூபரூப மாயிடும்
    உயிர்சிவத்தின் மாய்கையாகி யொன்றையொன்று கொன்றிடும்
    உயிரும்சத்தி மாய்கையாகி ஒன்றையொன்று தின்னுமே. சிவவாக்கியம் 120

    உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும், உடம்புச் சக்தியாகவும் இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர், உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.

    பதிலளிநீக்கு
  6. கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தெவ்விடம்
    உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தெவ்விடம்
    அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற தெவ்விடம்
    திருக்கறுத்துக் கொண்டதே சிவாயமென்று கூறுவீர். 168

    தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.

    கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தேயுவில்
    உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தப்புவில்
    அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற வாயுவில்
    திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர். 169

    ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ‘சிவயநம’ என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. உயிரிருந்த தெவ்விட முடம்பெடுத்த தின்முனம்
    உயிரதாவ தேதடா வுடம்பதாவ தேதடா
    உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தேதடா
    உயிரினா லுடம்பெடுத்த வுண்மைஞானி சொல்லடா. 221

    இந்த உடலை எடுப்பதற்கு முன் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லுங்கள். உடலாக உருவெடுக்கும் முன்ப உயிர் ஆகாயத்தில் இருந்தது. உடல் அம்மையின் கருவில் உள்ள தீட்டு. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அனைத்தும் அச்சிவமே.

    பதிலளிநீக்கு
  8. உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்த நாதமும்
    கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
    அருட்டரிப்ப தற்குமுன் னறிவுமூலா தாரமாம்
    குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. 222

    குணங்கெடும் குருக்களே! உடல் உருவாவதற்கு முன் உயிர் வானத்தில் நாதமாக இருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடல் தாயின் கருவறையில் சுரோணிதமாய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடலில் உயிர் சூக்குமாய் இருப்பதைக் குறித்தறிந்து கொள்ளுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. சிவவாக்கியம்

    உயிரகத்தில் நின்றிடு முடம்பெடுத்த தற்குமுன்
    உயிரகார மாயிடு முடலுகார மாயிடும்
    உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தச்சிவம்
    உயிரினா லுடம்புதா னெடுத்தவா றுரைக்கினே. 232

    உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றிருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடல் உகாரமான சக்தியாகவும் இருக்கும். உயிரையும் உடலையும் ஒன்று சேர்ப்பது சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உரைக்கிறேன்.

    அண்டமேழு முழலவே யனந்தயோனி யுழலவே
    பண்டுமா லயனுடன் பரந்துநின் றுழலவே
    எண்டிசை கடந்துநின் றிருண்டசத்தி யுழலவே
    அண்டரண்ட மொன்றதா யாதிநட்ட மாடுமே. 233

    அண்டங்கள் ஏழும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அனந்த கோடி யோனியில் உதித்த உயிர்களும் சுற்றி உழன்று கொண்டிருக்கின்றது. உங்கள் உடலில் திருமால் முகுளமாகவும், பிரமன் மனமாகவும் இருந்து உழன்று கொண்டு உள்ளனர். இவர்கள் உடலின் உள்ளேயே காத்தும், படைத்தும் வருகிறார்கள். எண்திசைக்கு அப்பாலாய் கடந்து நின்ற இருளான சக்தி உழலவே அண்டங்கள் அனைத்தும் ஒன்றதாகிவிடும். அப்போது உடலில் நின்ற ஆதி உனக்குள் நடனமாடும்.

    பதிலளிநீக்கு
  10. உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
    வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
    தண்மையான காயமே தரித்துருவ மானதும்
    தெண்மையான ஞானிகாள்தெளிந் துரைக்க வேணுமே. 249

    உண்மையான விந்துவே சுக்கிலமாகி உயிர் உருவாகக் காரணம். யாவற்றையும் அறிந்த ஞானிகளே! வெண்மை நிறமான அவ்விந்து சுரோணிதத்தில் விரைந்து கலந்து நீராகிக் கருவாகிப் பின் உடலாக உருவானதையும், அதன் தத்துவங்களையும் தெளிவாக உலகோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே.

    பதிலளிநீக்கு
  11. உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
    மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டு மென்கிறீர்
    உள்ளதும் பிறப்பது மொத்தபோது நாதமாங்
    கள்ளவாச லைத்திறந்து காணவேண்டு மாந்தரே. 373

    உயிர் உடலுள் உள்ளதா? அல்லது இவ்வுடலுக்கு வெளியே நின்றுள்ளதா? என மெல்ல அருகில் வந்து கேட்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். உயிர் உடலின் வெளியே நினைவு என்னும் ஆகாயத்திலும், பிறந்தபின் உடலுக்கு உள்ளே சோதியாகவும், இரண்டும் சேர்ந்தபோது நாதமாகவும் உள்ளது. இதை உணர்ந்து, இரகசிய வாயிலாம் வாயைத் திறந்து ஞான யோகம் செய்து அதனுள் சென்று ஈசனைக் காணவேண்டும், மனிதர்களே!

    பதிலளிநீக்கு
  12. அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
    புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ
    தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
    மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. 210

    உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? ஐம்பூதங்களும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஆத்துமா அழியாத ஒன்றா?
    இல்லை, ஆத்துமா சாகும். ஆத்துமா சாகக்கூடியது என்பதை நிறைய பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

    “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசேக்கியேல் 18:4, 20, O.V. பைபிள்.

    பூர்வ இஸ்ரவேலில் யாராவது பெரிய தவறு செய்துவிட்டால், அந்த ஆத்துமா “அறுப்புண்டு போவான்” என்று ஜனங்களுக்குச் சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 17:14; லேவியராகமம் 7:25; 22:3; எண்ணாகமம் 15:30, O.V. பைபிள்) அந்த நபர் “கொலையுண்கக்கடவன்,” அதாவது அவர் கொல்லப்பட வேண்டும்.—யாத்திராகமம் 31:14, O.V. பைபிள்.

    மூல எபிரெய மொழியில், லேவியராகமம் 21:11; எண்ணாகமம் 6:6 போன்ற சில வசனங்களில் ஆத்துமா என்ற அர்த்தத்தைத் தரும் நெஃபெஷ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் இந்த வார்த்தை “இறந்தவரின் உடல்,” “பிணம்” அல்லது “பிரேதம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

    “ஆத்துமா” என்பதற்கு “உயிர்” என்ற அர்த்தமும் இருக்கிறது
    “உயிர்” அல்லது “பிராணன்” என்ற வார்த்தைக்குப் பதிலாகவும் “ஆத்துமா” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, யோபு 33:22-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற “ஆத்துமா” என்பதற்கான எபிரெய வார்த்தை (நெஃபெஷ்) “உயிரை” குறிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு நபருடைய ஆத்துமா, அதாவது உயிர், பணயம் வைக்கப்படலாம் அல்லது இழக்கப்படலாம் என்றும் பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 4:19, O.V. பைபிள்; நியாயாதிபதிகள் 9:17; பிலிப்பியர் 2:30.

    “ஆத்துமா” என்ற வார்த்தை இந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஆத்துமா ‘பிரிகிறது’ அல்லது ‘போகிறது’ என்று சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. (ஆதியாகமம் 35:18; O.V. பைபிள்) அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள், ஒருவருடைய வாழ்க்கை முடியப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. சில பைபிள் மொழிபெயர்ப்புகள், ஆதியாகமம் 35:18-ல் இருக்கிற இந்த வார்த்தைகளை “அவள் இறுதி மூச்சை விட்டாள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன.—குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்; நியூ ஜெருசலேம் பைபிள்.

    பதிலளிநீக்கு
  14. அடப்பண்ணி வைத்தார்;
    அடிசிலை உண்டார்;
    மடக்கொடி யாரோடு
    மந்தணம் கொண்டார்;
    இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;
    கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே!(திருமந்திரம் 148)

    அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார். போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி.

