இறைவன் உண்டா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவன் உண்டா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவன் உண்டா? இல்லையா?

எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இக்கேள்விக்கு "ஆம்" அல்லது "இல்லை" என்று ஒரு வரியில் பதில் அளித்துவிட முடியும். ஆனால் அந்த ஒற்றை வரி பதில் சுய கருத்தாக அமைந்துவிடும். எனவே இந்த கேள்விக்கான விரிவான பதிலும் அதற்கான காரணங்களும் அதற்கான ஆதாரங்களும் முறையான அணுகுமுறையுடன் இந்த நூல் முழுவதும் விவரிக்கப் பட்டுள்ளது. 

நம்பிக்கை சார்ந்த விடயங்களை வகைப்படுத்த முயன்றால் கீழ்கண்டவாறு வகைப் படுத்தலாம். 

  1. நாத்தீகம் - இறைவனென்று எதுவுமில்லை (Atheism)
    • கடவுள் உண்டா இல்லையா என்று குழப்பமாக உள்ளது (Agnosticism)
    • கடவுள் உண்டா இல்லையா என்ற கவலை இல்லை (Apatheist)
    • அரசியல் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட தத்துவங்களை பின்பற்றுவது (Capitalism, Socialism, Communism, Liberalism, Populism, & Nationalism)
    • இயற்கைதான் வணக்கத்துக்கு உரியது, கடவுள் என்று வேறேதும் இல்லை (Pantheism)
    • அறிவியல்தான் எல்லாம், கடவுள் என்று ஏதும் இல்லை (Scientism)
  2. ஆத்தீகம் (Theism)
    • உண்மை தெய்வத்தை வணங்கி வழிபடுவது  
      • படைத்து உணவளித்து இறுதியில் தீர்ப்பளிக்கும் தெய்வத்தை அது சொன்னபடி அதை வணங்கி அது கூறும் அறத்தில் வாழ்ந்து மறிப்பது.
      • உண்மை தெய்வத்தை வணங்குவது அல்லது வழிபடுவது (ஏதாவது ஒன்றை மட்டும்)
      • உண்மை தெய்வத்தை வணங்கி வழிபடுவது ஆனால் ஒரே இடத்தில் தேங்கி அவனது அடுத்தடுத்த வழிகாட்டுதல்களான வேதங்களை(வழி நூலகளை) மறுப்பது, வழக்கொழிந்த வேதத்தையும் சமயத்தையும் பின்பற்றுவது. (வழக்கொழிந்த சமயமும் வேதமும் பின்பற்றுதலுக்கு ஏதுவாதனதல்ல, அவற்றின் எச்சங்கள் மேட்டுமே மிச்சமிருக்கும் - அதை முறையாக போதிக்கும் குருவும் இருப்பதில்லை, அதன் பண்பாடுகளும் வெறும் குறியீடாக மாறிப் போய் இருக்கும்.)
    • பொய் தெய்வத்தை வணங்கி, பொய் குருவின் உபதேசம் கேட்டு, பொய் வேதத்துக்கு வழிபட்டு, பொய் சமயத்தில் தன்னை இணைத்து கொள்வது.  
      • உருவ வணக்கம் - சிலை, படம் போன்றவற்றை வணங்குவது (Idolatry)
      • மனிதர்களை வணங்குதல் - சாமியார், சித்தர், நபிகள், குரு, தாய் தந்தை போன்றவற்றை வாங்குதல் (Anthropolatry)
      • தேவர்களை வணங்குதல் - மலக்குகள், ஏன்ஜல்ஸ், நந்தி, முப்பத்து முக்கோடி தேவர்கள் (Angel Worship)
      • இறந்தவர்களை வண்ங்குதல் - குலதெய்வம், தர்கா, சுடுகாடு, கல்லறைகளை வணங்குதல் (Animism)
      • இயற்கையை வணங்குதல் - சூரியன், காற்று, மழை, மரம் போன்றவற்றை வணங்குதல் (Nature worship)
      • மிருகங்களை வணங்குவது - மாடு, பாம்பு, பன்றி, கோழி, எலி, யானை போன்றவற்றை வணங்குதல் (Animal worship)
      • தீய சக்தியை வணங்குதல் - சதானிக் சர்ச், பூத வழிபாடு, மாந்த்ரீகம் போன்ற வணக்க முறைகள். (Aatanism)
நாத்தீகரும் ஆத்தீகரும் வெவ்வேறு காரணங்களினால், வெவ்வேறு அனுபவத்தால், வெவ்வேறு கல்வியினால் அந்த நிலையை அடைகின்றனர்.

