இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இயேசு கொல்லப்பட்டாரா?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டார் பிறகு உயிர்த்தெழுந்து கர்த்தரிடம் சென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா என்று ஆய்வு செய்யும் பொழுது அது உண்மை அல்ல என்றே தெரிய வருகிறது.

இதற்கான பதிலை அறிய நீங்க வாசிக்க வேண்டிய வரலாற்று நிகழ்வு கீழே.

யோவான் 16:“நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 

2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 

3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 

4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள். “நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 

5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 

6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 

7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.

8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 

9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 

11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.

12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 

13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 

14 நடக்கப் போகிறவற்றைப் பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 

15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”

16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.

17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 

18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 

20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 

22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 

23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 

24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகத்தின் மீது வெற்றி

25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 

26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 

27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 

28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.

29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 

30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.

31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 

32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.

33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

யோவான் 17:11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள்.

12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.

13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன்.

14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

யோவான் 19:6 பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர். ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.

7 யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.

8 பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 

9 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 

10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.

11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.

முக்கிய குறிப்பு: இதை மத்தேயு 26, 27 மற்றும் 28 இந்த செய்திகள் உள்ளடக்காமல் வேறுபோல உள்ளது.

உதாரணமாக கீழுள்ள வசனம் திரைப்பட காட்சி அமைப்பு போல உள்ளது. ரூ சீடர் ஏர்ஸு கிறிஸ்துவுடன் இருப்பவர் சொல்லும் செய்திகள் அவர் இருக்கும் இடத்தில் கோணத்தில் விதமாக சொல்லப்படுகிறது, மேலும் இடைச்சொருகளைப் தான் அமையமுடியும். அதை விட்டுவிட்டு வேதபாரகர் எங்கே எப்படி திட்டமிட்டார்கள் என்றெல்லாம் அவர் எழுதி இருக்க வாய்ப்பில்லை. எனவே இது மத்தேயுவின் நற்செய்தியில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட இடைச்சொருகல்கள் எனபதில் சந்தேகமிலை.

மத்தேயு 26:3 தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா.

4 அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள்.

5 அக்கூட்டத்தில் இருந்தவர்கள், “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள்.

அதே போல இயேசு உயிர்த்தெழுந்த செய்தி யோவான் 19, 20 மற்றும் 21 இல் வருகிறது, அவைகளும் இடைச்சொருகலே.

உதாரணமாக யோவான் 18 இல் பிலாத்து இயேசு என்று அங்கே ஒப்படைக்கப் பட்டவரை காப்பாற்ற முயற்சிக்கிறார், அது முடியவில்லை என்றதும் நீங்களே தண்டனை கொடுங்கள் என்கிறார். ஆனால் யோவான் 19 இல் இயேசு கிறிஸ்துவை சாட்டையால் அடிக்க ஆணை இடுக்கிறார். முற்றிலும் முரண்.

மேலும் இதே சம்பவம் மாற்கு மற்றும் லூக்காவின் சுவிஷேசங்களில் இடம் பெற்று உள்ளது ஆனால் அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களோ அல்லது உடன் பயணித்தவர்களோ அல்ல. எனவே அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கலாம், நிராகரிக்க வேண்டும்.


இப்பொழுது யோவானின் நற்செய்திகளை ஒவ்வொன்றாக பகுப்பாய்வு செய்வோம்.

முதலில் தான் அனுப்பினவரிடம் அவர் செல்வதைப் பற்றி அவர் பல வசனங்களில் குறிப்பிட்டு உள்ளார்.

யோவான் 16:5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை.

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.

28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.

இதில் எதிலும் தான் கொல்லப்படப்போவதாக குறிப்பிடவில்லை, மீண்டும் உயிர்த்தெழுவது பற்றியும் குறிப்பிடவில்லை. அது அப்படி குறிப்பிடப்படாமல் கடந்து செல்லும் அளவு அது சிறிய விடமில்லை. அப்படி ஒன்று நடக்கப் போகிறதென்றால் அதை முன்னறிவிப்பதும் அவ்வாறு நடக்கும் பொழுது அதை அவர்கள் காண்பதும் அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். கேக்காமல் அவர்கள் நினைப்பதற்கு பதில் கூறுவதே அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்

தான் இவ்வுலக நியதியான மரணத்தை வென்றதை இயேசு கிறிஸ்து தெளிவு படுத்தி உள்ளார்.

