சாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோதிடமும் குறிசொல்லுதலும் ஆன்மிகம் அல்ல


நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே இது அவர்களுக்கான பதில்அல்ல, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம் அடைகின்றனர்.

எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய அல்லது கணிக்க முடியுமா என்று அவரது சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது மிக எளிது, ஏனென்றால் எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. காரணம் ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், அதற்கான வரையறையை அறியாத நிலை..

இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர்கள் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்

தமிழர் மதம்

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்.  - (நாலடியார் 52)

(பதவுரை)
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= முதுமையும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமக்கு ஏவப்பட்ட,
கருமம்= நற்செயலை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அதிக அளவில்லாத,
சத்தமும்= குறி கேட்டல்,
சோதிடமும்= சோதிடமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= உளரும்,
பித்தரின்= பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.

(கருத்துரைபெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - (அறநெறிச்சாரம் பாடல் - 144)

(பதவுரை)
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;
தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,
எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடத்தை கற்பதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது,
இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,
அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

நாளையும் கோளையும் நம்பாதே நமச்சிவாயனை நம்பு. - (திருஞானசம்பந்தர்)

இஸ்லாம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இறைவனின்  சட்டத்தை அவன் நிராகரித்து விட்டான். (அஹ்மத் 9171)

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

கிறிஸ்தவம்


மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6)
 
உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது குறிசொல்லவோ மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ சூனியம் வைக்கவோ,வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம  அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். - (உபாகமம் 18:10-13)

மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார். (லேவியராகமம் 20:27)

முடிவுரை 

ஜோதிடம் உண்மை, நல்ல தொழில், அது ஒரு கடல், அதை கற்க பொறுமை வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் கூறி இருப்பதை காண முடிகிறது. ஆனால் சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

சோதிடம் ஒரு கடல் அல்ல - "தொலைவில்லா சத்தமும் சோதிடமும்" என்கிறது நாலடியார் அதாவது "ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத" என்று பொருள்.

சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் பல பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர், ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. 
 
இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தண்மை ஆராயப்பட வேண்டும்.  உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

உணமையோ பொய்யோ இதை மனிதன் செய்வதை இறைவன் விரும்புவதில்லை. மேலே உள்ள பாடல்களையும் வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நன்றி.