    நாட்டுக்கு நாயகன்;
    நம்ஊர்த் தலைமகன்;
    காட்டுச் சிவிகைஒன்று
    ஏறிக் கடைமுறை
    நாட்டார்கள் பின்செல்ல
    முன்னே பறைகொட்ட
    நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.(திருமந்திரம் 153)

    இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

    ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,
    பேரினை நீக்கிப் பிணம்
    என்று பேர்இட்டு,
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,
    நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. (திருமந்திரம் 145)

    ஒரு பிள்ளை பிறந்தது. தங்கள் வாழ்வின் கனியாக வந்த பிள்ளைக்கு மேனி வலிக்காமல் மெத்தென்ற பஞ்சணையில் பூ இட்டுப் பூமேல் பிள்ளையை இட்டார்கள் பெற்றவர்கள். உலகுக்குப் புதிதாய் வந்திருக்கும் பிள்ளையைப் பார்க்கவும், ‘என் குலம்’ என்று அந்தப் பிள்ளையைத் தன்னுடன் ஒட்டவும் ஊரே ஒன்றுகூடியது. மந்தையில் வாழப்போகிற மாட்டுக்குத் தோலில் சூட்டுக்கோல் அடையாளமோ கொம்புகளில் வண்ணப்பூச்சு அடையாளமோ வைப்பதில்லையா? அதைப் போல மனிதப் பெருமந்தைக்குள் வாழப்போகும் அந்தப் பிள்ளைக்கு அடையாளம் கற்பித்து ஊர் ஒரு பெயர் இட்டது. ஊர் தந்த அடையாளத்தைப் பேணிக்கொண்டே அந்தப் பிள்ளை வளர்ந்தது; அடையாளத்தை நிலைநிறுத்தலே வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தது; கடைசியில் ஒரு நாள் ஊர் தந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கைவிட்டு மாண்டது. பிறந்த அன்று ஒன்றுகூடி அடையாளம் தந்த ஊர் இறந்த அன்றும் ஒன்றுகூடியது. தன் குலக் கொழுந்து ஒன்றை இழந்ததற்காக ‘ஓ’வென்று அழுதது. தான் தந்த தனி அடையாளப் பெயரைத் தானே நீக்கிப் பிணம் என்று பொதுப் பெயர் இட்டது. பிணத்தைச் சூரைப் புதர் மண்டிக் கிடக்கிற முள்ளுக் காட்டுக்குக் கொண்டு போய்ச் சுட்டது. பின்னர், நீரினில் முழுகிக் காலஞ்சென்ற குலக்கொழுந்தின் நினைவை விட்டது. அவ்வளவுதான். புடவை கிழிந்தது, போயிற்று வாழ்க்கை. ஒட்டி இருந்தவர்களுக்கு மட்டும் கூடுதலாய்க் கொஞ்ச நாள் வலிக்கும். அழுது தீர்த்துக்கொள்வார்கள்.

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

    பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

    பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்;
    முற்றுஅது எல்லாம் முதல்வன் அருள்பெறில்;
    கிற்ற விரகில் கிளர்ஒளி வானவர்
    கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. (திருமந்திரம் 298)

    எதையேனும் பற்ற வேண்டும் என்றால் பரமனைப் பற்றுங்கள். முதல்வன் அருள்பெற்றால் எல்லாமே முற்றும். இதைக் கற்றவர்கள் தொலையாத பேரின்பம் பெற்றார்கள்.

    https://www.hindutamil.in/news/spirituals/102119-05-10.html

    பதிலளிநீக்கு
  15. ஈதென்று அறிந்திலன் இத்தனைக் காலமும்
    ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
    ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
    ஈதென்று அறியும் இயல்புடையோனே.

    https://www.maalaimalar.com/devotional/slogan/2021/08/10084654/2909946/shiva-slokas.vpf

    பதிலளிநீக்கு
  16. உண்மை ஞானி யார்?