33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

இதை இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:157-158)

இயேசு கிறிஸ்து அவர்கள் தனியே இருப்பதைப்பற்றி அவர் குறிப்பிட்டார்.

31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 

32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.

பிறகு அந்த இடத்திற்கு யூதாஸ் வந்து கிறிஸ்துவை காட்டி கொடுக்க முற்பட்டான்.

யோவான் 18:1 இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக் கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள்.

2 யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். 

3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.

4 இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

5 அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர். இயேசுவோ, “நானே இயேசு” என்றார். 

6 இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

7 இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர்.

8 இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். 

9 “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.

10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்) 11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.

இந்த வசனங்களில் இருந்து தெளிவாவது என்னவென்றால், முதல் முறை யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டபொழுது அது இயேசு கிறிஸ்துவாக இருந்தார். பிறகு அவர்கள் நான் தான் இயேசு என்றதும் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள். முதலில் காட்டி கொடுக்க யூதாஸ் இருக்கும் பொழுது அவர்கள் தேட வேண்டிய அவசியம் என்ன?

இந்த சமயத்தில் தான் அவர்கள் மதிமயங்கிய நிலையில் இருக்கும் பொழுது யூதாசை கடவுள் இயேசு கிறிஸ்து போல அவர்களுக்கு காட்டினார், இயேசு கிறிஸ்து மேலே உயர்த்தப்பட்டார். மீண்டும் யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டது யூதாஸ் மற்றும் அதைத் தொடர்ந்து விசாரணை தண்டனை எல்லாம் யூதாசுக்கு நடந்தது. 

இந்த விளைவுகளை அவன் ஏற்க கடவுளால் நிர்பந்திக்க பட்டதன் விளைவாக தான் தன்னைப் பற்றிய பின்வரும் வார்த்தைகளை அவன் கூறினான்.

யோவான் 18:11 இயேசு பேதுருவிடம் “உனது வாளை அதனுடைய உறையிலே போடு. என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற துன்பமாகிய கோப்பையில் நான் குடிக்கவேண்டும்” என்றார்.

யோவான் 19:11 எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்

ஆனால் அந்த சம்பவங்களை நடக்கத்தனமாக எழுதி பைபிளில் சேர்த்தவர்கள் யூதர்கள் ஆவர்.

சரி இதை எப்படி நம்புவது? அது இயேசு கிறிஸ்து என்றால் அதன் பிறகு யூதாஸ் என்ன ஆனான்?

அ) யூதாஸ் தற்கொலை செய்துகொண்டானா?

மத்தேயு 27:3-5: யூதாஸின் தற்கொலை

3 இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். 4 யூதாஸ், “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.

அதற்கு யூதத் தலைவர்கள், “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.

5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.

ஆ) யூதாஸ் கீழே விழுந்து செத்துப்போனானா?

அப்போஸ்தலர் 1:18-19

18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)

ஒரு மனிதன் எப்படி இரண்டு முறையில் செத்துப்போக முடியும்? மேலும் மத்தேயு 27 இடைச்சொருகல் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அவன் எங்கே போனான் என்று தெரியாததால் யூதர்களுக்கு இப்படி கதை எழுத வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவன் தான் உண்மையில் கொல்லப்பட்டான் என்று குர்ஆன் சொல்வதன் மூலமும், அவர் கடவுளிடம் உயர்த்தப்பட்டார் என்பதை சொல்ல வரும் உதவியாளரை பற்றி இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்.

இதில் இயேசு கிறிஸ்து கொல்லபபடவில்லை என்ற உண்மையை (இதைத்தான் "அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன்" என்று கிறிஸ்து சொல்கிறார்) மக்களுக்கு கூற ஒரு உதவியாளரை அனுப்புவதாக கூறி உள்ளார். அதை இன்றைய ஆவியானவர் அதாவது ஹோலி ஸ்பிரிட் என்று கிறிஸ்தவர்கள் அறிந்து வைத்து உள்ளனர்.

யோவான் 16:7நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.

8 அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 

9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 

10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 

11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந் தீர்க்கப் பட்டிருக்கிறான்.

12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 

13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 

14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.

