சோதிடமும் குறிசொல்லுதலும் ஆன்மிகம் அல்ல


நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே இது அவர்களுக்கான பதில்அல்ல, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம் அடைகின்றனர்.

எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய அல்லது கணிக்க முடியுமா என்று அவரது சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது மிக எளிது, ஏனென்றால் எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. காரணம் ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், அதற்கான வரையறையை அறியாத நிலை..

இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர்கள் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்

தமிழர் மதம்

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்.  - (நாலடியார் 52)

(பதவுரை)
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= முதுமையும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமக்கு ஏவப்பட்ட,
கருமம்= நற்செயலை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அதிக அளவில்லாத,
சத்தமும்= குறி கேட்டல்,
சோதிடமும்= சோதிடமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= உளரும்,
பித்தரின்= பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.

(கருத்துரைபெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - (அறநெறிச்சாரம் பாடல் - 144)

(பதவுரை)
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;
தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,
எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடத்தை கற்பதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது,
இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,
அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

நாளையும் கோளையும் நம்பாதே நமச்சிவாயனை நம்பு. - (திருஞானசம்பந்தர்)

இஸ்லாம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இறைவனின்  சட்டத்தை அவன் நிராகரித்து விட்டான். (அஹ்மத் 9171)

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

கிறிஸ்தவம்


மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6)
 
உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது குறிசொல்லவோ மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ சூனியம் வைக்கவோ,வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம  அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். - (உபாகமம் 18:10-13)

மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார். (லேவியராகமம் 20:27)

முடிவுரை 

ஜோதிடம் உண்மை, நல்ல தொழில், அது ஒரு கடல், அதை கற்க பொறுமை வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் கூறி இருப்பதை காண முடிகிறது. ஆனால் சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

சோதிடம் ஒரு கடல் அல்ல - "தொலைவில்லா சத்தமும் சோதிடமும்" என்கிறது நாலடியார் அதாவது "ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத" என்று பொருள்.

சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் பல பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர், ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. 
 
இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தண்மை ஆராயப்பட வேண்டும்.  உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

உணமையோ பொய்யோ இதை மனிதன் செய்வதை இறைவன் விரும்புவதில்லை. மேலே உள்ள பாடல்களையும் வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நன்றி. 

15 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 27எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.

    பதிலளிநீக்கு
  2. ஜோதிடத்திற்குத் தடை விதித்த நபி (ஸல்) அவர்கள்....
    ✅அல்குர்ஆன் கூறும் போதனைகளின் அடிப்படையில் வாழ்ந்து காட்ட வந்தவர்கள் தான் நபி (ஸல்) அவர்கள். அல்குர்ஆன் கூறும் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களுக்கு இறைவனின் மார்க்கத்தை போதனை செய்தார்கள்.
    ✅நபி (ஸல்) அவர்களும் உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் இந்த ஜோதிடத்திற்குத் தடை விதித்து, அது மூட நம்பிக்கை என்பதை உணரச் செய்தார்கள்.
    ✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
    👉யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை மறுத்து விட்டான்.
    🗣அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
    [ நூல் : முஸ்லிம் - 1971 ]
    ✅முஆவியா பின் அல்ஹகம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :-
    👉நான் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘‘இறைத் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல பாவ காரியங்களைச் செய்து வந்தோம். சோதிடர்களிடம் சென்று குறி கேட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் ‘‘சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.
    [ நூல் : முஸ்லிம் - 4484 ]
    ✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
    👉யார் ஜோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது ஜோதிடம் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
    🗣அறிவிப்பாளர் : ஸஃபிய்யா (ரழி)
    [ நூல் : முஸ்லிம் - 4137 ]
    ✅இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
    👉“சகுனம் பார்ப்பது இறைவனுக்கு இணை கற்பித்தலாகும்” என்று மூன்று முறை கூறினார்கள்.
    🗣அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி)
    [ நூல் : அபூதாவூத் - 3411 ]
    👉யார் சகுனம் பார்த்து அதன் பிரகாரம் தனது காரியத்தை மாற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பித்து விட்டார்.
    🗣அறிவிப்பாளர் : இப்னு அம்ர் (ரழி)
    [ நூல் : அஹ்மத் - 6748 ]
    ✅நபி (ஸல்) அவர்கள் கூறிய மேற்கண்ட போதனைகள் அனைத்தும் ஜோதிடம் எனும் மனித குலத்திற்குக் கேடுண்டாக்கும் தீய நம்பிக்கையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் போதனைகளாகும்.
    ✅இவ்வாறு வழிகாட்டுதல் மூலம் உலக மக்களைப் பாதிக்கும் இந்தத் தீய நம்பிக்கைக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதன் மூலம் இறைவேதத்தின் வழிநடந்தவர்கள் ஜோதிட நம்பிக்கையினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றார்கள்.
    ✅இன்றைய உலகில் ஜோதிடத்தின் பெயரால் நடக்கும் பல்வேறு கொடுமைகளிலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்கும் போர்க்கவசமாக அல்குர்ஆன் திகழ்கின்றது. மனித குலத்தைச் சீரழிக்கும் தீமைகளை அழிப்பதன் மூலம் அல்குர்ஆன் இறைவனின் உண்மை வேதமாய் அற்புதச் சான்றாய் ஒளிர்கின்றது. இறைவேதத்தை நம்பிக்கையுடன் படித்து வழிநடக்கும் மக்களுக்கு அது நேர்வழிக்கு வழிகாட்டுகின்றது.
    ✅போலி பகுத்தறிவுவாதிகள் பலரால் இந்த அறிவியல் யுகத்தில் கூட சாதிக்க முடியாத காரியத்தை, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியது அல்குர்ஆனும், அதை போதிக்க வந்த இறைத் தூதர் (ஸல்) அவர்களும் என்றால் மிகையாகாது. அல்குர்ஆன் மனித குலத்திற்கு வழிகாட்டும் உண்மை இறைவேதம் என்பதற்கான எண்ணற்ற சான்றுகளில் இதுவும் ஓர் சான்றாகும்.
    🔘இதனைப் பிறருக்கும் பகிர்ந்து பிறரும் இதன் மூலம் பயனடைவதற்கு காரணமாக இருப்போம்