    காசு கொடு, கடவுளைக் காட்டுகிறேன் என்று பேசுகிற குரு, ஒளி உடைய உண்மைக் குருவா? ஆசிரமத்துக்கு வா, அமைதி பெறுவாய் என்று திருவாய்மொழிகிற குரு செம்மைக் குருவா? கடவுளைத் தேடிக் கண்டடைந்தவர் நம்மிடம் காசு கேட்பாரா? நோகாமல் நோன்பிருக்க ஆசிரமம் அமைப்பாரா? இத்தகைய குருக்கள் பின்னால் போனால் நாம் ஒளி பெறுவோமா அன்றித் திருமூலர் சொன்னதுபோலக் குழி பெறுவோமா?

    உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?

    உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?

    உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?

    உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

    உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது என்று சிவவாக்கியர் கேட்கிற கேள்விகள் நமக்கும் இருக்கின்றன. ஆசிரமத்துக்கு வா, நன்கொடை அளி, என் விடை கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பேசாமல் நேரடியாக விடை சொல்லி வழிநடத்துகிறவர்தான் உண்மைஞானி.

    அழகாக இருக்கிறவரையும் அலங்காரமாகப் பேசுகிறவரையும் அமைதியான சூழலில் ஆசிரமம் வைத்திருப்பவரையும் குருவாகக் கொண்டுவிட முடியாது. ஏனென்றால், குருவிடம் நாம் எதிர்பார்ப்பது அழகையும் அலங்காரப் பேச்சையும் ஆசிரமத்தையும் அல்லவே, அறிவையே அல்லவா!

    குருவுக்குத் தேர்வு வையுங்கள்; தேங்காயை முற்றிய தேங்காய்தானா என்று சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போலக் குருவையும் முற்றிய குருதானா என்று சுண்டிப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் விவேகானந்தர்.

    ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பதுபோலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர்.

    https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு

  17. "அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார்
    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே...!'

    (பாடல் : 148)

    பொருள்: வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்த உணவினை கணவர் உண்டு மகிழ்ந்தார். மனைவியோடு மகிழ்ந்திருந்தார். இடது பக்கமாக நெஞ்சு வலிக்கிறது என்றார். கீழே படுத்தார். பின் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.

    யாக்கை நிலையாமையை இப்பாடலில் சொல்கிறார் திருமூலர். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மரணம் வந்த பிறகு என்ன நடக்கும் ? அதையும் அவரே சொல்கிறார்.

    "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
    சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே...'
    (பாடல் : 145)

    பொருள்: ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, ஒப்பாரி வைத்து அழுது புலம்பி, இறந்த உடலுக்குரிய உண்மைப் பெயரை ஒதுக்கி விட்டுப் "பிணம்" என்று பெயர் சொல்லிச் சுடுகாட்டில் கொண்டு போய் வைத்து, நெருப்பு மூட்டி எரித்து விட்டு, குளத்திலோ, ஆற்றிலோ குளித்து முழுகி, அத்தோடு இறந்தவரைப் பற்றிய நினைவையும் அடியோடு மறந்து விடுகிறார்களே...!

    என்ன மனிதர்கள்...! என்ன வாழ்க்கை ? இறந்த அடுத்த நொடி, நம் பெயரைக் கூடச் சொல்ல மாட்டார்கள். "பிணம்' தான் நம் பெயர். உடலை எரித்த பிறகு யாருக்கும் நம் நினைப்பு இருக்காது என்கிறார்.

    அழைப்பிதழில் தன் பெயருக்கு முன்னாலும், பின்னாலும் தான் வாங்கிய பட்டங்களை, விருதுகளை, செய்த சாதனைகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என வற்புறுத்துபவர்களுக்கு, இந்த சிறப்புப் பெயர்கள், பட்டங்கள் எதுவும் நிலையில்லை; இறந்த அடுத்த நொடியே உங்கள் பெயர் "பிணம்' எனச் சொல்கிறார்.