உதவியாளர் மற்றும் ஆவியானவர் எனபது முகமது நபி அவர்களை குறிக்கிறது. அதை புரிந்து கொள்ளும் முன் இது ஹோலி ஸ்பிரிட் ஐ குறிக்கிறது என்று இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர் கொண்ட தன்மையை வைத்து  வாதிடுவோர் உண்டு. ஆனால் அந்த அத்தியாயங்கள் எல்லாம் இடைச்சொருகல்கள் என்று இந்த கட்டுரையில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வாதத்துக்கு இயேசு உயிர்த்து எழுந்தார் என்று வைத்துக்கொண்டால் கூட ஆவியானவர் என்பது அவரை குறிக்காது. ஏன்? அந்த கதையின் படி அவர் அதே உயிர் உடலோடுதான் இருந்தது அல்லவா? பிறகு எப்படி அது ஆவி ஆகும்? அதே உயிர், அதே உடல் எனும் பொழுது அது அதே இயேசு வாகத்தான் கணக்கிட முடியும், வேறொன்றாக அல்ல.

அடுத்து "அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்."

இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார்? எப்படி கர்த்தரிடம் இருந்து தேவதூதர் மூலம் கருத்துக்களை பெற்று உங்களுக்கு நான் சொன்னேனோ அதே போல அவரும் அதே முறையில் பிதாவிடம் இருந்து செய்திகளை பெற்று உங்களிடம் சொல்லுவார் என கூறுகிறார். ஆகா இருவரும் ஒரே மூலத்திடமிருந்து ஒரே மாதரி அமைப்பில் வேதத்தை பெறுவதாக கூட்டுகிறார். எனவே இவர் ஒரு மனிதரைப் பற்றி பேசுகிறார், ஆவியைப்பற்றி அல்ல.

இது ஹோலி ஸ்பிரிட் ஐ பற்றி பேசவில்லை என்பதை எப்படி மேலும் அறிந்து கொள்வது? இயேசு கிறிஸ்துவை விட அதிகமான செய்திகளை அவர் சொல்லவேண்டும், அவரைப்போல மக்களை வழிநடத்தக வேண்டும். 

யோவான் 16:12 உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார்.

இயேசு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்பட்ட பிறகு இந்த மக்களுக்கு எவ்வளவு செய்திகளை சொன்னார்? மக்களை எப்பொழுது எப்படி வழி நடத்திச் சென்றார்? எனவே அது ஹோலி ஸ்பிரிட் அல்ல. அது முகமது நபி அவர்களைத்தான் குறிக்கிறது. 

எனவே இயேசு கிறிஸ்துவின் மறைவு பற்றி இஸ்லாம் சொல்லும் கருத்துதான் சாத்தியமானதும் நடந்தேறியதும் ஆகும். 

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:157-158)

எனவே சிலுவை, இயேசுவின் சிலை, புனித நீர், அரமைக் மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிப்படுத்துதல் சுவிஷேசம், அதனோடு கிரேக்கத்த்த்தில் எழுதி சேர்க்கபப்ட்ட மற்ற அனைத்து அத்தியாயங்கள், கிறிஸ்து என்கிற பெயர் என எதற்கும் இயேசுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் இவைகளுக்கு கடவுளிடத்த்தில் எந்த மதிப்பும்  இல்லை என்பதுதான் நிதர்சனம். 

இயேசு இறைமகனா? மனிதகுமாரனா?

கர்த்தர் இயேசுவின் தந்தை என்றால் - அதை ஒன்று கர்த்தர் சொல்லி இருக்க வேண்டும் அல்லது இயேசு சொல்லி இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கூறி உள்ளனரா என்று பார்ப்போம்.

சொற்பொருள்:  தந்தை = பிதா = அப்பன் = தகப்பன்
                                     மகன் = குமாரன் = சுதன்

இயேசு கர்த்தரை பிதா என்று கூறி உள்ளார்!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

...மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. (மத்தேயு 23:8-10)

மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது இயேசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவருக்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம்.  

கர்த்தரும் இயேசுவை தனது குமாரன் என கூறி உள்ளார்!

வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது. (மத்தேயு 3:17)

கர்த்தர் இயேசுவை மட்டும்தான் குமாரன் என்று கூறினாரா?  

[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.  - [யாத்திராகமம் 4:22, தோரா]

[மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' -  [எரேமியா 31:9, தோரா]

[மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா]

[மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா]

[மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் -  [2 எஸ்ரா 2:47, தோரா]

எனவே தீர்க்கதரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் கர்த்தரிடம் இருக்கிறது அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும். 

