வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வழிபாடு

வழிபாடு - வழிபடுதல் - வழிப்படுதல் - கட்டுப்படுத்தல்

வழிபாடு எனும் சொல் இறைவணக்கம் எனும் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள். இறைவனுக்கு கட்டுப்படும் பொழுது அவனை வணங்குவது ஒருபகுதி, ஆனால் அதுமட்டுமே வழிபாடு ஆகாது.
 

கிறித்தவம்


ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக் கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இஸ்லாம்


“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இறைத்தூதருக்கும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்." (அல்குர்ஆன் 4:59)

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 24:52)

தமிழர் சமயம் 

 
தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)

கருத்து: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார். 

முடிவுரை

இறைவனை வணங்குவது மட்டும் இறைவனின் எதிர்பார்ப்பல்ல. அவன் வேதத்தில் வழங்கிய அறத்துக்கும், நீதிக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பதுதான் இறைவண்ணக்கத்தை பூர்த்தி செய்யும். அல்லாதவருக்கு அவன் துணை நிற்க மாட்டான், வெற்றியை அளிக்க மாட்டான், சொர்கத்தை வழங்கமாட்டான் என்பதே இறைவனின் வாக்குறுதியாக உள்ளது. 

கடவுளுக்கு வழிபடாதோர்

வழிப்படுதல் என்றால் என்ன?


தமிழில் வணக்கவழிபாடு என்பது இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 
வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு. கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவதன் மூலம் அவனுக்கு வழிப்பட வேண்டும். நெறிநூல்களை பின்பற்றுகிறீர்கள் ஆனால் கடவுளை வணங்கவில்லை என்றால் அதற்கும் மதிப்பில்லை. இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே ஆன்மீகவாதி ஆவான். 
 

தமிழர் சமயம் 


தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

இஸ்லாம் 

 “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32) 

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (அல்குர்ஆன் 18:30)

'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (அல்குர்ஆன் 29:2,3)

கிறிஸ்தவம் 


அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். - (சங்கீதம் 89:30)

தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 43:1)