சுயபுணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயபுணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுயபுணர்ச்சி

கிறிஸ்தவம்

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. - (1 கொரிந்தியர் 6:9-11)

தமிழர் சமயம் 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி யிலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே - (திருமந்திரம் 346)

பொருள்: இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே முறையான அன்பின் வழி பிறவாது போகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும் பெண்களுக்கும் உரியதே. இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும். 

இஸ்லாம் 

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். (திருக்குர்ஆன் 23:5,6,7)

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். “இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன மர்ம உருப்போ அதனை உண்மைப் படுத்துகின்றது - (நூல் : அஹ்மத் 10490)

 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள். - (புஹாரி 5066)

மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது

“(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (குர்ஆன் 24:24)

“இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (குர்ஆன் 36:65)

“முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (குர்ஆன் 41:20)