    பதிலளிநீக்கு
  3. ஏசாயா 2:5
    யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! 6 நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

    பதிலளிநீக்கு
  4. லேவியராகமம் 20:6
    மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன்.

    பதிலளிநீக்கு
  5. எசேக்கியேல் 13:9

    பொய்யான தரிசனங்களைக் காணும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும், பொய்யான ஜோசியம் சொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும் என் கை இருக்கும். அவர்கள் என் ஜனங்களின் சபையில் இருக்க மாட்டார்கள், இஸ்ரவேல் வம்சத்தாரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட மாட்டார்கள், அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைய மாட்டார்கள். நான் கர்த்தராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

    பதிலளிநீக்கு
  6. Micah 3:11 ESV / 303 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    அதன் தலைவர்கள் லஞ்சத்திற்கு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் ஆசாரியர்கள் விலைக்குக் கற்பிக்கிறார்கள்; அதன் தீர்க்கதரிசிகள் பணத்திற்காக ஜோசியம் கூறுகின்றனர்; ஆனாலும் அவர்கள் கர்த்தரில் சாய்ந்து , “ கர்த்தர் நம் நடுவில் இல்லையா? எந்தப் பேரழிவும் நம்மை நோக்கி வராது

    பதிலளிநீக்கு
  7. அல்லாஹ் சொல்கின்றான்: மறைவானவற்றின் சாவிகள் என்னிடம் தான் இருக்கின்றது. அவனைத்தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 6 : 59)

    பதிலளிநீக்கு
  8. சோதிடம் – 5:90, 6:50, 7:188, 10:20, 11:31, 27:65, 52:41, 53:35

    பதிலளிநீக்கு
  9. எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

    பதிலளிநீக்கு
  10. உள்ளம் அடங்கினவன் உயர் தெய்வம் பாடல் - 144

    தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
    பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
    எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
    அருள்கண்ணே நிற்பது அறிவு.

    விளக்கவுரை ஒருவன் தன்னை இன்பம் தருவது போன்று தீ நெறிகளில் முன்னம் செலுத்திப் பின்பு வருந்தும் மனத்தை அடக்குவான் ஆயின், அவனைப் போன்ற தெய்வம் வேறு ஒன்று இல்லை; இலக்கணம் சோதிடம் முதலியவற்றை ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது? இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் அளிக்கும் நூல்களையே ஆராய்ந்துணர்ந்து அருளை மேற்கொண்டு ஒழுகுவதே அறிவுடைமையாகும் https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  11. நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே அவர்களுக்கான பதில் இல்லை, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம்.அடைகின்றனர்.

    எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய அல்லது கணிக்க முடியுமா என்று அவரது சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

    இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது மிக எளிது, ஏனென்றால் எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. காரணம் ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், அதற்கான வரையறையை அறியாத நிலை..

    இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர்கள் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்
    முடிவுரை:

    எல்லா சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

    ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

    எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

    உணமையோ பொய்யோ இதை மனிதன் செய்வதை இறைவன் விரும்புவதில்லை. மேலே உள்ள பாடல்களையும் வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

  12. (பதவுரை)

    தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;

    தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,

    எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடத்தை கற்பதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது,

    இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,

    அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

    பதிலளிநீக்கு
  13. எனவே சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

    எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

    சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

    சோதிடம் ஒரு கடல் அல்ல - தொலைவில்லா சோதிடம் என்கிறது நாலடியார் அதாவது ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத என்று பொருள்.

    சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் 18 பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர். ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

    இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

    சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

    அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சோதிடத்தை வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. 12 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%209%2CEcclesiastes%209&version=ERV-TA;NIV

    பதிலளிநீக்கு
  15. சகரியா 10

    கர்த்தருடைய வாக்குறுதிகள்

    2 ஜனங்கள், தங்கள் சிறிய சிலைகளையும், மந்திரத்தையும் பயன்படுத்தி வருங்காலத்தை அறிந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவை பயனற்றதாகும். அந்த ஜனங்கள் தரிசனங்களைப் பார்த்து, அவர்கள் கனவுகளைப்பற்றி சொல்வார்கள். ஆனால் இது வீணானது. அவைகள் பொய்கள். எனவே ஜனங்கள் உதவிக்காக அங்கும் இங்கும் அலைந்து ஆடுகளைப்போல் கதறுவார்கள். ஆனால் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல மேய்ப்பன் எவரும் இருக்கமாட்டார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2010&version=ERV-TA

    பதிலளிநீக்கு