"கடவுள் இல்லை" என்ற முடிவுக்கு சென்ற 

  • "தி எசென்ஸ் ஆஃப் கிறிஸ்டியானிட்டி" எழுதி அதன் மூலம் நாத்தீகத்தை வாதாடிய ஃபியூர்பாக்
  • ஃபியூர்பாக், சார்லஸ் டார்வின், மாறும் ஜியோனிஸ தூதர் என்று அழைக்கப்படும் மோசஸ் ஹெஸ் போன்றவர்களின் மூலம் தாக்கம் பெற்று நாத்தீகத்தை அடிப்படையாக கொண்ட பொதுவுடைமை தத்துவம் இயற்றிய கார்ல் மார்க்ஸ்
  • பொதுவுடைமை தத்துவம் ஆட்சி செய்த ரஷ்யா-விடமிருந்து தாக்கம் பெற்று நாத்தீகத்தை வாதாடி பல நூல்கள் எழுதிய பெரியார் 
  • "எஸ்ஸென்சியல் ஆப் ஹிந்துத்துவா" எழுதி இந்துத்துவாவின் இன்றைய இலக்கை வடித்து தந்த, RSS-இன் இரண்டாம் தலைவரான, வீர சாவர்க்கர் மற்றும்
  • "சதானிக் வெர்ஸ்" எழுதியதன் மூலம் மதத்தையும் கடவுளையும் மறுத்த சல்மான் ருஷ்டி

போன்ற சமூகத்தில் பெருமளவில் தாக்கம் செலுத்திய முக்கிய நபர்களை ஆய்வு செய்தால், சில பொதுமக்கள் மத்தியிலும் ஏன் கடவுள் இல்லை என்கிற கருத்து நிலவுகிறது என்று அறிய முடியும். 

காரணங்கள் சுருக்கமாக, 

  • தனது கிறிஸ்தவ மதத்தில் நிலவிய மூட நம்பிக்கையால் நாத்தீகர் ஆனார் ஃபியூர்பாக். 
  • தொழிலாளர்களுக்கு சம உரிமை பெற விரும்பிய, ஃபியூர்பாக் போன்ற நாத்தீகர்களாலும், மோசஸ் ஹெஸ் போன்ற ஆரம்பகால சியோனிச தலைவர்களாலும் தாக்கம் செலுத்தப்பட்ட, சிறுவயதிலிருந்தே நாத்தீகராக இருந்த, யூதரான மார்க்ஸ் மேலும் நாத்தீக கொள்கையில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு அதை ஒரு தத்துவமாக வடிவமைத்தார். 
  • பெரியார் பிராமணர்களால், சாதியால், தீண்டாமையினால், சமூக ஏற்ற தாழ்வுகளை சகிக்க முடியாமல் ஹிந்து கடவுள்களை கடுமையாக விமர்சித்து நாத்தீகர் ஆனார் 
  • சாவர்க்கர் இன வெறியராக இருந்தாரே தீவிர, மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தது இல்லை.
  • சல்மான் ருஷ்டி & தாஸ்லிமா நஸிரீன் போன்றோர்கள் கட்டுப்பாடுகள் இன்றி சுய விருப்பத்தின் படி வாழ விரும்பும் நபர்கள் எனவே சமயங்களை அது கூறும் இறைவனை சாட துவங்கினர். 
சுருக்கமாக சொன்னால், சமூகத்தில் மதத்தின் பெயரில் நடைபெற்ற ஒடுக்கு முறையினாலும், மூட நம்பிக்கையினாலும் நாத்திகத்துக்கு சார்பாக பேச துவங்கியவர்கள் தான் அதிகம். ஒரு சிலர் மட்டும் சமயங்களின் கூறும் வாழ்கையின் ஒழுக்கங்களை பின்பற்ற முடியாமையினால் நாத்தீகர்களாக உருவெடுத்தனர். மட்டுமன்றி பொது மக்களில் பலர் கல்வியறிவு மறுக்கப் பட்டவர்களாகவும், ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்டு இருப்பதாலும், பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தத்துவங்களின் நூல்களினால் ஈர்க்கப்படடு நாத்தீகர்களாக உருவெடுத்தனர்.