    "குடம் உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
    உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே'
    (பாடல்: 158)

    மண் குடம் உடைந்து விட்டால், அந்த உடைந்த ஓடு எதற்கேனும் பயன்படும் என வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஆனால் உயிர் உடைந்து, பிணமாகி விட்டால் ஒரு நொடிப்பொழுது கூட அப்பிணத்தை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள்.

    "வைச்சுஅகல் வுற்றது கண்டு மனிதர்கள்
    அச்சு அகலாதுஎன நாடும் அரும்பொருள்
    பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
    எச்சகலா நின்று இளைக்கின்ற வாறே...'
    (பாடல் : 156)

    பொருள் : இறந்த உடலை சுடுகாட்டில் வைத்து தீ மூட்டிய பின்னர், அவரவர் பணியைப் பார்க்கப் போய் விடுகின்றனர். இறந்தவர்களின் நினைப்பே இல்லாத மனிதர்களுக்காக "இந்த உயிர் பிரியாது' என நினைத்து அவர்கள் ஆசைப்படும் பொருள்களைத் தேடித் தேடி சேர்த்து வைப்பதைத் தொடர்ந்து செய்கிறார்களே..! தங்களின்

    பெருமையை இழந்து சிறுமை கொள்கிறார்களே..!

    "யாருக்காக சம்பாதிக்கிறீர்கள்? யாருக்காகக் கஷ்டப்பட்டு பொருள் சேர்க்கிறீர்கள்? வாழ்க்கைத் துணைக்காக...பிள்ளைகளுக்காக... உடன் பிறந்தோருக்காக... நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும் நீங்கள் இறந்த பிறகு உங்களை மறந்து விடுவார்களே...' எனக் கேட்கிறார் திருமூலர்.

    அப்படியானால் சொத்து சேர்க்கத் தேவையே இல்லையா என்ற கேள்வி வரலாம். தாராளமாக சேர்க்கலாம்.

    "செய்க பொருளை செருநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனிற் கூரியது இல்' என்பது வள்ளுவன் வாக்கு.

    உன் எதிரியின் செருக்கை அறுக்கும் ஒரே ஆயுதம் நீ சேர்த்து வைக்கும் செல்வம்; அதனால் நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற வள்ளுவனோடு யாரும் முரண்படப் போவதில்லை.

    ஆனால், ஆயிரம் கோடி, நூறாயிரம் கோடி என நூறு தலைமுறைக்கே சொத்து சேர்த்து வைப்பதில் எந்த பயனும் இல்லையே என்கிற திருமூலரின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு

  18. ஒரு செல்வந்தர் எல்லோரிடமும் இப்படி பெருமையாக சொல்வாராம்... "என் பையனுக்காக அந்த ஊர்ல நூறு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். என் பொண்ணுக்கு பக்கத்து ஊர்ல இருநூறு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கேன்... என் பேரப் புள்ளைங்களுக்கு ஆளுக்கு நூறு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கேன்' என்று!

    நிலம் சிரித்துக் கொண்டே சொன்னதாம்... "உன் தாத்தாவை நான்தான் வாங்கிப் போட்டிருக்கேன். உன் அப்பாவை நான்தான் வாங்கிப் போட்டிருக்கேன். உன்னையும் நான் தான் வாங்கிப் போடப் போறேன்' என்று..!

    உண்மை தானே ?

    நாம் இறந்து போனால் உறவினர்கள் உடன் வர மாட்டார்கள். நாம் சேர்த்து வைத்த சொத்துகளும் உடன் வராது.

    அப்படியானால் எது தான் நம்மோடு வரும் ?
    "பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
    உண்டப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
    மண்டி அவருடன் வழிநட வாதே...' (பாடல் : 144)

    பொருள் : உடல் பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து, பிணமாகி விழுந்து விட்டால், அந்த உடல் உயிரோடு இருந்த போது, அதனால் பயன் பெற்ற மனைவி, மக்கள் அந்த உயிரோடு உடன் போக மாட்டார்கள். இறந்த உடலோடு தாங்களும் இறக்க மாட்டார்கள். ஆனால் அந்த உயிர் வாழும் போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணியச் செயல்கள் இவைதான் அந்த உயிருக்குத் துணையாக நெருங்கி, நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் செல்லாது.