கர்த்தர் இயேசுவை மனித குமாரன் என்றும் அழைக்கிறார் 

31 “When the Son of Man comes in his glory and all the angels with him, then he will sit on his glorious throne. 32 All the nations will be assembled before him, and he will separate people one from another like a shepherd separates the sheep from the goats. 33 He will put the sheep on his right and the goats on his left
 
31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.  (மத்தேயு 25:31-33)

தந்தை இல்லாத ஒருவரை மனித குமாரன் என்று கர்த்தர் ஏன் அழைக்கிறார்? ஏனென்றால் அவர் கடவுளின் குமாரன் அல்ல என்பதால்.

நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதிய ஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு பாலின் கிரேக்க லத்தீன் கடிதங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட பொழுது இயேசுவின் வேதம் கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வழக்கொலியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் அடையாளம் காட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நம்  கருத்து என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும். இந்த இடைச்சொருகள் காரணமாக பைபிளின் ஒரே வசனம் பாதிப்புக்கு பாதிப்பு வேறுபாடுவதையும் காணலாம். உதாரணங்கள் கீழே.

எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. அதேபோல கர்த்தர் இயேசுவை மகன் என்று குறிப்பிடுவது அனைத்து தீர்க்க தரிசிகளையும் குறிப்பிடுவது போலத்தானே தவிர பெற்றெடுத்த மகன் எனும் கருத்தில் அல்ல. 

உண்மையை சொல்ல போனால், கடவுளை அப்பன் என்று கூறும் வழக்கம் தமிழிலும் உண்டு.

"ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே". (திருமந்திரம் - 178)

ஆனால் கடவுளுக்கு பாலினம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

முடிவாக, கர்த்தர் ஏசுவுக்கு மட்டும் தந்தை அல்ல, மாறாக அனைவருக்கும் தந்தை ஆவார் ஆனால் பெற்றெடுத்த தந்தை அல்ல. இக்கருத்தை நிறுவ புதிய ஏற்ப்பாட்டில் இயேசுவின் நேரடி சீடர்கள் குறிப்பிட்ட செய்திகளே ஆதாரமாக எடுத்து கொள்ளப்ட்டு உள்து. பவுலின் கருத்துக்கள் எதற்கும் ஆதாரமாக எடுக்காத பட்சத்தில் இயேசுவின் உண்மை போதனைகள் வெளிப்டும் என்கிற காரணத்தினால். 


இயேசு Vs பவுல்

1. கர்த்தர் வரும் நேரம்:

பவுல் கூறுகிறார்: 
 
நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.- (ரோம் 13:11-12
 
இயேசு கூறுகிறார்: 
 
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக் கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள் - (லூக்கா 21:8)
 
2. சத்தியம் மற்றும் உண்மையான நற்செய்தியின் மூலத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்: 
 
மேலும் இதை மனித ஞானத்தால் கற்பிக்கப்படாமல், ஆவியானவரால் கற்பிக்கப்படும் வார்த்தைகளில், ஆவியை உடையவர்களுக்கு ஆன்மீக உண்மைகளை விளக்குகிறோம். ஏனென்றால், நான் அதை மனிதனிடமிருந்து பெறவில்லை, நான் அதைக் கற்பிக்கவில்லை, ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் மூலம் வந்தது. (1கொரி 2:13) 
 
இயேசு கூறுகிறார்: 
 
நான் அவர்களுக்கு உமது வார்த்தையைக் கொடுத்தேன்; சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தப் படுத்துங்கள்; உமது வார்த்தை உண்மை. (John.17:14)
 
3. இறந்தவர்களின் கடவுள் மீது:

பவுல் கூறுகிறார்:

இதற்காகவே கிறிஸ்து மரித்து, மரித்தோருக்கும் உயிரோடிருக் கிறவர்களுக்கும் ஆண்டவராக இருக்கும்படிக்கு மரித்து மீண்டும் வாழ்ந்தார். - Rom.14 [9]

இயேசு கூறுகிறார்:

இப்போது அவர் இறந்தவர்களின் கடவுள் அல்ல, ஆனால் உயிருள்ளவர்களின் கடவுள்; - லூக்கா.20 [38]
 
4. கட்டளைகளின் கூட்டுத்தொகையில்:

பவுல் கூறுகிறார்:

"விபசாரம் செய்யாதே, கொல்லாதே, திருடாதே, ஆசைப்படாதே" என்ற கட்டளைகள் மற்றும் பிற கட்டளைகள் இந்த வாக்கியத்தில் சுருக்கமாக, "உன்னைப் போலவே உன் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும்". - Rom.13 [9]

