இறைவனின் அன்பை பெரும் வழி?

 தமிழர் சமயம் *

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்

தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்

தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)

பொருள்: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. - (திருமந்திரம் 8)

பொருள்: இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை. 

இஸ்லாம்

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான். [ஸூரது மர்யம் 96]

அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:76)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 2:195)

திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:222)

பொய்யையே! அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 5:42)

அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:146)

அல்லாஹ் கூறுகிறான் "என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 21114)

இறைவனின் அன்பு கிடைத்துவிட்டால்?

அல்லாஹ் கூறினான்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி). {அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}. [ஸூரதுல் மாஇதா 54]

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான் எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன் இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள் அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும் அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால் நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புஹாரி ; 6502)

கிறிஸ்தவம்

ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! (உபாகமம் 5:10)

தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். (சங்கீதம் 85:10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக