பகுத்தறிவை விட வேதங்களை நம்பும் மனிதர்கள் முட்டாள்களாக மாறுகிறார்களா?

 பகுத்தறிவு என்றால் மனிதன் தனது அறிவு மற்றும் ஆற்றலை கொண்டு, எந்த ஒன்றையும் பல்வேறு கூறுகளை அடிப்படையாக கொண்டு, சரியான முறையான அணுகுமுறை மூலம் பகுத்து அறிதல் ஆகும். அதாவது கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளையும் அறிவு ஆகும்.

வேதம் எனும் சமய நெறி நூல்கள் என்பது மனிதனின் அனுபவத்தின் மூலம் விளைவதல்ல. மேலும் இது மனித கண்களிலிருந்து மறைந்த விடயங்கள் என்பதால் இது மறைநூல் என்றும் அறியப்படுகிறது.

இரண்டும் முற்றிலும் முரண்படுவது போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் மனித வாழ்வில் பயணிக்க முடியும்.

மனித முயற்சியின் மூலம் விளையாத அறிவை (இறைவனால் வழங்கப்பட்ட வேதம்) மனித முயற்சியை கொண்டு பகுத்து அறிவது அவசியம், ஏனென்றால் பெறப்படும் அறிவு எதுவும் வாழ்வின் நெறிகளாக பயன்படுத்தப்படவே வழங்கப்படுகிறது.

வேதங்களை பகுத்தறியாத மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியாது. எதிர்ப்படும் எதையும் பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆவர்.

  • ஒரு சில செய்திகளை மட்டும் அறிந்து கொண்டு, அல்லது
  • ஒருசில மதத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, அல்லது
  • அறிவியல் ஆதாரங்கள் எனும் மனிதன் ஆய்ந்து அறிந்த உலகியல் விதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு

இறை மறுப்புக்கு செல்வோர் எவரும் இறை மறுப்பாளர்கள் மட்டுமே, பகுத்தறிவாளர்கள் அல்ல.

உதாரணமாக,

  • இந்து மத மக்கள் பின்பற்றுவதில் பிரச்சனை என்றால், இந்து மத போதனையில் அந்த பிரச்சனை உண்டா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்ய துவங்கும் பொழுது இந்து மதத்துக்கு என்று தனியாக மறைநூல் கிடையாது ஏனென்றால் இந்துமதம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் உருவானது என்று அறிய வருவோம். இந்து மதம் எனபது அரசியல் காரணங்களுக்காக, தத்துவங்களில் முரண்பட்ட பல சமயங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததன் மூலம் உருவானது என்று ஆய்வில் கண்டறிந்தால், அவைகளை தனித்தனியே பிரிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் உள்ள சமணம், சைவம், வைணவம், சனாதனம் உட்பட பல சமயங்களின் வரலாறு மற்றும் மறைநூல்கள் ஆகியவற்றை அறிந்து, அதை கற்று, பகுத்து அறிய வேண்டும்.
  • அதே போல சமகாலத்தில் நம்முடன் வாழும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயத்தை வாசிக்க வேண்டும். ஒரே உலகத்துக்கு ஒரே கடவுள்தான் என்றால் ஏன் இத்தனை சமயங்கள், ஏன் கடவுளின் பெயர் வேறுபடுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அவைகளின் வரையறைகள் மறைநூலின் படி வேறுபடுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • உலக சமயங்கள் அனைத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா? அதற்கான விதிகள் எதேனும் உண்டா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • இயற்பியலுக்கான விதியும் மெய்யியலுக்கான விதியும் வேறு படும் ஏனென்றால் இரண்டின் இயல்பும் வேறு வேறு என்று பகுத்து அறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுளை நம்ப வேண்டும் என்றால் நான் என் கண்களால் பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று உணர வேண்டும். ஏனென்றால் மெய்யியல் விதியின் இயல்பும் இயற்பியல் விதியின் இயல்பும் வெவ்வேறு தன்மைகளை உடையது ஆகும்.
  • இதையெல்லாம் பகுத்து அறிந்த பிறகு கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும்.

வேற வேலை இல்லையாப்பா என்று கேட்டால், இவைகளை செய்பவர்தான் பகுத்தறிவாளர், இல்லையேல் வெரும் நாத்திகர் மட்டுமே.

சரி, ஒருவர் வேதத்தை நம்பும் பொழுது ஒருவர் முட்டாளாக ஆகிறாரா என்று கேட்டால்…

  • வேதம் என்றால் என்ன என்று பகுத்து அறியாமல்,
  • எது வேதம் என்று பகுத்து அறியாமல்,
  • வேதம் கூறும் அறம் என்ன என்பதை கற்று அறியாமல்,
  • அதை சரியான இடத்தில் பயன்படுத்தாமல்,

வேதத்தை நம்பினால் மூட்டாள் என்ற நிலைக்குத்தான் செல்ல நேரிடும்.

சரியான வேதத்தை கண்டறிந்து, அதை ஓதி, உணர்ந்து, தானும் அடங்கி, பிறருக்கும் உரைத்தல், ஒவ்வொரு பகுத்தறிவு ஆன்மீகவாதிக்கும் அடிப்படை ஆகும்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு தான் வரமுடியும். வேதத்தை நம்பும் ஒவ்வொருவரும் பகுத்து அறிந்தால் தான் முட்டாள் ஆவதை தவிர்க்க முடியும்.

இந்து மதத்தில் உள்ள நபிமார்கள் யார்?

மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.

சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!

முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)

ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

சொற்பொருள்:

நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.

நாதன்: ஆசிரியன், குரு  

குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.

எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.

கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > >  மக்கள்

அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார். 

மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.

அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.

    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. திருவள்ளுவர்
    4. அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
    5. புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
    6. அகநானூறு எழுதியவர்கள்
    7. முனைப்பாடியார்
    8. அருஞ்செக்கலப்பு எழுதியவர்
    9. காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
    10. கபில தேவர்
    11. பூதஞ் சேந்தனார்
    12. நாதகுத்தனார்
    13. காரியாசான்
    14. கணி மேதாவியார்
    15. நல்லாதனார்
    16. அப்பர்
    17. சுந்தரர்
    18. ஞானசம்பந்தர்
    19. திருமூலர்
    20. மாணிக்கவாசகர்
    21. சிவவாக்கியர்

போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.

இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

ஹிந்துக்களாகும் முன் சைவம், வைணவம், சமணம் மற்றும் புத்தம் என்று ஒருவருக்கொருவர் வன்முறைகளை செய்துகொண்டிருந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

  • தெற்கில் இருந்த சைவம் வைணவம் சமணம் மட்டுமல்ல,
  • மேற்கில் உள்ள யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயங்களுக்கும்,
  • வடக்கே இருந்த வேத மதம், புத்தம் Tengris சமயங்களுக்கும்,
  • கிழக்கில் இருந்த Confucianism, Daoism, Shinto போன்ற மதங்களுக்கு இடையிலேயேயும்,
  • திசைகளை மீறி மேலே குறிப்பிட்ட சமயங்களுக்கு இடையிலேயேயும்,
  • கடவுளை நம்பும் மக்களுக்கும் நம்பாத மக்களுக்கு இடையிலேயேயும்,

போர்கள் நடைபெற்றது, நடைபெறுவது வரலாறு.

இதற்கு காரணம் அறிய வேண்டுமென்றால் வாசிக்க வாய்மை

ஒரு வரியில் சொல்வதென்றால் இது நமைக்கும் தீமைக்குமான யுத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் தங்களை நன்மையின் பக்கம் இருப்பதாகவும் எதிரியை தீமையின் பக்கம் இருப்பதாகவும் கருதுவர். ஆனால் தத்தம் மறைநூல் வாசிக்கப்பட்டு தங்களை தாங்களே எடை போடும் பொழுது அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று அவர்களே அறிந்துகொள்ளலாம். மற்றொருவர் கூறும் பொழுது ஏற்க்கும் மனநிலை எவருக்கும் இருக்காது. இந்த உலகம் இருப்பதன் நோக்கமான இந்த யுத்தத்தை உலகம் முடியும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளமல் (கருத்தை மறுத்து பிழை என்று நிருவாமல்) தனிநபரை வசைபாடும் அணுகுமுறை சரியா? பிழையா? இவ்வாறு செய்யும் ஒருவரை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 100% பிழையான அணுகு முறை.

அவர்களை மன நோயாளிகளாக பார்க்கிறேன். முற்றிய மன நோயாளிகள்தான் எதிர் இருப்பவர் யார்? என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? என்று எதையும் நோக்காமல் அவரை எதிரியாக கருதி அவரை காயப்படுத்துவத்திலே குறியாக இருப்பார். அவர்களுக்காக பரிதாப பாட்டு கடந்து செல்வதே சிறந்தது.

சமயங்கள் கூறும் அறநெறிகளான பணிவு, அன்பு, மறைநூல் வரி சான்றுகள் ஆகியவற்றை கொண்டு அவர்களிடம் பேசினாலும் தொடர்ந்து வசை சொற்களையே பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடம் வெகுவாக இருக்கிறது.

அதீத வெறுப்பு ஆன்மாவுக்கும், அமைதிக்கும், ஆரோக்கியத்துக்கும் தீங்கு தரும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைத்துவிட முடியாது.

ஆன்மீக ஈடுபாடு உடைய ஒருவர் இன்னொரு ஆன்மீக தத்துவத்தை நம்புகிறவரை வெறுப்புடன் கையாள முடிகிறதென்றால் அவரின் ஆன்மீகமும் அவர் வாசிக்கும் மறை நூல்களும் அவருக்கு எவ்வித பலனையும் தரவில்லை என்று பொருள்.

எந்த சமயத்தை சார்ந்தவராயினும் அது இன்னொருவரை வசைபாடுவதால் எந்த ஒன்றையும் சாதித்து விட முடியாது என்று அவரவர் மறைநூல் கூறுகிறது.

கிறிஸ்தவம்

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

உங்களை எல்லா வகையிலும் நல்ல செயல்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுங்கள், உங்கள் போதனையில் நேர்மை, கண்ணியம் மற்றும் கண்டிக்க முடியாத தெளிவான பேச்சைக் காட்டுங்கள் - டைட்டஸ் 2:7-9

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் இறை நமபிக்கையினுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். - நூல் : திர்மிதி (1950)

வீணா­ன­வற்றைக் கடக்­கும்­போது கண்­ணி­ய­மாகக் கடந்து விடு­வார்கள். அல்­குர்ஆன் (25 : 72)

அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.” நூல்: புகாரி (6018)

தமிழர் சமயம்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் - (நல்வழி வெண்பா : 33)

விளக்கம்: பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று. (௱ - 100)

பொருள்: இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!

நாம் பிழை என்று கருதுவதை இன்னொருவர் சரி என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நமது அடுத்த நகர்வு, நமது நம்பிக்கையை நாம் ஏன் சரி என்று கருதுகிறோம் என்று ஆரயாவதும், அவரது நம்பிக்கை ஏன் பிழை என்று நாம் கருதுகிறோம் என்பதையும் முறையாக தெரிவிப்பதும் என்றவாறு இருக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பில் வசைபாடுவது, அவரது கல்வி அவருக்கு எந்த வித பயனும் அளிக்கவில்லை என்பது கண்கூடாக வெளிப்படும் நிலை ஆகும். அவருக்கு பதில் அளிக்காமல் கடந்து செல்வது தான் அனைத்து சமய மறை நூல்களும் தரும் வழிகாட்டுதல் ஆகும், அதை செய்வது தன் நமது கடமை.

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களே முதலில் நினைவிற்கு வருவது ஏன்?

 பல்வேறு காரணங்கள் உண்டு.

  1. முதல் காரணம், நாம் பெரும் செய்திகளின் உண்மை நிலையை அறிய நாம் சிரத்தை மேற்கொள்வதில்லை. அதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறை.
    • ஒரு காலத்தில் வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கு செலவிடும் நேரம் போக மீதம் உள்ள பொழுதை போக்க பொழுது போக்கு விடயங்களை கையிலெடுத்தோம். உதாரணமாக விளையாட்டு, tour போன்றவைகள் அதில் அடங்கும். இன்று பொழுது போக்கு அம்சங்கள் போக மீதமுல்ல நேரத்தை வேலைக்கும் குடும்பத்துக்கும் கொடுக்கிறோம். இதில் பெறப்படும் செய்தியின் உண்மை நிலையை அறிய நேரத்தை எங்கே செலவிடுவது? அப்படியே அதற்கு தயாராக இருந்தாலும், அவரவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு செய்திகளே கொட்டி கிடைக்கும் பொழுது, தனக்கு தொடர்பில்லாத ஒரு சமயத்தினரின் செய்தியை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து அவர்கள் மீது வீண் பழி சுமத்த படுகிறது என்று உணரவேண்டிய அவசியம் யாருக்கு இருக்கும்?
    • இன்று வாழ்க்கை ஒரு பந்தயம் போல ஆகிவிட்டது, இன்னொருவரை வெல்வதை மட்டுமே முதற்பொருளாக கொண்டு எப்பொழுதும் அதற்காகவே உழைப்பது. பொருளாதாரம் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறியாமல் பிறரின் முன்பு தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள மேலும் மேலும் மேலும் பொருளை சேர்க்க முயற்சித்து கொண்டே இருப்பது. இதில் இது போன்ற செய்திகளின் உண்மை நிலையை நாம் சிந்திப்பது தேவையற்றதாக கருதுகிறோம்.
    • இஸ்லாம் அல்லாத சமயத்தை அல்லது தத்துவத்தை நம்பும் சிலர் முஸ்லிம்கள் மீது பொறாமையுடனும் வெறுப்புடனும் இருப்பதால், எடுத்த எடுப்பில் அதை நம்பிவிடுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இவர்களுக்கும் இந்த செய்திகளின் உண்மை நிலையை அறியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர்கள் தான் உலகெங்கும் ஆட்சி பீடத்தில் இருப்பதால் மேலும் இந்த நிலை முடுக்கிவிடப் படுகிறது.

எனவே இதில் எளிதான வழி, மீடியாக்கள் கூறும் "இஸ்லாமியர்கள் தீவிரவாதி" எனும் செய்தியை அப்படியே நம்பிவிட்டு கடந்து போவது.

இதே போல ஒடுக்குமுறைக்கும் வீண்பழிக்கும் உள்ளான, தனது உண்மை வரலாற்றை அறிந்த சமூகம் வேண்டுமென்றால் இச்செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இருக்கும். உதாரணமாக, தமிழர் சமூகம் மற்றும் சீக்கிய சமூகம்.

ஏன் செய்தி நிறுவனங்கள் இப்படி பொய்யான செய்தியை பரப்ப வேண்டும்? அதில் அவர்களுக்கு என்ன லாபம்? இது திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

2. இரண்டாவது காரணம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டுக்கும் வேற்றுமையை அறியாதது.

  • தீவிரவாதம் என்பது தான் ஏற்கும் தத்துவத்தை எவ்வுயிர்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவமாக பின்பற்றுவது. அதை கிழ்கண்ட வசனங்கள் விளக்குகிறது.

'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக! (குர்ஆன் 109:1,2,3,4,5,6)

“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 28:8)

  • பயங்கரவாதம் என்பது உயிர் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது. ஆன்மீகமோ, நாத்தீகமோ எதுவாக இருந்தாலும் இவைகளை பிழை என்றுதான் போதிக்கிறது. எந்த சமய நூல்களானாலும் இன்னொரு சமயம் சார்ந்த மக்களை துன்புறுத்துவதை தடை செய்கிறது. முக்கியமாக இஸ்லாம் எந்த வழிபாட்டு தளமும் சேதப்படுத்த படக்கூடாது என்பதை இவ்வாறு கூறுகிறது.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.' (குர்ஆன் 22:40)

இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். (குர்ஆன் 5:32)

3. மூன்றாவது, உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றின் வரலாற்றையும் புள்ளி விபரத்தையும் அறியாதது. இஸ்லாம் 1447 ஆண்டுகளாக உள்ளது, ஆனால் தீவிரவாதம் என்னும் சொல் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தப் படுகிறது. இஸ்லாமும் முஸ்லிமும் தான் தீவிரவாதத்துக்கு காரணம் என்றால் 1300 ஆண்டுகளாக தீவிரவாதம் எங்கே போனது?. ஏன் என்று அறிய மேலே உள்ள screen shot ஐ வாசிக்கவும். மேலும் கீழுள்ள புள்ளி விபரங்களையும் உதாரணத்தையும் காண்க.

உதாரணமாக, ISIS என்பது இஸ்லாமிய ஆட்சியை நிறுவ ஏற்படுத்தப்பட்ட பயங்கவாத குழு என்றும் அது மற்ற சமயங்களை சார்ந்த மக்களை கொலை செய்வதை நோக்கமாக கோடனுள்ளது என்றும், அனைத்து நாடுகளிலும் அதன் நீட்சி இருக்கிறது என்றும் செய்திகளில் கூறி வந்தார்கள். இந்தியாவில், தமிழகத்தில் கூட இன்றுவரை அதன் பெயரை குறிப்பிட்டு கைதுகள் நடைபெறுகிறது.

இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்ததில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? ஹமாஸ் அரசுடன் இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட ஷியா பிரிவு ஆயுத குழுவான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹௌதி ஆயுத குழுக்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளும் பொழுது அருகாமையில் உள்ள சிரியாவில் இருக்கும் ISIS ஏன் கலந்து கொள்ளவில்லை.

ISIS தலைவர் கொல்லப்பட்டதால் அவர்கள் நகர்வு முடங்கிவிட்டது என்று யாரேனும் கூறினால், ஒரு இயக்கம் ஒரு தலைவரை அடிப்படையாக கொண்டு இயங்காது என்று புரிந்து கொள்ளவேண்டும். மேலும் மேற்கத்திய மீடியாக்களும் அரசுகளும் கூட ISIS நிலை பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் CIA வால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான் நிதர்சனம். தலைவரை கொன்றது போல நாடகம் ஆடி அதன் திரைக்கதையை முடித்தது வைத்த அமெரிக்கா அதைப்பற்றி ஏன் பேசப் போகிறது? 150 ஆண்டுகளாகத்தான் அமேரிக்கா உலகத்தை ஆதிக்கம் செய்கிறது. எனவே எங்கெல்லாம் அமெரிக்காவின் தலையீடு இருந்ததோ (ஈராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், ஆப்ரிக்கா) அங்கெல்லாம் தான் தீவிரவாதம் என்று வெகுவாக கூறப்படுகிறது. சொந்த நிலத்து மக்களை அடிமைப் படுத்த வரும் ஒருவனுக்கு எதிராக தலை வாழை விருந்து சமைப்பார்களா என்ன?

இஸ்லாம் சொல்வது என்ன? (சுருக்கமாக, பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்)


சுருக்கமாக எழுதுகிறேன், விரிவாக எனது உள்ளத்தில் ஓடும் விளக்கம் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

  • இஸ்லாம் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமானது.
  • மனிதன் படைக்கப்பட்டவன், பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல.
  • படைத்தவன் காப்பவன் அழிப்பவன் ஏக இறைவன் ஒருவனே.
  • அவன் மக்களுக்கு வழிகாட்ட எல்லா சமூகத்துக்கும் அவரவர் மொழியில் சான்றோரை தேர்ந்தெடுத்து மறைநூலை வழங்கி மக்களுக்கு போதிக்க  செய்தான்.
  • அந்த உபதேசத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரை அவன் விரும்புகிறான், அல்லாதவரை வெறுக்கிறான். அவர்களை நேர்வழியில் செலுத்த அவர்களுக்கு சோதனைகளை தருகிறான்.
  • நாம் இறைவனிடம் உரையாட இறைவணக்கம், இறைவன் நம்மிடம் உரையாட வேதம்/மறைநூல்.
  • இஸ்லாம் கூறும் அறம் பெரும்பாலும் எல்லா மொழியில் உள்ள வேதங்களிலும் உள்ளவையே. அதில் சில,
    • தெய்வத்தை ஒன்று என்றே வணங்க வேண்டும் (பல தெய்வம் இல்லை)
    • தெய்வத்துக்கு ஈடு இணை கிடையாது, அவன் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல எனவே மனிதர்களை, இயற்கையை, சிலையை, பொருளாதாரத்தை வணங்க கூடாது.
    • இறைவன் சொல்வதுதான் அறம், அதற்க்கு கட்டுப்படுவதுதான் மக்களின் பிறப்பின் நோக்கம்.
    • மக்கள் செய்யும் பாவங்களின் வேர்கள் - பெருமை, பொறாமை, ஆசை, இவைகளை விட்டு விட வேண்டும்.
    • மனிதன் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் - பொறுமை, அன்பு, பயபக்தி. 
    • மனிதன் பாவங்கள் செய்வதனால் இந்த உலகிலும் மறுமை உலகிலும் கேட்டை சந்திப்பான்.
    • பாவங்களை அழிக்க அதற்க்கு இணையான நனமை செய்ய வேண்டும்.
    • மனிதன் அவன் கூறும் அறத்தை பின்பற்றாததனால் தனக்கு தானே தீமை ஏற்படுத்தி கொள்கிறான். இறைவன் யாருக்கும் தீங்கை ஏற்படுத்துவதில்லை.
    • ஒரு ஆன்மா படைக்க பட்டதில் இருந்து வெவ்வேறு நிலையில் இருந்து வருகிறது, இறுதியாக செல்லும் இடம் சுவர்க்கம் அல்லது நரகம். (ஆன்மா உலகம் (50k yrs) - கருவறை 10 months - இம்மை 100 yrs - மண்ணறை 1000 yrs - விசாரணை 50k yrs - மறுமை § yrs)
  • சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கல்வியை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் தொழிற்கல்வியை மட்டுமல்ல, உலக வாழ்வில் சிறக்கவும் மறுமை வாழ்வில் வெற்றிபெறவும் தேவையான கல்வியையும் கற்க வலியுறுத்துகிறது.
  • இம்மை வாழ்க்கை அற்பமானது 60 முதல் 100 வருடங்கள் வரை மட்டுமே.. மறுமை வாழ்க்கை முடிவில்லாதது, நிலையானது எனவே அதில் நரகத்தில் வீழாமல் இருக்கும் வழியை தேடிக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
  • எல்லா சமய வேதங்களும் முகமது நபி அவர்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது.

பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில், பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை விட, ஏன் அதிகமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறுகிறது?

மற்ற மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வரையறை உண்டு.

எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் கூறும் இலக்கணம் என்பது,

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.

அதே போல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன் என்கிறது திருமந்திரம்.

எனவே பெண் எனும் இலக்கணத்துக்கு தெய்வம் எனும் இலக்கணத்துக்கு அணு அளவும் தொடர்பில்லை. எனவே தெய்வம் என்பது புராணங்களில் உள்ளதே தவிர, தமிழர் மறை நூல்களிலும் வெதமத ரிக் யஜுர் சாம நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த கருத்தாக்கம் மனிதர்களின்,  கைவண்ணம். பொய்யாக இவர்களே உருவாக்கிய ஒன்றை இவர்களே  நம்புவதும் மதிப்பதும் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

இந்தியாவில் பெண் அடிமை பட்டு இருந்தார்கள் சில உதாரணங்கள் கீழே.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் ! நீங்க வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

  • உடன்கட்டை ஏறுதல் பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். இல்லை என்றால் தேடி படியுங்கள்.
  • பார்ப்பன பெண்கள் கணவனை இழந்த பின் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்று உலகறியும்.
  • திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்ததை போராடி நீக்கியதும் நூறாண்டுக்குள் தான் நடந்தேறியது.
  • வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆய்வு செய்தால் அதிர்ந்து போவீர்கள்.
  • பெண்களை படிக்க விடாத நிலை இதே இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.

இவைகளெல்லாம் நீங்கள் கூறிய இந்தியாவில் சமீப காலத்தில் தான் மாற்றம் பெற்றது என்பதை அறிக.

இந்தியா என்னும் பொழுது இந்து மதத்துடன் இணைக்காத நீங்கள் சவூதி என்றதும் இஸ்லாத்துடன் இணைப்பது முரணாக உள்ளது. நீங்கள் கடந்த நூற்றாண்டில் போராடி செய்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் 1460 வருடத்துக்கு முன்பே செய்துவிட்டது.

யூதர்கள் கொடூரமானவர்கள், ஏன்?

முதலில் நாம் அறியவேண்டிய அடிப்படை என்னவென்றால் நல்லவர்கள், தீயவர்கள் என இரு பிரிவினர் இல்லாத இனமும், மதமும், நாடும் எங்கும் இல்லை.

எனவே யூதர்களில் நல்லவர்கள் உண்டா என்றால் நிச்சியம் உண்டு.

விகிதாச்சார அடிப்படையில் தீயவர்களின் அளவு யூதர்களின் அதிகமா? என்றால், நிச்சயம் அதிகம். எந்த அடிப்படையில்?

பொது புத்தியில் மிகவும் கெட்ட விடயமாக கருதப்படுவதை கூட மிக எளிமையாக செய்யக்கூடியவர்கள் மட்டுமல்ல மக்களையும் செய்யத் தூண்டுவது அவர்களின் வாடிக்கை.

கொலை: பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களை கொலை செய்வது மட்டுமல்ல, இவர்கள் யாரையும் மனிதனாக மதிக்காதவர்கள்.

சிலையை வணங்குபவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப் பட வேண்டியவர்கள் என்று நம்புகிறார்கள்: "That's what the Torah says!"

யூதர்களுக்கு யூதரல்லாத குழந்தைகளை கொலை செய்ய அனுமதி உண்டு என்று யூதர்கள் கருதுகிறார்கள்: How To Kill Goyim And Influence People -- Torat Ha'melech @ 2.51

முஸ்லிம் குழந்தைகளையும் secular யூதர்களையும் கொலை செய்யவேண்டும் என்று யூத குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது: காணொளி

பெருமை: யூதர் அல்லாதவர் நாய்கள் என்று தாலமுத் சொல்கிறது: Religious Jews are asked about the Talmud @ 2.51

உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று தங்களை கருதும் அவர்கள் உலகம் முழுவதும் யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயங்கர திட்டங்களை வகுத்து உள்ளனர்: யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை

வட்டி: நவீன காகித பண முறையும், வங்கி முறையும், வட்டிக்கு கடன் கொடுக்கும் முறையும் யூதர்களால் தான் உருவானது. லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இவர்களின் வங்கியை உள்ளே அனுமதிக்காததால் அழிக்கப்பட்டது. கென்னடி, இந்திராகாந்தி கொலைகளுக்கு பின்னும், இரண்டு உலகப் போர்களுக்கு பின்னும் இந்த bankers இருப்பதாக பல தகவல்கள் பரவி கிடக்கிறது. இல்லை என்று சொல்வதற்கும் இல்லை ஏனென்றால் எதையும் இவர்கள் நேரடியாகவோ வெளிப்படையாகவோ செய்வதில்லை.. அமெரிக்கா செய்ததாக, Bankers செய்ததாக, பிரிட்டன் செய்ததாக, பிரான்ஸ் செய்ததாக, பெஞ்சமின் நெதன்யாகு செய்வதாக, CIA செய்வதாக, Mosad செய்ததாக, corporate நிறுவனங்கள் செய்வதாக நாம் கருதும் அனைத்து பயங்கர்ன்களும் சியோனிச யூதர்களால் தான் செய்யப்படுகிறது.

விபச்சாரம்: ஆபாச படங்கள் இஸ்ரேலில் இருந்துதான் பரவலாக்கப்பட்டது.

  1. ஆல்வின் கோல்ட்ஸ்டைன் (ஜனவரி 10, 1936 - டிசம்பர் 19, 2013) ஒரு அமெரிக்க ஆபாச ஓவியர். அவர் அமெரிக்காவில் ஹார்ட்கோர் ஆபாசத்தை இயல்பாக்க உதவுவதில் பெயர் பெற்றவர். கோல்ட்ஸ்டைன் வில்லியம்ஸ்பர்க், புரூக்ளினில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.
  2. 95% ஆபாச பட நடிகர்கள் யூதர்களே

பொய்யைப் பரப்புதல்:

Bankers எவ்வாறு ஈக்வடார், இந்தோனேசியா, சவூதியில் பொய்யை பரப்பி அந்த நாடுகளின் சொத்தை கொள்ளை அடித்தனர் என்று அறிய வாசிக்க ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Book PDF Download - Tamil Mixer Education

நவீன மார்க்கெட்டிங்இன் தந்தையாக அறியப் படுபவர் உக்ரைனை பூர்வீகமாக கொண்ட யூதர் பிலிப் கோட்லர் ஆவார். மார்க்கெட்டிங் - இல் யூத நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. தரமற்ற அல்லது தேவையற்ற அல்லது மனிதனுக்கு கேடான ஒரு பொருள் இவ்வாறு மார்க்கெட்டிங் (பொய்யை பரப்புவதன்) மூலம் கருணையே இல்லாமல் சந்தை படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, நமது மோடி ஒரு யூத பெண்மணியின் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் (apco worldwide) பெரிய பிம்பமாக ஊதி பெருக்கபட்டு பிரதமர் ஆனார். அதன் கேட்டிலிருந்து விடுபட நாடு வழிதெரியாமல் தவிக்கிறது

இந்த Quora, Facebook, Instagram, Google, YouTube, போன்ற பொய்களைப் பரப்ப பயன்படும் எல்லா சமூக வலைதளங்களும், பெரும்பாலான டிவி, ரேடியோ, தினசரி நாளிதழ், அச்சு நிறுவனங்கள் அனைத்தும் யூதர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும். இப்பொழுது உங்களுக்கு புரியலாம் ஏன் நல்ல செய்திகளும் உண்மை செய்திகளும் மக்களிடம் மறைக்கப்பட்டு குப்பையும் ஆபாசம் பொய்யும் பரப்பப் படுகிறது என்று.

இந்த பட்டியலை நீட்டிக்கொண்டு போகலாம் ஆனால் அது அவசியமில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் இந்த ஐந்தும் தான் உலகில் உள்ள மீதமுள்ள அனைத்து அக்கிரமங்களுக்கும் அடிப்படையானது.

சரி இந்த விடயங்களை யூதர்கள் மீதுள்ள பொறாமையின் காரணத்தால் சிலர் கூறி இருக்கலாம் என்று கருதினால்,l அவர்களது வேத நூலான தோராஹ் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது, பைபிளின் பழைய ஏற்பாடு அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்! யூதர்கள் அவர்களின் வேதத்தை பின்பற்றவில்ல

9 “‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். (எசேக்கியேல் 22:9–12)

இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்!

“யூதா ஜனங்களின் பாவம், அவர்களால் அழிக்க முடியாத இடத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. அந்தக் கல்தான் அவர்களது இதயம் (எரேமியா 17)

யூதர்களுக்காக மன்றாட வேண்டாம்!

16 இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்; இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்; என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.

17 யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?

18 புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.

19 எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!

20 ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.

யூதர்களின் பிடிவாத குணம்!

21இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

22 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை.

23 ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

24 அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

25 உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.

26 அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

27 நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். 28தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

34 அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும். எரேமியா அதிகாரம் - 7