இயேசு கூறுகிறார்:

மேலும் அவர் அவரிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர வேண்டும். உங்கள் முழு மனதுடன். இது பெரிய மற்றும் முதல் கட்டளை. ஒரு நொடி அதைப் போன்றது: உன்னில் நீ அன்புகூருவது போல் உன் அயலானையும் நேசிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகளிலும் எல்லா நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் சார்ந்திருக்கிறது. - மத்.22 [37-40] 
 
5. கடவுள் யார் மீது இரக்கம் காட்டுகிறார்:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், அவர் மோசேயிடம், "நான் இரக்கமுள்ளவருக்கு இரக்கம் காட்டுவேன், நான் இரக்கமுள்ளவன் மீது இரக்கம் காட்டுவேன்" என்று கூறுகிறார். எனவே அது மனிதனின் விருப்பத்தையோ அல்லது உழைப்பையோ சார்ந்தது அல்ல, மாறாக கடவுளின் கருணையைப் பொறுத்தது. அப்பொழுது அவர் தாம் விரும்புகிறவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார், அவர் விரும்புகிறவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். - ரோம்.9 [15-18]

இயேசு கூறுகிறார்:

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் இரக்கம் பெறுவார்கள். - Matt.5 [7] 
 
6. குற்றங்களை மன்னிப்பதில்:

பவுல் கூறுகிறார்:

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, அவருடைய இரத்தத்தினாலே நம்முடைய குற்றங்களுக்கு மன்னிப்பும், நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் அவருக்குள் நமக்கு உண்டு - Eph.1 [7]

இயேசு கூறுகிறார்:

நீங்கள் மனிதர்களின் குற்றங்களை மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மனுஷருடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார். - Matt.6 [14-15] 
 
7. நீதிமானாக்கப்படுகையில்:

பவுல் கூறுகிறார்:

அவர்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் மூலம் அவருடைய கிருபையால் பரிசுத்தமாக நீதிமான்களாக்கப் படுகிறார்கள், ஒரு மனிதன் கிரியைகளைத் தவிர்த்து விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுகிறான் என்று நாங்கள் கருதுகிறோம். சட்டத்தின் படி. ரோம்.3 [24&28]

ஆகையால், நாம் இப்பொழுது அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், தேவனுடைய கோபாக்கினைக்கு நீங்கலாக அவரால் இரட்சிக்கப்படுவோம். - Rom.5 [9]

இயேசு கூறுகிறார்:

ஏனெனில் உங்கள் வார்த்தைகளால் நீங்கள் நீதிமான்களாக்கப் படுவீர்கள், உங்கள் வார்த்தைகளால் நீங்கள் கண்டனம் செய்யப்படுவீர்கள். - Matt.12 [37] 
 
8. நித்திய வாழ்வின் விலையைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், பாவத்தின் சம்பளம் மரணம், ஆனால் கடவுளின் இலவச வரம் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நித்திய ஜீவன். - Rom.6 [23]

இயேசு கூறுகிறார்:

மேலும் என் பெயருக்காக வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தந்தையையோ தாயையோ பிள்ளைகளையோ நிலங்களையோ விட்டுப் பிரிந்த ஒவ்வொருவரும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று நித்திய ஜீவனைப் பெறுவார்கள். - Matt.19 [29]

உங்களில் எவர் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்புகிறாரோ, அதைச் செய்து முடிப்பதற்குப் போதுமானதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட மாட்டீர்களா? ஆகையால், உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் துறக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். - லூக்கா.14 [28&33] 
 
9. மனிதர்களுக்குள்ளே கெளரவமானதைக் குறித்து:

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களின் பார்வையிலும் நாம் கெளரவமானதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். - 2கொரி.8 [21]

இவ்வாறு கிறிஸ்துவைச் சேவிப்பவன் கடவுளுக்கு ஏற்புடையவன், மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவன். - Rom.14 [18]

நான் செய்யும் எல்லாவற்றிலும் எல்லாரையும் பிரியப்படுத்த முயல்கிறேன். - 1கொரி.10 [33]

இயேசு கூறுகிறார்:

ஆனால் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்களுக்கு முன்பாக உங்களை நீதிமான்களாக்குகிறீர்கள், ஆனால் கடவுள் உங்கள் இதயங்களை அறிவார்; ஏனென்றால், மனிதர்களுக்குள்ளே உயர்ந்தது கடவுளின் பார்வையில் அருவருப்பானது. - லூக்கா.16 [15]

