இறைவன் அவதாரம் எடுப்பானா?

இந்துமதம் 

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || கீதை 10- 3||

அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
ய: வேத்தி = எவர் அறிவாரோ
மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் அவர்< /span>
ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்

விளக்கம்: பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கமடைந்தான்.

தமிழர் சமயம்

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

சொற்பொருள்:

பிறப்பு இலி - பிறப்பற்ற
நாதனைப் - ஆசிரியனை
பேர் நந்தி - பெருமையுடைய நந்தியும் 
தன்னைச் -  தன்னைப் (நந்தியைப்) போல 
சிறப்பொடு - சிறப்புடைய 
வானவர் - வானவரும் 
சென்று கை கூப்பி - சென்று கை கூப்பி 
மறப்பிலர் - மறக்க மாட்டார்கள்
நெஞ்சினுள் - நெஞ்சினுள் 
மந்திர மாலை - திருமந்திர மாலைமந்திர மாலை
உறைப்போடும் - பொருளுணர்ந்து 
கூடிநின்று ஓதலும் ஆமே - கூடிநின்று ஓதுவார்கள்

விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள். 

இஸ்லாம்

 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

கிறிஸ்தவம் / யூதம் 


God is not a man, that he should lie; Neither the son of man,..  (Numbers 23:19)
தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடனின் மகனும் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். (எண்ணாகமம் 23:19)

For I am God, and not a man.. (Hosea 11:9)
நான் தேவன். மனிதனல்ல (ஓசியா 11:9)


1 கருத்து:

  1. 25. பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
    இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. 25

    * மாய விருகமும்

    அஞ்ஞானம் நீங்கும்! சிவன் பிறவி இல்லாதவன். எல்லாவற்றையும் ஒடுக்குபவன். மிக்க அருள் உடையவன். அழிவு இல்லாதவன். எல்லாருக்கும் இடைவிடாத இன்பத்தை அருளுபவன். இத்தகைய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

    பதிலளிநீக்கு