குடும்பத் தலைமை ஆணா? பெண்ணா?

இஸ்லாம்

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்…. (குர்ஆன் 4:34)

தமிழர் சமயம்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள், இல்வாழ்க்கை - 41)

கு ச ஆனந்தன் உரை: குடும்பத் தலைவன், பெற்றோர், துணைவி, மக்கள் ஆகிய இல்வாழ்க்கை இயல்புடைய முத்திறத்தார்க்கும் நன்னெறி நின்று பயன்தரும் துணையாவான்.

கிறிஸ்தவம்

சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள். (எபேசியர் 5:23-24)

குடும்ப பொறுப்பு ஆணிடமே உள்ளது

ஆங்கிலமும் இந்தியும்


மொழியை வெறுப்பவர்கள் அல்ல தமிழர்கள்.

இந்தியும் ஆங்கிலமும் ஏறக்குறைய சில நூற்றாண்டு வயதுடைய மொழிகளே

ஆங்கிலத்தை ஏற்பதன் காரணம்,

  1. தமிழர் வரலாற்றில், கடல் கடந்து சென்று வாணிபம் செய்ததை காணமுடிந்த நம், எப்படி நாம் அந்நியர்களோடு உரையாடி இருப்போம் என்று சிந்திக்க கடமைப் பட்டு உள்ளோம். நாம் அவர்களிடம் பொருளீட்ட முயற்சித்ததால் அவர்களது மொழியை நாம் தான் கற்று இருக்க முடியும். இந்தவகையில் ஆங்கிலத்தையும் நாம் ஏற்றுள்ளோம். 
  2. இரண்டாவது தமிழர்களின் சங்க நூல்களை மற்றும் வரலாற்றை மீட்ருவாக்கம் செய்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானது.
  3. மூன்றாவது ஆங்கிலம் என்பது உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு பொது மொழி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு மொழியை பொது மொழியாக ஏற்பதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், ஏற்கப்பட்ட பொதுமொழி மற்ற மொழிகளை காலப்போக்கில் அழித்தொழித்து ஓங்கி நிற்கும். ஹிந்தியே அதற்கொரு உதாரணம், வடக்கில் உள்ள பெங்காலி, காஷ்மீரி, பீஹாரி, அஸ்ஸாமி, மராட்டி போன்றவைகள் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மொழி அழிந்தால் வரலாறும் அழியும், வரலாறு அழிந்தால் அதன் தரும் நடுக்கம் கோரமானது.

ஆனால் இந்தியை வெறுப்பதற்கான காரணம்: திணிப்பு

  1. இந்தி தமிழை அழிக்க முயல்கிறது
  2. கீழடியை மூட முயன்றது
  3. தமிழரின் தொன்மைக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது
  4. தமிழர் நாட்டை பறிக்க 2 கோடி வடக்கர்களை இங்கே களமிறக்கி வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது
  5. இங்கே வந்து பிழைக்கும் கொத்தனார் சித்தாள் கூட, முடி திருத்துபவன் கூட, பாணிபூரி விற்பவன் கூட தமிழை கற்று பேச மாட்டான், நாம் இந்தி கற்றுக்கொண்டு பேசணும்! இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

கோவிலில் உள்ளவன் இறைவனா? கடமைக்காக இறைவனை வணங்கலாமா?

இறைவன் படைத்த கற்களை கொண்டு, யாரும் கண்டிராத இறைவனை மனிதனால் படைக்க முடியுமா?

இறைவன் பயப்பட தகுதியானவன், இறைவன் அன்பு செய்யவும் தகுதியானவன். எனவேதான் அதை பயபக்தி என்கிறோம்.

கோவிலில் வழிபாடு எதற்காக என்றால் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி இணக்கமாக இருப்பதற்காகவே, ஆனால் அங்கே சிலையை இணைத்த பிறகு அதற்க்கெதிராக பேசிய சித்தர்களின் பாடல்கள் இங்கே.

திருமூலர்


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' - (திருமந்திரம்)

"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந்திரம் 2614)

சிவவாக்கியர்


ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே (சிவவாக்கியம்)

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ. (சிவவாக்கியம்)  

கிறிஸ்தவம்

ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7) 
யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! (யாத்திராகமம் 20:14)  

இஸ்லாம்


ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (குர்ஆன் 5-90) 
 

கடமைக்காக இறைவனை வழிபடலாமா?

கூடாது. ஏன் கூடாது? என்று அறிய விரும்பினால் வணக்க வழிபாடு என்றால் என்ன? என்று நாம் அறிய வேண்டும்.

இறைவனுக்கு வழிப்படுதல் என்றால், அவனது அறிவுரையை ஏற்று நடப்பது என்று பொருள். அவனது சொற்கள் எது? அவன் வழங்கிய வேதங்கள்.! ஒவ்வொரு மொழிக்கும் வேதம் உண்டு, ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் அதை கற்று புரிந்து செயல்படுத்த முடியும் என்பதற்காக.! 

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்

நன்மை என்று நாமாக ஒன்றை தீர்மானித்து செய்ய முடியாது. வேதத்தில் சொல்லப்படவைகள் தான் அறம் (அ) நற்செயல் (அ) புண்ணியம் ஆகும். எனவே இறைவன் வழங்கிய வேதத்தை கற்று அது கூறும் அறத்தை செயல்படுத்தலே வழிபடுதல் ஆகும், அதுவே வழிபாடு ஆகும். அவ்வேதமே இறைவனை வணங்கும் முறையையும் அறமாக வகுத்துத் தரும், அதுவே இறைவணக்க முறை ஆகும். இதுதான் சுருக்கமாக வணக்கவழிபாடு என்று அழைக்கப் படுகிறது. 

இறைவனை வணங்குதல் என்பது வேறு, வழிபடுதல் என்பது வேறு. 

கடமைக்காக ஒருவர் இறைவனை வழிப்படக்கூடாது. மேற் சொன்ன விளக்கம் புரிந்தால், கடமைக்காக ஒருவர் இறைவனை வழிப்பட முடியாது என்றும் விளங்கிக்கொள்ளலாம்.