எல்லா மனிதர்களும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ, அவர்களுடைய பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு அப்படியே செய்தார்கள். - லூக்கா.6 [26] 
 
10. இறக்கும் போது:

பவுல் கூறுகிறார்:

சகோதரரே, நான் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவைக் குறித்து உங்கள்மேல் கொண்ட பெருமையினால் நான் தினமும் மரிக்கிறேன். - I கொரிந்தியர் 15 31:

இயேசு கூறுகிறார்:

மேலும் வாழ்ந்து என்னில் நம்பிக்கை கொள்பவன் ஒருக்காலும் மரிக்கமாட்டான். - யோவான் 11 26 
 
11. நியாயத்தீர்ப்பின் அடிப்படையில்:

பவுல் கூறுகிறார்:

சட்டம் இல்லாமல் பாவம் செய்த அனைவரும் சட்டமின்றி அழிந்து போவார்கள், மேலும் நியாயப்பிரமாணத்தின் கீழ் பாவம் செய்த அனைவரும் நியாயப்பிரமாணத்தால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். - ரோம்.2 [12]

இயேசு கூறுகிறார்:

என்னை நிராகரித்து என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனுக்கு ஒரு நீதிபதி உண்டு; நான் சொன்ன வார்த்தையே கடைசி நாளில் அவனுடைய நியாயாதிபதியாக இருக்கும். - யோவான்.12 [48] 
 
12. கட்டளைகள் மற்றும் நித்திய ஜீவனைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

நான் ஒரு காலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உயிருடன் இருந்தேன், ஆனால் கட்டளை வந்தபோது, ​​பாவம் புத்துயிர் பெற்றது, நான் இறந்தேன்; வாழ்வை வாக்களித்த கட்டளையே எனக்கு மரணமாக இருந்தது. - Rom.7 [9-10]

இயேசு கூறுகிறார்:

மேலும் அவர் அவரிடம், "நல்லதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?" அதில் ஒருவர் நல்லவர். நீங்கள் வாழ்க்கையில் நுழைய விரும்பினால், கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். - Matt.19 [17] 
 
13. உங்கள் தகப்பன் மீது:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்துவில் உங்களுக்கு எண்ணற்ற வழிகாட்டிகள் இருந்தாலும், உங்களுக்கு அதிகமான தந்தைகள் இல்லை. ஏனெனில், நான் நற்செய்தியின் மூலம் கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் தந்தையானேன். - 1கொரி.4 [15]

நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் குழந்தை ஒனேசிமுசுக்காக நான் உங்களிடம் முறையிடுகிறேன். - Phlm.1 [10]

இயேசு கூறுகிறார்:

மேலும் பூமியில் உங்கள் தந்தை என்று அழைக்க வேண்டாம், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். - Matt.23 [9] 
 
14. நித்திய ஜீவனுக்கான தகுதியைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

அதனால், பாவம் மரணத்தில் ஆட்சி செய்தது போல, கிருபையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலம் நீதியின் மூலம் நித்திய வாழ்வுக்கு ஆட்சி செய்யும். - ரோம்.5 [21]

இயேசு கூறுகிறார்:

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவர் நியாயத்தீர்ப்புக்கு வரவில்லை, ஆனால் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டார். - John.5 [24]
 
15. படைப்பின் விதி (வானம் மற்றும் பூமி):

பவுல் கூறுகிறார்:

ஏனென்றால், படைப்பே சிதைவதற்கான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளின் மகிமையான சுதந்திரத்தைப் பெறுகிறது. - Rom.8 [21]

இயேசு கூறுகிறார்:

வானமும் பூமியும் ஒழிந்துபோம், - மத்.24 [35]

16. நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் விதியைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

விசுவாசமுள்ள யாவரும் நீதிமான்களாக்கப் படுவதற்கு, கிறிஸ்துவே நியாயப் பிரமாணத்தின் முடிவு. - Rom.10 [4]

இயேசு கூறுகிறார்:

நான் நியாயப் பிரமாணத்தையும் தீர்க்க தரிசிகளையும் ஒழிக்க வந்தேன் என்று நினைக்காதே; அவற்றை ஒழிக்க அல்ல, நிறைவேற்றுவதற்காக வந்துள்ளேன். நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வானமும் பூமியும் ஒழிந்துபோகும்வரை, அனைத்தும் நிறைவேறுமளவும், சட்டத்திலிருந்து ஒரு துளியும், ஒரு புள்ளியும் மறையாது. - Matt.5 [17-18]

17. ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

மேலும் தேவன் சபையில் முதல் அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாவது, ஆசிரியர்கள், - 1கொரி.12 [28]

மேலும் சிலர் இருக்க வேண்டும் என்பது அவருடைய பரிசுகளாகும். அப்போஸ்தலர்கள், சில தீர்க்கதரிசிகள், சில சுவிசேஷகர்கள், சில போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள், - எபி.4 [11]

இதற்காக நான் பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் நியமிக்கப்பட்டேன் (நான் உண்மையைச் சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை), விசுவாசத்திலும் சத்தியத்திலும் புறஜாதிகளுக்கு போதகனாக நியமிக்கப்பட்டேன். - 1Tim.2 [7]

இந்த நற்செய்திக்காக நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், போதகராகவும் நியமிக்கப்பட்டேன் - 2Tim.1 [11]

இயேசு கூறுகிறார்:

ஆனால் நீங்கள் ரபி என்று அழைக்கப்பட மாட்டீர்கள், ஏனென்றால் உங்களுக்கு ஒரு போதகர் இருக்கிறார், நீங்கள் அனைவரும் சகோதரர்கள். - மத்.23 [8]
 
18. இரட்சிக்கப்பட வேண்டிய எண்ணைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

உங்கள் சொந்த எண்ணத்தில் நீங்கள் ஞானமாக இருக்கக்கூடாது என்பதற்காக, சகோதரர்களே, இந்த மர்மத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: முழு எண்ணிக்கை வரை இஸ்ரவேலின் ஒரு பகுதியை கடினப்படுத்துதல் வந்துவிட்டது. புறஜாதிகள் உள்ளே வருகிறார்கள், இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்; "சீயோனிலிருந்து மீட்பவர் வருவார், யாக்கோபை விட்டும் தேவபக்தியை அகற்றுவார்" என்று எழுதப்பட்டிருக்கிறது - Rom.11 [25-26]

இயேசு கூறுகிறார்:

இடுக்கமான வாசல் வழியே நுழையுங்கள்; ஏனென்றால், வாசல் அகலமானது, வழி எளிதானது, அது அழிவுக்கு வழிவகுக்கும், அதன் வழியாக நுழைபவர்கள் பலர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி கடினமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் குறைவு. - Matt.7 [13-14]

19. போதகர்களின் (மேய்ப்பர்களின்) எண்ணிக்கை மற்றும் அடையாளம் குறித்து:

பவுல் கூறுகிறார்:

மேலும் அவருடைய பரிசுகள் சிலர் அப்போஸ்தலர்களாகவும், சில தீர்க்கதரிசிகளாகவும், சில சுவிசேஷகர்களாகவும், சில போதகர்களாகவும் (மேய்ப்பர்கள்) மற்றும் போதகர்களாகவும் இருக்க வேண்டும்.. - எபி.4 [11]

இயேசு கூறுகிறார்:

இந்த தொழுவத்தில் இல்லாத வேறு ஆடுகளும் என்னிடம் உள்ளன; நான் அவர்களையும் அழைத்து வர வேண்டும், அவர்கள் என் குரலைக் கேட்பார்கள். எனவே ஒரே மந்தை, ஒரு மேய்ப்பன். - ஜான் .10 [16] 
 
20. தலைவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளத்தைப் பற்றி:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்துவில் உங்களுக்கு எண்ணற்ற தலைவர்கள் இருந்தாலும் . . .. - 1கொரி.4 [15]

இயேசு கூறுகிறார்:

தலைவர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு ஒரு தலைவர், கிறிஸ்து. - Matt.23 [10] 
 
21: மொத்த சீரழிவு பற்றி:

பவுல் கூறுகிறார்:

பிறகு என்ன? யூதர்களாகிய நாம் இன்னும் நன்றாக இருக்கிறோமா? இல்லை, இல்லை; ஏனென்றால், யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் ஆகிய எல்லா மனிதர்களும் பாவத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே குற்றஞ்சாட்டினேன், அதில் எழுதப்பட்டுள்ளது: "ஒருவனும் நீதிமான் இல்லை, இல்லை, ஒருவனல்ல; எந்த வித்தியாசமும் இல்லை; எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டதால், .. .. - ரோம்.3 [9,10,22,23]

இயேசு கூறுகிறார்:

