ஆத்திச்சூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்திச்சூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

தமிழர் சமயம் 

“இடம் பட வீடு எடேல்” (ஆத்திச்சூடி18)  
பொருள்: உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே

இஸ்லாம் 

 கப்பாப் (ரலி) அவர்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நபர் (குடும்பத்திற்க்காக) வீடு கட்டுவதற்கு செலவழிப்பதைத் தவிர அவனது அனைத்து செலவுகளுக்கும் (மறுமையில்) வெகுமதி அளிக்கப்படுவார். (அல்-திர்மிதி 4283) (அல்-புகாரி 5672) 

இப்னு ஹஜர் கூறினார்: இது ஒருவரின் தேவைகளை மீறி வீடு கட்டப்படுவதை  குறிக்கிறது.

கிறிஸ்தவம் 

13 யோயாக்கீம் அரசனுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும். அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான். எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும். அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும். அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான். அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.

14 யோயாக்கீம், “நான் எனக்காகப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன். எனக்கு பெரிய மேல்மாடி அறைகள் இருக்கும்” என்கிறான். எனவே, அவன் பெரிய ஜன்னல்களோடு வீடு கட்டுகிறான். அவன் கேதுரு மரங்களின் தூணுக்கு சிவப்பு வண்ணத்தைப் பூசுகிறான்.

15 யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய். அவை உன்னைப் பெரிய அரசனாக்காது. உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான். எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான். யோசியா அதனைச் செய்தான். அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது.

16 யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான். ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன. யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன? இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு. என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

17 “யோயாக்கீம், உனது கண்கள் உனக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கின்றன. நீ எப்பொழுதும் உனக்கு மிகுதியாகத் தேவையானதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன் இருதயம் அப்பாவி ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறது. மற்ற ஜனங்களின் பொருட்களை நீ திருட விரும்புகிறாய்.”

18 எனவே, கர்த்தர் இதைத்தான் யோசியாவின் மகனான, அரசன் யோயாக்கீமிடம் கூறுகிறார். “யூதாவின் ஜனங்கள் யோயாக்கீமிற்காக அழமாட்டார்கள். அவர்கள் மற்றவர்களிடம், ‘ஓ, எனது சகோதரனே, யோயாக்கீம் பற்றி வருந்துகிறேன்! ஓ, எனது சகோதரியே, நான் யோயாக்கீம் பற்றி மிகவும் வருந்துகிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள். யோயாக்கீமிற்காக யூதா ஜனங்கள் அழமாட்டார்கள். அவர்கள் அவனைப்பற்றி, ‘ஓ, எஜமானே, நான் சோகமாக இருக்கிறேன்! ஓ, அரசனே, நான் சோகமாக இருக்கிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.

19 எருசலேம் ஜனங்கள் யோயாக்கீமை ஒரு கழுதையை அடக்கம் செய்வதுபோன்று அடக்கம் செய்வார்கள். அவர்கள் அவனது உடலை இழுத்துச் செல்வார்கள். அவர்கள் அவனது உடலை எருசலேமின் வாசல்களுக்கு வெளியே வீசுவார்கள்.