"கடவுள் இருக்கிறார்" என்று கூறும் மக்களின் காரணங்கள் அனைத்தையும் பட்டியலிட முடியாது என்றாலும் வகைப்படுத்த முயன்றால் அவர்களின் வாக்காக இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கும். 
  • எமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இந்த சமயத்தை நம்பினார்கள், நாங்களும் நம்புகிறோம்.
  • உள்ளுணர்வு சொல்வதால் அனைத்தையும் மீறிய சக்தி உண்டென்றும் அது கடவுள் என்றும் நப்புகிறோம்.
  • ஒரு குறிப்பிட்ட சம்பவம் இறைவன் இருப்பதை எங்களுக்கு உணர்த்தியது.
  • மறைநூல்களை வாசித்தோம், அதன் அழகும், பிரமாண்டமும், அது உள்ளடக்கிய உன்னதமான  கருத்துக்களும், உண்மைகளும் நாங்கள் இறைவனை அல்லது ஒரு குறிப்பிட்ட சமயத்தை நம்ப காரணம்.
இதில் முதல் மூன்றுக்கும் கல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கல்விதான் ஒரு மனிதனின் அறிவுக்கும் அதை ஆழ்ந்து நம்புவதற்கு அடித்தளமாக இருக்கும். உலகில் மிகப் பெரும் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் "கடவுள்" என்ற கருப்பொருளை வாசிப்பதும்புரிந்து கொள்வதும் முதன்மையானது என்கிற சிந்தனை நமக்கு ஏற்படுவது உண்மையிலேயே மிக மிக நல்லது. ஏனென்றால் கடவுள் இல்லை என்போருக்கும், கடவுள் உண்டு என்போருக்கும் வெளிப்படையில் நியாயம் போன்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. அதில் உண்மையிலேயே நியாயமான கருத்து எது என்பதையும் ஏன் என்பதையும் ஆய்ந்து அறிய இந்த நூல் உங்களுக்கு உதவலாம்.  

"இறைவன் உண்டா?" என்ற இந்த கேள்விக்கு நாம் பல்வேறு தரவுகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

  • உலகம் தானாக உண்டானதா அல்லது உருவாக்கப் பட்டதா?
  • கடவுள் என்கிற கருப்பொருள் துவக்கத்தில் இருந்தே உள்ளதா அல்லது இடையில் உருவானதா?
  • பண்டைய காலத்தில் நாத்தீக சிந்தனை கொண்ட சமூகம் இருந்ததா? அவர்களின் வாதம் என்ன?
  • வெவ்வேறு மொழியை, நிலத்தை சேர்ந்த சங்கநூல்கள் கடவுள் பற்றி என்ன சொல்கிறது?
  • வரலாற்றில் மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தங்கள் எத்தனை நடந்தது? ஏன் நடந்தது?
  • நவீன காலத்தில் நாத்தீக சிந்தனை எங்கிருந்து துவங்கியது? ஏன்?
  • கடவுள் நம்பிக்கை இல்லமால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பொழுது நமக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா?

இதனுடன் பல துணை கேள்விகளுக்கும் பதில் தேடினால் நமக்கு தேவையான பதில் நிச்சயமாக கிடைக்கும். "நல்ல செயலை கடவுளின் பெயரால் சொன்னால் மக்கள் கேட்பார்கள் எனவே சாமி பெயரில் சில நல்லவைகளை நல்லோர் சிலர் கூறி உள்ளனர், ஆனால் கடவுள் என்று ஏதுமில்லை" என்ற சிலரின்  கருத்தாக்கம் உண்மையா? இல்லையா? என்பது இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படும். 

