இரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரக்கம்

தமிழர் சமயம்  

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும் (அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:575)

பொழிப்பு: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் (இரக்கம்) என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

குறிப்பு: கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர்.  

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் (உலக நீதி 67) 

பொருள்: இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே

கிறிஸ்தவம்  

எனவே சுதந்திர சட்டத்தின் கீழ் நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்களாக பேசுங்கள் மற்றும் செயல்படுங்கள். ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பு. தீர்ப்பின் மீது கருணை வெற்றி பெறுகிறது. (ஜேம்ஸ் 2:12-13)

இஸ்லாம் 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: எவர் படைப்பினங்களின்‬‪ கருணை காட்டவில்லையோ‬ அவன் மீது படைத்தவன் கருணை காட்ட மாட்டான். - (ஸஹீஹ் புஹாரி 6013)