நல்ல மனிதன் தன் நல்ல பொக்கிஷத்திலிருந்து நன்மையைப் பெறுகிறான், தீயவன் தன் தீய பொக்கிஷத்திலிருந்து வெளிவருகிறான். -- Matt.12 [35]

நல்ல மனிதன் தன் இதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து நன்மையை உண்டாக்குகிறான், தீயவன் தன் தீய பொக்கிஷத்திலிருந்து தீமையை உண்டாக்குகிறான்; ஏனென்றால், இதயத்தின் நிறைவிலிருந்து அவருடைய வாய் பேசுகிறது. - லூக்கா.6 [45]

நீங்கள் பரிசுத்த ஸ்தலத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் கொலைசெய்த குற்றமற்ற ஆபேலின் இரத்தத்திலிருந்து பரக்கியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரை பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தம் அனைத்தும் உங்கள்மேல் வரும். - Matt.23 [35]
 
22. நிபந்தனையற்ற தேர்தல்:

பவுல் கூறுகிறார்:

எனவே இது மனிதனின் விருப்பத்தையோ அல்லது உழைப்பையோ சார்ந்தது அல்ல, மாறாக கடவுளின் கருணையைப் பொறுத்தது. - ரோம்.9 [16]

இயேசு கூறுகிறார்:

என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லுகிற எவனும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ஆண்டவரே, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்து, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி, உமது நாமத்தினாலே அநேக வல்லமைகளைச் செய்தோம் அல்லவா? [23]அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நான் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். - மத்.7 [21&22]
 
23. கடவுளுக்குப் பலியிடும்போது:

பவுல் கூறுகிறார்:

கிறிஸ்து, நம்முடைய பாஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டார். - 1கொரி.5 [7]

மேலும், கிறிஸ்து நம்மை நேசித்தது போலவும், நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தது போலவும் அன்பில் நடந்துகொள்ளுங்கள். - Eph.5 [2]

இயேசு கூறுகிறார்:

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் பொருளைப் போய் அறிந்து கொள்ளுங்கள். - மத்.9 [13]
 
24. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஊதியம் பற்றி:

பவுல் கூறுகிறார்:

சிறப்பாக ஆட்சி செய்யும் மூப்பர்கள், குறிப்பாக பிரசங்கம் மற்றும் போதனைகளில் உழைப்பவர்கள் இரட்டிப்பு மரியாதைக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்; ஏனெனில், "எருது தானியத்தை மிதிக்கும் போது அதன் முகத்தை மூடாதே " என்றும், "வேலை செய்பவன் அவனுடைய கூலிக்குத் தகுதியானவன்" என்றும் வேதம் கூறுகிறது. - 1Tim.5 [17-18]  
 
உங்கள் பொருள் பலன்களை நாங்கள் அறுவடை செய்தால் அதிகமாகவா? இந்த உரிமையை மற்றவர்கள் உங்கள் மீது பகிர்ந்து கொண்டால், நாங்கள் இன்னும் அதிகமாக வேண்டாமா? - 1கொரி.9&12.  
 
இயேசு கூறுகிறார்:

மேலும் நீங்கள் போகும்போது, ​​'பரலோகராஜ்யம்' என்று பிரசங்கியுங்கள். கையில்.' நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்திகரியுங்கள், பிசாசுகளைத் துரத்துவீர்கள், நீங்கள் பணம் கொடுக்காமல் பெற்றீர்கள், கூலியின்றிக் கொடுங்கள், - Matt.10 [7-8] 

25. ஒருவர் எவ்வாறு கடவுளின் பிள்ளையாகிறார்:

பவுல் கூறுகிறார்:

மற்றும் படைப்பு மட்டுமல்ல, ஆவியின் முதல் கனிகளைப் பெற்ற நாமே, நம் உடல்களை மீட்கும் மகன்களாக தத்தெடுப்புக்காகக் காத்திருக்கும்போது உள்ளுக்குள் புலம்புகிறோம். - Rom.8 [23] 

நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளாக தத்தெடுப்பு பெறலாம். - கலா.4 [5] 

இயேசு கூறுகிறார்:

உண்மையாகவே, உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மேலிருந்து பிறக்காவிட்டால் * தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடியாது. மாம்சத்தினால் உண்டானது மாம்சம், ஆவியினாலே உண்டானது ஆவி. நீ மேலிருந்து பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம். - யோவான்.3 [3,6,7] 

ஆய்வும் முரண்களும் தொடரும்..