இன்று, நம்பிக்கை என்கிற வார்த்தை மிக மலிவாக பயன்படுத்தப் படுகிறது, ஏறக்குறைய "நம்பிக்கை" என்பது "மூட நம்பிக்கை"க்கு இணையாக பயன்படுத்தப் படுகிறது. ஆனால் ஆத்திகம், நாத்தீகம், அதன் உட்பிரிவுகள் அனைத்துமே நம்பிக்கைதான். ஏனென்றால் அறிவியலை நம்பிக்கை கொள்பவர்கள், நேரடியாக ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிவதில்லை. அவ்வாறு செய்ய வாழ் நாட்கள் போதுமானதாக இல்லை. அறிவியலில் ஆய்வு முறையையும், அந்த ஆய்வு முடிவை அங்கீகரிக்கும் பல்கலைகழகத்தையும் நாம் நம்புவதால் அந்த ஆய்வு முடிவு அறிவியல் உண்மை ஆகிறது. ஒருவேளை இவ்விரண்டும் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாமல் இருந்தால் அந்த அறிவியல் ஆய்வின் முடிவு சந்தேகத்துக்கு இடமாக மாறுகிறது. அதன் உண்மை நிலையை அறிய வேறு ஒரு நம்பத்தகுந்த ஆய்வு முறையினையோ அல்லது பல்கலைகழகத்தையோ நாம் அணுகுவோம். அது போல்தான் கடவுளும். ஆனால் கடவுள் என்று வரும் பொழுது அது மேலும் எளிமையாக்கப் பட்டுள்ளது, அந்த கல்வி முறையினை கைவிட்டதற்கும், மீண்டும் கண்டறியாமல் இருப்பதற்கும் நமது அலட்சியமே காரணம். அந்த எளிமையான முறையினை கொண்டு "இறைவன் உண்டு" என்று இந்நூலில் நிறுவப்படும்.

பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு என்றால், கடவுள் என்கிற கருப்பொருளை மறைநூல்களின் வரையறைக்கு முரணாக உருவகப் படுத்தும் மக்களின் செயல்பாட்டை வெறுத்து, பொய் குரு, பொய் வேதம், பொய் தெய்வம், பொய் மதம் இவற்றுக்கும் சத்தியத்துக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியும். அவ்வாறு எவ்வித முயற்சியும் இன்றி நாத்தீக சார்புடைய நூல்களை மட்டும் வாசித்து நேரடியாக நாத்தீகத்தை ஆதரிப்பதும் ஆன்மீகத்தின் மீது தவறான புரிதல் கொள்வதும் பகுத்தறிவு ஆகாது. பகுத்தறிவு என்பது நம் தாய்மொழியில் உள்ள நூற்களை விட மேற்கிலும், வடக்கிலும் உள்ள நூல்களில் உள்ளது என்று நம்புகிறவர்கள் பேதைகளல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். 

எனவே இந்த முழு நூலும் இந்த கேள்விக்கான பதிலாக நம்பத் தகுந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு அமைந்து இருக்கும். 

குறிப்பாக நாத்தீகத்துக்கு உலகை திசைத் திருப்ப திட்டமிட்ட சதி நடைபெற்று வருகிறது. மதம் அல்லது சமையம் என்றாலே ஒரு மோசமான சிந்தனையை மக்களின் மனதில் அது விதைக்கிறது. அது மறைநூல்கள் அல்லது வேதங்களை வாசிப்பதிலிருந்து மக்களை திசை திருப்புகிறது.

கடவுளுக்கு ஆதரவாக பேசினால், "கடவுள் உங்களை காப்பாற்றவில்லை நீங்கள்தான் கடவுளை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் காப்பாற்றித்தான் கடவுள் வாழ்கிறதென்றால், கடவுள் இல்லை என்று பொருள்" என்றும், சமயங்களுக்கு ஆதரவாக பேசினால் "மத வெறியன் அல்லது பயங்கரவாதி" என்றும் சித்தரிக்கும் வழக்கம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக நிலவி வருகிறது. இவ்வாறு உலக மக்களின் உள்ளங்களில் நயவஞ்சகமாக திட்டமிட்டுப் பல்வேறு வகையில் முடுக்கிவிடப்படும் செயல்பாட்டின் மூலமும், ஊடகங்கள் மூலமும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டம் யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையிலிருந்து உங்களுக்காக,


நாத்தீக சிந்தனை ஆங்காங்கே பல்வேறு காலத்தில் அவ்வப்பொழுது தோன்றி உள்ளது. ஆனால் சமகாலத்தில் மிகத் தீவிரமாக நிறுவனமயப் படுத்தப்பட்டு பல்வேறு "போகாத ஊருக்கு வழி சொல்லும்" தத்துவங்களை திட்டமிட்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து அதன் மூலம் மக்கள் நாத்தீகத்தை தழுவ வைக்கப் படுகிறார்கள். ஆன்மீகத்தை ஏற்பதே சவாலாக உள்ள காலத்தில் அதில் சரியானதை பகுத்து அறிந்து தேர்ந்தெடுப்பது ஆகக் கடினம் என்றாலும் அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய மனித பிறப்பின் நோக்கம் ஆகும்.