தெய்வத்தை அஞ்சுதல்

கிறிஸ்தவம் 

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்: மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7) 
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்: அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவரும் நல் அறிவை உடையவர்கள்: அவருடைய துதி என்றென்றும் நிலைத்திருக்கும். - (சங்கீதம் 111:10)

இஸ்லாம் 

இப்னு மஸ்வூத் ரலி கூறினார்கள் ; "அறிவு என்பது அதிகமான செய்திகளை (ஹதீஸ் அறிவிப்புகள்) அறிந்து வைப்பதல்ல, உண்மையில் அறிவு என்பது அல்லாஹ்வை அஞ்சுதல் தான்" (இப்னு ஹிப்பான் - ரௌலத்தல் உகாலா 9)

அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன். (குர்ஆன்  74:56)

தமிழர் சமயம் 

மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 
(தேவாரம்திருமுறை 1, 076 பொது, பாடல் 1)

பொருள்:  அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.

நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. (திருமந்திரம் 2707)

பொருள் :  தினமும் தூங்குவதற்கு முன் உள்ளத்தில் நினைத்து, வாயால் தெய்வமே என்று கூறி உன் துணையுடன் உன் திருவடியில் சரண் அடைகிறேன் என்று  எண்ணி இருப்பின், வெண்மேகம் தவழும் வடக்கு எல்லையை உறைவிடமாக கொண்ட இறைவனை அஞ்சினால் அவனது அருள் பெறலாமே.

 சொ.பொருள்: பிரான் - இறைவன், கடவுள், தெய்வம்; துஞ்சும் பொழுது - உறங்கும் பொழுது; மஞ்சு - வெண்மேகம்; வடவரை - வட + வரை = வடவரை; வட - வடக்கு; வரை - எல்லை; மீதுறை = மீது + உறை; உறை - இருப்பிடம்; அஞ்சி - பயந்து;

4 கருத்துகள்:

  1. முன்னை அறிவினில் செய்த முதுதவம்

    பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்;

    தன்னை அறிவது அறிவாம்; அஃதுஅன்றிப்

    பின்னை அறிவுஅது பேய்அறிவு ஆகுமே. (திருமந்திரம் 2318)

    அறிவு என்பது முயற்சியால் விளைவது; தவம் என்று சிறப்பிக்கத்தக்க முயற்சி. அறிவுத் தவம். செய்த தவத்தின் மேன்மையை எவ்வாறு அறிவது? அந்தத் தவத்தால் விளைந்த அறிவைக்கொண்டே அறியலாம். பெற்ற அறிவு தன்னை அறியும் அறிவானால், அதற்காகச் செய்த முயற்சி தவம்தான். தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? ஆவதைவிட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு.

    அறியாமை விட்டு அறிவு இன்றாம் அறிவு விட்டு அவ்
    அறியாமை இன்று ஆகும் அந்த – அறிவும்
    அறியாமையும் ஆர்க்கு என்று அம் முதலாம் தன்னை
    அறியும் அறிவே அறிவு

    (இத்தொடரை எழுதுவதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இந்தச் செய்யுள்தான் என்றதால், இதில் உள்ள ஈற்றடியையே தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறேன் என்பதை வாசகர்கள் இந்நேரம் ஊகித்திருக்கலாம். )

    பொருள்: (இது உடல், இது மனம், இது புத்தி, இது ஆன்மா, ஒவ்வொன்றும் வேறு என்ற இவ்வாறான) பாவனையுடன் கூடிய அஞ்ஞானத்தை விட்டு உலக நடப்பைக் கவனிக்கும் அறிவு என்பதொன்று தனியாக இல்லை. அதே போல உலகை தனக்கு அறிவிக்கும் அறிவை விட்டு அஞ்ஞானமும் தனித்தே இருக்காது. அந்த அறியாமையாகிய அஞ்ஞானமும், தனக்கு அறிவிக்கும் அறிவும் யாருக்கு உண்டாகிறது என்று விசாரித்து (இவை இரண்டுமே உதித்து ஒடுங்கும்) நான் என்று எழும் அகந்தையின் மூலமாகிய உண்மை சொரூபத்தை உணர்கின்ற அறிவே உண்மையான மெய்யறிவு ஆகும்.

    “அறிவு வடிவு என்று அறியாத என்னை
    அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி
    அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
    அறிவு வடிவு என்று அறிந்திருந் தேனே”
    ~ தந்திரம் 8, அறிவுதயம்: பாடல் 2357
    பொருள்:
    பேர் அறிவின் வடிவம் என்று அறியாது இருந்த என்னை எம் அண்ணல் நந்தி அகஇருள் நீக்கி உண்மை அறிவின் வடிவத்தை உணர்த்தி அருள்செய்தான். தவத்தால் மலம் நீங்கி நானும் பேரறிவின் வடிவு என்று குரு அருளால் அறிந்துணர்ந்து, சிவ அறிவின் வடிவாய் விளங்கினேன். ஞான குரு சீடனின் அறியாமையை நீக்கி மெய் அறிவினை அருளுவார்.

    அறிவு ஐம்புலனுடனே நான்றதாகி
    நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
    அறிவறிவுள்ளே அழிந்தது போலக்
    குறி அறிவிப்பான் குருபரனாமே.
    (திருமந்திரம் - 119)

    கருத்து : ஐம்புலன்களின் வழியில் ஈடுபட்டு சென்று சேரும் வழி தெரியாமல், ஆழம் காணமுடியாதவாறு பிறவிக் கடலில் மூழ்கி அறிவு அழிகின்றது. அப்போது, தெய்வமே குருவாக வந்து அருள் செய்யும்.

    பதிலளிநீக்கு
  2. மத்தேயு 10:28 ESV / 66 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    உடலைக் கொன்றாலும் ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களுக்கு அஞ்சாதீர்கள். மாறாக ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்கக்கூடியவருக்கு அஞ்சுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நபியே நீங்கள் மக்களை பயப்படுகிறீர்களா?அல்லாஹ் தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். (அல்குர்ஆன் 33 : 37)

    பதிலளிநீக்கு

  4. وَإِيَّايَ فَارْهَبُونِ

    என்னையே பயந்து நடுங்குங்கள். (அல்குர்ஆன் 2 : 40)

    فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ

    மக்களை பயப்படாதீர்கள்.என்னை பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 44)

    فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

    ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.(அல்குர்ஆன் 3 : 175)

    இப்படி தக்வாவிற்கு பல வார்த்தைகள் உள்ளன. அதுபோன்று خشوع-ஹுஷூஃ என்ற வார்த்தையும் உள்ளது.

    قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

    நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் 23 : 1-2)

    இப்படி எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும்,அடியான்அல்லாஹ்வுடைய நினைப்பு வரும் பொழுது அல்லாஹ்வைப் பற்றிப் பேசும்பொழுது,

    إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ

    உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். (அல்குர்ஆன் 8:2)

    https://www.muftiomar.com/videodetails/744

    பதிலளிநீக்கு