    நாம் செய்கிற பாவ, புண்ணியம் மட்டுமே நமக்குத் துணையாக வரும். நம் புண்ணியம் தான் நம்மைக் காத்து நிற்கும் என்கிறார் திருமூலர்.

    கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இதையே சேக்கிழார் ஓர் உருவகமாகச் சொல்லியிருக்கிறார்.

    கண்ணப்பர் வேட்டைக்குக் கிளம்பிய போது, ஒரு பெரும் படையே அவரோடு கிளம்பியதாம்.

    "எண்ணற்ற வேடுவர் கூட்டம் மிகுதியாக
    மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே...'

    அவர் ஒரு பன்றியைத் துரத்திக் கொண்டு போன போது... உடன் வந்த அத்தனை வீரர்களும் பின் தங்கி விட, இரண்டு பேர் மட்டுமே அவரைப் பிரியாமல் தொடர்ந்து வந்தார்களாம். அந்த இரண்டு பேரின் பெயரையும் சொல்கிறார் சேக்கிழார். ஒருவர்

    "நாணன்', இன்னொருவர் "காடன்'.
    "நாடிய கழல் வயவர் களவர் நாணனும்
    நெடு வரிவில் காடனும் எனும் இருவரும்...'

    நாம் தான் அந்த கண்ணப்பர். சொர்க்கத்தை, இறைவனின் திருவடிப்பேற்றைத் தேடி நாம் ஓடும் போது, யாருமே உடன் வர மாட்டார்கள். "நாணன்' என்ற நல்வினையும், "காடன்' என்ற தீவினையும் மட்டுமே நம்மோடு உடன் வரும் என்பதே பெரியபுராணம் சொல்லும் செய்தி.

    அதென்ன பெயர் நாணன், காடன்?

    பொதுவாகவே மனிதர்கள் நிறைய தீவினைகள் செய்வார்கள். அது காடு போல் பரந்திருக்கும் ஆகையால் "காடன்' என்பது தீவினையைக் குறிக்கும்.

    நல்வினையை கொஞ்சமாகவே செய்திருப்போம். அதனால், நான் இவ்வளவு கொஞ்சமாக இருக்கிறேனே என அது நாணி நிற்குமாம். எனவே நல்வினை "நாணன்' ஆயிற்று.

    எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும், இறந்த பிறகு யாரும் நம்மை நினைவு வைத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் ஆசை, ஆசையாகக் கட்டிய வீட்டிலேயே உங்களுக்கு இடம் தராமல் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய் எரித்து விடுவார்கள். அதனால், உங்களோடு வராத மற்றவர்களுக்காக ஓடி ஓடி சொத்து சேர்க்காமல், நிறைய புண்ணியம் செய்யுங்கள்.

    நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியம் மட்டுமே உங்களைக் காக்கும் என்பதே திருமூலர் நமக்குச் சொல்லும் பாடம்.

    (தொடரும்)

    https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/oct/09/mantra-is-worshiped--thirumanthiram-is-worshiped--3481690.html

    பதிலளிநீக்கு
  19. யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.


    1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, ‘(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்’ என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,’அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். ‘அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது ‘(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!’ (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்”.

    புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).
    1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், ‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!”என்றான். நான் ‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!’ எனக் கூறினேன். அதற்கவன் ‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!” என்றான். அப்போதுதான் ‘நம்முடைய வசனங்களை நிராகரித்து, ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?’ என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!”.

    https://www.islamkalvi.com/?p=2552

    பதிலளிநீக்கு
  20. அபு-தாவூத் ஹதீஸின் சுனன் 4735 அல்-பராவால் விவரிக்கப்பட்டதுibn Azib


    நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகளின் ஒருவரின் பையுடன் வெளியே சென்றோம். நாங்கள் அவரது கல்லறையை அடைந்தபோது, ​​​​அது இன்னும் தோண்டப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள், நாங்களும் அவரைச் சுற்றி (அமைதியாக) பறவைகள் எங்கள் தலைக்கு மேல் இருப்பது போல் அமர்ந்தோம். அவர் (அலை) அவர்கள் கையில் ஒரு குச்சியை வைத்திருந்தார், அதன் மூலம் அவர் தரையில் சொறிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் (அலை) தம் தலையை உயர்த்தி, 'கப்ரில் உள்ள தண்டனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்' என்று கூறினார். அவர் (அலை) இரண்டு அல்லது மூன்று முறை கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: 'இரண்டுதேவதைகள்(முன்கரும் நக்கீரும்) அவனிடம் வருவார்கள், அவனுடைய ஆன்மா அவனது உடலுக்குத் திரும்பும் , (அவர்கள்) அவனை உட்கார வைத்து, “உன் இறைவன் யார்?” என்று கேட்பார்கள். "என் இறைவன் அல்லாஹ்" என்று பதிலளிப்பார். அவர்கள் அவரிடம் "உங்கள் மதம் என்ன?" என்று கேட்பார்கள். "எனது மதம் இஸ்லாம்" என்று பதிலளிப்பார். அவர்கள் அவரிடம் கேட்பார்கள்: “மனிதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?முகமதுஉங்களில் பணிக்கு அனுப்பப்பட்டவர் யார்? "அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)" என்று பதிலளிப்பார். அவர்கள் கேட்பார்கள்: "இதை உங்களுக்கு உணர்த்தியது யார்?" அவர் பதிலளிப்பார்: "நான் அல்லாஹ்வின் புத்தகத்தைப் படித்தேன், அதை நம்பினேன், அதை உண்மையாகக் கருதினேன்.", இது அல்லாஹ்வின் வார்த்தைகளால் சரிபார்க்கப்பட்டது: "அல்லாஹ்வின் புத்தகம், அதை நம்பியது, அதை உண்மையாகக் கருதியது, இது அல்லாஹ்வின் வார்த்தைகளால் சரிபார்க்கப்பட்டது: "அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நிலைத்து நிற்கும் வார்த்தையின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களை நிலைநிறுத்துகிறது." அப்போது பரலோகத்திலிருந்து ஒரு கூப்பிடுவான்: "என் அடியான் உண்மையைச் சொன்னான், எனவே அவனுக்கு சொர்க்கத்திலிருந்து ஒரு படுக்கையை விரித்து, சொர்க்கத்திலிருந்து அவருக்கு ஆடை அணிவித்து, திறக்கவும். அவருக்கு ஒரு கதவுசொர்க்கம்." அதனால் அதன் காற்றும் வாசனையும் அவருக்கு வந்து சேரும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவருக்கென்று ஒரு இடம் உருவாக்கப்படும். நபி (ஸல்) அவர்கள் காஃபிரின் மரணத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்: “ அவருடைய ஆன்மா அவருடைய உடலுக்குத் திரும்பும் , இரண்டு.தேவதைகள் அவரிடம் வந்து, அவரை உட்கார வைத்து, “உன் இறைவன் யார்?” என்று கேட்பான். அவர் பதிலளிப்பார்: “ஐயோ, ஐயோ! எனக்கு தெரியாது." அவர்கள் அவரிடம் "உங்கள் மதம் என்ன?" என்று கேட்பார்கள். அவர் பதிலளிப்பார்: “ஐயோ, ஐயோ! எனக்கு தெரியாது." அவர்கள் கேட்பார்கள்: "உங்களில் தூது பணிக்கு அனுப்பப்பட்ட மனிதர் யார்?" அவர் பதிலளிப்பார்: “ஐயோ, ஐயோ! எனக்கு தெரியாது." அப்போது சொர்க்கத்தில் இருந்து ஒரு அழுகை அழைப்பான்: "அவன் பொய் சொன்னான், எனவே அவனுக்காக நரகத்திலிருந்து ஒரு படுக்கையை விரித்து, நரகத்திலிருந்து அவனுக்கு ஆடை அணிவி, அவனுக்காக நரகத்திற்கு ஒரு கதவைத் திற." அப்போது அதன் வெப்பமும் கொள்ளைக் காற்றும் அவனிடம் வந்து, அவனுடைய விலா எலும்புகள் ஒன்றாக நசுக்கப்படும்படி அவனுடைய கல்லறை சுருக்கப்படும். குருடனும் ஊமையுமான ஒருவன் (தேவதை) அவனது பொறுப்பில் அமர்த்தப்படுவான், மலையில் அடிபட்டால் அது மண்ணாகிவிடும். மனிதர்கள் மற்றும் ஜின்கள் தவிர கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள அனைத்துப் பிரிவினரும் கேட்கும் ஒரு அடியை அவர் அவருக்குக் கொடுப்பார், மேலும் அவர் மண்ணாகிவிடுவார். பிறகு அவனது ஆன்மா அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் (அந்தத் தண்டனை மீண்டும் மீண்டும்)'

    https://www.islamhelpline.net/answer/3207/when-we-die-our-rooh-goes-to-god-but-when-the-body-goes-in-the-grave-the-faristas-come-to-take-our-account-is-the-rooh-put-back-in-the-body-will-we-know-thwt-we-are-burried-under-the-earth

    பதிலளிநீக்கு
  21. “அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்குர்ஆன்: 39:42)

    “….அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல்குர்ஆன்: 23:99-100)

    பதிலளிநீக்கு
  22. உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
    அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18 ஞானக்குறல்

    உயிருக்கு உறுதி எல்லாமே உடம்பும் அதன் பயனுமே. உயிர் சோரும் அயிர் பீறிட்டுக்கொண்டு வந்தால் ஆதியாகிய இறைவனை விரும்பித் தேடிக்கொள். உடலோ மனமோ சோர்ந்தால் இறைவனைப் பற்றிக்கொள்

    பதிலளிநீக்கு
  23. பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது

    காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
    பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
    மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
    போலுயிர் மீளப் புக அறி யாதே. – (திருமந்திரம் – 146)

    விளக்கம்:
    இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.

    https://blog.scribblers.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  24. திருமந்திரம் 441.
    உடலும், உயிரும்
    எட்டுத் திசையும் எறிகின்ற காற்றோடு

    வட்டத் திரை அனல், மாநிலம், ஆகாயம்,

    ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை

    கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

    எட்டுத் திசைகளிலும் வீசும் காற்று. வட்டமாக உலகைச் சூழ்ந்துள்ளது கடல். இவேற்றோடு தீ, பூமி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கலப்பது சதாசிவன். உடலுடன் உயிரைச் சேர்ப்பதும் பின்னர் உடலிலிருந்து உயிரைப் பிரிப்பதும் அவனே ஆவான்

    https://thirumanthiram2.wordpress.com/13-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/441-to-444/

    பதிலளிநீக்கு
  25. உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.
    காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
    பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
    மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
    போலுயிர் மீளப் புக அறி யாதே. – (திருமந்திரம் – 146)

    விளக்கம்:
    இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.

    பதிலளிநீக்கு
  26. பாடல் எண் : 07
    வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
    தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
    மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
    கூவுந் துணையொன்று கூடலு மாமே.

    பொழிப்புரை : ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப்படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்குவார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!
    ****************************************************
    பாடல் எண் : 08
    வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
    பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
    நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
    காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

    பொழிப்புரை : உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப்பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசைமிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.
    ****************************************************
    பாடல் எண் : 09
    உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
    அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
    விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
    சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

    பொழிப்புரை : உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யமதூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

    https://www.friendstamilchat.in/forum/index.php?topic=6282.0

    பதிலளிநீக்கு