அகத்தியர் என்பவர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய முனைவன். ஆனால் அந்நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. அகத்தியர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அதோடு அவர்கள் வெவ்வேறு இனத்தையும் தத்துவத்தையும் கொண்டவர்களாக இருந்து உள்ளனர்.
வாசி: அகத்தியர்
அகத்தியரின் பெயரில் பொய்யாக நூல்கள் எழுதப்பட்டதற்க்கான் ஆதாரம்?
வாசி: அகத்தியர் 100
எனவே அகத்தியர் பெயரில் உள்ள நூல்கள் அனைத்தும் நாம் அறிந்த தமிழுக்கு உரை செய்த அகத்தியர் எழுதியதல்ல. எனவே பொய் அகத்தியர்கள் எழுதிய நூல்களில் பொருள் குற்றம் இருக்கலாம் அல்லது நூலின் நோக்கமே பிழையாக இருக்கலாம் என்று அறிதல் நலம்.
ஒருவேளை அகத்தியரின் உண்மை நூல் ஒன்றை நாம் கண்டறிந்தால் அதோடு மற்ற நூல்கள் முரண்படுகிறதா என்ற கோணத்திலும், தொல்காப்பியரின் முதல் நூல் வழினூல் விதியை அடிப்படையாக கொண்ட ஆராய்ந்தால் பொய் நூல்களை கண்டறிய முடியும்.